Jump to content

Recommended Posts

ஒரு பெரிய டிவி கம்பனியில் ஆன்கர் (Primary anchor) ஆகவேண்டும் என்பது என் ஆசை.

ஆனால் எந்த ஜர்னலிசம் டிகிரியும் என்னிடம் இல்லை. பொலிட்டிகல் சயன்ஸ் டிகிரி படித்துவிட்டு ஏபிசி சேனலில் டெலிபோன் அட்டண்டர் ஆக வேலைக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுகூட கிடைக்கவில்லை.

அதன்பின் பள்ளிக்கூட மாணவர்களுக்கு செய்திகளை தொகுக்கும் சேனல் ஒன் எனும் தொலைகாட்சியில் செய்திகளின் உண்மை நிலவரத்தை செக் செய்யும் ஃபேக்ட் செக்கர் எனும் வேலையில் சேர்ந்தேன். நான் செய்யும் வேலையை 10 வருடமாக செய்யும் நபர்கள் இருந்தார்கள். பள்ளி மாணவர்கள் மட்டுமே பார்க்கும் தொலைகாட்சியில் பணியாற்றினால் மிகப்பெரிய ஒரு சானலில், உலகம் அறிந்த செய்தி ஆங்கர் ஆகவேண்டும் எனும் ஆசை எப்படி நிறைவேறும்? அது மிகப்பெரும் போட்டிகள் நிறைந்த ஒரு உலகம். எனக்கு தொலைபேசி அட்டண்டர் வேலையை கூட அவர்கள் கொடுக்க முன்வரவில்லை.

எதாவது ரிஸ்க் எடுக்கவில்லை என்றால் இப்படியே இருக்கவேண்டியதுதான் என உணர்ந்தேன். அதன்பின் நானாக எனக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்துகொண்டேன். நாமே ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியின் விடியோ தொகுப்பை தயாரித்தால் என்ன என? பர்மா கிளம்பினேன். அங்கே போராடும் தாய்லாந்து தீவிரவாத இயக்கத்தினரை சந்தித்து விடியோ எடுக்க திட்டமிட்டேன். லீவு போட்டுவிட்டு என்னிடம் இருந்த காசை எல்லாம் வைத்து ஒரு விடியோ காமிரா வாங்கிக்கொண்டு பர்மா போனேன். நான் ஒரு செய்திதொலைகாட்சி நிபுனர் என பொய் சொன்னேன். பர்மாவில் கரப்பான்பூச்சிகள் ஊறும் ஓட்டலில் மாதக்கணக்கில் தங்கி தொடர்புகளை உண்டாக்கி கடைசியில் தீவிரவாதிகளை கண்டுபிடித்து போய் பேட்டியும் எடுத்தேன்.

காமிராமேன், பேட்டி எடுப்பாவ்ர் எல்லாமே நாந்தான். அதன்பின் அமெரிக்கா வந்து நான் வேலை செய்த சானலுக்கு அந்த விடியோவை இலவசமாக கொடுத்தேன். முதல் முதலாக பள்ளீ மாணவர்களுக்கு என்னுடைய அந்த செய்திதொகுப்பு ஒளீபரப்பானது.

அதன்பின் "என்னுடைய தங்கும் செலவு, உணவை மட்டுமாவது ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு செய்தி தொகுப்பாளர் வேலை கொடுங்கள்" என சானலிடம் கேட்டேன். ஒப்புக்கொண்டார்கள். வியட்நாம், ருவாண்டா, ஆப்காகிஸ்தான் என யாருமே போகதயங்கும் நாடுகளுக்கு போனேன். அதிபயங்கரமான தீவிரவாதிகளை சந்தித்து பேட்டி எடுத்தேன். சில வருடம் இப்படி எந்த சம்பளமும், வருமானமும் இன்றி உணவும், தங்குமிடமும் மட்டும் போதும் என வேலை செய்தேன்.

ருவாண்டாவில் நிகழ்ந்த 10 லட்சம் பேர் படுகொலை நிகழ்வின் போது அங்கே இருந்ததால் எனக்கு பெயர் கிடைத்தது. திரும்பி வந்தேன். சி.என்.எனில் துவக்கநிலை ஆன்கராக வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தனியாக ஸ்லாட் எதுவும் கிடைக்கவில்லை. மற்ற பெரிய ஆங்கர்கள் பேசுகையில் அருகே நின்று "ஆமாம் சாமி" என தலையாட்டும் வேலை, அவர்கள் லீவு போட்டால் ஸ்லாட்டை நிரப்பும் வேலை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, நள்ளிரவு 2 மணி ஸ்லாட் என யாருமே செய்ய தங்கும் வேலைகளை, நாட்டின் எந்த மூலைக்கும் பறந்து சென்று செய்தேன்.

ஆபத்தான அசைன்மென்டா, கேவலமான அசைன்மெண்டா, மோசமான டைம் ஸ்லாட்டா, கிரிஸ்துமஸ் தினத்தன்று வேலையா? கூப்பிடுங்கள் ஆண்டர்சனை எனும் அளவு அடிமட்ட அளவில் பணியாற்றியபின் பல ஆண்டுகள் கழித்து முதன்முறையாக காலை நேரத்தில் ஒரு ஸ்லாட்டை எனக்கென ஒதுக்கினார்கள்.

இந்த ஒரு வாய்ப்புக்குதான் ஆண்டாண்டு காலமாக இத்தனை அவதிப்பட்டேன்? அதை சிக்கென பிடித்துக்கொண்டேன். அதன்பின் இறங்குமுகமே இல்லை. தொடர் ஏற்றம்தான். இன்று நாடறிந்த பிரபலம் நான். ஜனாதிபதிகள், பிரதம மந்திரிகளுடன் நட்புறவு, அமெரிக்காவின் முதல் நிலை ஜர்னலிஸ்ட் எனும் அந்தஸ்து..அனைத்தும் இத்தனை இழப்புகளையும் தாங்கி ஆண்டாண்டு காலமாக உழைத்ததால் வந்தவையே.

டெலிபோன் காலை அட்டண்ட் செய்யும் வேலையை கூட ஒடுக்க மறுத்த செய்தி நிறுவனங்களில் முதன்மை ஆங்கர் ஆக காரணம் நான் எடுத்த ரிஸ்குகள், அவமானங்களை, சோதனைகளை தாங்கி நின்ற தன்மை, என்றாவது ஜெயிப்போம் என்ற வெறி, அதற்காக உயிரையும் விட தயாராக இருந்த மனபான்மை..இவைதான்.

இந்த ரிஸ்குகளை நான் எடுக்காமல் இருந்தால் இன்று பள்ளி ஆண்டுவிழாவை கவர் செய்யும் வேலையை தான் செய்துகொன்டிருப்பேன். என்னுடன் ஃபேக்ட் செக்கர் ஆக பணியாற்றிய பலர் இன்னமும் சீனியர் பாக்ட் செக்கர் ஆக அதே கம்பனியில் வேலை செய்கிரார்கள். சிலர் லோக்கல் செய்தி சானலில் செய்தி வாசிக்கிறார்கள்.

-> ஆண்டர்சன் கூப்பர், சி.என்.என் முதன்மை செய்தி ஆன்கர்

 

நியான்டர் செல்வன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.