Jump to content

“முஸ்லிம்கள் , தமிழர்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம்”


Recommended Posts

அரசியல் ரீதியாக பார்க்க வேண்டிய விடயம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒரு மத ரீதியான வேறுபாடுகள் எந்நச் சந்தர்ப்பத்திலும் நுழைந்து இதைக் குழப்புவதற்கு இடம்கொடுக்கக்கூடாது கிழக்காக இருந்தாலும் சரி, வடக்காக இருந்தாலும் சரி முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் இணைந்து தான் எந்தவித அரசியல் ரீதியான விடயங்களையும் அணுக வேண்டிய காலகட்டத்திலேயே நாங்கள் இருக்கின்றோம்  என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.. 

பெரும்பான்மை பௌத்த தேரர்களுக்காகவோ அல்லது பெருபான்மை பௌத்த தேசியவாதத்திற் காகவோ நாங்கள் எங்களுடைய ஒற்றுமை விடயங்களில் நாங்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ளவேண்டிய ஒரு கடமைப்பாடு இருக்கின்றதாக இன்று காலை வவுனியா கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற கிழக்குப் போராட்டத்திற்கு ஆதரவாக தேங்காய் உடைத்து வழிபாடுகள் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோதரலிங்கம் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை பிரதேச மக்களால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற போராட்டத்தினுடைய ஒரு அங்கமாக சாகும் வரையான ஒரு உணவு தவிர்ப்புப் போராட்டம் அங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

அந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மக்கள் சார்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இன்று இப்போராட்டத்தினை  நடத்தி இருக்கின்றோம்.

35வருடங்களுக்கு மேலாக கல்முனை உப பிரதேச செயலகமாக இருக்கின்ற கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை நிரந்தரமாக ஒரு பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோருகின்ற நியாயமான அந்த மக்களுடைய போராட்டத்தை நாங்கள் உண்மையிலே ஆதரிக்கின்றோம். நிச்சயமாக ஆதரிக்கவேண்டிய விடயம் அதைவிட இது ஒரு அரசியல் சார்ந்த விடயமாக இருக்கிறபடியால் நாங்கள் அரசியல் ரீதியாகவும் இதை அணுகவேண்டும் என்பதற்காக தமிழ்த்தேசிய கூட்டமைப் பினர் நேற்றைய தினம் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து இது தொடர்பாக விரிவான பேச்சுவார்ததை நடத்தப்பட்டது. 

ஆனால்,  அங்கே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அதற்கு இணங்கியிருப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தரப்பிலோ தலைவரோ அல்லது பிரதிநிதிகளோ நேரடியாக இது சம்பந்தமாக எவ்விதமான கருத்தையும் கூறவில்லை ஒரு மூடிய அறைக்குள்ளே தான் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக நாங்கள் அறிகின்றோம்.

7788.jpg

 

ஆனால் பகிரங்கமாக முஸ்லிம் தரப்பினர் இதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். இந்தப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்துக்கின்ற விடயத்தில் முஸ்லிம் காட்சிகள் அல்லது முஸ்லிம் பிரதிநிதிகள் நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். நிபந்தனையில் அடிப்படையிலாவது ஏற்றுக்கொண்டிருகின்றோம் என்ற ஒரு கருத்தை இதுவரையில் தெரிவிக்கவில்லை.

ஆனால்,  ஊடகங்களில் தான் இக்கருத்தினை அவர்கள் இணங்கியிருப்பதாக ஒரு கருத்தினைத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்புபட்ட அமைச்சர் கூட அது சில நிபந்தனைகளோடு அந்த எல்லை நிர்ணயம் மற்றும் ஏனைய விடயங்கள் சம்பந்தமாக பரிசீலனை செய்யப்படும். ஆராயப்படவேண்டும் என்ற ஒரு கருத்தைக்கூயிருக்கின்றாரே தவிர இதற்கு நிரந்தரமான ஒரு முடிவாக ஒரு இணக்கம் தெரிவித்தாக எச் செய்திகளும் இல்லை.

இக்கோரிக்கைக்கு அந்த மக்களும் சரி நாங்கள் சரி தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது. நிரந்தரமாக பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்படும் வரைக்கும் நாங்கள் போராடவேண்டிய கடமைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். என்று மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/58757

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.