Jump to content

­டில்லி செல்­வ­தற்கு முன்னர் பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம்


Recommended Posts

பாரா­ளு­மன்­றத்தில் இரு நாள் விவாதத்தை கோரு­வ­தற்கு தமிழ்க் கூட்­ட­மைப்பு தீர்­மானம்

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி­யுடன் பேச்சு நடத்­து­வ­தற்­காக புது­டில்லி செல்­வ­தற்கு முன்னர் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தாம­த­மா­வது குறித்து பாரா­ளு­மன்­றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தக் கோரு­வ­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தீர்மா­னித்­தி­ருக்­கின்­றது.

நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் இத்­த­கைய முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நடை­பெறும் பாரா­ளு­மன்றக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இந்த இரண்டு நாட் கள் விசேட விவா­தத்­துக்­கான கோரிக்­கையை கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முன்­வைத்து, அதற்­கான திகதி ஒதுக்­கீட்டைப் பெற்­றுக்­கொள்­ளவும் இந்தக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இனப்­பி­ரச்­சி­னைக்கு இணக்­க­மான சுமுகத் தீர்வு எட்­டு­வ­தற்கு பு­லி­களே முட்­டுக்­கட்டை என்று தென்­னி­லங்­கையால் முன்னர் திரும்பத் திரும்பக் கூறப்­பட்டு வந்­தது.

இரா­ணுவ ரீதியில் விடு­த­லைப்­பு­லிகள் முறி­ய­டிக்­கப்­பட்டு பத்து ஆண்­டுகள் கடந்து விட்­டன. ஆனால், இன்­னமும் தமி­ழரின் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நீதி, நியா­ய­ மான தீர்வு காணப்­ப­டவே இல்லை. காணப்­படும் என்ற நம்­பிக்­கையும் அருகி வரு­கின்­றது. தீர்­வுக்­கான இணக்­கமும், வாய்ப்பும் இந்தப் பாரா­ளு­மன்­றத்­தி­லேயே உரு­வான பின்­னரும், அது நடை­மு­றைக்கு வராமல் போன­மைக்குக் காரணம் யாது? – என்ற கேள்­வியின் அடிப்­ப­டையில் இத்­த­கைய விசேட விவாதம் ஒன்­றுக்குக் கட்சித் தலை­வர்­களின் கூட்­டத்தில் இரா.சம்­பந்தன் கோரிக்கை விடுக்க வேண்டும் எனக்  கூட்­ட ­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முதலில் பாரா­ளு­மன்­றத்தில் இது குறித்த விசேட விவா­தத்தில் தமிழர் தரப்பின் ஆதங்­கங்கள், நீதி­யான எதிர்­பார்ப்­புகள் போன்­ற­வற்றைப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது என்றும், பின்னர் அடுத்த கட்­ட­மாக, இந்­தியப் பிர­த மர் நரேந்­திர மோடி உட்­பட சர்­வ­தேச நாடு­களின் தலை­வர்கள் மற்றும் பிர­தி­நி­தி­களை நேரில், தமி­ழ­ருக்கு நீதி­யான தீர்வு வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கின்­றமை குறித்து தெளி­வு­ப­டுத்தி சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஆழ­மாகத் திருப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றும் இந்தக் கூட்­டத்தில் முடிவு செய்­யப்­பட்­டது.

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான க.துரை­ரெட்­ண­சிங்கம், க.கோடீஸ்­வரன் தவிர்ந்த ஏனைய அனைத்து எம்.பி.க்­களும் பாரா­ளு­மன்றக் குழுக்­ கூட்­டத்தில் கலந்­து ­கொண்­டனர்.

இங்கு கருத்துத் தெரி­வித்த கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், 

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அரசியல் தீர்வு இழுத்தடிக்கப்படுகின்றமை கவலையளிக் கும் விடயமாகவுள்ளது. இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண் டும். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடை பெறவிருப்பதனால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/58728

Link to comment
Share on other sites

"இரு நாள் விவாதத்தை கோரு­வ­தற்கு தமிழ்க் கூட்­ட­மைப்பு தீர்­மானம்"

இவ்வளவுகாலமும் விவாதித்தது காணாது என்று இன்னும்  இரண்டு நாள்  நாடகம் போடுகினம் . இந்திய அழைப்பை  அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல இந்தியாவின் ஒரு கொண்டிஷன் போல தெரியுது 

"தமி­ழ­ருக்கு நீதி­யான தீர்வு வழங்­கப்­ப­டாமல் இழுத்­த­டிக்­கின்­றமை குறித்து தெளி­வு­ப­டுத்தி சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை ஆழ­மாகத் திருப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்"

சர்­வ­தே­சத்தின் கவ­னத்தை தமிழர் சார்பாக ஆழ­மாகத் திருப்­பு­வ­தற்கு இருந்த போர் குற்ற விசாரணையை உள்நாட்டுக்குள் ரணில் மாமா சொன்ன மாதிரி செய்யலாம் என்று முடக்கிய பெருமை இந்த கூட்டமைப்பில் உள்ள எல்லாரையும் சாரும். சுமந்திரனையும் அவர்தம் சகா சுரேன் சுரேந்திரனையும், நிறேன் அங்க டேலையும் மாத்திரம் குறைசொல்லி தப்பிக்க முயல்வது உங்களது கதைகளில் இருந்து எனக்கு தெரிகிறது. இது உங்களது அரசியல் எதிர்காலத்தை காப்பாற்றும் ஒரு முயற்சி இது . 


கம்போடியவை உதாரணம் காட்டி எங்களது போர்க்குற்ற விசாரணை கனாக்காலம் எடுக்கும் என்ற சொல்லி குறுகிய கால சலுகைகளுக்காக தமிழரின் நீண்டகால நலன்களை உதாசீனம் செய்த பெருமை கூட்டமைப்பில் உள்ள எல்லாரையும் சாரும். 2015இல் எமது சொபிட் பவரின் (soft power) வெற்றி பற்றி மார் தட்டின சுமந்திரனை உது  கோவணம் பவராக (kovanam power) முடியும் என காலம்சென்ற சாந்தி சச்சிதானந்தம் எழுதியது இப்ப நினைவில் வருகிறது..

எங்களது இன்றைய நிலைமை பற்றி சிங்கள அரசை மட்டும் சாடி எமது அணுகுமுறைகளில் உள்ள குறைபாடுகளை நாம் நிவர்த்திசெய்ய மறுத்தால் இன்னும் 10 வருடத்தில் இதை விட மோசமான நிலையில் இருப்போம் 

Link to comment
Share on other sites

19 hours ago, ampanai said:

இந்த விடயத்தில் நாம் தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண் டும். ஜனாதிபதித் தேர்தல் முதலில் நடை பெறவிருப்பதனால் அது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

சம்பந்தன் இப்பிடி சொல்வதில ஏதாவது அர்த்தம் இருக்கா? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.