Jump to content

தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு!


Recommended Posts

ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்க்கை முறையில் பல விஷயங்களை மாற்றிவிட்டது. எப்படி மற்றொருவரை தொடர்பு கொள்கிறோம் என்பதிலிருந்து, நியூஸ் பேப்பர், புத்தகங்கள் படிப்பது வரை அனைத்தையுமே ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சி மாற்றியமைத்துள்ளது. இது நம் அன்றாட வாழ்க்கை முறை, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடென்பது இவற்றில் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை, நம் உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்கிறது ஒரு ஆய்வு. இந்த ஆய்வின்படி, ஸ்மார்ட்போனின் அதீத பயன்பாட்டால் இளைஞர்கள் தலையின் மண்டையோட்டு பகுதியில் கொம்பு போன்ற ஒரு எழும்பு முளைக்கிறது என்பது தெரியவந்துள்ளது. சிறு வயதில் தலையும் தலையும் இடித்துக்கொண்டால் கொம்பு முளைக்கும் என்பார்கள். அதை இப்போது நினைத்து,'கொம்பு முளைக்குமா!' என சிற்ப்பதுண்டு. ஆனால், இந்த ஆய்வு கொம்பு முளைக்கும், ஆனால் காரணம்தான் வேறு என்பதை கூறியுள்ளது. ஸ்மார்ட்போன் உபயோகித்தால் எப்படி கொம்பு முளைக்கும், ஆராய்ச்சியாளர்களின் பதில்கள் மூலம் தெரிந்துகொள்ளலாமே!

 

இளைஞர்களின் தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு!

Photo Credit: Scientific Reports  தலையின் பின்புறத்தில் வளரும் எழும்பு

 

இந்த புதிய ஆய்வை நடத்திய பயோமெக்கானிக்ஸ் ஆராய்ச்சியாளர்கள், இளைஞர்களின் தலையில் கொம்பு போன்று ஒரு எழும்பு வளர்கிறதுஎன்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுதான் என்றும் கூறியுள்ளனர். தலையில் எழும்பு வளர்வதற்கும் ஸ்மார்ட்போனின் உபயோகத்திற்கும் என்ன தொடர்பு என உடனடியாக நம் மனதிற்குள் ஏற்படும் கேள்விக்கும், இந்த ஆராய்ச்சியாளர்கள் பதிலளித்துள்ளனர்.

அவர்கள் கூறிய பதில் இதோ,

ஒருவர் நீண்ட நேரம் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகையில், அவர் நீண்டே நேரம் தலையை குனிந்தபடியே இருப்பார். இதன் அப்போதைய விளைவு கழுத்து வலி போன்று சிறிய பாதிப்பாக இருக்கும். ஆனால், இது அதிக நாட்களுக்கு தொடர்ந்தால், இதன் பாதிப்பு வேறு மாதிரி பெரிதாக இருக்கும். அந்த பெரிய பாதிப்பு எப்படியாக இருக்குமேன்றால், ஒருவரின் தலை மண்டையோட்டில் எழும்பு வளர்ச்சியாக இருக்கும். இந்த எழும்பு தலையின் பின்புறத்தில் கழுத்தில் மேலுள்ள மண்டையோட்டு பகுதியில் வளரும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கழுத்தின் மேல் பகுதியில் வளரும் இந்த எழும்பு கொம்பு போலவே இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

 


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்திலுள்ள சன்ஷைன் கோஸ்ட் பலகலைகழகத்தை சேர்ந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வை மேற்கொண்டு, முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வின் முதல் அறிக்கையை 2016 ஆண்டே வெளியிட்ட இவர்கள், 18 முதல் 30 வயது உள்ளவர்களில் 218 பேரை தங்களது ஆய்விற்குள் உட்படுத்திக்கொண்டனர். முதலில், அவர்களது தலைகள் எக்ஸ்-ரே எடுத்து வைக்கப்பட்டது. இந்த 218 பேரின் தலையையும் 3 வருடங்களுக்கு பிறகு தற்போது எக்ஸ்-ரே எடுத்து முன்பு இருந்த மண்டையோட்டு அமைப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில்,இதில் 41 சதவிகித்தினருக்கு, இந்த எழும்பு வளர்ச்சி கண்டறியப்பட்டுள்ளது.

https://gadgets.ndtv.com/tamil/mobiles/horns-are-growing-on-youth-peoples-skulls-due-to-phone-use-research-news-2057082?pfrom=home-lateststories

https://www.washingtonpost.com/nation/2019/06/20/horns-are-growing-young-peoples-skulls-phone-use-is-blame-research-suggests/?noredirect=on&utm_term=.dae7ea66ebf2

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தலையில் கொம்பு முளைக்கிறது, காரணம் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு: ஆய்வு!

சிவ சிவா இது என்ன சோதனை!!!!!
உனது திருவிளையாடல்களுக்கு அளவேயில்லையா? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

சிவ சிவா இது என்ன சோதனை!!!!!
உனது திருவிளையாடல்களுக்கு அளவேயில்லையா? :cool:

இனி...  "நீ... என்ன, கொம்பனா..?  என்ற, பழமொழியும் அழிந்து விடும். :grin:  😝

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.