Jump to content

டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டி பக்கம்


Recommended Posts

யாழ் டைகர் வானொலி எப்படி உருவாகியது........?

உலகத்தில் இருக்கும் எல்லா தமிழ் உறவுகளையும் இணைக்கவேண்டும் என்ற அவா என்னிடம் என்று சொல்வதைவிட

நம்மிடம் இருந்தது அதன் ஒரு கன்னி முயற்சி தான் டைகர்வானொலி,இதற்கு எல்லோரினதும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் டைகர்வானொலி உலக வானொலியாக யாழ்களத்தில் உலாவரும்

வானொலியை உருவாக்கும் போது பல சிக்கல்கள் பலரால் உருவாக்கப் பட்டது, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்.....?

சிக்கல் இல்லாட்டி வாழ்கை புளிக்கும்,ஆகவே அவர்கள் எமக்கு தந்த சிக்கல் நம்மை இன்னும் நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தான் தூண்டியது.

ஜம்மு நீங்கள் சொன்னது போல் இன்று வானொலி புதிய தரத்துடனும் பொலிவுடனும் வளர்ந்துள்ளது இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...........?

Link to comment
Share on other sites

  • Replies 160
  • Created
  • Last Reply

ஜம்மு நீங்கள் சொன்னது போல் இன்று வானொலி புதிய தரத்துடனும் பொலிவுடனும் வளர்ந்துள்ளது இது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்...........?

இதை வார்த்தகளால் சொல்ல முடியவில்லை,இது நமக்கு கிடைத்த முதல் வெற்றி படி என்பதில் அது வித மாற்றமும் இல்லை யாழில் நாம் சாதித்துவிட்டோம் எமது அடுத்த இலக்கு இளைஞர்களான நாம் தமீழிழத்திற்கு புரிய போகும் கடமை பற்றி அதனையும் இதை போல் வளர்த்து நாம் முதலிடம் பெற வேண்டும் என்பதே எனதும்,வனவில்லினதும் எங்கள் குடும்பத்தினதும் அவா என்றே கூறலாம்

Link to comment
Share on other sites

டைகர் வெள்ளிமாலையில் நேயர்களின் ஆதரவு கூடியதன் காரணமாக இன்று வடிவேல் 007 ஆவர்களின் பேட்டி இடம்பெறவுள்ளது

Link to comment
Share on other sites

வணக்கம் வடிவேல் 007 பல புலனாயிவு வேலைக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக மிக்க நன்றிகள்.

*யாழ்களத்தில் உங்கள் அறிமுகத்தை பற்றி எங்கள் நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ,அத்துடன் யாழுக்கு யாரால் அறிமுகமானீங்க அவரை பற்றியும் ஒரு சில வரிகள் சொல்வதோடு,வடிவேல் 007 என்ற பெயரை தெரிவு செய்தன் காரணம் என்னவென்றும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுவீங்களா?

1)நீங்கள் யாழுக்கு வந்த புதியதில் யாழ் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்குது என்று நீங்கள் நினைக்கிறீங்க?உங்கள் புலனாயிவு பணி புதிய யாழில் சிறப்பாக நடந்ததா அல்லது தற்போதைய யாழில் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதையும் எங்களுக்கு அறிய தாருங்கள்?

2)இப்போது அரட்டை பற்றி பல கருத்துகள் அதற்கு என்று பிறம்பாக டொபிக் திறந்து அரட்டையை தவிர்க்க வேண்டும் என்று பலர் அரட்டை அடிப்பதை நீங்கள் பார்த்தீருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

3)யாழில் சிலர் தாங்கள் வில்லங்கத்துக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று கருத்து சொல்லுவார்கள் அவர்களை பற்றி நீங்கள் நினைப்பது ?அவர்களில் சிலர் வேண்டுமென்றே தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லுவார்கள் அவர்கள் பற்றி உங்கள் பார்வையில் அவர்கள் யாழுக்கு தேவைதானா?

4)யாழில் இப்போது முந்தி வந்த பல உறவுகள் இப்போது வருவதில்லை அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?அத்தோடு யாழில் உங்கள் குரு யார்?நெருங்கிய உறவு யார்?

5)யாழில் றோயல் பமிலி என்று ஒரு பமிலி பல அட்டகாசங்களை செய்து கொண்டு யாழை தனது கையில் வைத்து பல சேட்டைகள் செய்தவை அது தற்போது டைகர் பமிலியால் அடக்கபட்டிருக்கிறது இந்த றோயல் பமிலிக்கு நீங்கள் சொல்லவிரும்புவது அத்தோடு தலைமறைவு வாழ்கை நடாத்தும் சின்னாவுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

Link to comment
Share on other sites

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

Link to comment
Share on other sites

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)இன்னிசை துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

Link to comment
Share on other sites

இடைவேளைக்கு பின் மீண்டும் வடிவேலுடன்

6)ஈழத்தில் நீங்கள் பாடசாலை அநுபவங்களை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள்முடியுமா?பாடசாலையில் நீங்கள் தான் முதல் பிள்ளையா?நீங்கள் பள்ளி பருவத்தில் காதல் பற்றி ?அப்பாட்ட வாங்கிய அடி பற்றி எல்லாம் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்?

7)புலத்தில் இருந்து தற்போது சுவிசில் இருக்கிறீங்க சுவிசில் வந்து இறங்கியவுடன் உங்களுக்கு எப்படி இருந்தது அந்த மொழியில் ஏற்பட்ட சிக்கல்கல் புது வித மனிதர்கள் அவர்களை எல்லாம் எப்படி சமாளித்தீங்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா?

8)இப்போது காதலை பற்றி முதலாம் வகுப்பு மாணவனுக்கும் தெறியும் காதலை பற்றி நீங்க நினைப்பது என்ன?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?நீங்கள் யாரையும் காதலித்தனீங்களா அப்படியாயி அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?

9)சினிமாவில் உங்களுக்கு ஒரு கதாநாயகன் பாத்திரம் கிடைக்குது அசினோட நடிக்க அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் நடிப்பீங்களா அல்லது நடிக்கமாட்டீங்களா?

10)யாழ்களத்தில் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குது?அப்படியாயின் காரணம் என்ன?

Link to comment
Share on other sites

11) ஈழத்தில் நீங்கள் அநுபவித்த ஒரு சில இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?உங்களுக்கு தற்போது இருக்கும் நாடு விருப்பமா அல்லது இலங்கையில் வசிப்பது விருப்பமா?

12)பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?பெண்களுக்கு கோபம் கூடுதலாக வருவதை பார்த்திருப்பீர்கள் அதை பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

13)நீங்கள் உங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்தால் என்ன செய்வீங்கள்?குழப்படி எல்லாம் செய்வீங்களா அப்படி செய்து தற்போது யாரிட்டையும் அடி வாங்கின சந்தர்ப்பம் இருக்குதா?

14)யாழில் தற்போது புதிய விதிகள் வந்துள்ளது,உதாரணத்திற்கு செய்தி பிரிவில் எல்லோரும் செய்தி போட முடியவில்லை இது சில உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை இதை பற்றி உங்கள் கருத்து என்ன?மோகண் அண்ணாவுக்கு நீங்க சொல்ல விரும்புவது?

15)யாழில் உங்களின் புலனாயிவுதுறை ஆற்றிய சேவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கு உறுதுணையா இருக்கிற உங்கள் தம்பி வடிவேல் பற்றியும் 008 பற்றியும் சொல்லுங்கோ?

Link to comment
Share on other sites

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

Link to comment
Share on other sites

இவர்கள் பற்றி ஒரு வரியில்

[*]டண்-

[*]நெடுக்ஸ்

[*]மதன்

[*]ரசிகை

[*]ஜன்னி-

[*]பிரியசகி-

[*]வானவில்-

[*]மணிவாசகன்

[*]சித்தன் -

[*]சின்னா

[*]கு.சா-

[*]வடிவேலு-

[*]தூயவன் -

[*]அனிதா-

[*]சின்னா-

[*]இராவணன்

[*]விஷ்ணு

[*]வினித்

[*]நாரதர்

[*]ஜம்மு

1 யாழில் சேர்ந்திருப்பது

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது

3 யாழின் பலம்

4.யாழின் பலவீனம்

5.யாழில் மறக்க முடியாதவர்

6.யாழில் மறக்க கூடியவர்?

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு

Link to comment
Share on other sites

நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த வடிவேல்007 பேட்டி இன்னும் சற்று வேளையில் மிகவும் சுவாரசியமாக பதில்களை தந்துள்ளார் அவருக்கு மிக்க நன்றி இன்னும் கொஞ்ச நேரத்தில் நேயர்கள் எதிர்பாருங்கள்

vadivel1smallmq6.jpg

Link to comment
Share on other sites

வடிவேல் 007 தவிர்க்கமுடியாத காரணங்களால் களத்திற்க்கு வந்து பதிலலிக்கவில்லை இதோ அவர் எமக்கு அஞ்சலில் அனுப்பிய பதில்கள்

ஜம்மு::

வணக்கம் வடிவேல் 007 பல புலனாயிவு வேலைக்கு மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்ததிற்கு டைகர்வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாக மிக்க நன்றிகள்.

*யாழ்களத்தில் உங்கள் அறிமுகத்தை பற்றி எங்கள் நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்கோ,அத்துடன் யாழுக்கு யாரால் அறிமுகமானீங்க அவரை பற்றியும் ஒரு சில வரிகள் சொல்வதோடு,வடிவேல் 007 என்ற பெயரை தெரிவு செய்தன் காரணம் என்னவென்றும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுவீங்களா?

வடிவேல்007:

யாழ்களத்தில் நான் எப்படி அறிமுகம் ஆனேன் என்பது எனக்கு சத்தியமாக மறந்து போய்விட்டது. அநேகமாக எனது மோப்பா நாய் கூகிள் மூலமாக தான் இருக்க வேண்டும். எதையாவது தேடப்போய் கடசியா யாழ் தளத்தில வந்து விழுந்திருப்பன். கிட்டத்தட்ட ஒரு 5 வருசமா நான் யாழ் களத்தில இருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் வேறு பெயரில் வந்திருக்கின்றேன். எந்தப் புத்தில் எந்தப் பாம்பு இருக்கும் என்று யாருக்கு தெரியும். எனவே தான் நான் என்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனது 18ஆவது வயதில் யாழ் களத்தில் கால் பதித்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் குப்பை கொட்டிவிட்டேன்.

வடிவேல் 007, இந்த பெயர் தெரிவு செய்ததிற்கு காரணம் நான் என்னை மற்றவர்களில் இருந்து வேறு படுத்தி பார்க்கவும், ஒரு விறுவிறுப்பான சுறுசுறுப்பான பெயரையும் முக்கியமாக வாழ்க்கையில் என்ன துன்பம் வந்தாலும் எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். எனது பெயரை கேட்டால் மற்றவர்களின் முகத்தில் ஒரு இஞ்சி சிரிப்பு என்றாலும் வர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வைகைப்புயல் வடிவேல் அவர்களை எனக்கு ஒரு மனிதராக பெரிதாக தெரியாவிட்டாலும் நல்ல நகைச்சுசை நடிகராக அவரை எனக்கு பிடிக்கும். எனவே தான் அவரை தேர்ந்தெடுத்தேன்

ஜம்மு:

1)நீங்கள் யாழுக்கு வந்த புதியதில் யாழ் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்குது என்று நீங்கள் நினைக்கிறீங்க?உங்கள் புலனாயிவு பணி புதிய யாழில் சிறப்பாக நடந்ததா அல்லது தற்போதைய யாழில் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதையும் எங்களுக்கு அறிய தாருங்கள்?

வடிவேல்007:

1. எப்பொழுதுமே முதல் அனுபவம் வாழ்கையில் மறக்க முடியாத ஒன்று. முதல் காதல், முதல் முத்தம், முதல்… இப்படி முதல் அனுபவம் என்பது மறக்க முடியாத ஒன்று. எனவே தான் நான் யாழ் களத்திற்கு வந்த புதிதில் இருந்த களமே எனக்கு பிடித்திருந்தது.

ஜம்மு:

2)இப்போது அரட்டை பற்றி பல கருத்துகள் அதற்கு என்று பிறம்பாக டொபிக் திறந்து அரட்டையை தவிர்க்க வேண்டும் என்று பலர் அரட்டை அடிப்பதை நீங்கள் பார்த்தீருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

வடிவேல்007:

2. இதில் என்ன தவறு இருக்கிறது? ஊரில் அங்காங்கே சிரட்டை தேங்காய்க்கு அடிபடுகிறார்கள். இங்கே அரட்டைக்கு அடிபடுகிறார்கள்.

ஜம்மு:

3)யாழில் சிலர் தாங்கள் வில்லங்கத்துக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று கருத்து சொல்லுவார்கள் அவர்களை பற்றி நீங்கள் நினைப்பது ?அவர்களில் சிலர் வேண்டுமென்றே தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை சொல்லுவார்கள் அவர்கள் பற்றி உங்கள் பார்வையில் அவர்கள் யாழுக்கு தேவைதானா?

வடிவேல்007

திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒளிக்க முடியாது என்று ஒரு பாடலே உள்ளது. தீயரை கண்டால் தூர விலகு என்பது போல் இவர்களை கண்டால் விலகி நிற்பது நன்று. இவர்களை யாழ் களத்திலிருந்து விலத்தி வைப்பது தவறு. எமது தலைவரே சொல்லியுள்ளார் எமது தேசியக்கொடியின் கீழ் அணிவகுத்து, எமது சட்டதிட்டங்களிற்கு கட்டுப்பட்டு நடக்கும் எவரையும் நாம் வரவேற்க தயார் என்று. இவர்களின் துரோக்ச் செயல்கள் ஒரு பொழுதும் எமது போராட்டத்தை இல்லாதொளிக்கு முடியாது. இவர்களால் எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த தான் முடியும். உலகமே பல்லாண்டு காலத்திற்கு பின் ஒரு ஒற்றுமையான இனத்தை பார்கின்றது என்றால் அது தமிழினம் தான்!! இதற்கு ஆதராம் தான் எம்மை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டிருக்கும் இன்றைய அரசியல். உன்னைச் சுற்றி முற்றிலும் இடையூகள் உள்ளது என்றால் நீ முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்! நாம் எமது தலைவனின் வழியில் புதுயுகம் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கின்றோ

Link to comment
Share on other sites

ஜம்மு

ஈழத்தில் நீங்கள் பாடசாலை அநுபவங்களை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள்முடியுமா?பாடசாலையில் நீங்கள் தான் முதல் பிள்ளையா?நீங்கள் பள்ளி பருவத்தில் காதல் பற்றி ?அப்பாட்ட வாங்கிய அடி பற்றி எல்லாம் எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்

புலத்தில் இருந்து தற்போது சுவிசில் இருக்கிறீங்க சுவிசில் வந்து இறங்கியவுடன் உங்களுக்கு எப்படி இருந்தது அந்த மொழியில் ஏற்பட்ட சிக்கல்கல் புது வித மனிதர்கள் அவர்களை எல்லாம் எப்படி சமாளித்தீங்கள் என்று எங்களுக்கு கூறமுடியுமா

இப்போது காதலை பற்றி முதலாம் வகுப்பு மாணவனுக்கும் தெறியும் காதலை பற்றி நீங்க நினைப்பது என்ன?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?நீங்கள் யாரையும் காதலித்தனீங்களா அப்படியாயி அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா

வடிவேல்007:

ஈழத்தில் எனது பாடசாலை அனுபவங்களை உங்களிற்கு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது தான் எனது ஆசையும். ஆனால் நான் அங்கு 3ஆம் ஆண்டு வரையுமே படித்துள்ளேன். இருந்தாலும் ஒரு சில சம்பவங்கள் உள்ளன. அப்பொழுது பாடசாலைகளில் சத்துணவு என்று சின்ன உருண்டையான பிஸ்கற் தருவார்கள். இது ஒருவருக்கு ஒரு கையளவு மட்டுமே தரப்படும். 3-4 பேர் வந்து ஒரு வகுப்பிற்கு தருவார்கள். அவர்கள் மேசையில் கொட்டி விட்டு போவர்கள். ஒரு தடவை ஒருவர் எனது மேசையில் போட்டு விட்டு போனார். நான் அதை உடனே எடுத்து எனது பையினுள் போட்டுவிட்டேன். எனக்கு போட்டவர் தள்ளி போனவுடன் மற்றவர் வந்து எனக்கு இன்னும் தரிவில்லையா என்றார். நானோ முழிச்சுக்கொண்டிருந்தேன். அவர் எனக்கு இன்னுமொரு முறை போட்டார். அப்புறம் என்ன தினமும் இதே விளையாட்டு தான்! மற்றும் நான் ஒட்டப்பந்தயங்களில் அங்கு முதலிடம் வந்ததும் மறக்க முடியாத ஒன்று.

இங்கு புலத்தில் நான் தொழற்கல்வி படிக்கும் கல்லூரியில் நிறைய நகைச்சுவையான விடயங்கள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்னுடன் மொத்தமாக 22 பேர் படித்தார்கள். அதில் என்னுடன் சேர்த்து 6 ஆண்கள் மட்டுமே. நான் போன nஐன்மத்தில் செய்த பாவமோ தெரியவில்லை. என்னுடன் படிக்கும் எந்ந பெண்ணுமே அழகாக இருந்ததில்லை. ஒன்று ஒல்லியாக இருக்கும், மற்றது குண்டாக இருக்கும், மற்றது கொஞ்சம் ஆண் போல் இருக்கும். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.

பிரெஞ்ச் மொழியும் எமக்கு ஒரு பாடம். கிழமையில் 4 மணத்தியாலங்கள் எமக்கு அறுவரை நடந்தது. மிகவும் கண்டிப்பான ஒரு ஆசிரியை. 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் ஆண்கள் பற்றி அவரின் எண்ணத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். இந்தப்பாடத்தில் 100க்கு 60 எடுப்பதே அனைவருக்கும் கடினமாக இருக்கும். எனவே இறுதிப்பரிட்சை வருவதற்கு முன் இதில் ஒரு 80 என்றாலும் எடுக்க வேண்டும் என்று ஆண்கள் முடிவு செய்தோம். எப்பொழுதுமே ஆசிரியை ஒரு சூட்கேஸ் கொண்டு வருவது வழக்கம். அதற்குள் தான் பரிட்சைப்பேப்பர்கள் எல்லாம் இருக்கும். ஆனால் அந்த சூட்கேஸ் திறப்பு போட்டு திறப்பது அல்ல. அது கோட் நம்பர் கொடுத்து திறப்பது எமக்கு சாதகமாக அமைந்தது. ஆசிரியை அதனை வகுப்பு தொடங்கமுன் திறப்பார். ஆனால் திறந்த பின் கோட் நம்பர் அப்படியே விட்டுவிடுவார். இதுவும் எமக்கு சாதகமாக அமைந்தது. ஒவ்வொரு வகுப்பிற்கும் 6 ஆண்களும் மாறி மாறி சந்தேகம் கேட்பது போல் ஆசிரியையிடம் சென்று அவரின் அருகில் உள்ள சூட்கேஸ் நம்பரை பார்ப்போம். இப்படி ஒரு மாதகாலம் எமது ஆராட்சி சென்றது. இறுதியாக இது தான் நம்பராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். இதில் எமக்கு சாதகமாக பிரெஞ்ச் வகுப்பின் இடையில் எப்பொழுதுமே ஒரு 15 நிமிடம் இடைவேளை விடப்படும். அப்பொழுது ஆசிரியை தனது சூட்கேஸை பூட்டிவிட்டு நம்பரையும் மாத்தி விட்டு சென்று விடுவார். இந்த 15 நிமிடத்தை நாம் பாவதித்தோம். நாம் அட்டாக் பண்ண போவது பெண்களிற்கு தெரியும் ஆனால் அங்கு யாரும் காட்டிக்குடுக்க மாட்டார்கள் (அவர்களிற்கும் பரிட்சைப்பேப்பரில் பங்கு உள்ளது). ஆசிரியர்களின் அலுவலகத்திலிருந்து எமது வகுப்பறை வரை ஆட்களை நிறுத்தி விட்ட பின் ஒருவன் கோட் நம்பறை திறந்து பரிட்சைப்பேப்பறை எடுத்துக் கொண்டு போய் எமது கல்லூரியின் முதலாவது மாடியிலுள்ள காப்பி அடிக்கும் மிசினில் அடித்துவிட்டு மறுபடியும் உண்மையான பரிட்சைப்பேப்பறை அதை சூட்கேஸ் உள் வைத்து பூட்டி விட்டான். அதன் பின் பரிட்சைப்பேப்பர் அனைவரிற்கும் எம்மால் வழங்கப்பட்டது. எமது ஆசிரியை எப்பொழுதுமே பரிட்சைப்பேப்பரின் பதில்களையும் அதனுடனே வைத்திருப்பார். அதனையும் நாம் காப்பி அடித்துக் கொடுத்து சமூக சேவை செய்தோம். ஆனால் யாருமே 90 புள்ளிகளிற்கு மேல் எடுக்க கூடாது என்று முதலே முடிவாக சொல்லி விட்டோம். இதுவரை யாரும் 90 எடுத்ததும் இல்லை. விதி இங்கு தான் விளையாட ஆரம்பித்தது. ஒரு கேள்வியில் „உங்களுடைய கருத்தை எழுதுங்கள் „ என்று வந்தது. நாம் காப்பி அடித்துக்கொடுத்த பேப்பதரில் ஆசிரியை தனது கருத்தையே எழுதியிருந்தார். எங்களில் ஒருத்தி அப்படியே ஆசிரியையின் கருத்தேய எழுதிவிட்டாள். இதை அவளும் கவனிக்கவில்லை. நாம் அடுத்த பரிட்சை சுடுவது பற்றி யோசித்துகொண்டே அடுத்த பிரெஞ்ச வகுப்பிற்கு சென்றோம். ஆசிரியை வழக்கம் போல் உள்ளே வந்தார். சிறிது நேரம் கழித்து ஆசிரியை ஒரு பெண்ணை (அவள் தான் ஆசிரியையின் கருத்தை அப்படியே எழுதியவள்) சற்று தன்னுடன் வெளியே வருமாறு அழைத்தார். தனது கருத்தை ஒரு சொல்லும் மாறாமல் எழுதியது எப்படி என்று அங்க புலன்விசாரனை நடந்தது. சூட்கேஸ் நம்பர் கண்டுபிடித்து இப்படி செய்தது கிறிமினல் குற்றம். உண்மையை சொல்லாவிட்டால் தான் பொலிசாரிடம் புகார் செய்ய வேண்டி வரும் என்று ஆசிரியை மருட்ட அவளும் பயந்து போய் எங்களை காட்டிக்கொடுத்து விட்டாள். விசயம் தலமை ஆசிரியர் வரை சென்றது. எமது கல்லூரி வாழ்க்கையே முடிந்து விட்டது என்று நாம் எண்ணியிருந்தோம் ஆனால் இறுதிப் பரிட்சைக்கு 6 மாத காலமே இருப்பதால் எம்மை தொடர்ந்தும் படிக்க விட்டார்கள். எமது ஆசரியை சொன்ன வசனம் எனது வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது „25 வருடமாக நான் இங்கே ஆசிரியையாக கடமை புரிகின்றேன். ஆனால் உங்களை மாதிரி ஒரு வகுப்பை நான் பார்த்ததில்லை „ என்றார். இன்றும் அந்த கல்லூரியில் எனதும், எனது நண்பர்கினதும் பெயர்கள் வரலாற்றில் இன்னும் பைல்களில் வீரகாவியமாக உள்ளன. இதை நினைத்து நான் எத்தனையோ தடவை வேலை இடத்திலும், தெருவில் நடந்து போகும் போழுதும் சிரித்திருக்கின்றேன்!

பள்ளிப்பருவத்தில் எனக்கு நிறையவே காதிலிகள் இருந்திருக்கிறார்கள். எனது 17-21வயது வரை பெண்கள் விடயத்தில் எனது மார்க்கட் சூடுபிடித்திருந்த காலம். இதை படித்துவிட்டு நீங்கள் தப்பாக நினைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன். எனவே நீங்கள் என்னை திட்ட வேண்டும் என்றால் நன்றாக திட்டலாம். பார்ப்பதற்கு நல்ல உடம்பும், எவரையும் எனது பேச்சுத்திறன் மூலம் மயக்கும் திறனை நான் சிறுவயது முதலே வளர்த்துவந்ததால் கல்லூரிப்பருவத்தில் இது எனக்கு மிகவும் உதவியது. எனது சக தமிழ் நண்பர்களை விட நான் சற்று உயரம் அதிகம். இருந்தாலும் எனது அப்பாவின் மீது உள்ள பயத்தினால் நான் பெண்கள் விடயத்தில் அடக்கியே வாசிப்பேன். ஆனால் எனது நண்பர்களோ ஆளுக்கொன்றுடன் சுற்றினார்கள். இங்கு லண்டன் கனடா போல் தமிழ் பெண்கள் அதிகமல்ல. ஆனால் சுவிசிலயே நாங்கள் அந்தக்காலத்தில் அடிபாடு என்றால் பெயர் போனவர்கள். நிறைய பெண்களிற்கு எங்களின் பெயர் தெரியும் ஆனால் எங்களை பார்த்ததில்லை. நானும் எனது நண்பர்களும் எங்கு சென்றாலும் ஏனைய மாநில பொடியளுடன் கொhழுவி பெண்களை எமது பக்கம் கவர்வது வழக்கம். ஆனால் நாங்கள் அடிபட்டது மிகவும் குறைவு. மற்றவர்களை வாயாலயே வெருட்டி போடுவம். இப்படி தான் எனது பெயரும் எனது நண்பர்கள் பெயரும் சுவிசில் உள்ள இளம் பெண்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது. அப்பொழுது கைத்தொலைபேசி எல்லாம் எங்களிடம் இல்லை. ஒரு பேஐர் வாங்கி இடுப்பில கொழுவி பிலிம் காட்டுறது தான் எங்கட வேலை. அப்பொழுது தான் சற் எல்லாம் வளர்ந்து வந்த காலம். நானும் சற் போய் பெண்களை பிடித்து ஈமெயில் எழுதி சந்திக்கிற வரைக்கும் போனன். முதல் தடவையே நான் ஒருத்தில சிரியசா லவ் பண்ணினன். ஏனக்கு 18 அவளுக்கு 16. 6 மாசத்துக்குப்பிறகு அவள் வேலையை காட்டிட்டாள். பிறகு என்ன அதுக்குப்பிறது அம்பியா இருந்த நான் அந்நியனா மாறினன். மாறி மாறி கதைக்கிற பொட்டையள் எல்லாரோடையும் டேட்டிங் தான். எண்ணிக்கையே இல்லை. ஒரு தடவை இரண்டு நண்பிகளையும் ஒரே நேரத்தில வச்சிருந்த அனுபவம் மறக்கவே முடியா. ஆனா எந்த ஒரு பெண்ணின் கற்போடையும் நான் விளையாடவில்லை. அப்படி எண்ணம் அப்பொழுது இருந்த இளைஞர்களிடத்தில் மிகவும் குறைவாக இருந்தது. இப்பொழு அது கொஞ்ம் மாறியுள்ளது. இதை கலாச்சார சீரழிவு என்று எப்படி கத்தினாலும் இயற்கையின் மாற்றத்தை எம்மால் நிறுத்தவே முடியாது.

டொச் மொழியின் இலக்கணம் என்பது எனது மண்டைக்குள் எப்பொழுதுமே ஏறாத ஒன்று. சுவிசில் உள்ள வரை வெளி உலகம் தெரியாது. வேறு நாடுகள் சென்று பார்த்தவுடன் தான் தெரிந்தது சுவிஸ் ஒரு சொர்க்கு பூமி என்று.

காதல் என்பது காலத்ததிற்கு காலம் மாறு பட்டுக்கொண்டே போகும். இது இயற்கை. சுpல பெரிசுவள் இதைதான் கலாச்சாரச்சிரிழிவு என்டு சொல்லுதுவள். இயற்கையை நாம் செய்கையால் மாற்ற முயன்றால் அதன் விளைவு விபரீதமாகவே முடியும்.

எனது திருமணம் காதல் திருமணமா இல்லையா என்பது எனக்கு தெரியாது. எனக்கு பெண்ணாசை என்பது போய்விட்டது. அந்த வயதை தான்டி நான் வந்துவிட்டேன். இப்பொழுது திருமணம் என்பதில் ஆசையில்லை

ஜம்மு

9)சினிமாவில் உங்களுக்கு ஒரு கதாநாயகன் பாத்திரம் கிடைக்குது அசினோட நடிக்க அப்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?நீங்கள் நடிப்பீங்களா அல்லது நடிக்கமாட்டீங்களா?

வடிவேல் 007

விஐய் கோவிப்பாரே நான் அசினை எடுத்திட்டா து அப்படி நடிக்க சந்தர்ப்பம் கிடைத்தால் அதில் வரும் அனைத்து பணமும் எமது ஈழத்திற்கே செல்லும். ஆனாலும் அசினை சைற்ரில வச்சிருபன்

ஜம்மு:

10)யாழ்களத்தில் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருக்குது?அப்படியாயின் காரணம் என்ன?

வடிவேல்007

யாழ்கழத்தில நான் ஒருவருடனும் பெரிதாக நட்பு வைக்கவில்லை. யமுனா மட்டும் கொஞ்ச நாள் ஈமெயில் போட்டா. பின் அவரை எனது புலநாய்வுதுறையில் சேர்த்துக்கொண்டேன். ஆனால் அவரோ என்னை அண்ணா என்று விட்டார்

வானவில்: :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு

11) ஈழத்தில் நீங்கள் அநுபவித்த ஒரு சில இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?உங்களுக்கு தற்போது இருக்கும் நாடு விருப்பமா அல்லது இலங்கையில் வசிப்பது விருப்பமா?

வடிவேல்:

ஈழத்தில் நான் வாழ்ந்த காலம் மிகவும் குறைவு. எனது 8வது வயது வரை ஈழத்தில் இருந்தேன். அப்பொழுது நடந்த எதுவும் எனக்கு நினைவிலில்லை

ஜம்மு

12)பெண்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?பெண்களுக்கு கோபம் கூடுதலாக வருவதை பார்த்திருப்பீர்கள் அதை பற்றி என்ன சொல்ல விரும்புறீங்க?

வடிவேல்007

பெண்களை பற்றி... (எல்லா தாய்க்குலங்களும் மன்னிச்சிருங்க)

கடவுள் முதலில் பெண்ணை படைத்தான் (ஒரு சாம்பிள் மாதிரி). பெண் என்ற தனது படைப்பு தோல்வியில் முடிந்ததை உணர்ந்த கடவுள், தனது முதற் படைப்பான பெண்ணிடம் இருந்த குறைகளை சரி செய்து ஆணை படைத்தான்

அதிகமாக கோவப்படும் பெண்களிற்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது: அதிகமா கோவப்படுற பொம்பிளையும் அதிக ஆசைப்படுற ஆம்பிளையும் நல்லா இருந்ததா சரித்திமே இல்லை

ஜம்மு

13)நீங்கள் உங்கள் நண்பர்கள் எல்லாம் சேர்ந்தால் என்ன செய்வீங்கள்?குழப்படி எல்லாம் செய்வீங்களா அப்படி செய்து தற்போது யாரிட்டையும் அடி வாங்கின சந்தர்ப்பம் இருக்குதா?

வடிவேல்007:

இந்தக் கேள்விக்கு பதில் எழுத வேண்டுமானால் 1000 பக்கங்களை தாண்டும். அந்தந்த வயசில பண்ண வேண்டிய எல்லாம் எனக்கும் எனது நண்பர்களிற்கும் அந்தந்த வயசிலயே பண்ண முடிந்தது. எனது இளமைக்காலத்தில் அது செய்யவில்லையே இது செய்யவில்லையே என்று நான் வருந்தியதில்லை. ஏனைய மாநில தமிழ் பொடியளுடன் தகராறுகளில் ஈடுபடுவது, அவர்களின் மாநில பெட்டையளுடன் சுத்துவது (அது அவர்களிற்கு மூஞ்சையில் அடித்தாற்போல் இருக்கும்), தமிழ் கடைகளிற்கு முன் „சும்மா“ நிற்பது, புறோக்கிறாம்களில் திக்கற் எடுக்காமல் மலசலகூடத்தின் யன்னல்கள் வழியாக தாவி உள்ளே போவது, புறோக்கிறாம் போய் ஒரு கோலா ரின் வாங்கி அதையே புறோக்கிறாம் முடியிற வரைக்கும் கன்ரினில நின்டு போஸ் குடுத்துக்கொண்டு குடிக்கிறது, ஒரு பக்கத்தால பெட்டையளுக்கு போன் பண்ணி இப்படி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்காதீங்க என்டு புத்திமதி சொல்லுவான் ஒருத்தன் மற்ற பக்கத்தால ஒருத்தன் டேட்டிங் போவான், பெட்டையளின்ர ரகசிங்கள் (எங்க எவனோட சுத்தினது போன் விபரங்கள்) தெரிஞ்சு வச்சுக்கொண்டு அதுவள அழ வைக்கிற, இப்படி ஏராளமான விசயங்கள் இருக்கு.

ஜம்மு

14)யாழில் தற்போது புதிய விதிகள் வந்துள்ளது,உதாரணத்திற்கு செய்தி பிரிவில் எல்லோரும் செய்தி போட முடியவில்லை இது சில உறுப்பினர்களுக்கு பிடிக்கவில்லை இதை பற்றி உங்கள் கருத்து என்ன?மோகண் அண்ணாவுக்கு நீங்க சொல்ல விரும்புவது?

வடிவேல்007:

யாழின் விதிமுறைகள் இவ்வளவு காலமா இருக்கிற எனக்கே தெரியாது. யார் யார் என்ன பண்ணலாம் என்பதை தீர்மானிப்பவர் மோகன் அண்ணா. எனவே இதை அவரிடமே விடுவது சிறந்தது

ஜம்மு

15)யாழில் உங்களின் புலனாயிவுதுறை ஆற்றிய சேவைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதற்கு உறுதுணையா இருக்கிற உங்கள் தம்பி வடிவேல் பற்றியும் 008 பற்றியும் சொல்லுங்கோ?

இந்த கேள்விக்கு பதிலழிக்கப்படவில்லை

Link to comment
Share on other sites

இவர்களைப்பற்றி ஒரு வரியில்

டண்- Dish Asia Network

நெடுக்ஸ்- குருவிகள், பறவைகள்

மதன்- மொட்டை மதனா இல்லை மன்மதனா?

ஐன்னி- போடா பண்ணி

வானவில்- கலர்புல் மனிதரா?

மணிவாசகன்- நான் ஆனந்த விகடன் வாசகன்

சித்தன்- சித்தி சீரியல் பெண்களிற்கு, சித்தன் ஆண்களுக்கா?

சின்னா- சரி நீங்க சின்னாவோ அமெரிக்காவே. நான் தமிழீழம்.

கு.சா- எங்கயப்பா மிச்சப் பெயர்?

வடிவேலு- 23வது பலிஆடு

தூயவன்- தூ"ஈ"அவன்

இராவணன்- காட்டுக்குப்போகாம இங்க என்ன பண்ணுறீர்?

விஷ்ணு- பூலோகத்தில் என்ன செய்கிறீர்?

வினித்- ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா வருவது

நாரதர்- றொம்ப நாறுது

ஐம்மு- அப்ப க~;மீர் எங்க?

இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

யாழில் சேர்ந்திருப்பது- துரோகியும்-எதிரியும்

யாழில் மட்டுனருக்கு பிடிக்காதது- இங்கு செய்தி சுட்டு வெளியில் போடுவது

யாழின் பலம்- நான்

யாழின் பலவீனம்- வேலைவெட்டி இல்லாம இதைப்படிக்கிற நீங்க தான்

யாழில் மறக்கமுடியாதவர்- ம்ம்ம்ம்…சொறி மறந்து போச்சு.

யாழில் கொப்பி பேஸ்டுக்கு-யாழில மட்டும் இல்லை எங்கயுமே கொப்பி பேஸ்ட்டுக்க Ctrl+C தான்

யாழின் வால்கள்- தலை நான் இருக்கும் போது வால் ஆடிக்கூடாது. சோ ஒட்ட நறுக்கீட்டன்.

ஆசைக்கு- வேல்,வடிவேல்007

அறிவுக்கு-என்ன நக்கலா?அதான் பக்கத்தில இருக்கிறமுல்ல அப்புறம் என்ன கேள்வி வேண்டி கிடக்கு

Link to comment
Share on other sites

பல சிரமங்களுக்கும் மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வந்த வடிவேல் 007 க்கு டைகர் வானொலி மற்றும் டைகர் குடும்பம் சார்பாகவும் நான் பேட்டி எடுக்கும் போது கூடவே இருந்து ஒத்துழைப்பு வழங்கிய வானவில்லுக்கும் மிக்க நன்றிகள்.

vadivel1smallmq6.jpg

Link to comment
Share on other sites

எங்களுக்காக தனது நேரத்தை ஒதுக்கி பேட்டி கொடுத்தமைக்கு வடிவேல்007க்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

உங்கள் கருத்துகளை இங்கே பதியுங்கள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=2192

Link to comment
Share on other sites

வடிவேல் 007அவர்களின் பேட்டியை ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறோம் இன்று இன்னொருவரினது பேட்டி இருக்குது காணதவறாதீர்கள்

Link to comment
Share on other sites

அடுத்த பேட்டி இளம் யாழ் அறிமுகம் இன்னிசையுடன் காணதவறாதீர்கள்

757675483413b3edbe4a01tz6.jpg

Link to comment
Share on other sites

வணக்கம் இன்னிசை பலத்த வேலைகளுக்கும் மத்தியிலும் எமது அழைப்பை ஏற்று வருகை தந்த உங்களை டைகர் வானொலி சார்பாகவும் டைகர் குடும்பம் சார்பாகவும் வருக வருக என வரவேற்கிறோம்

யாழ்களத்தில் உங்களை அதிக பேருக்கு தெறிய வாய்பிருக்காது ஆகவே உங்களை பற்றி சில வரிகளை சொல்லுங்கோ?

1)யாழ்களத்துக்கு நீங்கள் எவ்வாறு அறிமுகமானீங்கள்,யாரால் அறிமுகபடுத்து பட்டீர்கள் என்பதை எங்கள் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?இன்னிசை என்ற பெயர் உங்கள் பெயரா அல்லாவிடில் அந்த பெயரை நீங்கள் தெரிவு செய்த்தன் காரணம் என்ன?அத்துடன் யாழில் நுழையும் போது எவ்வாறான மனநிலையில் இருந்தனீங்க?

2)நீங்கள் ஒரு புதிய உறுப்பினர் உங்களை எவ்வாறு பழைய உறுப்பினர்கள் வரவேற்றார்கள்?அவர்களில் நீங்கள் மிகவும் நெருங்கிய உறவாக நினைப்பது யாரை அவர்களை பற்றி சில வரிகள் சொல்லுங்கோ?நீங்கள் யாழில் குருவாக நினைப்பது யாரை?

3)இப்போது டைகர்பமிலி பற்றி பலதரபட்ட விமர்சங்கள் வந்தபடி உள்ளது அதை பற்றி உங்கள் கருத்து என்ன?அரட்டையும் தற்போது பலதரபட்ட விமர்சனத்திற்கு உள்ளாகபட்டுள்ளது இதை பற்றி உங்கள் கருத்து என்ன?அரட்டை அடிக்க வேண்டாம் என்று பக்கம் திறந்து அரட்டை அடிப்பவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?

அத்தோடு ஜமுனாவும்,வானவில்லும் யாழிற்கு தேவையில்லை என்ற தொணியில் சில அன்பர்கள் இன்று கதைத்தார்கள் நீங்களும் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதை பற்றிய உங்கள் கருத்து என்ன?

4)யாழில் இப்பொது வரும் பழைய உறுப்பினர்கள் தங்களுக்கு ஒருபக்கத்திலும் எழுதமுடியவில்லை என்று மோகண் அண்ணாவோடு சண்டை பிடிப்பதை பார்த்திருக்கலாம் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க?அவர்கள் செய்வது சரியா அல்லது பிழையா உங்கள் பார்வையில்?

5)சிலர் யாழில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துகளை வைப்பார்கள் அல்லது வில்லங்கமான கருத்துகளை வைப்பார்கள் இவர்களை பற்றி என்ன நினைக்கிறீங்க?இவர்களுக்கு நீங்க சொல்வது என்ன?இவர்கள் யாழின் வளர்ச்சிக்கு தேவை தானா?

Link to comment
Share on other sites

சிறிய இடைவேளைக்கு பின் பேட்டி தொடரும்.

பேட்டிக்கு பிரதான அநுசரணையாளர் -

1)யாழ்கவி ஓடியோ அன்ட் வீடியோ

2)சோனா பியூட்டி பாலர்

3)குட்டிதம்பி நகைகடை

4)யாழ்ரவி சைபர் கவே

5)வெண்ணிலா தங்கமாளிகை

6)மாப்பிள்ளை புத்தககடை

7)சகி துணிகடை

8)ஜனனி சுரித்தாகடை

9)குமாரசுவாமி வயின்சொப்

10)பொன்னி ஸ்பைஸ்

பேட்டிக்கு இணை அணுசரணை

1)யானைவில் குளிர்பானம்

2)சித்து பூகடை

3)இவர்களுடன் ஆத்மீக ஒளிகிடைக்க நாடவேண்டிய ஒரெ இடம் சத்திஞானந்த குருஜி

புத்து

மக்கள் தொடர்பாடல் 1)விசால்

2)லீசன்

ஊடக அநுசரனை

1)நெடுக்ஸ்வானொலி

பேட்டி எடுத்தவருக்கு மேக்கப்

1)சோனாபியூட்டிபாலர்

பேட்டிக்கு பிரதான ஊடக அனுசரனை வழங்குவோர்

டைகர் வானொலியின் உத்தியோக பூர்வ இணையத்தளம்

http://www.yarltigerfm.tk

Link to comment
Share on other sites

சிறிய இடைவேளைக்கு பின் மீண்டும் இன்னிசையுடன்

6)நீங்கள் ஈழத்தில் பிறந்தனீங்கள் என்று நினைக்கிறேன் அதை பற்றிய அநுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?உங்கள் பள்ளி நாட்கள்?உங்கள் பள்ளி காதல்?மற்றும் அப்பா,அம்மாட்ட வாங்கிய திட்டு,அடி என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

7)தற்போது நீங்கள் அவுஸ்ரெலியாவில் இருக்கிறீங்க உங்களை கேட்டா அவுஸ்ரெலியா நல்லதா அல்லது சொந்த மண் நல்லதா என்று கேட்டா உங்கள் பதில் என்ன?அவுஸ்ரெலியாவிற்கு வந்த புதிதில் எவ்வகையான மனநிலையில் நீங்கள் இருந்தனீங்க?எவ்வாறு அவுஸ்ரெலியர்கள் உங்களுடன் பழகினார்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

8)அடுத்தது காதல் எல்லாருக்கும் காதலை பற்றி தெரியும் உங்கள் பார்வையில் காதல் என்றா என்ன?அந்த அநுபவம் இருக்கா?இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கோ?காதலை வெறுப்பவர்களுக்கு நீங்கள் சொல்லும் பதில் என்ன?உங்கள் திருமணம் காதல் திருமணமா அல்லது நிச்சயிக்கபட்ட திருமணமா?

9)யாழில் நீங்கள் இதுவரை எத்தனை பேரை சந்தித்து இருக்கிறீங்க?இனியும் யாழில் யாரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறீங்க அதற்கான காரணம் என்ன?

10)உங்கள் முன் கடவுள் தோன்றி உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டா நீங்கள் என்ன கேட்பீங்க?அதற்கான காரணம் என்ன?

Link to comment
Share on other sites

11)ஈழத்தில் நீங்கள் அநுபவித்த இன்னல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?அதில் உங்களை மிகவும் பாதித்தது எது?தற்போது நம் தலைவன் விமானம் ஓட்டுகிறார் அதை பற்றி என்ன சொல்லுறீங்க?

12)பெண்களுகு இப்ப சமைக்க தெறியாது என்று பலர் சொல்லினம் தாங்கள் எப்படி?உங்களுக்கு சமைக்க தெறியுமா?ஆண்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

13)நீங்கள் உங்கள் தோழிகள் எல்லாம் சேர்ந்தா என்ன குழப்படி எல்லாம் செய்வீங்கள்?அப்படி செய்து யாரிட்டையும் அடி அல்லது திட்டு வாங்கிய சந்தர்ப்பம் இருந்தா எங்கள் நெயர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியுமா?

14)யாழில் புலத்தில் பிறந்தவர்கள் (இளைஞர்கள்) வருவது மிகவும் குறைவு அவர்களை யாழுக்கு கொண்டுவர என்ன செய்யலாம் என்று நீங்கள் நினைக்கிறீங்க?

15)உங்களுக்கு எத்தனை பேர் இதுவரை காதல் கடிதம் தந்தவை அவைக்கு நீங்கள் சொன்ன பதில் என்ன?யாராவது அடி வாங்கிய சந்தர்ப்பங்களும் உண்டா? அப்படியாயின் அதையும் எங்கள் நேயர்களுக்கு சொல்லுங்கோ?

Link to comment
Share on other sites

இவர்கள் பற்றி ஒரு வரியில்

  1. டண்-
  2. பொன்னி -
  3. குட்டிஸ்-
  4. சோணு
  5. ஜன்னி-
  6. பிரியசகி-
  7. வானவில்-
  8. புத்தன்
  9. சித்தன் -
  10. சுண்டல்

  11. கு.சா-
  12. வடிவேலு-
  13. தூயவன் -
  14. அனிதா-
  15. லீசா-
  16. மோகண்-
  17. வெங்கட்-
  18. யாழ்ரவி-
  19. யாழ்கவி-
  20. யாழ்பிரியா-
  21. தூயா-
  22. ஜம்மு-
இவற்றை பற்றி ஒரு வரியில் பதில்

1 யாழில் சேர்ந்திருப்பது

2 யாழில் மட்டு நிறுத்தினருக்கு பிடிக்காதது

3 யாழின் பலம்

4.யாழின் பலவீனம்

5.யாழில் மறக்க முடியாதவர்

6.யாழில் மறக்க கூடியவர்?

7.யாழில் கொப்பி பேஸ்டுக்கு?

8.யாழின் வால்கள்

9.ஆசைக்கு?

10.அறிவுக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.