Jump to content

இலங்கை பாடத்திட்டத்தில், 38 ஆண்டுகள் இஸ்லாமியவாத தீவிரவாத கொள்கைகள் கற்பிக்கப்பட்டன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 

islam.jpg?zoom=0.9024999886751175&resize

இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள, பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

1980ஆம் ஆண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் கற்கும் 9,10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் “இஸ்லாமிய தண்டனைகள் ஒழுங்காக அமுல் நடத்தப்படுமாயின் உலகில் குற்றங்கள் அமைவது மிக அரிதாகவே அமையும் என்பதில் சந்தேகமேயில்லை” என்று கூறப்பட்டு அதன் கீழ் உள்ள ‘குற்றங்களும் தண்டனைகளும்’ என்று தலைப்பிடப்பட்ட பட்டியல் ஒன்றில் குற்றமாகக் கருதப்படும் செயல்கள் மற்றும் அவற்றுக்கான தண்டனைகள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து, பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படும் என இலங்கை கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆரய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தன்னிச்சையாக முன்வந்து சாட்சியமளித்த, ரிஷ்வின் இஸ்மத் என்பவரால் இந்த விடயம் வெளியிடப்பட்டது.

இஸ்லாமிய தண்டனைகள்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட ரிஷ்வின் இஸ்மத், பிறப்பிலிருந்தே முஸ்லிம் என்றதுடன், அவர் 2013ஆம் ஆண்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறினார். எந்தவொரு மதத்தையும் தற்போது தான் பின்பற்றாத பின்னணியில் தன்னை கொலை செய்ய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவுக்குழு முன்னிலையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

ரிஷ்வின் இஸ்மத்திற்கு விடுக்கப்பட்டதாக கூறப்படும் மரண அச்சுறுத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகள்

‘எச்சரிக்கைகளின் பின் கொலை’

‘ரித்தத்” என்ற சொல் குறிப்பிடப்பட்டு, அதற்கு தண்டனையாக எச்சரிக்கைகளின் பின் கொலை என்பது தண்டனையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரித்தத் என்ற சொல்லின் பொருள் மதம் மாறல் என்பது. ஒருவர் இஸ்லாத்தில் இருந்து அல்லது இஸ்லாத்தை ஏற்றுவிட்டு மீண்டும் இஸ்லாத்திலிருந்து வெளியேறுதல் அல்லது இஸ்லாம் அல்லாத வேறு மதங்களுக்கு சென்று விடுவதை ‘ரித்தத்” என கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் புதிய பாடநெறி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய பாடபுத்தகத்திலும் சில பாரதூரமாக வசனங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அரசாங்கத்தால் கற்பிக்கப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத கொள்கைகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களை பிற்பற்றுவோருக்கு ‘மரண தண்டனை’ என்பதற்கு பதிலாக ‘கொலை’ என பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்பட வேண்டும் என குரானில் எங்கும் கூறப்படவில்லை என தெரிவித்த அவர், அது அதீஸ்-இல் கூறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, எகிப்து நாட்டிலுள்ள போதகரான யூசுப் அல் கர்தாரி என்பவரினால் அந்த நாட்டு தொலைக்காட்சியொன்றுக்கு தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அமைப்பான ஸ்ரீலங்கா ஜமாத்தே இஸ்லாமிக்கினால் வெளியிடப்படுகின்ற மாதந்த சஞ்சிகையான அல்-ஹசனா சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக ரிஷ்வின் இஸ்மத் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை விட்டு வெளியேறுவோர் கொலை செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் இல்லாத பட்சத்தில், இஸ்லாமிய மார்க்கம் அழிந்து போய் விடும் எனவும், தற்கொலை தாக்குதல் சரி என்ற விதத்திலும் இந்த சஞ்சிகையில் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ரிஷ்வின் இஸ்மத் Image captionரிஷ்வின் இஸ்மத்

“தற்கொலை” என்பதற்கு பதிலாக “தற்கொடை”

அத்துடன், இலங்கையில் அந்த கட்டுரையை எழுதிய நபர் “தற்கொலை” என்பதற்கு பதிலாக “தற்கொடை” என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியுள்ளார் எனவும் ரிஷ்வின் இஸ்மத் கூறுகின்றார். தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் என்பதற்கு பதிலாக, தனது உயிரை கொடை செய்தல் என பொருட்படும் விதத்தில் இந்த கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை ஆராய்ந்த தெரிவுக்குழு உறுப்பினரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கட்டுரையின் ஊடாக வார்த்தைகளினால் விளையாடியுள்ளனர் என கூறியிருந்தார். ரிஷ்வின் இஸ்மத்திடம், நாடாளுமன்ற தெரிவுக்குழு ரகசிய விசாரணைகளையும் நடத்தியிருந்தது.

இலங்கை கல்வி அமைச்சர் பதில்

அகில விராஜ் காரியவசம் படத்தின் காப்புரிமைFACEBOOK Image captionஅகில விராஜ் காரியவசம்

இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் தவறான கொள்கைகள் பரப்பப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவிக்கின்றார்.

இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வேறு மதங்களுக்கு செல்வோர் கொலை செய்யப்படும் என்ற விதத்தில், பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் தொடர்பாக பிபிசி தமிழ், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

BBC

http://globaltamilnews.net/2019/125065/

Link to comment
Share on other sites

6 hours ago, பிழம்பு said:

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

இதேபோன்று மகாவம்சத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் புனையப்பட்டவைகளை ஆராய்ந்து கண்டறிந்து பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சிங்களருக்குத் தமிழினத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியும் அற்றுப் போகலாம். :)

Link to comment
Share on other sites

38 minutes ago, Paanch said:

இதேபோன்று மகாவம்சத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் புனையப்பட்டவைகளை ஆராய்ந்து கண்டறிந்து பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சிங்களருக்குத் தமிழினத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியும் அற்றுப் போகலாம். :)

பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்ட விபரங்களை, செவி வழி கேள்விப்பட்டவைகளை அடிப்படையாக வைத்து பௌத்த பிக்குவால் தொகுக்கப்பட்டதே  மகாவம்சம். தொகுக்கும் போது பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் புகுத்தி தமக்கு சார்பாக எழுதியுள்ளார்கள். பிக்குகள் அதை தமக்கு சார்பாக தமிழர்களுக்கு எதிராக இன்னும் மாற்றியமைப்பார்களே தவிர தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாற்றியமைக்க மாட்டார்கள். 😊

Link to comment
Share on other sites

52 minutes ago, Paanch said:

இதேபோன்று மகாவம்சத்திலும் உண்மைக்குப் புறம்பாகப் புனையப்பட்டவைகளை ஆராய்ந்து கண்டறிந்து பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் சிங்களருக்குத் தமிழினத்தின் மேலுள்ள காழ்ப்புணர்ச்சியும் அற்றுப் போகலாம். :)

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

6 minutes ago, Lara said:

பௌத்த பிக்குகளால் குறித்து வைக்கப்பட்ட விபரங்களை, செவி வழி கேள்விப்பட்டவைகளை அடிப்படையாக வைத்து பௌத்த பிக்குவால் தொகுக்கப்பட்டதே  மகாவம்சம். தொகுக்கும் போது பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் புகுத்தி தமக்கு சார்பாக எழுதியுள்ளார்கள். பிக்குகள் அதை தமக்கு சார்பாக தமிழர்களுக்கு எதிராக இன்னும் மாற்றியமைப்பார்களே தவிர தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் வகையில் மாற்றியமைக்க மாட்டார்கள். 😊

உண்மையான வரலாற்றை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதி வைத்திருப்பார்களே? அந்த காப்பியத்தின் பெயர் என்ன? அந்த உண்மையான காப்பியத்தை படித்து பார்த்து தானே மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

உண்மையான வரலாற்றை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதி வைத்திருப்பார்களே? அந்த காப்பியத்தின் பெயர் என்ன? அந்த உண்மையான காப்பியத்தை படித்து பார்த்து தானே மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்கள்?

நான் வேறு ஏதும் காப்பியத்தை படித்து பார்த்து தான் மகாவம்சத்தை உண்மைக்கு புறம்பானது என சொல்கிறேன் என்று உங்களுக்கு யார் சொன்னது? 😂

ஒரு காப்பியத்தையும் வைத்து நான் எனது கருத்தை எழுதவில்லை. மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்றும் நான் கூறவில்லை. பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் உள்ளடக்கி எழுதியுள்ளார்கள் என்றே எழுதியுள்ளேன். தமிழ் விளங்காவிட்டால் திரும்ப வாசித்துப்பாருங்கள்.

சிங்கத்துக்கும் ஒரு இளவரசிக்கும் பிறந்தது தான் சிங்கபாகு, என்பது போன்ற கட்டுக்கதைகளை நீங்கள் வேண்டுமானால் நம்புங்கள். எனக்கு அந்த அவசியமில்லை. 😎 சிங்கபாகுவின் மகன் தானாம் விஜயன்.

பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை, எனவே இலங்கையின் பூர்வீக குடிகளான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு தோன்றுகிறது என்பதெல்லாம் உண்மையா இட்டுக்கட்டியதா? உண்மையான புத்தரின் போதனைகள் வேறு.

விஜயனும் 700 தோழர்களும் இலங்கைக்கு வந்து தான் இலங்கையில் சிங்கள இனம் உருவானது. அதற்கு முன் இயக்கர், நாகர் போன்றோர் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தார்கள். இதற்கான ஆதாரங்களை தருவதும் மகாவம்சம்.

இந்தியாவில் அசோகர் பௌத்த சமயத்துக்கு மாறி ஆசியா முழுவதும் பௌத்தத்தை பரப்ப முயற்சித்து அதில் ஒரு பகுதியாக இலங்கைக்கும் மகிந்தன், சங்கமித்தையை அனுப்பி பௌத்தத்தை பரப்பினார்.

இப்படித்தான் சிங்கள பௌத்தம் உருவானது. அப்படியிருக்க இலங்கையை சிங்கள பௌத்த நாடு போலும் தமிழர்களை அந்நியர்கள் போலும் காட்டி தமிழின விரோத கருத்துகளை முன்வைப்பதும் பௌத்த தீவிரவாத கருத்துகளை முன்வைப்பதும் உங்கள் போன்றோருக்கு சில வேளை சரியாக படலாம்.

சிங்கள ஆய்வாளர்களே மகாவம்சத்தை ஒரு வரலாற்று நூலாக கருத முடியாது என்கிறார்கள், அதே நேரம் அதை முற்று முழுதாக புறக்கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

உண்மையான வரலாற்றை செம்மொழியான தமிழ் மொழியில் எழுதி வைத்திருப்பார்களே? அந்த காப்பியத்தின் பெயர் என்ன? அந்த உண்மையான காப்பியத்தை படித்து பார்த்து தானே மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்கள்?

நீங்கள்....எதற்க்காக....எப்போதும் சிங்களத்துக்கு ....வக்காலத்து....வாங்குகிறீர்களோ....தெரியாது!

மகாவம்சத்தை....எழுதுவதற்காகப் பணமொதுக்கி....அதை ஆரம்பித்து வைத்தவனும்....எல்லாளன் எனும்...தமிழ் மன்னன் தான்!

எந்தப் புத்த விகாரையையும்....சோழர்கள்...உடைத்தாகவோ...அல்லது அழித்ததாகவோ...வரலாறு இல்லை!

அப்படியெனில்...கந்தரோடையில்...எதுவும் மிச்சமிருந்திருக்காது...!

நெடுந்தீவில்....வெடியரசன் கோட்டை என அழைக்கப்படுவதும்...ஒரு விகாரையே!

அது இன்னும் உள்ளதே....!

நயினா தீவு....விகாரையை....அழித்ததற்கான....சான்று ஒன்றையாவது தாருங்கள்...!

தமிழர்களின் பெளத்தம்....சிங்களவர்கள்.....அனுசரிக்கும் தேரவாத பெளத்தம் அல்ல...! அது வித்தியாசமானது! 

அது உண்மையான பெளத்தம்...! ஜைன் மதத்துக்கு மிகவும் நெருங்கியது..! 

Link to comment
Share on other sites

41 minutes ago, Lara said:

ஒரு காப்பியத்தையும் வைத்து நான் எனது கருத்தை எழுதவில்லை. மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்றும் நான் கூறவில்லை. 

 மகாவம்சம் உண்மைக்கு புறம்பானதல்ல என்றால் உண்மையானது என்கிறீர்களா?

 

43 minutes ago, Lara said:

 பௌத்தம் சார்ந்து, அரசியல் சார்ந்து உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் உள்ளடக்கி எழுதியுள்ளார்கள் என்றே எழுதியுள்ளேன். 

அத்தகைய கற்பனைகள் எல்லா காப்பியங்களிலும் உள்ளன. மகா பாரதம், இராமாயணம், மணிமேகலை, பைபிள் எல்லாவற்றிலுமே நோக்கம் சார்ந்த கற்பனைகள் கலந்துள்ளன. மகாவம்சம் அதற்கு விதிவிலக்கல்ல. உங்களுக்கு மகாவம்சத்தில் உள்ள கற்பனைகள் மட்டும் ஏன் குறிப்பிடத்தக்கதாக தெரிகிறது?

Link to comment
Share on other sites

54 minutes ago, புங்கையூரன் said:

நீங்கள்....எதற்க்காக....எப்போதும் சிங்களத்துக்கு ....வக்காலத்து....வாங்குகிறீர்களோ....தெரியாது!

மகாவம்சத்தை....எழுதுவதற்காகப் பணமொதுக்கி....அதை ஆரம்பித்து வைத்தவனும்....எல்லாளன் எனும்...தமிழ் மன்னன் தான்!

எந்தப் புத்த விகாரையையும்....சோழர்கள்...உடைத்தாகவோ...அல்லது அழித்ததாகவோ...வரலாறு இல்லை!

அப்படியெனில்...கந்தரோடையில்...எதுவும் மிச்சமிருந்திருக்காது...!

நெடுந்தீவில்....வெடியரசன் கோட்டை என அழைக்கப்படுவதும்...ஒரு விகாரையே!

அது இன்னும் உள்ளதே....!

நயினா தீவு....விகாரையை....அழித்ததற்கான....சான்று ஒன்றையாவது தாருங்கள்...!

தமிழர்களின் பெளத்தம்....சிங்களவர்கள்.....அனுசரிக்கும் தேரவாத பெளத்தம் அல்ல...! அது வித்தியாசமானது! 

அது உண்மையான பெளத்தம்...! ஜைன் மதத்துக்கு மிகவும் நெருங்கியது..! 

இவை எல்லாம் உங்கள் கற்பனைகளா அல்லது ஆதாரங்கள் காட்டுவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Jude said:

இவை எல்லாம் உங்கள் கற்பனைகளா அல்லது ஆதாரங்கள் காட்டுவீர்களா?

எல்லாளனின் ஆதாரத்தை...மகா வம்சத்தில் தேடுங்கள்..!

கந்தரோடை விகாரையும்.....வெடியரசன் கோட்டையும்...நயினாதீவு விகாரையும் இன்றும் இருக்கின்றன!

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்று ஒரு புத்தகம் எங்களுக்குப் பாடப் புத்தகமாக அப்போது இருந்தது!

கொஞ்சம் சரித்திரப் புத்தகங்களயும் வாசியுங்கள்...!

Link to comment
Share on other sites

3 hours ago, Jude said:

 மகாவம்சம் உண்மைக்கு புறம்பானதல்ல என்றால் உண்மையானது என்கிறீர்களா?

அத்தகைய கற்பனைகள் எல்லா காப்பியங்களிலும் உள்ளன. மகா பாரதம், இராமாயணம், மணிமேகலை, பைபிள் எல்லாவற்றிலுமே நோக்கம் சார்ந்த கற்பனைகள் கலந்துள்ளன. மகாவம்சம் அதற்கு விதிவிலக்கல்ல. உங்களுக்கு மகாவம்சத்தில் உள்ள கற்பனைகள் மட்டும் ஏன் குறிப்பிடத்தக்கதாக தெரிகிறது?

உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசிக்குமாறு கூறினேன். அதுவும் விளங்கவில்லை என்றால் என்ன செய்ய?

சில வரலாற்று சம்பவங்களுடன் பொய் புரட்டுகளை இட்டுக்கட்டி சிங்கள பௌத்த தீவிரவாத கருத்துகளுடன் தமிழின எதிர்ப்பு கருத்தையும் உள்ளடக்கி வாசிக்கும் சிங்களவர்களையும் சிங்கள பௌத்த மனப்பான்மையில் இருக்க செய்து தமிழர்களை அழிக்க துணை போக செய்வதற்கான புத்தகம் தான் மகாவம்சம்.

புத்தர் இயக்கர்களை அகற்றி பௌத்த மதத்தை தோற்றுவிக்க நினைப்பது போல் காட்டுவதும் பௌத்தத்துக்கான போரை நடத்துவது போல் காட்டுவதும் சைவ கோவில்களை, சைவ சின்னங்களை அழித்து பௌத்த தூபிகள் அமைப்பதை நியாயப்படுத்துவதும் இன்னும் பலவும் சிங்கள பௌத்த மக்களையும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவாளர்களாக்குவதற்காக எழுதப்பட்டது. அதில் கூறப்பட்டவை போல் தான் இன்று இலங்கையில் நடக்கிறது.

சிங்களவர்கள் இலங்கையில் உருவாக முன்னர் இயக்கர், நாகர் போன்றோர் பூர்வீக குடிகளாக இருந்தும் இலங்கையை சிங்கள பௌத்த நாடு போல் காட்டி தமிழர்களை அந்நியர்கள் போல் காட்டியதை பற்றி நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள்.

ஏனைய காப்பியங்களை இங்கே ஏன் இழுக்கிறீர்கள். ஏனைய காப்பியங்கள் கற்பனைகளற்ற வரலாறு என நான் எங்கும் கூறவில்லையே. 

Link to comment
Share on other sites

 

Quote

 

      11 hours ago, பிழம்பு said:

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விமான்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டு, பாடத்திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தவும் தான் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறினார்.

 

இதுநாள்வரை கண்ணை மூடிக்கொண்டிருந்தார்களா?

மகாவம்சம் என்பது தங்களுக்கு ஏற்றவிதமாக சில திரிபுகளுடன்  அவர்களால் எழுதப்பட்டது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான செயல் இது, சிறுவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகத்தில் மதம் மாறுபவர்களை கொல்லவேண்டும் என்று கருத்தினை இட்டவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். அல்லாதான் அவர்களை தண்டிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

54 minutes ago, Lara said:

உங்களுக்கு தமிழ் விளங்கவில்லை என்றால் மீண்டும் வாசிக்குமாறு கூறினேன். அதுவும் விளங்கவில்லை என்றால் என்ன செய்ய?

சில வரலாற்று சம்பவங்களுடன் பொய் புரட்டுகளை இட்டுக்கட்டி சிங்கள பௌத்த தீவிரவாத கருத்துகளுடன் தமிழின எதிர்ப்பு கருத்தையும் உள்ளடக்கி வாசிக்கும் சிங்களவர்களையும் சிங்கள பௌத்த மனப்பான்மையில் இருக்க செய்து தமிழர்களை அழிக்க துணை போக செய்வதற்கான புத்தகம் தான் மகாவம்சம்.

ம்…. அப்படியானால் மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்களா இப்போது? 😅😅

1 hour ago, புங்கையூரன் said:

எல்லாளனின் ஆதாரத்தை...மகா வம்சத்தில் தேடுங்கள்..!

கந்தரோடை விகாரையும்.....வெடியரசன் கோட்டையும்...நயினாதீவு விகாரையும் இன்றும் இருக்கின்றன!

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்று ஒரு புத்தகம் எங்களுக்குப் பாடப் புத்தகமாக அப்போது இருந்தது!

கொஞ்சம் சரித்திரப் புத்தகங்களயும் வாசியுங்கள்...!

இங்கே எல்லாம் பௌத்தர்களா இருந்தார்கள்? அவர்கள் சிங்களவர்களா? நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் பௌத்தமா? இந்த அருஞ்செல்வமான பௌத்தத்தை விட்டு எம் மக்களை எல்லாம் இந்துக்கள் ஆக்கிய அந்த கொடியவர்கள் யார்?

Link to comment
Share on other sites

51 minutes ago, Jude said:

ம்…. அப்படியானால் மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்களா இப்போது? 😅😅

நான் எழுதிய கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாமல் நழுவுவதற்கு இப்படியான கேள்விகளை தான் கேட்க வேண்டும். 😂

Link to comment
Share on other sites

5 hours ago, Jude said:

தமிழர்களான சோழர்கள் சிங்களவர்கள் மீது படை எடுத்து  பிராமணரின் விருப்பப்படி பௌத்தத்தை அழித்து பிராமணியத்தை பரப்ப முயற்சித்தது உண்மை இல்லையா?

பச்சைப் பொய்!
அது மதமாற்றக் கும்பல்களால் புனையப்பட்ட கட்டுக் கதை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Jude said:

ம்…. அப்படியானால் மகாவம்சம் உண்மைக்கு புறம்பானது என்கிறீர்களா இப்போது? 😅😅

இங்கே எல்லாம் பௌத்தர்களா இருந்தார்கள்? அவர்கள் சிங்களவர்களா? நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் பௌத்தமா? இந்த அருஞ்செல்வமான பௌத்தத்தை விட்டு எம் மக்களை எல்லாம் இந்துக்கள் ஆக்கிய அந்த கொடியவர்கள் யார்?

ஆரப்பு சொன்னது...நாங்கள் எல்லாம் இந்துக்கள் என்று...?

சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் மதமே.....சைவம் என அழைக்கப்படும்...!

இந்து மதம் என்பது....சைவம்...சாக்தம், வைணவம், காணபத்தியம், கெளமாரம், காபாலம், செளரம்  எனப் பல மதங்களின் கலவை..!

இந்து மதம் என்று தனியான மதம் ஒன்று இல்லை!

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு மார்க்கங்களில்....நாலாவது  மார்க்கமே.....புத்த மதத்தின் சாரம்!

இலங்கையில்....இப்போது அனுஸ்டிக்கப் படுவது.....புத்த மதமேயல்ல!

புத்தம் இருந்திருந்தால்....முள்ளி வாய்க்கால்....நிகழ்ந்தே இருக்காது..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எல்லாளனின் ஆதாரத்தை...மகா வம்சத்தில் தேடுங்கள்..!

கந்தரோடை விகாரையும்.....வெடியரசன் கோட்டையும்...நயினாதீவு விகாரையும் இன்றும் இருக்கின்றன!

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம் என்று ஒரு புத்தகம் எங்களுக்குப் பாடப் புத்தகமாக அப்போது இருந்தது!

கொஞ்சம் சரித்திரப் புத்தகங்களயும் வாசியுங்கள்...!

எங்களுக்கு அப்பிடி புத்தகங்களெல்லாம் வாசிக்க ஏலாது பாருங்கோ! எப்ப பார்த்தாலும் சிங்களவனுக்கு செம்பு தூக்கிறது மட்டும்தான் எங்கட வேலை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.