Jump to content

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் கோத்தபாய? அம்பலமாகும் ரகசியம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் தெரிவு குழு உறுப்பினராக இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைக்கமைய தாக்குதலுக்கான பொறுப்பை யாரிடம் வழங்குவது என்ற நிகழ்ச்சி தொகுப்பாளர் எழுப்பிய கேள்வியின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச, குற்றவாளிகளான பயங்கரவாத அமைப்பின் 26 பேருக்கு சம்பளம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டத்திற்கு முன் கொண்டு சென்றால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படும் எனவும், தற்போதை அரசாங்கத்தின் மீது விரல் நீட்டியமையே இவ்வாறான விடயங்களை நாட்டிற்க்கு வெளிப்படுத்த காரணமாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் சிலரும் பொறுப்புக்கூற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/security/01/218529?ref=imp-news

Link to comment
Share on other sites

8 minutes ago, பெருமாள் said:

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பு கூற வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுல ஒரு ரகசியமும் இல்லை!
இது ரணில் வேடிக்கை பாக்க கோத்தபாய - மகிந்த - மைத்திரி எல்லாரும் சேர்ந்து செய்த கூட்டு சதி என்டு சிங்கள சனமே கதைக்குது.
சகாறான்ட குண்டுவெடிக் கும்பலுக்கு கனகாலமா அரச சம்பளம் குடுத்தது கோத்தபாய தானே!

குண்டு வெடிச்ச உடன மகிந்த ஓடிச்சென்றதும், பிறகு முதலாவது பார்லிமென்ட் விவாதத்துல மகிந்த பார்லிமென்ட்ல தடுமாறி தடுமாறி கைநடுங்க உரையாற்றியதையும் பாத்தா பாதி உண்மை விளங்கும்.

Link to comment
Share on other sites

"எப்படியிருப்பினும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டத்திற்கு முன் கொண்டு சென்றால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படும் எனவும்.." 

இந்த நாட்டில் சட்டம் என்றுமே மதிக்கப்பட்டது இல்லை. ஆண்டகை ரஞ்சித் மல்கம் கூட இதை உணர்ந்து வருகின்றார்.   

Link to comment
Share on other sites

On 6/23/2019 at 7:33 PM, ampanai said:

"எப்படியிருப்பினும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் சட்டத்திற்கு முன் கொண்டு சென்றால் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை ஏற்படும் எனவும்.." 

இந்த நாட்டில் சட்டம் என்றுமே மதிக்கப்பட்டது இல்லை. ஆண்டகை ரஞ்சித் மல்கம் கூட இதை உணர்ந்து வருகின்றார்.   

சட்டம் மதிக்கப்படுவதற்கு அப்பால் பட்டு கோத்தபாயவால் கட்டி எழுப்ப பட்ட பலமுள்ள குரூரமான இராணுவம் இன்னமும் கோத்தபாயவின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக தெரிகிறது. அரசியல்வாதிகளும், நீதிபதிகளும் இந்த இராணுவத்துக்கு அஞ்சுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியாய் இருந்தாலும் உண்மையிலேயே கோத்தா ஒரு இரும்பு மனிதன் தான்  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.