Jump to content

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF.jpg

தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழப்பு!

கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு பொரளை, வனாத்துவில்லு சிறிசரஉயன வீட்டுத் தொகுதியை சேர்ந்த முத்தையா சகாதேவன் (62) என்ற தமிழ் அரசியல் கைதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு குறித்த தமிழ் அரசியல் கைது செய்யப்பட்டிருந்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் இரண்டு வாரங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/தமிழ்-அரசியல்-கைதியொருவர/

Link to comment
Share on other sites

"கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த  தமிழ்  அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்." 

ஒரு இனமாக நாம் அனைவரும் தோற்றுக்கொண்டே இருக்கின்றோம் என்பதற்கு இந்த மரணம் ஒரு சான்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor  

Image may contain: one or more people and closeup

வேலி வெட்டும் வேலைக்கு சென்றவர், லக்சமன் கதிர்காமர் கொலையில் 15 வருட சிறையில் இருந்து பலியான சம்பவத்தின் பின்னணி தகவல்களை கவனித்தால், அந்த கொலை சம்பவத்திற்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவரும்.

வேலியில் உள்ள மரங்களை வெட்ட சென்றவர், அந்த வேலி மரங்களை வெட்டியதால் இலகுவாக குறிவைத்து கதிர்காமர் கொல்லப்பட்டார். எனவே இவர் வேண்டுமென்றே திட்டமிட்டே வேலி மரத்தை வெட்டினார் என்றே சிறையில் வைத்து 15 வருடங்கள் கடந்து சிறையிலேயே மரணமாகிவிட்டார்.

இத்தனைக்கும் அது அவரது வீட்டு வேலி அல்ல. கூலி வேலைக்கு சென்று வெட்டியதே அந்த மரங்கள்.

இப்படி, எத்தனை அப்பாவிகள் சிறையில்...

......................

சம்பவம் தொடர்பான செய்தி

15 வருட சிறையில் பலியானவரின் சம்பவத்தின் பின்னணி தகவல்கள்!!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட சிறைவைக்கப்பட்டிருந்த முத்தையா சகாதேவனின் மனைவி மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் பதுளையைச் சேர்ந்தவர்கள். 1983 கலவரத்துக்குப் பின்னர்தான் கொழும்புக்கு வந்தோம். அப்படியே இங்கேயே இருந்துவிட்டோம். எங்கள் வாழ்க்கை சந்தோசமாகத்தான் இருந்தது.

என்ன நடந்ததோ தெரியாது, எந்தக் குற்றமும் செய்யாத எனது கணவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.வீடு, தோட்டங்களைத் துப்பரவு செய்வதற்காக எனது கணவரை அழைப்பார்கள். அவ்வாறானதொரு வேலைக்குத்தான் அன்றும் அவர் சென்றிருந்தார். வீட்டு உரிமையாளர் பணித்த தோட்ட வேலையை செய்திருக்கிறார். தோட்டத்தைச் சுத்தம் செய்ததோடு மதில் சுவரோடு இருந்த மரக்கிளைகளையும் வெட்டியுள்ளார். அதுவே கைதுக்குக் காரணமாக அமையும் என்று அப்போது அவர் அறிந்திருக்கவில்லை.

அவர் துப்பரவு செய்த தோட்டத்தின் அடுத்த வீட்டில்தான் லக்‌ஷ்மன் கதிர்காமர் இருந்திருக்கிறார். அங்குவைத்துதான் அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கொலைசெய்யப்பட்டதோடு எனது கணவருக்கு தொடர்புள்ளது என கூறி 2005ஆம் ஆண்டு எனது கணவரைக் கைதுசெய்தார்கள். 2008ஆம் ஆண்டுதான் வழக்குப் பதிவுசெய்தார்கள்.

இன்றுவரை வழக்குக்குப் போய் வருகிறேன். எதிர்வரும் 27ஆம் திகதியும் வழக்கு இருக்கிறது. இருந்த நகைகளை விற்று, கடன்வாங்கித்தான் வழக்குக்குப் போய் வந்தேன். எப்படியும் நான் வெளியில் வந்துவிடுவேன் என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டிருப்பார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட இன்னுமொருவர் 6 மாதங்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்பட்டார். எல்லோரும் விடுதலை செய்யப்படுகிறார்கள், எந்த குற்றமும் செய்யாத என்னை மட்டும் ஏன் சிறையில் வைத்திருக்கிறார்கள் என்று மனமுடைந்து காணப்பட்டார். 62 வயதான என் கணவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சிறுநீரகமொன்று செயலிழந்திருக்கிறது. அதன் பின்னரே அவர் மோசமாக நோய்வாய்ப்பட்டார்.

நீரிழிவு நோயும் இருந்ததால் அதற்கும் மருத்துவம் செய்துகொண்டுதான் இருந்தார். இறுதியில் மற்றைய சிறுநீரகமும் செயல்பாட்டை இழக்கத் தொடங்கியுள்ளது. இத்தனைக்கும் சிறைச்சாலை வைத்தியசாலையில்தான் சிகிச்சைப் பெற்றுவந்தார். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில்தான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு மாதகாலமாக சிகிச்சைப் பெற்றுவந்தார்.

கண்ணீர் 😭 அஞ்சலி. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Thiruvarudselvan Ampalavanar -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 6:37 PM, ampanai said:

"கடந்த 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த  தமிழ்  அரசியல் கைதியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்." 

ஒரு இனமாக நாம் அனைவரும் தோற்றுக்கொண்டே இருக்கின்றோம் என்பதற்கு இந்த மரணம் ஒரு சான்று.

நாங்கள் சுமந்திரனுக்கு பிறகு தமிழரின் தலையில் மிளகாய் அரைக்கப்போகும் நரேந்திரனை தேடுவதில் பிசி 
எங்களிடம் உதுவெல்லாம் கேக்கப்படாது ...வருசத்துக்கொரு தீர்வு version விட்டுக்கிட்டே இருப்பம்ல 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.