Jump to content

விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விலகியோட முனைந்தாரா ஜனாதிபதி?

கே. சஞ்சயன் / 2019 ஜூன் 23 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 04:20 Comments - 0

image_9e3024fbb1.jpg

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த பயணத்தைப் பிற்போட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்த போது, ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்தார், இந்தியா சென்றுவிட்டு அவர், சிங்கப்பூர் சென்றிருந்தபோதே, அந்தத் தாக்குதல்கள் நடந்திருந்தன.
ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, அதையடுத்து இந்தியா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துவிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் நாடு திரும்பினார்.

மீண்டும் அவர் கம்போடியாவுக்கு மேற்கொள்ளத் திட்டமிட்ட பயணம் ஒன்றும், முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுவதற்கில்லை.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, வரும் 27ஆம் திகதியன்று, கொழும்புக்கு வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்தப் பயணமும் இரத்துச் செய்யப்பட்டதாக, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்காக, பொம்பியோ இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறியிருந்தார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கொழும்பு வரும்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இங்கு இருக்கமாட்டார் என்பது உறுதியாகியிருந்தது. இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை என்றே கூறப்பட்டது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயண நிகழ்ச்சி நிரலுக்குள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கம்போடிய பயணத் திட்டம், குறுக்கே புகுந்தது ஆச்சரியமானது. ஆனால், அதிர்ச்சியளிக்கக் கூடியதன்று.
ஏனென்றால், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவைச் சந்திக்கின்ற, அவருடன் பேசுகின்ற விருப்பம், ஜனாதிபதிக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் என்பது, அமெரிக்காவில் இரண்டாவது அதிகாரமிக்க பதவியாகக் கருதப்படத்தக்கது. 

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடுத்து, கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரை வரவேற்று பேச்சுகளை நடத்தினார். அப்போது, அமெரிக்காவுக்கும் அவருக்கும் இடையில் நல்ல உறவு இருந்தது.

மைத்திரிபால சிறிசேன பதவிக்கு வருவதற்கான சூழ்நிலைகளை அமைத்துக் கொடுத்ததில், அமெரிக்காவின் பங்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஆட்சி மாற்றத்தில் பல்வேறு வழிகளில் பங்களித்திருந்தது அமெரிக்கா.

மைத்திரிபால சிறிசேனவிடம் தோல்வி கண்ட மஹிந்த ராஜபக்‌ஷவே, அமெரிக்க புலனாய்வுத்துறை மீது குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.

ஜோன் கெரிக்குப் பின்னர், நான்கு ஆண்டுகள் கழித்து, கொழும்புக்கு வரவிருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணம் குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கறையோ ஆர்வமோ கொண்டிருக்கவில்லை.

ஏன் இந்த மாற்றம்? அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் பயணத்தைக் கண்டுகொள்ளாமல், அவர் ஒதுங்க நினைத்தது ஏன்?

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சியைக் கவிழ்க்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவுசெய்த பின்னர், தொடங்கியது இந்தப் பனிப்போர்.

மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்கி, நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஜனாதிபதி ஆடிய ஆட்டத்துக்கு முடிவு கட்டுவதில், முக்கியமாக நின்றது அமெரிக்காதான்.

சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற மரபுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்து, அமெரிக்கா கடும் அழுத்தங்களைக் கொடுத்தது. 

பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்று மேற்குலகம் கொடுத்த அழுத்தங்களால்தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, படியிறங்க நேரிட்டது.

இல்லையேல் அவர், உயர் நீதிமன்றம், நாடாளுமன்றம் எல்லாவற்றையும் தூக்கி வீசிக்கொண்டு சென்றிருப்பார். அவரது திட்டத்தைத் தகர்த்துப் போட்டதில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் பங்கு குறைத்து மதிப்பிடத்தக்கதல்ல.

அதற்குப் பின்னர், அவருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளில், பெரியளவில் நெருக்கம் இருக்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறுதினத் தாக்குதல்கள் நடந்ததும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்தான் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினரே தவிர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசவில்லை.

இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள, அமெரிக்கா எடுத்திருந்த நடவடிக்கைகளைத் தடுக்கவும் முடியாமல் தொடரவும் விடாமல், திரிசங்கு நிலைக்குள் ஜனாதிபதி சிக்கியிருக்கிறார்.

ஏனென்றால், இலங்கைப் படைகளுக்கு அமெரிக்கா பல்வேறு வழிகளில் பயிற்சிகள், உதவிகளை அளித்து வருகிறது. இப்படியான நிலையில், அதனை உதறித்தள்ள அவரால் முடியாதிருக்கிறது.

அதேவேளை, இலங்கையுடன் சோபா எனப்படும் படைகளை நிலைப்படுத்துதல் தொடர்பான உடன்பாட்டைச் செய்துகொள்ளவும் அமெரிக்கா அளித்துள்ள முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவும், அவர் தயாராக இல்லை.

தனக்குத் தெரியாமல் அமெரிக்காவுடன் எந்தப் பாதுகாப்பு உடன்பாடுகளும் செய்துகொள்ளக் கூடாதென்று, அண்மையில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுக்கு, கடுமையான தொனியில் ஜனாதிபதி எச்சரிக்கை செய்திருக்கிறார் என்றொரு தகவலும் வெளியானது.

சோபா உடன்பாட்டை சர்ச்சைக்குரியதாக மாற்றியதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கும் குறைவற்றது. அவர் அதனை விரும்பவில்லை. தட்டிக்கழிக்க முனைகிறார். ஆனால், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், அதற்கு எதிர்மாறான நிலைப்பாட்டில் இருக்கிறது.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்பாடுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் அதனுடன் உறவுகளை விரிவுபடுத்தவும், ஐ.தே.க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கைப் பயணத்தின்போது, சோபா உடன்பாட்டின் சர்ச்சைக்குரிய உட்பிரிவுகள் குறித்தும் பேசத் திட்டமிட்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொஞ்சம் உசாராவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். தான், நாட்டில் தங்கியிருந்தால் பொம்பியோவை சந்திக்கவேண்டும். அவரைச் சந்தித்தால், சோபா உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு இணங்க வேண்டும்.

ஆனால், நாட்டின் இறைமையைப் பாதிக்கும் எந்தவோர் உடன்பாட்டிலும், எந்த நாட்டுடனும் கையெழுத்திட அனுமதிக்கமாட்டேன் என்றும் அண்மையிலும் கூட ஜனாதிபதி கூறியிருந்தார். 

எனவே, அவர், பொம்பியோவுடன் சோபா உடன்பாடு குறித்து பேசினாலோ இணங்கினாலோ அது முரண்பாடானதாக அமைந்துவிடும். இந்த நிலையில்தான், அவர், கம்போடிய பயண நிகழ்ச்சி நிரலை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த ஒக்டோபர் 26க்கு முன்னரே, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடனான நெருக்கத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த வாரம்கூட அவர், தஜிகிஸ்தானில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதன்போது, ரஷ்ய ஜனாதிபதி புட்டினை, இலங்கைக்கு விரைவில் வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ரஷ்ய ஜனாதிபதிகள் எவரும், அண்மைக் காலங்களில் இலங்கைக்கு வந்ததில்லை. தாம் பதவியில் இருக்கும்போதே, புட்டினை கொழும்புக்கு அழைப்பதில் மைத்திரிபால சிறிசேன ஆர்வம் காட்டுகிறார்.

ரஷ்ய பொருள்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு, அமெரிக்கா விதித்துள்ள தடை, அதனை எதிர்காலத்தில் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இரண்டு தலைவர்களும் பேசியிருக்கிறார்கள்.

இது டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கு சவால் விடக்கூடிய விடயம். ஒரு பக்கத்தில் இலங்கைக்கான நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்பு உறவுகளை அதிகரித்து, அதனைக் கைக்குள் போட அமெரிக்கா முனைந்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, நழுவி ஓட முனைகிறார்.

தஜிகிஸ்தான் தலைநகர்  துஷன்பேயில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றிய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

அவர், புறச்சக்தி எனக் குறிப்பிட்டது அமெரிக்காவையும் மேற்குலகத்தையும்தான்.
அந்த மாநாட்டில், அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும் மூன்று முக்கிய நாடுகளின் தலைவர்களான சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில், அமெரிக்காவுக்கு இடமளிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க இராஜாங்கச் செயலாளரை சந்திக்காமல் தவிர்க்க முனைந்திருந்தால், அது ஆச்சரியமில்லை.

எனினும், பொம்பியோவின் இலங்கைப் பயணமும் ஜனாதிபதியின் கம்போடியா பயணமும், இப்போது இரத்துச் செய்யப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை இருவரும் சந்தித்துக்கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வது இலகுவானதாக இருக்காது.

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/விலகியோட-முனைந்தாரா-ஜனாதிபதி/91-234502

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

ஆனால், நாட்டின் இறைமையைப் பாதிக்கும் எந்தவோர் உடன்பாட்டிலும், எந்த நாட்டுடனும் கையெழுத்திட அனுமதிக்கமாட்டேன் என்றும் அண்மையிலும் கூட ஜனாதிபதி கூறியிருந்தார். 

எடுத்தவுடன் SOFA உடன்பாட்டில் கையெழுத்திட ஒப்புக்கொண்டால் சிங்களவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும். அதாலை இப்பிடி படம் காட்டி விட்டு இறுதியில் ஒப்புக்கொள்வார். 😎

Link to comment
Share on other sites

12 hours ago, கிருபன் said:

ஜிகிஸ்தான் தலைநகர்  துஷன்பேயில் இடம்பெற்ற ஆசியாவின் கூட்டுச்செயற்பாடும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் பற்றிய அமைப்பின் ஐந்தாவது மாநாட்டில் உரையாற்றிய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆசியாவின் சக்தியை ஒடுக்குவதற்கு வேறு எந்த வெளிச் சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இதே மாநாட்டில் இவற்றையும் கூறியிருந்தார். 😀

மனித உரிமை மீறல்கள், குற்றச்சாட்டுக்களை முன்வைத்து நாடுகளின் இறைமையில் தலையிட வேண்டாமென நான் குறிப்பாக கேட்டுக்கொள்கின்றேன். அனைத்து நாடுகளுக்கும் சுதந்திரமும் ஜனநாயகமும் மிகவும் முக்கியமானதாகும். நாடுகளின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டுப்படுத்தவோ நாடுகளின் மீது அச்சுறுத்தல்கள், அழுத்தங்களை ஒருபோதும் பிரயோகிக்கவோ கூடாது என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

https://tamil.news.lk/fetures/item/30122-cica

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.