Jump to content

ஆப்கானித்தான் வரும் காலங்களில் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.


Recommended Posts

பொதுவாக ஆப்கானித்தான் என்றதும், தலிபான் மற்றும் குண்டுவெடிப்புக்கள் தான் நினைவுக்கு வரும். 36 மில்லியன்கள் மக்களை கொண்ட இந்த நாடு பல யுத்தங்களை கொண்டிருக்கின்றது. பல வல்லரசுகளை எதிர்த்து போராடி உள்ளது.

ஆனால், இங்கே மிகவும் விருப்பம் பெற்ற விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகின்றது,  

ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி ஆப்கானித்தான் நாட்டினை முன்னிருத்தி சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் துடுப்பாட்ட அணியாகும். துடுப்பாட்டம் 19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆப்கானித்தானில் விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கூட்டமைப்பு 1995 ல் உருவாக்கப்பட்டு மற்றும் 2001 ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் (ஐ.சி.சி.,) ஒரு கூட்டு உறுப்பினராக ஆனது. 2003ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினராக ஆனது. 9 நவம்பர் 2011வரை சர்வதேச இருபது20 போட்டிகளில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.

Afghanistan Cricket Board logo.png

 

முதலில் கிரிக்கெட்டை தடை செய்த தலிபான், பின் 2000அம அளவில் அதை அனுமதித்தது. அகதிகளாக பாகிஸ்தான் சென்றவர்கள் முதலில் இதை அதிகளவில் விளையாடி பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்து சென்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக எந்த போட்டியும் ஆப்கானிஸ்தானில் இடம்பெறுவதில்லை.

2017 ஆண்டு ஆப்கான் அணியின் பொற்காலமாக அனைவராலும் வெகுவாக கூறப்பட்டது. காயம் காரணமாக சில முன்னனி சீனியர் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்ற பழமொழியை போல் கிடைத்த வாய்ப்பை இருக்க பிடித்துக்கொண்டனர். ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான் போன்ற இளம் வீரர்கள் தங்களது சுழல் பந்து வீச்சால் அணியில் நிரந்தர இடம் பிடிக்க தொடங்கினர். 2017 ஆம் ஆண்டிற்கான IPL ஏலத்தில் ஹைதெராபாத் அணியால் நான்கு கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் 18 வயதேயான ரஷீத் கான். அந்த தொடரில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான், 18 விக்கெட்களை வீழ்த்தி வளர்ந்துவரும் சிறந்த வீரருக்கான கோப்பையை வென்றார். IPL போட்டிகளில் தனது மாயாஜால சுழலால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ரஷீத், சர்வதேச போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய பெருமை பெற்ற ரஷீத் கான், உலகின் முன்னனி வீரர்களை பின்னுக்குத்தள்ளி பந்து வீச்சாளர்க்கான பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

பின் வரும் காலங்களில் கிரிக்கெட் உலகை ஆட்சி செய்தால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மூலம் : இணையத்தள தொகுப்பு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.