Jump to content

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன் ரூபாய் நட்டத்தில் இயங்குகின்றது’


Recommended Posts

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிக விலைக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதால், மின்சார சபை இவ்வாறு நட்டத்தில் இயங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அமைச்சர் ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 இலங்கை மின்சார சபை இன்று 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தை அடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையை மாற்றி, இந்த 100,000 மில்லியன்  ரூபாய் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு, சுயதொழிலை ஊக்குவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் இதற்கு முன்னர் எடுத்த தீர்மானங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமையின்  பிரதிபலனே இன்று இந்த நாடு அனுபவிக்க நேர்ந்துள்ளதென தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலங்கை-மின்சார-சபை-நட்டத்தில்-இயங்குகின்றது/175-234544

நட்டம் (?) 100000 மில்லியன்கள் ரூபாய் = 100 000 000 000 ரூபாய்கள் !

813720810.00 ஆஸ்திரேலிய டாலர்கள்  / 497394050.00 யூரோக்கள்  / 445162010.00 பவுண்கள்

Link to comment
Share on other sites

மின்சார அலகொன்றின் விலை அதிகரிப்புக்கான  அரசாங்கத்தின் முயற்சி முறியடிக்கப்படும் - மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் 

இலங்கை மின்சாரசபையின் பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார அலகு ஒன்றை 7 ரூபாவால் அதிகரிக்கும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் திட்டம் முறியடிக்கப்படும் என்று மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்தது. 

ஜனநாயக  முன்னணியின்  காரியாலயத்தில்  நேற்று  புதன்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பின்போது  கருத்து  தெரிவித்த மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கத்தின்  ஒருங்கிணைப்பாளர்  கே.எச். சஞ்சீவ  தம்மிக்க  கூறியதாவது  ,  

இலங்கை மின்சாரசபை பத்தாயிரம் கோடி ரூபா இழப்பை சந்தித்து வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த இழப்பை ஈடுசெய்வதற்காக மின்சார கட்டணத்தை ஒரு அலகுக்கு சுமார் ரூ 10 ரூபா வரை அதிகரிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையே மின்சாரத்துறை அமைச்சு மேற்கொண்டு வருகிறது. 

2016 ஆம் ஆண்டிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்வனவு செய்தமை காரணமாகவே மின்சாரசபை இந்த  இழப்பைச் சந்தித்துள்ளது. தனியார் துறையினரிடமிருந்து 40 ரூபா என்ற அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால் மின்சார சபைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விடயமே. 

இலங்கை மின்சாரச் சட்டத்தின்படி, மின்சாரம் வாங்கும்போது டெண்டர் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால்  முறைப்படி செயற்படாமல் தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது. ஊழல் மோசடி தொடர்பாக நாம் வெளிப்படையாவே லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறாக மின்சாரக்கட்டணத்தில்   அதிகரிப்பு  ஏற்படுமாயின்  மின்சார பாவனையாளர்கள்  பாரிய  நெருக்கடியை  சந்திக்க  நேரிடும்.  இது தொடர்பில்  மின்சார  பாவனையாளர்களை  தெளிவுபடுத்த வேண்டியமை  அவசியமாகும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.  

இலங்கை  மின்சார சபை  100  மெகாவோல்ட்  மின்சாரப்பற்றாக்குறையை  சந்தித்துள்ளதாக  மின்வலுத்துறை  அமைச்சர்  ரவிகருணாநாயக்க  தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில்  , துருக்கிநாட்டு  கப்பலிலிருந்து  மின்சாரத்தை  கொள்வனவு  செய்யவதற்கான விலைமனுகோரப்பட்டதையடுத்து , தற்போது  200 மெகாவோல்ட்  மின்சார  தட்டுப்பாடு நிலவுவதாக  அறிவித்திருந்தார்.  பின்னர்  470 மெகாவோல்ட்  மின்சார  தட்டுப்பாடு நிலவுவதாக மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு 100 மெகாவோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான அனுமதியையே  வழங்கியுள்ளது.  இருப்பினும்  100 மெகாவோல்ட்டிற்கும்   அதிகமான  அளவு  மின்சாரத்தை கொள்வனவு  செய்வதற்கான  நடவடிக்கைகளை  மேற்கொண்டுள்ளனர் .  இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாக அலகிற்கு  7ரூபாவால்  மின்சார கட்டணம்  அதிகரிக்கும்  நிலை  ஏற்படும் . இவ்வகையான நடவடிக்கைகளையும்  மின்வலு  அமைச்சு  மேற்கொண்டு  வருகின்றது. 

2016 ஆம்  ஆண்டிலிருந்து  அதிக விலைக்கு  மின்சாரத்தை  கொள்வனவு  செய்தமையின் காரணமாகவே மின்சார சபைக்கு 10 ஆயிரம் கோடி  ரூபாய்  நட்டத்தை   சந்திக்க  வேண்டிய  நிலை  ஏற்பட்டுள்ளது. எவ்வாறெனில்  தனியார்  துறையினரிடத்திலிருந்து  40 ரூபாவிற்கு  அதிக  பெறுமதியில்  மின்சாரத்தை  கொள்வனவு  செய்துள்ளனர்.  இலங்கை  மின்சார  சட்டத்திற்கு  அமைய  ஒப்பந்த  முறையினூடாகவே  மின்சார  கொள்வனவுகளை  மேற்கொள்ள  முடியும்.  மாறாக  இந்த  ஒப்பந்தமுறைமையை  பின்பற்றாமல்  செயற்படுகின்றமையே   அதற்கு  காரணமாகும். இவ்வாறாக  மின்சார  சபையில் இடம் பெறும்  ஊழல் தொடர்பில்  இலஞ்ச  ஊழல்  ஆணைக்குழுவில்  முறைப்பாடு  செய்துள்ளோம்.  

மின்சார சட்டத்திற்கு  அமைய  மின்சாரத்தை  கொள்வனவு  செய்வதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம்  இலங்கை  பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழுவிற்கே  உள்ளது.  இந்த நிலையில்  2016 ஆம்  ஆண்டிலிருந்து  அதிக  விலையில்  கொள்வனவு செய்யப்பட  மின்சாரத்திற்கான  அனுமதியை  பொதுப்பயன்பாடுகள்  ஆணைக்குழு  வழங்கியிருக்கவில்லை. இருப்பினும்  ஆணைக்குழுவின்  அனுமதியின்றி  மின்சாரக்கொள்வனவுகள்  இடம் பெற்றுள்ளன என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/59132

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/24/2019 at 6:26 PM, ampanai said:

இலங்கை மின்சார சபை 100,000 மில்லியன்  ரூபாய் நட்டத்தில் இயங்குவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு சொந்தமானது எது லாபத்திலை ஓடுது?
கவுண்மேந்திலை இருக்குறதுகள் முழுக்க கள்ளர் கூட்டம். எப்பிடி லாபம் வரும்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.