Jump to content

அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரங்களையும் சிறப்புரிமைகளையும் விரிவுபடுத்துவதில் நாட்டம் காட்டிய இலங்கை ஜனாதிபதிகள்

 

-பி.கே.பாலச்சந்திரன்

ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தொடங்கி பிறகு பதவிக்கு வந்த ஒவ்வொரு இலங்கை ஜனாதிபதியுமே மட்டுமீறிய அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதித் பதவியை இல்லாதொழித்து, பிரிட்டிஷ் வெஸ்மினிஸ்டர் பாணியிலான – பாராளுமன்றத்திற்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்ற ஆட்சிமுறையொன்றை மீண்டும் ஏற்படுத்துவதாக உறுதியளித்துக்கொண்டே ஆட்சியதிகாரத்திற்கு வந்தனர். ஆனால் அதே ஜனாதிபதிகள் (திருமதி குமாரதுங்க உட்பட) அதிகாரத்தைக் கைவிடத் தவறியது மாத்திரமல்ல, ஏற்கனவே காணப்படுவதை விட மேலதிகமான அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் பெறுவதிலும் நாட்டம்காட்டி வந்திருக்கிறார்கள்.

sri-lanka-political.jpg

அண்மையில் வெளியாகியிருக்கும் செய்திகளின் பிரகாரம் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருட இறுதியில் நடத்தப்பட வேண்டியிருக்கும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகப் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா, இல்லையா என்பதை மக்களிடம் கேட்பதற்காக சர்வசன வாக்கெடுப்பை நடத்தத் திட்டமிடுகிறார். 

இது ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கான முயற்சியே தவிர வேறொன்றும் இல்லை என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன குற்றஞ்சாட்டியிருக்கிறார்.  ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய எந்தவொரு முயற்சியையும் கூட்டுஎதிரணி கர்ணகொடூரமான எதிர்க்கும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டு, பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கான சிறிசேனவின் பிரயத்தனத்தின் பின்னணி ஜனாதிபதியா இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தான் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகத் தனது அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சித்திட்டங்களை அடுத்த சில மாதங்களுக்கு நிறைவேற்றக்கூடிய பிரதமரையும், தன்னால் எளிதில் கையாளக்கூடிய பாராளுமன்றம் ஒன்றையும் கொண்டிருக்க வேண்டும் விருப்பமேயாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியினாலும், அதன் நேச அணிகளாலும் ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற பாராளுமன்றத்துடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையுடனும் ஜனாதிபதி சிறிசேன இப்போது பல மாதங்களாக முட்டி மோதிக்கொண்டேயிருக்கிறார். இரு தரப்பிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலை அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை என்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பானதாக இருக்கின்றது. இறுதியாக ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையே ஏற்பட்டிரு;ககும் முறுகல் நிலைக்குக் காரணம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக்குழுவாகும். அந்தத் தெரிவுக்குழுவின் அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டு உடனுக்குடனாகப் பகிரங்கப்படுத்தப்படுவது சிறிசேனவிற்கு கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெரிவுக்குழுவில் சாட்சியம் அளிக்கின்ற உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகளில் பலரும் பாதுகாப்புத் துறையிலுள்ள குறைபாடுகளுக்காக ஜனாதிபதி சிறிசேனவைக் குற்றஞ்சுமத்தியிருப்பதையும், பகிரங்க விசாரணைகளின் மூலமாக முக்கிய அரச இரகசியங்கள் வெளிப்படுத்தப்படுவதையும் தனக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகளாகப் பாரக்கும் அவர், தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தார். தெரிவுக்குழு தொடர்ந்து செயற்படுமாக இருந்தால் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தப்போவதில்லை என்றும் கூட ஜனாதிபதி அச்சுறுத்தியிருந்தார். இம்மாதம் 11 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெற வேண்டிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டாமலேயே ஜனாதிபதி வெளிநாடு சென்றார்.

மறுபுறத்தில் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது பாராளுமன்றத்திற்குரிய சிறப்புரிமை என்பதால் அந்தக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோருவதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பாராளுமன்ற சபாநாயகர் கரூ ஜயசூரிய வாதிட்டார். அத்துடுன் தெரிவுக்குழு முன்பாக வந்து சாட்சியம் அளிப்பதிலிருந்து அதிகாரிகளை ஜனாதிபதியால் தடுக்கவும் முடியாது. எனவே சகாநாயகர் வழமை போன்று தெரிவுக்குழு, அதன் செயற்பாடுகளை தொடர்வதற்கு அனுமதித்தார்.

இந்த சர்ச்சையில் ஜனாதிபதியினாலும், சபாநாயகராலும் அடுத்து முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் ஜனாதிபதி தஜிகிஸ்தானிலிருந்தும், பிரதமர் விக்கிரமசிங்க சிங்கப்பூரிலிருந்தும் நாடு திரும்பிய பின்னர் மாத்திரமே தெரியவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமையில் மாற்றத்தைக் காணக்கூடியதாக இல்லை. இந்த சர்ச்சைக்கு சில தினங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் அரசியலமைப்பு நெருக்கடியொன்று தோன்றக்கூடிய ஆபத்தும் இருந்தது. வழமைப் பிரகாரம் செவ்வாய்கிழமைகளில் அமைச்சரவை கூட்டப்படாவிட்டால் பாராளுமன்றத்தில் பெரும் குழப்பம் நேருமென்று கூட்டுஎதிரணி எம்.பி ரோஹித அபேகுணவர்தன ஏற்கனNவு எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தயாசிறியின் கோரிக்கை

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு மாதங்களினால் நீடிப்பது தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கேட்கப்போவதாக அதன் பொதுச்செயலாளர் தயாசிறி ஜனசேகர ஏப்ரல்மாத ஆரம்பத்தில் கூறியிருந்தார். சட்டரீதியான அடிப்படையில் ஜயசேகர ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் முடிவு குறித்துக் கருத்தைக் கூறியிருந்தாலும் கூட, ஜனாதிபதி சிறிசேன தனது அரசியல் செல்வாக்கை அதிகரித்து இரண்டாவது பதவிக்காலத்திற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான முயற்சியாகவே மேலும் ஆறுமாத காலத்திற்குப் பதவியில் நீடிக்க விரும்புகிறார் என்பது வெளிப்படையானது.

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கான நோக்கம் தொடர்பில் சட்ட வியாக்கியானளம் ஒன்றைச் செய்த ஜயசேகர பின்வருமாறு கூறினார்:

'ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என்று உச்சநீதிமன்றத்திடம் ஏற்கனவே கேட்கப்பட்டது. அப்போது பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த ஐந்து வருட பதவிக்காலம் என்போது தொடங்குகிறது, எப்போது முடிவடைகிறது என்பதே இப்போதுள்ள பிரச்சினையாகும். ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் சபாநாயகர் அதில் கையெழுத்திட்டு, அங்கீகாரம் வழங்கிய பின்னர் மாத்திரமே அது நடைமுறைக்கு வருகிறது என்று அரசியலமைப்பு தெளிவாகக் கூறுகிறது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தச்சட்டமூலம் 2015 மே மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அதில் சபாநாயகர் 2015 ஜுன் 22 ஆம் திகதியே கைச்சாத்திட்டார். எனவே ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் 2015 ஜுன் 22 ஆம் திகதியிலிருந்தே நடைமுறைக்கு வந்தது. ஆதலால் ஜனாதிபதி சிறிசேனவின் 5 வருட பதவிக்காலம் 2015 ஜுன் 22 ஆம் திகதியே தொடங்கி, 2020 ஜுன் மாதமே முடிவடைய வேண்டுமேயன்றி, 2019 டிசம்பரில் அல்ல.

மேலும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட முன்னதாக 6 வருட பதவிக்காலத்திற்காக சிறிசேன 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். 19 ஆவது திருத்தச்சட்டத்தைப் பின்நோக்கிய காலகட்டத்திற்குப் பிரயோகிக்க முடியாது. ஆகையால் அந்தத் திருத்தச்சட்டம் ஜனாதிபதி சிறிசேனவின் பதவிக்காலத்தைப் பொறுத்தவரை பிரயோகிக்கப்படலாகாது. ஏனென்றால் அவர் அந்தத் திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்" - இது ஜயசேகரவின் வாதம். 

ஆனால் இதுவிடயத்தில் உச்சநீதிமன்றத்தை அவர்கள் நாடவில்லை. 250 இற்கும் மேற்பட்டோரைப் பலியெடுத்த ஏப்ரல் 21 தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் தோற்றுவிக்கப்பட்ட குழப்பநிலை, பதட்டம் மற்றும் உறுதிப்பாடு என்பன இதற்குக் காரணமாக இருக்கலாம்.

அக்டோபர் 26 சதி முயற்சி

2018 அக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கிவிட்டு, அவரின் இடத்திற்கு கூட்டுஎதிரணியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார். அவ்வாறு செய்ததன் மூலம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை அவர் அவமதித்தார். பிரதமருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கும்வரை அவரைப் பதவி நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்குக் கிடையாது என்று அந்தத் திருத்தச்சட்டம் தெளிவாகக் கூறுகிறது. பிரதமர் பதவி விலகும் பட்சத்தில் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாமற்போகும் பட்சத்திலேயே அவர் பதவி இழக்கிறார்.

நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட ஜனாதிபதி சிறிசேன பிரதமராக மீண்டும் விக்கிரமசிங்கவை நியமித்தார். பிரதமரினால்சிபாரிசு செய்யப்படாத பட்சத்தில் ஜனாதிபதியினால் அமைச்சர்களைப் பதவி நீக்கமுடியாது என்றும், அரசுக்கு எதிராக நம்பிக்;கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்படும் பட்சத்தில் அல்லது வரவு, செலவுத்திட்டம் அல்லது அரசாங்கதத்தின் கொள்கைப் பிரகடன உரை ஒன்று பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் வரை அமைச்சரவை தொடர்ந்து பதவியிலிருக்கும் என்று 19 ஆவது திருத்தம் கூறுகிறது.

பதவிக்கால நீடிப்புக்கு ராஜபக்ஷ மேற்கொள்ள முயற்சி

2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஏப்ரலில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த வருடம் செப்டெம்பரில் அரசியலமைப்புக்கான 18 ஆம் திருத்தத்தைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். ஜனாதிபதியொருவர் ஒரு பதவிக்காலத்திற்கே ஆட்சியதிகாரத்தில் இருக்கமுடியும் என்ற வரையறையை இல்லாமற்செய்து 2016 இல் நடத்தப்பட வேண்டியிருந்த அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் 3 ஆவது பதவிக்காலத்திற்குத் தான் போட்டியிடுவதற்கு வசதியாகவே அந்தத் திருத்தச்சட்டத்தை அவர் கொண்டுவந்தார். 

ஆனால் உரிய காலத்திற்கு முன்கூட்டியே 2015 ஜனவரியில் ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார். அந்தத் தேர்தலிலும், அடுத்து 2015 ஆகஸ்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார். ஜனாதிபதி சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான புதிய அரசாங்கம் 2015 ஜுன் மாதத்தில் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அந்தத் திருத்தம் ஜனாதிபதிக்கு இருந்த இருவருடப் பதவிக்கால மட்டுப்பாட்டை இல்லாமற்செய்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகவும் குறைத்தது. 

ராஜபக்ஷ குழுவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவும் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பின்நோக்கிய காலகட்டத்திற்குப் பிரயோகிக்கப்பட முடியாது என்பதால் இருவருட பதவிக்கால வரையறையை ராஜபக்ஷவுக்குப் பிரயோகிக்க முடியாது என்று இப்போது வாதிடுகிறார்கள். ஆனால், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருக்கின்ற பதவிக்கால மட்டுப்பாடு தற்போது பதவியிலிருக்கும் ஜனாதிபதிக்கு மாத்திரமே பிரயோகிக்கப்படுகிறது. ராஜபக்ஷ முன்னாள் ஜனாதிபதியே தவிர தற்போது ஜனாதிபதிப் பதவியில் இல்லை.

திருமதி குமாதுங்கவின் பதவிக்கால நீடிப்பு முயற்சி 

ராஜபக்ஷவுக்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த திருமதி.குமாரதுங்க 2005 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தை ஒரு வருடத்தினால் நீடித்துக்கொள்வதற்கு முயற்சித்தார். 1999 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு பதவிப்பிரமாணம் செய்துகொண்ட தினத்தில் அல்ல, ஆனால் முதலாவது 6 வருடப் பதவிக்காலம் முடிவடைகின்ற 2006 டிசம்பரிலேயே தனது இரண்டாவது பதவிக்காலம் தொடங்குகின்றது என்ற வாதத்தின் அடிப்படையிலேயே அந்த முயற்சியை மேற்கொண்டார்.

1994 நவம்பரில் முதற்தடவையாக ஒரு 6 வருட பதவிக்காலத்திற்கு திருமதி குமாரதுங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இந்தப் பதவிக்காலம் 2000 நவம்பரில் முடிவடையுமே தவிர, 1999 நவம்பரில் அல்ல. தனது இரண்டாவது பதவிக்காலம் 2000 நவம்பரில் தொடங்குகிறது என்று காட்டுவதற்காக இரண்டாவது பதவிப்பிரமாண வைபவமொன்றில் அவர் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

ஆனால் ராஜபக்ஷ அதை எதிர்த்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் சார்பில் மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் திருமதி குமாரதுங்கவின் இரண்டாவது பதவிக்காலம் 2006 அல்ல. 2005 நவம்பரிலேயே முடிவடையும் என்று தீர்ப்பளித்தது.

பாராளுமன்றப் பதவிக்காலத்தை நீடித்த ஜே.ஆர்.ஜெயவர்தன

ஜனாதிபதி ஜெயவர்தன 1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தைக் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தாமல் ஒரு ஆறுவருட காலத்திற்கு 1988 வரை நீடிப்பதற்கு 1982 டிசம்பர் 12 ஆம் திகதி நாடளாவிய சர்வசன வாக்கெடுப்பொன்றை நடத்தினார். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு நக்சலைட் முயற்சியொன்று மேற்கொள்ளப்படுவதாகக் கூறிக்கொண்ட ஜெயவர்தன, அந்த ஆபத்தை முறியடிப்பதற்கு அரசாங்கத்திற்கு இருக்கக்கூடிய ஆற்றலுக்குப் புதிய பொதுத்தேர்தல் ஒன்று தடையாக இருக்குமென்றும், தனது புதிய திறந்த பொருளாதாரக் கொள்கையை முன்னெடுக்க முடியாமற்போகும் என்றும் காரணம் கூறியே அவர் அந்த சர்வசன வாக்கெடுப்பை நடத்தினார்.

1977 ஜுலையில் தெரிவு செய்யப்பட்ட அந்தப் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் 1983 ஆகஸ்டில் முடிவடைய இருந்தது. ஆனால் 1988 அக்டோபரில் ஜெயவர்தன கலைக்கும் வரை அந்தப் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நீடித்தது.

சர்வசன வாக்கெடுப்பின் போது படுமோசமான வன்முறைகளும், அச்சுறுத்தல்களும், மோசடிகளும் இடம்பெற்றன. ஆனால் ஜெயவர்தன கூடுதல் அதிகாரத்தை அபகரிப்பதில் வெற்றிகண்டார். ஆனால் அவரைப் போலன்றி அவருக்குப் பின்னர் ஜனாதிபதியாக வந்தவர்கள் தங்களது அதிகாரங்களையும், சிறப்புரிமைகளையும் விஸ்தரித்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சிகளில் பரிதாபகரமாகத் தோல்விகண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(நியூஸ் இன் ஏஸியா )

 

https://www.virakesari.lk/article/58975

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.