Jump to content

கனடாவுக்கும் ஆவா ( வந்துவிட்டார்கள் ) !!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கும் ஆவா ( வந்துவிட்டார்கள் ) ….

 

எங்கட ஆவா சூரன்கள் கனடாவுக்கும் குடி பெயர்ந்து விட்டார்கள் போல இருக்கே  ..

Link:

http://newjaffna.com/2019/06/24/2835/

 

கனடா போயும் திருந்தாத தமிழ்க்காவாலிகள்!! சங்கிலி அறுத்து பிடிபட்டது எப்படி??

June 24, 2019June 24, 2019 Yalini 0 Comments

தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித், மட்சுஷன் கமலகுமரன், மொஹ்சென் யஹ்யா, லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன்

திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட
6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ்
வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள்.

குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பகுதியில் கடந்த திங்கட்கிழமை (17) இரவு
9 மணியளவில் ஆயுதங்களை காட்டி இவர்கள் திருட்டில் ஈடுபட்டிருந்தனர்.

23 வயதான ஒரு பெண் தனது மடிக்கணினியை விற்க Kijiji விற்பனை இணையத்தளத்தில்
விளம்பரத்தை செய்திருந்தார். அதனை வாங்குவதாக ஆணொருவர் தொடர்பு கொண்டுள்ளார். இருவரும்
சந்தித்து விற்பனையை முடிக்க, சம்பவ இடத்தில் இரு தரப்பும் சந்திப்பதாக முடிவாகியது.

குறிப்பிட்ட இடத்தில் மடிக்கணினியுடன் பெண் காத்திருந்தபோது, இரண்டு ஆண்கள் வந்து
மடிக்கணினியை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். அவர்கள் தப்பி ஓடும்போது, ஆண் ஒருவரின்
இடுப்பில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி விழுந்தது. பின்னர் அவர்கள் திருடப்பட்ட வெள்ளி நிற
ஹொண்டா சிவிக் கார் ஒன்றில் தப்பியோடியுள்ளனர்.

மறுநாள் (18) திருடர்களின் ஒருவன் பெண்ணின் மடிக்கணினியை ஒன்லைனில் விற்க முயன்றுள்ளான்.
பெண் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விற்பனை இணையங்களை கண்காணித்துக் கொண்டிருந்த

பொலிசார், அந்த கணினியை வாங்குவதை போல தொடர்பு கொண்டு சந்திப்பை ஒழுங்கு செய்தனர்.

இதன்படி குறிப்பிட்ட ஒரு இடத்தில் இரு தரப்பும் சந்தித்தபோது, மடிக்கணினி இளைஞனை
பொலிசார் மடக்கிப்பிடித்தனர். மடிக்கணினி, ஒரு பெரிய வேட்டை கத்தி, கிரெடிட் கார்ட்
போன்ற கத்தி மற்றும் மினி க்ளோக் ஏயார் கைத்துப்பாக்கி ஆகியவற்றுடனே அவன் அங்கு வந்திருந்தான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் குழுவாக செயற்பட்டது தெரிய வந்தது.
அதையடுத்து, அந்த குழுவில் இயங்கியவர்கள் வரிசையாக கைது செய்யப்பட்டனர். மொத்தம் ஐஆறு

பேர் கைதாகினர். இதில் இரு சிறுவர்கள் உள்ளடங்குகிறார். இருவர் தமிழ் இளைஞர்கள்.

அவர்களால் திருடப்பட்ட காரும் மீட்கப்பட்டது.

டொராண்டோவைச் சேர்ந்த தாஜியன் அலெக்சாண்டர் ஸ்மித் (Tajean Alexander Smith), மட்சுஷன்
கமலகுமரன் (Matchushan Kamalakumaran) மற்றும் மொஹ்சென் யஹ்யா (Mohsen Yahya),
லக்ஷ்சன் லக்ஷ்மிகாந்தன் (Laxsen Laxmikanthan) ஆகியோரை பொலிசார் அடையாளம் கண்டு

கைதுசெய்துள்ளனர். இவர்கள் அனைவரும் 18 வயதானவர்கள். சிறுவர்கள் பற்றிய விபரங்கள்
வெளியிடப்படவில்லை. எனினும், 17 வயதான சிறுவன் ஒருவனே அதிக குற்றச்சாட்டுக்களை
எதிர்கொள்வதாக ரொரன்ரோ பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அனைவரும் ஜூலை 31ம் திகதி காலை 10 மணிக்கு 111ம் இலக்க அறையல்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

 

ஆமாம் தலையங்கத்தில் சங்கிலி என்கிறார்கள் சங்கிலியைத் தேடி கண் பூத்துப் போச்சு, உங்களில் யாருக்கேன் தெரியுதோ   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எங்கப்பா, கனடா போனவர்கள்...

வயதினைப் பார்த்தால், கனடாவில் பிறந்த, கனடாக்காரர்கள் போல தானே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி தேசியம் பாடும் இணையம்களை எப்படி கண்டு பிடிப்பது ? சிம்பிள் சிங்களவர் வெளிநாட்டில் களவெடுத்தால் செய்தி இப்படி இருக்கும் "லண்டனில் அநகாரிக செயலில் இலங்கையர்" அதே தமிழர் என்றால் "கனடாவில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபடும் தமிழ் இளைஞர்கள்! பொலிஸாரை மிரள வைத்த சிறுவர்கள்"

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் யாரும் இப்போது வாலாட்ட முடியாது ஒரு காலம் இருந்ததுதான் ஆனால் இப்போது ஆவா சன்னா குவ குவா என முணுமுணுக்கவே முடியாது நான் அறிய கடந்தகாலத்தில் குழப்படி செய்த ஒருவர் ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டு திரும்பவும் யாரிடமோ காலைக்கையைப்பிடித்து  ஐரோப்பிய நாட்டு ஒன்றுக்கு வந்து கக்கூசு கழுவுறார். இத்தனைக்கும் அவர் பதின்நாஙு வயதில் கனடா போனவர். 

ஐரோப்பிய நாடுகளும் இந்த நடைமுறையைக்கடைப்பிடிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.