Jump to content

கிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்


Recommended Posts

கிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்விபத்து இன்று மத்திய 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மதிய நேர கடுகதி புகையிரதத்தில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்து இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனம் மோதியிதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

புகையிரத அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி புகையிரத பாதையினை கடக்க முற்பட்ட போதே புகையிரதத்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்;டுள்ளது. குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற புகையிரத கடவையாகும். இதற்கு முன்னரும் இரண்டு விபத்துக்களில் மூவர் பலியாகியிருந்தனர். இது மூன்றாவது விபத்து. 

 

 

https://www.virakesari.lk/article/59042

"புத்தளத்தில் சடலமாக மிதந்த 19 வயது இராணுவ வீரர்....!

புத்தளம் சின்னவில்லு குளத்திலிருந்து இராணுவ வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வீரரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் தனது நண்பர்களுமன் குறித்த வீரர் குளத்திற்கு வருகை தந்துள்ளதோடு, தனது உடைகளை சலவை செய்யவுள்ளதாக தெரிவித்து அவர் நண்பர்களை அனுப்பிவிட்டு குளக்கரையில் சலவை செய்துக்கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே அவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதணைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.hirunews.lk/tamil/219076/புத்தளத்தில்-சடலமாக-மிதந்த-19-வயது-இராணுவ-வீரர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் இராணுவத்தினர் நால்வர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

dgfdtrfgd.jpg?zoom=0.9024999886751175&refgfgfdfd.jpg?zoom=0.9024999886751175&res

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி தொடருந்துடன் இராணுவ வாகனம் மோதி விபத்து நடந்துள்ளது.

மேலும் மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

https://newuthayan.com/story/14/சற்றுமுன்னர்-கோரவிபத்து.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த கிழமையே  வடகிழக்கு எங்கும் ரயில்வே கடவை  பாதுகாப்பு உத்தியோகத்தர் வேலை  கேள்வி பத்திரம் தினசரிகளில் பிரசுரமாகும் .

Link to comment
Share on other sites

5 hours ago, பிழம்பு said:

கிளிநொச்சியிலும் கிளையைக் கொண்ட உதயன் பத்திரிகை எங்கோ கிடைத்த பழைய படங்களைப் போட்டு ஊடகத்தின் வறட்சி நிலையை காட்டியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

625.0.560.320.160.600.053.800.700.160.90

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.