Jump to content

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

jaffna.jpg

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

jaffna63.jpg

இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர்.

உலகில் 36 நாடுகள் இச்சேவை குறித்து எச்சரித்துள்ளதுள்ளன. அத்துடன் உலகெங்கும் உள்ள 180 விஞ்ஞானிகளும் 5 G சேவைக்கான மின்காந்த அலைக்கற்றையால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளனர்.

இதன் அலைவரிசை புற்றுநோய் தாக்கம், குழந்தைகள், கற்பவதிகள், சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் உலகளாவிய ரீதியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அலைக்கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக அமைவதாக 2011 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதனை விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்ப சேவைக்கு அனுமதி வழங்க தயங்கி வரும் நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/59036

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5g  சேவையை பற்றி இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்பாணத்தில் மட்டும் ஏன் கவலை கொள்கிறார்கள் ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

5g  சேவையை பற்றி இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்பாணத்தில் மட்டும் ஏன் கவலை கொள்கிறார்கள் ?

 

 

வருமானம்! கொழும்புக்கு அடுத்தபடி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் வியாபாரம் வடக்கில் தான் அதிகம்.

இந்த கம்பங்களில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்திருந்ததே?!

Link to comment
Share on other sites

தவறான தகவல் ....  பிரித்தானியாவில் சென்ற மாதம் தான் ee நிறுவனம் ஆரம்பித்து அதை விட சுவீடன், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலும் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வீரகேசரி ஏன் தமிழ் வின் போல் பொய்ச் செய்தி போடுகிறார்கள் என்று தான் புரியவில்லை......!!!!!!

இன்னும் கொஞ்ச நேரத்தில்  சிங்கள பௌத்த பேரினவாத சதி என்று கூவி கொண்டு ஒரு குறூப் வரும் இப்ப !!!!!!

Link to comment
Share on other sites

பெரிதாக பயப்படஒன்றும் இல்லை என கூறுபவர்களும் உள்ளார்கள்.
இருந்தாலும், எமது மண்ணில்  5G அவசியம் என்று இல்லை.
சில வருடங்கள் பொறுத்திருந்து இதை பார்த்து பின்னர் உபயோகிப்பதே நன்று

http://fortune.com/2019/05/22/health-concerns-5g-cellphones-cancer/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வருமானம்! கொழும்புக்கு அடுத்தபடி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் வியாபாரம் வடக்கில் தான் அதிகம்.

குறி அதுதான் யாழில்  5g வந்தால் லைக்காவும் லிபரா வும் வெளிநாட்டில் என்கடையாட்களின் கைககளில் இருந்து காணாமல் போயிடும் போதாகுறைக்கு வைபரிலும் வட்சப்பிலும் விடியோ அரட்டை துல்லியமான தரத்துடன் லைவா பார்க்கலாம் ஊரில் நேர்த்திக்கு விட்ட கிடாய் ஆடு வளர்வதை இங்கிருந்தே நிதமும் பார்க்கலாம் .எங்கடை அரசியல்வாதிகளின் திடீர் புளுகுமூட்டை அறிவிப்பை கேட்டு நாலு கேள்வி நாக்கை புடுன்குரமாதிரி நேரிலேயே கேட்க்கலாம் அதை அந்த வேகத்திலே லைவ்வாய் யுடியுப்பில் போடலாம் வீரகேசரி இந்திய அடிவருடி பத்திரிகை இந்தியாவில் 5g அம்பானி கூட்டத்தால் 21 களிலே தான் வெளியீடு என்று அறிவித்தார்கள் .மொத்தத்தில் 5g நெட்வோர்க் பலராலும் வெறுக்க பட்டாலும் வேற வழி இல்லாமல் ஏற்க்க வேண்டிய சூழ்நிலை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னதுதான் நினைவுக்கு வருது, போன்ல 5ஜி, 7ஜி எல்லாம் இருக்கட்டும் ஆனா பசிச்சா கஞ்சிதான் வேணும் ராஜா.😂.

எனக்கு 4ஜி ஜே போதும் போதும் எண்டிருக்கு. யாழை இதை விட வேகமா தரவிறக்கினாலும் செய்யப் போவது வீண் அரட்டை தானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

எப்படி இருந்தாலும் கிராமங்களும் வளர்ச்சியடைகிறது இயற்கையையும் அழித்து  என்று சொல்லல்லாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

தவறான தகவல் ....  பிரித்தானியாவில் சென்ற மாதம் தான் ee நிறுவனம் ஆரம்பித்து அதை விட சுவீடன், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலும் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வீரகேசரி ஏன் தமிழ் வின் போல் பொய்ச் செய்தி போடுகிறார்கள் என்று தான் புரியவில்லை......!!!!!!

இன்னும் கொஞ்ச நேரத்தில்  சிங்கள பௌத்த பேரினவாத சதி என்று கூவி கொண்டு ஒரு குறூப் வரும் இப்ப !!!!!!

இன்னும், அந்த...   குறூப்பை காணவில்லை. :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலை நிகழ்ச்சிகளிலிருந்து கண்ணியுகம்வரை யாழ்ப்பாணத்தில் நடந்தால் மட்டும்தான் நமக்கு சமூக அக்கறை பீறிட்டு வ்ருகிறது,ஆனால் நாம் வாழும் நாடுகளில் அவையெல்லாம் இல்லாம நமக்கு பொழுதே போகாது,ஒரு கை உடைஞசமாதிரியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எனக்கு 4ஜி ஜே போதும் போதும் எண்டிருக்கு. யாழை இதை விட வேகமா தரவிறக்கினாலும் செய்யப் போவது வீண் அரட்டை தானே

மொத்தத்தில் இந்த மொபைல் நெட்வோர்க்கையே நிப்பாட்டி விடனும் கொஞ்சத்துக்கு தெளின்சிடும் கொஞ்சத்துக்கு கைகாலை இழுத்துக்கொண்டு நடக்கும்கள் பழைய நினைவிலை இன்னும் கொஞ்சம் தலைமயிரையும் சிலுப்பி விட்டுக்கொண்டு முத்தின பயித்தியாமாகி விடுங்கள் . 

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

இதை எல்லாம் நேரில் பார்ப்பது போல பார்த்து விமரிசனம் செய்ய தேவை 5G.

ஹுவாவய் நிறுவனத்துடன் உள்ள வணிக போட்டி காரணமாக அவர்களின் 5G உபகரணங்களும் சேவையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனை படவில்லை. சீன அரசின் புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய நிறுவனம் இது. 

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

இதுக்கெல்லாம் அந்தநாளில் பெருசுகள் 1A போட்டாலே போதும் எல்லாம் அடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

மொத்தத்தில் இந்த மொபைல் நெட்வோர்க்கையே நிப்பாட்டி விடனும் கொஞ்சத்துக்கு தெளின்சிடும் கொஞ்சத்துக்கு கைகாலை இழுத்துக்கொண்டு நடக்கும்கள் பழைய நினைவிலை இன்னும் கொஞ்சம் தலைமயிரையும் சிலுப்பி விட்டுக்கொண்டு முத்தின பயித்தியாமாகி விடுங்கள் . 

அப்புறம் இந்த டிக்டொக் கேசுகள் தற்கொலை செய்தாலும் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

இதை எல்லாம் நேரில் பார்ப்பது போல பார்த்து விமரிசனம் செய்ய தேவை 5G.

ஹுவாவய் நிறுவனத்துடன் உள்ள வணிக போட்டி காரணமாக அவர்களின் 5G உபகரணங்களும் சேவையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனை படவில்லை. சீன அரசின் புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய நிறுவனம் இது. 

huawei அதிகாரிகளே அப்படி சைனா புலனாய்வு உடன் தொடர்பு எண்டால் பகிரங்ககமாக  ஆதரம் கேட்கிறார்கள்  us இடம் . இங்கு ......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரி என்டாலும் நாங்கள் அனுபவக்கிறதை ஊரில் உள்ள சனம் அனுபவிக்க குடாது.அப்புறம் எமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 5g நெட்வோர்க்கு  அடிபாடு யாழில் கொழும்பில் தனி நெட்வோர்க் ஸ்டேசன் ரன் பண்ணியுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன கோதாரி என்டாலும் நாங்கள் அனுபவக்கிறதை ஊரில் உள்ள சனம் அனுபவிக்க குடாது.அப்புறம் எமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

அப்பிடி நான் நினைக்கேல்லை.....புலம்பெயர்ந்த நாங்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்கின்றோம். அந்த நாட்டு மக்களுடன் நாம் வாழ்கின்றோம். அவர்கள் அனுபவிப்பதை தான் நாங்களும் அனுபவிக்கின்றோம். இவர்கள் அரசியலில் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.இவர்கள் அன்றாட சீவியத்திற்கு போராடவில்லை.சொந்த காணி பூமிக்காக தெருவில் இறங்கவில்லை. எமது பிரதேசங்களில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் மடங்கு.....அப்படியிருக்க் 5G யின் அவசியமென்ன என்பதுதான் எனது கேள்வி? 
12வயது பிள்ளையிடம் கைத்தொலைபேசி சர்வசாதாரணம்.அந்த தொலைபேசியில் HD தரத்தில் படங்கள் பார்கலாமாம்.இப்போது நீலப்படங்களும் தங்கு தடையின்றி அங்கு பார்க்கின்றார்களாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் கண்டுபிடித்து முதன்முதல் ஓடும்போது இருந்த பிரச்சனைதான் இங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி ஏற்கனவே இன்னொரு திரியில் எழுதியிருக்கிறேன். IARC என்னும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்று நோய் ஆய்வு அமைப்பு செல்போன்களில் இருந்து வரும் கதிர் வீச்சை group 2B எனும் வகைக்குள் அடக்கியிருக்கிறது. மனிதர்களில் நேரடியாக ஆய்வுகள் செய்து நிரூபிக்கப் படாமல், ஆய்வு கூடங்களில் கலங்களிலும் இழையங்களிலும் ஆய்வு செய்து கண்டறியப் பட்ட தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து "புற்று நோய் ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருக்கலாம்!" (possibly carcinogenic in humans) என்ற வகைப் படுத்தல் இது. இது 5G இற்கு மட்டுமான எச்சரிக்கை எனக் காட்டி மக்களைப் பயமுறுத்துவது அடிப்படையில்லாத செயல் என்பது என் கருத்து. IARC இன் எச்சரிக்கை அனைத்து செல்லிடப் பேசிகளில் அல்லது உயர் அழுத்த மின்கம்பங்களில் இருந்து உருவாகும் கதிர்வீச்சைப் பற்றியது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படும் உலகம் அழியும் என்பதெல்லாம் அடிப்படையற்ற கட்டுக் கதைகள்! 

https://www.iarc.fr/wp-content/uploads/2018/07/pr208_E.pdf 

"செய்மதிகள் செல்போன்களால் வெளிவிடப் படும் நுண்ணலைகள் (microwaves) தான் பூமியக் சூடாக்குகின்றன, பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் அல்ல!" என்றொரு தியரி பல வருடங்களாக சில குழுக்களால் பரப்பப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் மேலே நுணாவிலான் இணைத்திருக்கும் வீடியோ இணைப்பு! இந்தத் தியரிக்கு ஆதாரம் எதுவும் இல்லை! பௌதீகம் தெரிந்தவர்களைக் கேட்டால், நுண்ணலைகள் அதிக அதிர்வெண்ணையும் (frequency) குறைந்த அலைநீளத்தையும் (wavelength) கொண்ட அலைகள் என்பார்கள். இதனால் இவற்றின் சக்தி அதிகம், ஆனால் அதிக தூரம் பயணிக்கும் திறனற்றவை! அதனால் தான் வீட்டில் மைக்ரோவேவின் உள்ளே வைத்த முட்டை வேக, மூடிய மைக்ரோவேவின் அருகில் நிற்கும் ஆட்கள் என்புக் கூடாக உருகாமல் தப்புகிறார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.