Jump to content

யாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படுவதற்கான தகவல்கள் பரவி வரும் நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் குறித்த அச்சமும் மிகவேகமாக பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

jaffna.jpg

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டி வருகிறது. இது 5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.

jaffna63.jpg

இதனால் இச்சேவைக்கான மின்காந்த அலைவரிசை மனித உயிர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சர்வதேச அளவில் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளதுள்ளனர்.

உலகில் 36 நாடுகள் இச்சேவை குறித்து எச்சரித்துள்ளதுள்ளன. அத்துடன் உலகெங்கும் உள்ள 180 விஞ்ஞானிகளும் 5 G சேவைக்கான மின்காந்த அலைக்கற்றையால் ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரித்துள்ளனர்.

இதன் அலைவரிசை புற்றுநோய் தாக்கம், குழந்தைகள், கற்பவதிகள், சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் உலகளாவிய ரீதியில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி அலைக்கற்றைகள் புற்றுநோயை உருவாக்கும் காரணியாக அமைவதாக 2011 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இதனை விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட 5G தொழில்நுட்ப சேவைக்கு அனுமதி வழங்க தயங்கி வரும் நிலையில் இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வரும் செய்திகள் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/59036

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5g  சேவையை பற்றி இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்பாணத்தில் மட்டும் ஏன் கவலை கொள்கிறார்கள் ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

5g  சேவையை பற்றி இலங்கையின் மற்ற பகுதிகளை விட யாழ்பாணத்தில் மட்டும் ஏன் கவலை கொள்கிறார்கள் ?

 

 

வருமானம்! கொழும்புக்கு அடுத்தபடி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் வியாபாரம் வடக்கில் தான் அதிகம்.

இந்த கம்பங்களில் கண்காணிப்பு கமரா பொருத்தப்பட உள்ளதாக செய்திகள் வந்திருந்ததே?!

Link to comment
Share on other sites

தவறான தகவல் ....  பிரித்தானியாவில் சென்ற மாதம் தான் ee நிறுவனம் ஆரம்பித்து அதை விட சுவீடன், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலும் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வீரகேசரி ஏன் தமிழ் வின் போல் பொய்ச் செய்தி போடுகிறார்கள் என்று தான் புரியவில்லை......!!!!!!

இன்னும் கொஞ்ச நேரத்தில்  சிங்கள பௌத்த பேரினவாத சதி என்று கூவி கொண்டு ஒரு குறூப் வரும் இப்ப !!!!!!

Link to comment
Share on other sites

பெரிதாக பயப்படஒன்றும் இல்லை என கூறுபவர்களும் உள்ளார்கள்.
இருந்தாலும், எமது மண்ணில்  5G அவசியம் என்று இல்லை.
சில வருடங்கள் பொறுத்திருந்து இதை பார்த்து பின்னர் உபயோகிப்பதே நன்று

http://fortune.com/2019/05/22/health-concerns-5g-cellphones-cancer/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

வருமானம்! கொழும்புக்கு அடுத்தபடி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் வியாபாரம் வடக்கில் தான் அதிகம்.

குறி அதுதான் யாழில்  5g வந்தால் லைக்காவும் லிபரா வும் வெளிநாட்டில் என்கடையாட்களின் கைககளில் இருந்து காணாமல் போயிடும் போதாகுறைக்கு வைபரிலும் வட்சப்பிலும் விடியோ அரட்டை துல்லியமான தரத்துடன் லைவா பார்க்கலாம் ஊரில் நேர்த்திக்கு விட்ட கிடாய் ஆடு வளர்வதை இங்கிருந்தே நிதமும் பார்க்கலாம் .எங்கடை அரசியல்வாதிகளின் திடீர் புளுகுமூட்டை அறிவிப்பை கேட்டு நாலு கேள்வி நாக்கை புடுன்குரமாதிரி நேரிலேயே கேட்க்கலாம் அதை அந்த வேகத்திலே லைவ்வாய் யுடியுப்பில் போடலாம் வீரகேசரி இந்திய அடிவருடி பத்திரிகை இந்தியாவில் 5g அம்பானி கூட்டத்தால் 21 களிலே தான் வெளியீடு என்று அறிவித்தார்கள் .மொத்தத்தில் 5g நெட்வோர்க் பலராலும் வெறுக்க பட்டாலும் வேற வழி இல்லாமல் ஏற்க்க வேண்டிய சூழ்நிலை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் சொன்னதுதான் நினைவுக்கு வருது, போன்ல 5ஜி, 7ஜி எல்லாம் இருக்கட்டும் ஆனா பசிச்சா கஞ்சிதான் வேணும் ராஜா.😂.

எனக்கு 4ஜி ஜே போதும் போதும் எண்டிருக்கு. யாழை இதை விட வேகமா தரவிறக்கினாலும் செய்யப் போவது வீண் அரட்டை தானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

எப்படி இருந்தாலும் கிராமங்களும் வளர்ச்சியடைகிறது இயற்கையையும் அழித்து  என்று சொல்லல்லாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Dash said:

தவறான தகவல் ....  பிரித்தானியாவில் சென்ற மாதம் தான் ee நிறுவனம் ஆரம்பித்து அதை விட சுவீடன், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலும் சேவை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் வீரகேசரி ஏன் தமிழ் வின் போல் பொய்ச் செய்தி போடுகிறார்கள் என்று தான் புரியவில்லை......!!!!!!

இன்னும் கொஞ்ச நேரத்தில்  சிங்கள பௌத்த பேரினவாத சதி என்று கூவி கொண்டு ஒரு குறூப் வரும் இப்ப !!!!!!

இன்னும், அந்த...   குறூப்பை காணவில்லை. :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலை நிகழ்ச்சிகளிலிருந்து கண்ணியுகம்வரை யாழ்ப்பாணத்தில் நடந்தால் மட்டும்தான் நமக்கு சமூக அக்கறை பீறிட்டு வ்ருகிறது,ஆனால் நாம் வாழும் நாடுகளில் அவையெல்லாம் இல்லாம நமக்கு பொழுதே போகாது,ஒரு கை உடைஞசமாதிரியிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எனக்கு 4ஜி ஜே போதும் போதும் எண்டிருக்கு. யாழை இதை விட வேகமா தரவிறக்கினாலும் செய்யப் போவது வீண் அரட்டை தானே

மொத்தத்தில் இந்த மொபைல் நெட்வோர்க்கையே நிப்பாட்டி விடனும் கொஞ்சத்துக்கு தெளின்சிடும் கொஞ்சத்துக்கு கைகாலை இழுத்துக்கொண்டு நடக்கும்கள் பழைய நினைவிலை இன்னும் கொஞ்சம் தலைமயிரையும் சிலுப்பி விட்டுக்கொண்டு முத்தின பயித்தியாமாகி விடுங்கள் . 

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

இதை எல்லாம் நேரில் பார்ப்பது போல பார்த்து விமரிசனம் செய்ய தேவை 5G.

ஹுவாவய் நிறுவனத்துடன் உள்ள வணிக போட்டி காரணமாக அவர்களின் 5G உபகரணங்களும் சேவையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனை படவில்லை. சீன அரசின் புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய நிறுவனம் இது. 

Link to comment
Share on other sites

18 hours ago, குமாரசாமி said:

சாப்பிட்டியா?
கக்கூசுக்கு போனியா?
பல்லு விளக்கினியா?
இதுக்கெல்லாம் 5G தேவையா?

இதுக்கெல்லாம் அந்தநாளில் பெருசுகள் 1A போட்டாலே போதும் எல்லாம் அடங்கிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

மொத்தத்தில் இந்த மொபைல் நெட்வோர்க்கையே நிப்பாட்டி விடனும் கொஞ்சத்துக்கு தெளின்சிடும் கொஞ்சத்துக்கு கைகாலை இழுத்துக்கொண்டு நடக்கும்கள் பழைய நினைவிலை இன்னும் கொஞ்சம் தலைமயிரையும் சிலுப்பி விட்டுக்கொண்டு முத்தின பயித்தியாமாகி விடுங்கள் . 

அப்புறம் இந்த டிக்டொக் கேசுகள் தற்கொலை செய்தாலும் செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

இதை எல்லாம் நேரில் பார்ப்பது போல பார்த்து விமரிசனம் செய்ய தேவை 5G.

ஹுவாவய் நிறுவனத்துடன் உள்ள வணிக போட்டி காரணமாக அவர்களின் 5G உபகரணங்களும் சேவையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் விற்பனை படவில்லை. சீன அரசின் புலனாய்வு பிரிவுடன் நெருங்கிய நிறுவனம் இது. 

huawei அதிகாரிகளே அப்படி சைனா புலனாய்வு உடன் தொடர்பு எண்டால் பகிரங்ககமாக  ஆதரம் கேட்கிறார்கள்  us இடம் . இங்கு ......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோதாரி என்டாலும் நாங்கள் அனுபவக்கிறதை ஊரில் உள்ள சனம் அனுபவிக்க குடாது.அப்புறம் எமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 5g நெட்வோர்க்கு  அடிபாடு யாழில் கொழும்பில் தனி நெட்வோர்க் ஸ்டேசன் ரன் பண்ணியுள்ளார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

என்ன கோதாரி என்டாலும் நாங்கள் அனுபவக்கிறதை ஊரில் உள்ள சனம் அனுபவிக்க குடாது.அப்புறம் எமக்கும் அவர்களுக்கும் என்ன வித்தியாசம்.

அப்பிடி நான் நினைக்கேல்லை.....புலம்பெயர்ந்த நாங்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்கின்றோம். அந்த நாட்டு மக்களுடன் நாம் வாழ்கின்றோம். அவர்கள் அனுபவிப்பதை தான் நாங்களும் அனுபவிக்கின்றோம். இவர்கள் அரசியலில் சுதந்திரமாக வாழ்கின்றார்கள்.இவர்கள் அன்றாட சீவியத்திற்கு போராடவில்லை.சொந்த காணி பூமிக்காக தெருவில் இறங்கவில்லை. எமது பிரதேசங்களில் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் ஆயிரம் மடங்கு.....அப்படியிருக்க் 5G யின் அவசியமென்ன என்பதுதான் எனது கேள்வி? 
12வயது பிள்ளையிடம் கைத்தொலைபேசி சர்வசாதாரணம்.அந்த தொலைபேசியில் HD தரத்தில் படங்கள் பார்கலாமாம்.இப்போது நீலப்படங்களும் தங்கு தடையின்றி அங்கு பார்க்கின்றார்களாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் கண்டுபிடித்து முதன்முதல் ஓடும்போது இருந்த பிரச்சனைதான் இங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பற்றி ஏற்கனவே இன்னொரு திரியில் எழுதியிருக்கிறேன். IARC என்னும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்று நோய் ஆய்வு அமைப்பு செல்போன்களில் இருந்து வரும் கதிர் வீச்சை group 2B எனும் வகைக்குள் அடக்கியிருக்கிறது. மனிதர்களில் நேரடியாக ஆய்வுகள் செய்து நிரூபிக்கப் படாமல், ஆய்வு கூடங்களில் கலங்களிலும் இழையங்களிலும் ஆய்வு செய்து கண்டறியப் பட்ட தகவல்களை மட்டும் அடிப்படையாக வைத்து "புற்று நோய் ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் இருக்கலாம்!" (possibly carcinogenic in humans) என்ற வகைப் படுத்தல் இது. இது 5G இற்கு மட்டுமான எச்சரிக்கை எனக் காட்டி மக்களைப் பயமுறுத்துவது அடிப்படையில்லாத செயல் என்பது என் கருத்து. IARC இன் எச்சரிக்கை அனைத்து செல்லிடப் பேசிகளில் அல்லது உயர் அழுத்த மின்கம்பங்களில் இருந்து உருவாகும் கதிர்வீச்சைப் பற்றியது. இதனால் மலட்டுத் தன்மை ஏற்படும் உலகம் அழியும் என்பதெல்லாம் அடிப்படையற்ற கட்டுக் கதைகள்! 

https://www.iarc.fr/wp-content/uploads/2018/07/pr208_E.pdf 

"செய்மதிகள் செல்போன்களால் வெளிவிடப் படும் நுண்ணலைகள் (microwaves) தான் பூமியக் சூடாக்குகின்றன, பச்சை வீட்டு விளைவு வாயுக்கள் அல்ல!" என்றொரு தியரி பல வருடங்களாக சில குழுக்களால் பரப்பப் பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி தான் மேலே நுணாவிலான் இணைத்திருக்கும் வீடியோ இணைப்பு! இந்தத் தியரிக்கு ஆதாரம் எதுவும் இல்லை! பௌதீகம் தெரிந்தவர்களைக் கேட்டால், நுண்ணலைகள் அதிக அதிர்வெண்ணையும் (frequency) குறைந்த அலைநீளத்தையும் (wavelength) கொண்ட அலைகள் என்பார்கள். இதனால் இவற்றின் சக்தி அதிகம், ஆனால் அதிக தூரம் பயணிக்கும் திறனற்றவை! அதனால் தான் வீட்டில் மைக்ரோவேவின் உள்ளே வைத்த முட்டை வேக, மூடிய மைக்ரோவேவின் அருகில் நிற்கும் ஆட்கள் என்புக் கூடாக உருகாமல் தப்புகிறார்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.