Jump to content

ஐரோப்பாவில் கடும் வெப்பம்


Recommended Posts

 

ஐரோப்பியக் கண்டத்தில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. அங்கு வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இல்லாத வெப்பநிலைகளை இம்மாதம் காணலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனைகள் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களைக் கையாளத் தயாராகி வருகின்றன.

அதிகரிக்கும் வெப்பநிலையினால் கடுமையான புயல்களும் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் வெயிலினால் விளைச்சல் பாதிக்கப்படும் என்று விவசாயிகளும் அஞ்சி வருகின்றனர்.

வட ஆபிரிக்காவிலிருந்து வீசும் அனல் காற்று, ஐரோப்பாவில் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது.

wd03.jpg?itok=VPIg4Pyt

https://www.thinakaran.lk/2019/06/25/வெளிநாடு/36293/ஐரோப்பாவில்-கடும்-வெப்பம்

 

இந்த இணைப்பில் ஏழு தரவுகள் உள்ளன.
எவ்வாறு பூமி வெப்பம் அடைந்து வருகின்றது என காணலாம் !

Climate change: Where we are in seven charts and what you can do to help

https://www.bbc.co.uk/news/science-environment-46384067

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  ஜேர்மனியிலை நாளைக்கு கன பள்ளிக்கூடங்கள் அரைநேரமாம்...

Link to comment
Share on other sites

இந்தியாவில் மட்டுமல்ல ஜெர்மனி, போலாந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் வியாழக்கிழமை 40 டிகிரிக்கும் மேல் வெப்பம் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது. வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம். 19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-48781595

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம்

 

ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு ஆகிய நாடுகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் இன்னும் வெப்பம் உயரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

df.jpg

இந்நாடுகளில் மட்டுமல்லாமல் பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று 40 பாகை செல்சியஸ்க்கு மேல் ஆக உயரக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வட ஆப்பிரிக்காவில் அடித்த வெப்பமான காற்றே ஐரோப்பியாவில் வீசிய அனல் காற்றுக்கு காரணமென கூறப்படுகிறது.

ஒரே ஒரு சம்பவத்தை வைத்து புவி வெப்பமயமாதல்தான் காரணமென கூற முடியாது என்றாலும், இயற்கையாகவே அனல்காற்று வீசலாம் என்றாலும், தொடர்ச்சியாக வெப்பம் அதிகரிப்பது, அனல்காற்று வீசுவது இதற்கெல்லாம் பருவநிலை மாற்றம்தான் காரணம் ஆகும்.

sd.jpg

19ஆம் நூற்றாண்டின் பிந்தைய ஆண்டுகளின் தரவுகளை ஆராய்ந்தால், தொழில்மயமாக்கலுக்கு பின் பூமியின் மேற்புற வெப்பம் ஒரு டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த கால தரவுகளுக்கமைய 2003 ஆம் ஆண்டு  ஐரோப்பாவில் அதிகரித்த வெப்பத்தின் காரணமான 14,000 மக்கள் உயிரிழந்துள்ளார்கள்.

 

https://www.virakesari.lk/article/59219

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு 48c, 49c, 50c, 52c போகின்றது

Link to comment
Share on other sites

பிரான்ஸில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை பதிவு

பிரான்ஸ் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை பதிவுபடத்தின் காப்புரிமை AFP

மேற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் தொடர்ந்து தாக்கி வரும் சூழலில், வெப்பநிலை பதிவுகள் தொடங்கிய காலத்தில் இருந்து, முதல்முறையாக பிரான்ஸில் மிக அதிக அளவு வெப்பநிலை பதிவாகி உள்ளது.

 

இதுவரை இல்லாத அளவுக்கு, மிக அதிகபட்சமாக இன்று பிரான்ஸில் 45.8 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது.

16 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கடந்த 2003ஆம் ஆண்டில், இங்கு பதிவான 44.1 டிகிரி செல்ஸியஸே இதுவரை அதிக வெப்பநிலை பதிவாக இருந்து வந்தது.

 

பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஆக்னஸ் பூஷின் இதுகுறித்து கூறுகையில், "அதிக அளவு வெப்ப அலையால் அனைவரும் ஆபத்தில் உள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

இருவர் உயிரிழப்பு

பிரான்ஸ் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை பதிவுபடத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே வயல்வெளிகளில் பணிபுரிந்த 17 வயது இளைஞர் உள்பட இரண்டு பேர் ஸ்பெயினில் கடும் வெப்ப தாக்குதலால் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரான்ஸிலும் முன்னெப்போதும் இல்லாத வெப்பநிலையை அதன் பல்வேறு நகரங்களும் எதிர்கொண்டுள்ளன. வடக்கு ஆஃப்ரிக்காவில் இருந்து வரும் அனல் காற்றே இந்த நிலைமைக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பருவநிலை மாற்றத்தின் தாக்கமா?

பிரான்ஸ் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தற்போது பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவும் அதீத வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பிருக்குமோ என்ற அச்சம் பலரால் எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், சர்வதேச வானிலை அமைப்பை சேர்ந்த பேச்சாளரான கிளார் இதுகுறித்து கூறுகையில், "தற்போதைய அதிகபட்ச வெப்பநிலைக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் நேரடி தொடர்பில்லாமல் இருக்கலாம்" என்று கூறினார்.

கடந்த காலத்தை நோக்கும்போது, வெப்ப அலைகளின் தாக்கம் இயற்கையாக ஏற்படும் ஒன்றாக இருந்தாலும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

https://www.bbc.com/tamil/global-48806689

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für auÃenwand isolieren haus

Ãhnliches Foto

Ãhnliches Foto

Ãhnliches Foto

ஜேர்மனியில்... நாளை மறு தினம் 36 பாகை வரை செல்லும்  என்று, சொல்லியுள்ளார்கள்.
சிலோனில்... இருந்த ஆட்களுக்கு.. 36 பாகை பெரிசா என்று, சிலர் புறு புறுக்கக்  கூடும் என்பதால்....
சில காரணங்களை சொல்லியே ஆக  வேண்டும். :grin:

இங்கு கட்டப்  பட்டுள்ள வீடுகள், கடும் குளிரை... தாக்குப் பிடிப்பதற்காக,
வீட்டின்  வெளிச் சுவருக்கு இடையில்,  Regiform போன்றும், பஞ்சு போன்றும் உள்ள பொருட்களை..
வைத்து கட்டிடம் கட்டினால்; குளிர் உள்ளே வராது. அத்துடன்... வீ ட் டை  சூடு படுத்த,
ஏற்படும்  எரிபொருள் செலவும், குறையும்.

ஆனால்  என்றுமில்லாதவாறு... பூமி  வெப்ப மயமாகுவதால்,
வீட்டின் உள்ளேயும்... இரவில் குளிர்மையான நேரங்களில் கூட, 
வீட்டின்  சுவர் எல்லாம்  வெப்பமாகவே, இருக்கும்.

அதுக்கு... மின் விசிறி, பாவிக்கலாம் தானே... என்று, நீங்கள் கேட்பீர்கள்.
நிலத்துக்கு, கம்பளம் (கார்பெற்) விரித்த வீட்டில்... மின் விசிறி பாவிப்பது, ஆரோக்கியமானதல்ல.
அப்ப... "எயார் கண்டிஷன்" பூட்டுங்கோவன்.. என்றும் நீங்கள்  சொல்லலாம்... 😝

வருசத்தில்... ஆக மிஞ்சிப் போனால்,  ஆறு கிழமை மட்டுமே...
இந்த  அதி கூடிய வெப்பம் இருக்கும். அதற்காக.. அதிக பணத்தை, ஏன்  செலவழிப்பான் என்ற
சாதாரண  தமிழனின், நிலையில்... பல்லை கடித்துக் கொண்டு... 
சாரத்தை... போர்த்துக் கொண்டு.... படுப்பதே... தனி சுகம். :)

Link to comment
Share on other sites

7 minutes ago, தமிழ் சிறி said:

 

வருசத்தில்... ஆக மிஞ்சிப் போனால்,  ஆறு கிழமை மட்டுமே...
இந்த  அதி கூடிய வெப்பம் இருக்கும். அதற்காக.. அதிக பணத்தை, ஏன்  செலவழிப்பான் என்ற
சாதாரண  தமிழனின், நிலையில்... பல்லை கடித்துக் கொண்டு... 
சாரத்தை... போர்த்துக் கொண்டு.... படுப்பதே... தனி சுகம். :)

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நிழலி said:

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

அதையும் செய்து பாத்தனான்... :grin:
மனிசி... *** டையை காட்டிக் கொண்டு, குறட்டை  விட்டுப் படுக்க,
உங்களுக்கு.... வெக்கம், மானம், ரோசம் ஒண்டும்... இல்லையோ...
எண்டு... அறம்  புறமாய்... பேசுது.

என்னத்துக்கு... வில்லங்கம் எண்டுட்டு, சாரத்தை போத்து படுத்து விட்டு...
மனிசி.. கொறட்டை  விட்டு, நித்திரை கொள்ளும் போது...
என்னுடைய சாரத்தை... நானே உருவி, கமக்கட்டுக்குள்  வைத்து விட்டு படுத்து விடுவேன். 😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நிழலி said:

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

சாரத்தை களட்டிப் போட்டு தனியப் படுத்தால் சரி.அது சிறிக்கு தெரியாதாக்கும்.வந்திடார் விமோசனம் சொல்ல.அவனவன் படுகிற அவஸ்த்தையில்.😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, நிழலி said:

வெக்கை என்றியள்...பேந்து ஏன் சாரத்தை போர்த்திக் கொண்டு படுப்பான்? கழட்டி எறிந்து விட்டு படுத்தால் வெக்கையாக இருக்காதே

ஓம் இப்ப நாலைஞ்சுநாளாய்  சாரத்தை தலைமாட்டிலை வைச்சுக்கொண்டு கூலாய் இருக்கிறம். :cool:

Link to comment
Share on other sites

 

1 hour ago, சுவைப்பிரியன் said:

சாரத்தை களட்டிப் போட்டு தனியப் படுத்தால் சரி.அது சிறிக்கு தெரியாதாக்கும்.வந்திடார் விமோசனம் சொல்ல.அவனவன் படுகிற அவஸ்த்தையில்.😁😁

சாரத்தைக் கழற்றிப்போட்டுப் படுக்கலாம் சுவைப்பிரியன், அது சுகம்தான்.... ஆனால் நாய் அதைக்கண்டு கொட் டோக் (Hot dog)என எண்ணிக் கெளவிவிட்டால்........  😲

Hot-Dogs_8-to-1_470x500.jpg?width=&height=810

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.