Jump to content

ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கான வியூகம் – தமிழ் கட்சியை சந்தித்தார் பசில்

basil.jpg

ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) கம்யூனிஸ்ட் கட்சியுடனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி. இ. டபிள்யூ. குணசேகர மற்றும் பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த சந்திப்பு தொடர்பாக பொதுஜன பெரமுன தெரிவிக்கையில், புதிய கூட்டணியின் கொள்கையை உருவாக்கும்போது இரு அரசியல் கட்சிகளும் முன்வைக்கும் திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு பரந்த கூட்டணியை உருவாக்க மேலும் பல அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும் இந்த புதிய கூட்டணியின் முக்கிய குறிக்கோள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை அமைப்பது என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அறிவிப்போம் என அக்கட்சி முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

basil-ne.jpg

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) ... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ராஜபக்ச கடத்தல் கொலைகாரக் கும்பல் டக்ளஸ் போன்ற கடத்தல் கொலைகாரர்களுடன் கூட்டு வைக்க முயற்சிப்பது ஆச்சரியமில்லை.

Link to comment
Share on other sites

18 hours ago, போல் said:

ராஜபக்ச கடத்தல் கொலைகாரக் கும்பல் டக்ளஸ் போன்ற கடத்தல் கொலைகாரர்களுடன் கூட்டு வைக்க முயற்சிப்பது ஆச்சரியமில்லை.

இந்தக் கும்பலுடன் இணையும் தகுதி கருணா கும்பலுக்கும் இருக்குத் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இந்தக் கும்பலுடன் இணையும் தகுதி கருணா கும்பலுக்கும் இருக்குத் தானே!

 சம்சும் கும்பலுக்கு என்ன குறைச்சல்? கொலையும் கடத்தலும் செய்யேல்லையே தவிர.....மற்றும் படி....எல்லா தராதரமும் இருக்கு.

Link to comment
Share on other sites

On 6/27/2019 at 2:13 AM, குமாரசாமி said:

 சம்சும் கும்பலுக்கு என்ன குறைச்சல்? கொலையும் கடத்தலும் செய்யேல்லையே தவிர.....மற்றும் படி....எல்லா தராதரமும் இருக்கு.

ம்ம் 100க்கு 100 உண்மை!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.