Jump to content

வயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..!


Recommended Posts

தாயிடமிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அபகரித்து, அவரை அடித்து துரத்திய மகனிடம் இருந்த நிலத்தை மீட்டு தாயிடம் தமிழகத்தின் உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் ஒப்படைத்துள்ளார். 

________________________________________

தமிழகத்தின் தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் சின்னத்துரை மனைவி முத்துப்பேச்சி (75). இவருக்கு, மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்துவிட்டார். இதையடுத்து, உப்புக்கோட்டை கிராமத்திலிருந்த 60 சென்ட் நிலத்தை 7 கோடியே 89 இலட்சம் ரூபாய்க்கு விற்று, அந்த பணத்தை பிள்ளைகளுக்கு சம பங்காக பிரித்து வழங்கியுள்ளார் முத்துப்பேச்சி.

இந்நிலையில், அந்த நிலத்தின் பத்திரப் பதிவிற்காக தேனி சார் பதிவாளர் அலுவலகம் சென்றனர். அப்போது, முத்துப்பேச்சியின் பெயரில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு சொத்தான 45 சென்ட் நிலத்தை, இரண்டாவது மகன் நாகேந்திரன் (45) என்பவர், தாயின் கையெழுத்தை ஏமாற்றி பெற்று, தன் பெயரில் பதிவுசெய்து கொண்டார்.

இந்த விவரம், பின்னர்தான் முத்துப்பேச்சிக்கு தெரிய வந்தது. இதுகுறித்து நாகேந்திரனிடம் அவர் கேட்டபோது, பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை அடித்து, அவதூறாக பேசி, வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதையடுத்து முத்துப்பேச்சி, உத்தமபாளையம் உதவி ஆட்சியாளர் அலுவலகத்தில் இயங்கி வரும், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு குறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உதவி ஆட்சியாளர் வைத்திநாதன், 45 சென்ட் இடத்தின் பத்திரப் பதிவை இரத்து செய்து, நிலத்தின் ஆவணங்களை முத்துப் பேச்சியிடம் வழங்கினார். 

இதுகுறித்து உதவி ஆட்சியாளர் கூறுகையில், ''இந்த வழக்கில், ஏற்கெனவே முத்துப்பேச்சியின் அனுமதியோடு விற்ற சொத்து பதிவுகள் செல்லும். 45 சென்ட் நிலத்தை பதிவு செய்த பத்திரம் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

https://www.virakesari.lk/article/59046

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சட்டம்.

இலங்கையிலும் இந்த சட்டம் வரவேண்டும்...

பிரிட்டனில், தாய்தந்தையர் ஒருபோதும் உயிருடன் இருக்கும் வரை கொடுக்க மாட்டார்கள். உயில் எழுதி வைத்திருப்பார்கள்.

அரசு.... ஒரு ஆப்பினை வைத்திருக்கிறது. இறந்த பின்னர் சொத்து பிள்ளைகளுக்கு போனால், அதில் அவர்கள் இருக்க முடியாது. வித்து அரசுக்கு 40% வரி கொடுக்க வேண்டும்.

இருக்க வேண்டும் என்றால், அரசுக்கு 40% வரி கட்டினால் சரி. 

ஒரு பிள்ளையாயின், பணம் இல்லாவிடில் 40% வீட்டின் மேல் கடன் வாங்கி கட்டுவார்கள்.

பல பிள்ளையாயின் வீட்டினை வித்து, வரி போக, 60% பங்கு போடுவர்.

ஒரே ஒரு வழி மூலம் இந்த வரியினை தவிர்க்கலாம்.

அதாவது, பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த பின்னர், 7 வருடம் உயிருடன் இருந்தால், வரி கட்ட வேண்டியதில்லை. ஆனாலும், மேல சொன்ன, முத்துப்பேச்சி பாட்டியின் நிலை உண்டாகலாம்.

அவ்வாறு நடந்தால், முத்துப்பேச்சி பாட்டிக்கு உதவிய சட்டம் இங்கே இல்லாததால், வழி இல்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.