Jump to content

Smart Lamp Poles தொடர்பிலான யாழ் மாநாகரசபை உடன்படிக்கை ஆவணம்


Recommended Posts

No photo description available.
Thangarajah Thavaruban

Smart Lamp Poles தொடர்பிலான யாழ் மாநாகரசபை உடன்படிக்கை (ஆங்கிலம்) ஆவணம் கிடைத்தது வாசித்ததில் நான் அறிந்தவை. கிட்டத்தட்ட முழுமையாக மொழிபெயர்த்துள்ளேன்

உடன்படிக்கை 2019 தொடக்கம் 2028ம் ஆண்டு வரைக்கும் 15.05.2019 இல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2ம் தரப்பு EDOTCO - (AXIATA குழுமத்தின் கிளை நிறுவனம் - டயலொக் குடும்பம்) இற்கும் 1ம் தரப்பு யாழ்மாநகர சபைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு துாணுக்குரிய மாத நிலையான வாடகை 3000 ரூபா மட்டும் (மலிவா இருக்கு.) மாநகர சபைக்கு செலுத்தவேண்டும். மொத்தம் 18 துாண்கள்(ரூ648,000 வருட வாடகை வரும்). அந்த துாணில் 2ம் தரப்பு வேறு நபர்களுக்கு ”சிறிய செலுலர் அன்ரெனா” பொருத்தி உழைக்கலாம். ஒரு துாணில் அவ்வாறு அன்ரெனாக்கள் ஒவ்வொன்றுக்கும் மாதம் 2000 ரூபா வாடகையினை மாநாகரசபைக்கு 2ம் தரப்பு வழங்கவேண்டும் ( அவன் எத்தினை பொருத்தியிருக்கிறான் என்று கண்டுபிடிக்க எங்கட ஆட்கள் ஏணிவச்சு ஏறுவாங்களாக்கும். அதை அவன் எவ்வளவுக்கு வாடகைக்கு கொடுக்கிறான் என்பதும் இவங்களுக்கு பிரச்சனையில்லை அதால உழைப்பு 100 வீதம் 2ம் தரப்புக்கு உறுதி., அப்பிடி என்றால் இனி 5G 4G இற்கு இவங்க தான் ஏக பிரதிநிதி. (இதை சிறீலங்கா ரெலிகொம் எடுத்திருக்கலாம்).


2ம் தரப்பு உரிய அரச வணிக வரியினையும் மாநகர சபைக்கு கட்டவேண்டும் என உடன்படிக்கை கூறுகின்றது. சும்மா சின்ன கடைக்கே பல்லாயிரம் புடுங்கிறாங்கள் அவங்களுக்கு எவ்வளவோ யாருக்குக்கு தெரியும்

ஆறு 15 மீ உயர துாண்களும் பன்னிரண்டு 20 மீ உயர துாண்களும் இணைக்கப்பட்டுள்ள வரைபடத்தின்படி நிறுவ உடன்பாடு எட்டப்பட்டுள்ளது ( அந்த பிளான் கிடைக்கவில்லை )
அந்த பிளானில் இருந்து வேறுபடின் மாநகரசபையினால் நியமிக்கப்படும் வல்லுனர்குழுவின் அனுமதி பெறப்படவேண்டும்

துாண்களை நிறுவ முன்பாக இந்த உடன்படிக்கைக்காக 5 லட்சம் முற்பணமாக செலுத்தி 2ம் தரப்பு துாண்களை அமைக்கமுன்பாக சபையில் இதற்குரிய விண்ணப்ப 
படிவங்களை பெற்று பூரணப்படுத்தி அனுமதி பெறப்படவேண்டும்

அதைவிட நல்லுார் கோவில் நிர்வாகத்தினர் உட்பட (ஏன்டா ? அவங்கள் எப்ப தனியரசானவங்கள்) வீதி அபிவிருத்தி அதிகாரசபை மத்திய சூழல் அதிகாரசபை நகர அபிவிருத்தி சபை , தொலைத்தொடர்பு அதிகார சபை . விமானப்போக்குவரத்து அதிகாரசபை பிரதேச சுகாதர அதிகாரி ஆகியோரிடமும் அனுமதி பெற்று அதன்பிரதிகள் ஆவணப்படுத்தலுக்காக மாநகர சபையில் சமர்ப்பிக்கவேண்டும்

துாணில் LED Panel (விளம்பர திரை) பொருத்த மாநகர சபையில் மீண்டும் அனுமதி பெறப்படவேண்டும் அதற்குரிய கட்டணங்களும் அரச கட்டணப்பட்டியல் படி சபைக்கு செலுத்த வேண்டும்

6மாத விளம்பர வருமான அறிக்கை சபைக்கு வழங்கவேண்டும் விளம்பர வருமானத்தில் 40வீதம் மாநகர சபைக்கு செலுத்த வேண்டும் 3 வருசத்துக்கு ஒரு முறை இந்த வருமானம் 10 வீதத்தினால் அதிகரித்து சபைக்கு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு துாணிலும் LED விளக்கு 2ம் தரப்பினால் பொருத்தப்படவேண்டும் இதன் பராமரிப்பும் அவர்களுக்குரியது.

மாநாகர சபையினர் கேடடுக்கொண்ட எண்ணிக்கை மற்றும் இடங்களின் படி (எங்க எவ்வளவு என்று தெரியாது) 2ம் தரப்பு கண்காணிப்பு கமெராக்கள் துாணில் பொருத்தவேண்டும்

கண்காணிப்பு கமெராக்களுக்கான மின்சாரம் 2ம் தரப்பினால் வழங்கப்படவேண்டும் ( அது எப்படி என்று வரையறுக்கப்படவில்லை)

கண்காணிப்பு கமெரா பராமரிப்பு மாநாகரசபைக்காக 2ம் தரப்பினர் செய்வர்.( 2ம் தரப்பு சபையிடம் கட்டணம் வாங்குவாங்களா அதுக்கு பில் அனுப்பி காசு பெறுவாங்களோ தெரியல)

மாநகரசபை கண்காணிப்பு கமெராவை பயன்படுத்தலாம் ஆனால் பழுதாக்க கூடாது. அத பழுதாக்கினால் மாநகர சபை 2ம் தரப்புக்கு அதற்குரிய பதிலீட்டு பெறுமதியை கொடுக்க வேண்டும். (யாரும் கல்லெறிஞ்சு உடைச்சாலும் அதுக்கு மாநகரசபைதான் பொறுப்பு என்று நினைக்கிறன்).

கண்காணிப்பு கமெராக்களின் கட்டுப்பாடு பொறுப்பு மாநகரசபையிடம் இருக்கும். எப்ப எப்ப கடவுச்சொல் கேட்டாலும் 2ம் தரப்பு அத வழங்க வேண்டும்( ஆக அதன் கட்டு்பாடு 2ம் தரப்பிட்ட தான் இருக்கு. ஆனா எழுத்தில மட்டும் மாநகர சபை பொறுப்பு போல)

சிறிய அன்ரனாக்கள்( தொழில்நுட்ப வரையறை ஏதும் போட நேரம் கிடைக்கல போல)) பொருத்த 2ம் தரப்புப்புக்கு உடன்படிக்கை அனுமதியளிக்கிறது

முக்கிய விடயம்
-------------------------------------

2ம் தரப்பு சிமாட் சிற்றி தொடர்பிலான அறிவை 1ம் தரப்புடன் பகிர்ந்து கொள்ளும். 
2ம் தரப்பு ”மலேசியாவில்” அப்படி ஒரு பயிற்சி ஒழுங்கு ”செய்தால் ” ( வடிவா வாசியுங்கோ) 2ம்தரப்பு ஆனது மாநகரசபை அலுவலர்கள் 3 பேருக்கான செலவை வழங்கும் (எந்த உத்தரவாதமும் இல்லை) மலேசியாவில் நடக்காட்டி சங்கம் பொறுப்பில்லையாக்கும்.

உடன்படிக்கை அனெ்ரெனா , விளக்கு , பாதுகாப்பு கமெரா , விளம்பர திரை அவற்றை மட்டும் பேசியிருக்கிறது.அது தொடர்பிலான விதிமுறைகளை 2ம் தரப்பு கடைப்பிடிக்கவேண்டும் என்று கூறுகின்றது. வேறு விடயங்கள் பற்றி மூச்சில்லை.துாணில் வேற ஏதாவது பொருத்த என்ன நடைமுறை என்று வரையறை இல்லை. துாண் யாருக்கு சொந்தம் என்றும் வரையறை இல்லை. மொத்தமாக துாண் வைக்கிற இடத்தை உறுதி முடிக்காம குத்தகை எ்ழுதிக்கொடுத்திருக்கிறார்கள் போல இருக்கு.

ஆக மொத்தத்தில் உறுதிப்படுத்தப்படாத மலேசிய பயண சலுகை்ககாக இறுக்கப்படாத வரையறைகள் பல அற்ற வருமானம் குறைந்த பல தீமைகள் சில நன்மைகள் கொண்ட ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் காலம் போகவில்லை இதை திருத்தலாம்.

அதை மாநகர சபை தானே எடுத்து நடத்தினால் நல்ல வருமானம் வரும் அதை செய்திருக்கலாம் ரெண்டர் எ்ப்ப கோல் பண்ணினவங்கள் என்டு தெரியல தெரிஞ்சிருந்தா ஒரு விலைய போட்டு நாம ஆட்டைய போட்டு நிரந்தர வருமானம் ஒன்றை பெற்றிருக்கலாம்.
#SmartlampPole #jaffna #JMC

பதிவினை பிரதி பண்ணுபவர்கள் எனக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். 1f642.png
©Thavaruban

படம் நன்றி Urban DNA
உடன்படிக்கை ஆவணம் தந்துதவிய மாநகரசபை உறுப்பினர் Parthipan Varatharajan இற்கும் நன்றி

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 7/9/2019 at 9:39 PM, ஏராளன் said:

மக்கள் எதிர்க்கினம்.

எதையும் எதிர்த்து மக்கள் பழகிட்டாங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Gowin said:

எதையும் எதிர்த்து மக்கள் பழகிட்டாங்கள்.

நவீன தொழிநுட்ப கருவிகளால் பக்க விளைவுகள் நிச்சயம், அதனால தான மக்கள் அச்சப்படுகினம்.
மக்களுக்கு தெளிவு படுத்தி வேலைகளை தொடரலாம்.

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 7:57 PM, ஏராளன் said:

நவீன தொழிநுட்ப கருவிகளால் பக்க விளைவுகள் நிச்சயம், அதனால தான மக்கள் அச்சப்படுகினம்.
மக்களுக்கு தெளிவு படுத்தி வேலைகளை தொடரலாம்.

ஏற்கனவே நல்லா புடுங்குபடினம். பொறுத்திருந்து பார்ப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.