Jump to content

மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தினால் தேசிய பிரச்சினை ஏற்படாது - மனோ

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தேசிய மொழிக் கொள்கை முறையாக அமுல்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரியதொரு பிரச்சினையாக உருவெடுக்காது. இதனை நோக்காகக் கொண்டு எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் ஐந்து நாட்களுக்கு அரச கரும மொழிகள் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்தார். 

mano.jpg

அரச கரும மொழிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் உள்ளன. இந்த மூன்று மொழிகளுமே மொழிக் கொள்கை சட்டத்திற்குள் உள்ளடங்குகின்றன. 

அதற்கிணங்க நாட்டில் அரச காரியாலயங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகள் மும்மொழிகளிலும் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதோடு, எந்தவொரு அரச சேவை நிறுவனத்திற்கும் சென்று அனைத்து மொழிகளிலும் எழுத்து மூலமாகவும், வாய்மொழி மூலமாகவும் பதிலைப் பெற்றுக் கொள்ளக் கூடிய உரிமை காணப்படுகின்றது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் கூட அந்த இலக்கை அடையக் கூடியதாகவுள்ளது. மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரிய பிரச்சினையாக தோற்றம் பெறாது என்றும் குறிப்பிட்டார்.

 

https://www.virakesari.lk/article/59078

Link to comment
Share on other sites

10 hours ago, கிருபன் said:

மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால் தேசிய பிரச்சினை பாரிய பிரச்சினையாக தோற்றம் பெறாது என்றும் குறிப்பிட்டார்.

மிக மட்டரகமான அரசியல்வாதிகளான டக்ளஸ், ஆனந்தசங்கரி கூட இப்பிடி மோசமான ஒரு தீர்வை முன்வைச்சதில்லை!
மனோகணேசன்ட லெவல் எங்க இருக்கெண்டு புரியுது தானே!

Link to comment
Share on other sites

மொழி மட்டுமல்ல, மத சுதந்திரத்துடன் பிரதேச சுயாட்சியும் இருந்தால் தான் மூன்று சமூகங்களும் 'ஒற்றுமையாக' வாழலாம்.

11 hours ago, கிருபன் said:

அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகவும், ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் உள்ளன. இந்த மூன்று மொழிகளுமே மொழிக் கொள்கை சட்டத்திற்குள் உள்ளடங்குகின்றன. 

 

இருக்கும் சட்டத்தை அமுலாக்க முடியாமல் இருப்பது இல்லை சட்டத்தை அமுலாக்க விரும்பாமல் இருப்பதே அரச பயங்கரவாத்தின் முகம்.

Link to comment
Share on other sites

இனம் மதம் என்றில்லாமல் சகலருக்கும் சம உரிமை சம அந்தஸ்து வழங்குவது அவசியமெனவும் அதுவே தேசிய சமாதானப் பேரவையின் நோக்கம் என்றும் சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் ஜெகான் பெரேரா தெரிவித்தார். 

நாடு சுதந்திரம் அடைந்து 71 வருடம் கடந்த நிலையிலும் மக்கள் மத்தியிலான நல்லிணக்கம், சக வாழ்வு, பொருளாதார ஸ்திரத் தன்மை எந்தவொரு முறையான வேலைத் திட்டமும் இடம் பெறவில்லையென்றும் அவர் தெரிவித்தார். 

கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள தவறுகள் பாதிப்புகள் தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை அவற்றை நிவர்த்தி செய்வதற்கான யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய சமாதான பேரவையின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் உரையாற்றிய பிரபல சிங்கள நடிகர் கமல் அத்தர் ஆராச்சி: 

நாடு சுதந்திரமடைந்ததிலிருந்ததை விட தற்போது மிக மோசமாகவுள்ளது. நாட்டில் இரு பிரதான கட்சிகள் உள்ள நிலையில் ஒரு கட்சி ஆட்சி செய்வதும் அதனை எதிர்க் கட்சி விமர்சிப்பதுமே தொடர்கின்றன. கடந்த ஆட்சியில் தவறு என்பவர்களே தாம் ஆட்சிக்கு வந்ததும் அதே தவறை செய்கின்றனர். இது தொடர்பில் மக்கள் சிந்தித்து செயலாற்றுவது முக்கியமென்றும் அவர் தெரிவித்தார்.

https://www.thinakaran.lk/2019/06/26/உள்நாடு/36389/இனம்-மதம்-பாராது-சகலருக்கும்-சம-உரிமை-வழங்கப்பட-வேண்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.