Jump to content

இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம்

காரை துர்க்கா / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:38 Comments - 0

“நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்?   

அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்?   

‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் மூலமாகத்தான் தேடிக் கொள்கின்றான்’ என்கிறார் ரேபியா என்ற அறிஞர். அவ்வகையில், தமிழ் மக்களுக்கு இறுதியாக உறுதிமொழி வழங்கியவராக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர் விளங்குகின்றார். “தமிழர்கள் விரும்பாத இடங்களில் இருந்து, புத்தர் சிலைகளை அகற்றுவோம்”.   இதுவே, தமிழ் மக்களுக்குத் தேரர் வழங்கிய உறுதிமொழி ஆகும். 

இதன் மறுவடிவம், ஜனநாயக நாடான இலங்கையில், தமிழர்களது பிரதேசங்களில் அவர்களது விருப்பத்துக்கு மாறாக, புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன என்பதாகும்.   

நம்நாட்டின் தலைவிதியை, அடியோடு மாற்றக் கூடிய வல்லமை பொருந்தியவர்களாக, அன்று தொட்டு இன்று வரை, தேரர்கள் உள்ளனர். ஒருபுறம், அவ்வாறானதொரு தேரராகவும் மறுபுறம் நாடாளுமன்ற உறுப்பினராக அரசியல்வாதியாகவும் இருக்கின்ற தேரரால் உறுதிமொழி வழங்கப்பட்டு உள்ளது.   

ஏப்ரல் 21, பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, இலங்கை அரசியலில் தேரர்களின் வகிபாகம் மேலும் அதிகரித்து வருகின்றது. முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் தங்களது பதவிகளைத் துறக்க வேண்டும் எனக்கோரி அத்துரலிய ரத்ன தேரரே கண்டியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். தேரரது உண்ணாவிரதம் அழைத்து வரவுள்ள ஆபத்துகளை ஊகித்து உணர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பதவிகளைத் துறந்தனர்.   

இதனையடுத்து, அடுத்த கட்டமாகத் தேரர் மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் எனத் தமிழர் பகுதிகளுக்கான விஜயங்களை மேற்கொண்டார். இதன்போது, அந்தந்த மாவட்டங்களில் இந்துமத குருமார்கள், பொது அமைப்புகளைச் சந்தித்தார்.   

இந்தச் சந்திப்புகளில் இந்து - பௌத்த சகோதரத்துவம் தொடர்பில் கூடுதல் அக்கறை காண்பித்து வந்தார். “10 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற யுத்தத்தை மனதில் கொண்டு, பௌத்த - இந்து மக்கள் பிரிவினையுடன் செயற்படக் கூடாது” என, வவுனியாவில் கருத்துத் தெரிவித்திருந்தார்.    

அத்துடன், அடிப்படைவாதத்தைத் தோற்கடிப்பதற்கும் வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பௌத்த - இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுள்ளார். 

21/4 குண்டு வெடிப்பை அடுத்தே, அடிப்படைவாதத்தைத் தோற்கடிப்பதற்கும், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்கும் பௌத்த - இந்து மக்கள் சகோதரத்துவத்துடன் செயற்பட வேண்டுமெனத் தேரர் வேண்டுதல் செய்கின்றார்.   

ஆனால், அதையும் தாண்டி 70 ஆண்டுகளாக மாறிமாறி ஆண்ட  பேரினவாத அரசாங்கங்களால், திட்டமிடப்பட்டு இல்லாமல் செய்யப்பட்ட, தமிழ் மக்களது சுதந்திரமானதும் நிம்மதியானதுமான வாழ்வை, பிறரது தொல்லைகள் இல்லாமல், மீள வழங்குமாறு அவர்கள் கோருகின்றனர்.    

மேலும், கிழக்கு மாகாணத்தில், ஹிஸ்புல்லாஹ், தமிழ் மக்களின் காணிகளை பெயர் மாற்றி, முஸ்லிம் குடியேற்றங்களாக மாற்றியுள்ளார். ஆசிரியர் நியமனங்களிலும் அதிகளவு முஸ்லிம்களை உள்ளீர்த்துள்ளார் என, யாழில் தேரர் உரையாற்றினார்.     

ஹிஸ்புல்லாஹ், தமிழ் மக்களின் காணிகளைப் பெயர் மாற்றி, முஸ்லிகளைக்  குடியேற்றினார் எனின், அதனை ஏன் அரசாங்கங்கள் தடுக்கவில்லை, ஏன் தமிழ் மக்களின் காணிகளைப் பாதுகாக்கவில்லை?  ஏன், ஹிஸ்புல்லாஹ்களைத் தட்டிக் கேட்கவில்லை? தமிழ் மக்களது காணிகளை, ஹிஸ்புல்லாஹ்கள் பிடிக்கலாம்; அதில் முஸ்லிம்களுக்கான குடியேற்றங்களை ஸ்தாபிக்கலாம். அப்படியெனின்,  அவர்களுக்கு அதற்கான துணிவு எப்படி வந்தது, யார் கொடுத்தது?  

இனப்பிரச்சினையின் ஆணி வேராக இருப்பதே, அரசாங்கங்களால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட, தமிழ் மக்களது காணி அபகரிப்பும் அவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள பேரினவாதக் குடியேற்றங்களுமே என்பதைத் தேரர் மறந்து விட்டார் போலும். 

image_3b1ddf9dc2.jpg

சுதந்திரம் கிடைத்த மறு ஆண்டே, (1949) கல்லோயா விவசாயத் திட்டம் என்ற போர்வையில் கிழக்கில் சிங்கள மக்களுக்கான குடியேற்றங்கள் ஆட்சியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டன.   

உண்மையில், கிழக்கு மாகாணத்தில் தங்களது இருப்பு, ஏனைய இரு இனங்களது ஆக்கிரமிப்புகளால் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆகவே, அது தொடர்பில் இதுவரை கண்டு கொள்ளாதவர்கள், இப்போது ஏன் முதலைக் கண்ணீர் வடிக்கின்றார்கள்?   

திருகோணமலையில் பெரியவிளாத்திக்குளம் மகாதிவுல்வௌ எனவும் முதலிக்குளம் மொறவௌ எனவும் தொடராகப் பல சிங்களக் குடியேற்றங்கள் கிழக்கை விழுங்கி விட்டன. கிழக்கு மாகாணத்தில் 1948இல் மிகவும் சொற்ப அளவில் இருந்த பெரும்பான்மை மக்களது விகிதாசாரம் இன்று மாகாணத்தில் மூன்றில் ஒரு பங்கினராக உயர்ந்து விட்டது.   

இதன் தொடர்ச்சியாக வடக்கு மாகாணத்தில் வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்களப் பிரதேச செயலகம் எனவும் முல்லைத்தீவில் வெலிஓயா (மணலாறு) பிரதேச செயலகம் எனவும் சிங்கள மக்களுக்கு எனத் தனியான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.   

இந்நிலையில் முல்லைத்தீவு செம்மலையில் தமிழ் மக்களது பூர்வீகமான நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் படையினர் விகாரை ஒன்றைக் கட்டி உள்ளனர். தற்போது அது தங்களுடையது எனவும் தமிழ்ப் பயங்கரவாதிகள் அடாத்தாகக் கோருவதாகவும் பிக்குகள் தலைமையில் சிங்கள மக்கள் கோரி வருகின்றனர்.   

தமிழ் மக்களது வரலாற்று மண்ணில் அரசாங்கத்தின் ஆசீர்வாதத்தால் அடாத்தாக முப்பது ஆண்டுகளாக, மாற்றான் காணியில் வாழ்ந்து வரும் மணலாற்று (வெலிஓயா) சிங்களவாசிகளே, செம்மலையில் பிள்ளையார் கோவிலை அகற்றுமாறு, பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.   

தமிழ் மக்களுக்கு எதிராக 2009 மே வரை இடம்பெற்ற போரில் பேரினவாதம் தங்களது நலன் கருதி முஸ்லிம்களையும் இணைத்தே பயணித்தது; அல்லது அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை உருவாக்கியிருந்தது. முஸ்லிம்களைத் தமிழ் மக்கள் பக்கம் சாராது, கவனமாகப் பார்த்துக் கொண்டது. 

பத்து ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்களது முதுகெலும்பு (பலம்) உடைக்கப்பட்டு விட்டது. ஆனால், மறுபுறம் தற்போது பேரினவாதத்தால் முஸ்லிம் இனத்தினது வளர்ச்சியை ஜீரணிக்க முடியாது உள்ளது. எப்படி அதனைத் தடுக்கலாம் என இருந்தவர்களுக்கு, ஏப்ரல் குண்டுவெடிப்பு, பழம் நழுவிப் பாலில் வீழ்ந்த கதையாகி விட்டது. ஒரு சில முஸ்லிம் அடிப்படைவாதிகள் மேற்கொண்ட தாக்குதல், நொண்டிச் சாட்டாகி விட்டது.   

இன்று இது, ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிரான போராக உருமாற்றம் கண்டுள்ளது. இந்தப் போரில், பேரினவாதம் தமிழ் மக்களையும் இணைத்துப் பயணிக்க விரும்புகின்றது; திட்டம் வகுக்கின்றது. இதன் மூலம் ஒரு கல்லில் இரு மாங்காய்களைப் பறிக்க முயற்சிக்கின்றது.   

முதலாவது, சிறுபான்மை இனங்களுக்கிடையிலான (தமிழ், முஸ்லிம்) உறவு வலுப்படாது, கொதி நிலையில் வைத்திருப்பது;கல்முனையில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலகக் கோரிக்கையில், பிக்குகளது பங்களிப்பு உள்நுழைந்தமையும் இதன் பரிமாணமே. அடுத்தது, நேற்று வரை முறுகலில் இருக்கும் தமிழ்- சிங்கள உறவுகளைச் சீர் செய்யலாம் எனக் கருதுகின்றது.   

இதேவேளை, கல்முனையில் தமிழ் மக்களுக்கான தனியான பிரதேச செயலகம் அமைக்க அரும்பாடுபடுகின்ற தேரர்கள், திருகோணமலை கன்னியாவில், முல்லைத்தீவு நீராவியடியில் என இன்னும் பல இடங்களில் தமிழ் மக்களது மனங்கள் நோகும்படியாக நடந்து கொள்கின்றமை விந்தையானது.   

தமிழ் மக்கள், புத்தபெருமானது போதனைகளை மதிக்கின்றார்கள்;  போற்றுகின்றனர். அதற்காகத் தங்கள் பிரதேசங்களில் அவரை நிரந்தரமாகப் பேணப் பயப்பிடுகின்றனர். ஏனெனில், கடந்த காலங்களில், ஒரு புத்தர் சிலையை அடுத்து வந்த பல சிங்களக் குடியேற்றங்களால், தங்கள் இருப்பு இல்லாமல் போய் விட்டதைக் கவலையுடனும் இயலாமையுடனும் தமிழ் மக்கள் மீட்டுப் பார்க்கின்றனர்.   

இதற்கிடையே, வவுனியா பிரதேச செயலகத்தில் பிரித்ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பணியாளர்களும் வெண்ணிற ஆடை அணிந்து வருமாறும் பிரதேச செயலர் அறிவித்து உள்ளார். தமிழ் பேசும் மக்களுக்கான தமிழ் பேசும் அலுவலர்கள் பணியாற்றும் வவுனியா பிரதேச செயலகத்தில் பௌத்தமத வழிபாடுகள் திணிக்கப்படுகின்றன.   

தமிழர்கள் விரும்பாத இடங்களிலிருந்து புத்தர் சிலைகளை அகற்றுவோம் எனத் தேரர் வாக்குறுதி வழங்குகையில், தமிழர்கள் விரும்பாத போது, பௌத்த போதனைகளை வலிந்து அவர்களுக்கு போதிப்பது, பௌத்தர்கள் அணியும் ஆடைகளை அணியச் சொல்வது, எவ்வகையில் நியாயம்? எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இல்லாத-உறவுக்கு-ஏன்-இந்த-அபிஷேகம்/91-234566

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.