Jump to content

கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 10:09 Comments - 0

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு.   

கடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படியான நிலையில், ‘கல்முனை வடக்கு (தமிழ்) உபபிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும்’ என்கிற, அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் மூன்று தசாப்த காலக் கோரிக்கை தொடர்பில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதில் வெளிக்காட்டிய அக்கறையின் ஒரு பகுதியையேனும், கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அது, இல்லாதபோது, மக்கள் கோபம் கொள்வது தவிர்க்க முடியாதது.  

கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை, இரண்டு தளங்கள் சார்ந்தது. முதலாவது, யாழ். மய்யவாத சிந்தனைகளில் நின்று, தமிழ்த் தேசிய அரசியலைப் பேசுவது.  இரண்டாவது, மேற்கு நாடுகளையும் இந்தியாவையும் பகைத்துக் கொள்ளாது அரசியலை முன்னெடுப்பது.  

தமிழ்த் தேசிய அரசியல், அனைத்துத் தரப்புத் தமிழ் மக்களின் எண்ணங்களையும் உண்மையாக உள்வாங்கி, திரட்சிபெற வேண்டும். ஆனால், அவ்வாறான திரட்சியைத் தமிழ்த் தேசிய அரசியல் பெற்றிருக்கவில்லை.   

குறிப்பாக, யுத்தத்துக்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது, யாழ். மய்யவாத சிந்தனைகளின் ஒன்றைப் புள்ளியாக மாறியது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர், யாழ். மய்யவாத அரசியலின் குறியீடாகவே இருக்கிறார். 

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில், கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள், வெளிப்படுத்திய அர்ப்பணிப்பின் அளவு அதிகமானது. கிழக்கிலிருந்து வந்த தலைவர்கள், இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் வழிதவறிச் சென்றிருக்கலாம். ஆனால், மக்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் வழி, அதன் ஆணிவேரைப் பலப்படுத்தி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அந்த மக்களின் கோரிக்கைகள் சார்ந்து, தமிழ்த் தேசிய அரசியலும் தலைவர்களும் உண்மையாகச் செயற்பட்டிருக்க வேண்டும். அதுவும், ஏனைய இனத்தவரின் ஆக்கிரமிப்பால், தமது பாரம்பரிய நிலங்களையே இழந்து வருகின்ற கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்து, அக்கறையோடு இயங்கி இருக்க வேண்டும்.  

கல்முனை வடக்கு உபபிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்ட நாவிதன்வெளி, சாய்ந்தமருது உள்ளிட்ட பல உபபிரதேச செயலகங்கள், முழு அதிகாரமுடைய பிரதேச செயலகங்களாகப் பல காலங்களுக்கு முன்னரேயே தரமுயர்த்தப்பட்டு விட்டன.   

image_5c76a1a092.jpg

அப்படியான நிலையில், இனத்துவ அடிப்படையில் தொடர்ச்சியாக அடக்கப்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்டத் தமிழ் மக்கள், தமக்கென இருக்கின்ற பிரதேச செயலகத்தை, முழு அதிகாரமுடைய கட்டமைப்பாகக் கோருவதில் எந்தத் தவறும் இல்லை.  

அரசியல் தீர்வு தொடர்பிலான அனைத்து உரையாடல்களிலும், முஸ்லிம்களுக்கான தனி அலகு என்கிற விடயத்தைத் தமிழ்த் தரப்புகள் முழு மனதோடு முன்வைத்து வந்திருக்கின்றன.   குறிப்பாக, முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளை (நிலத்தொடர்பற்ற நிலையில் இருந்தாலும், அவற்றை) இணைத்து உருவாக்கவேண்டிய தனி அலகு பற்றிப் பேசப்பட்டு வந்திருக்கின்றன. 

அப்படியான நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், நிலத்தொடர்பற்ற பகுதிகள் என்கிற விடயத்தைச் சுட்டிக்காட்டிக் கொண்டு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் தலைமைகள், தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்டு வருவது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது.   

இதனை, அதிக தருணங்களில், ‘கண்டும் காணாமல்’ இருந்ததுதான், கூட்டமைப்பு மீதான கோபம் வெளிப்படுவதற்கும், அந்தச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு, பௌத்த மதகுருமாரும் அரசியல் முகவர்களும் உள்நுழைவதற்குக் காரணமாகும்.  

கல்முனைப் போராட்டக் களத்துக்கு, அரசாங்கத்தின் உறுதிப்பத்திரத்தை(!) எடுத்துக் கொண்டு சென்ற எம்.ஏ. சுமந்திரனுக்கு எதிராக எழுப்பப்பட்ட கோசங்களுக்கு, மக்களைப் பொறுப்பாளிகள் ஆக்க வேண்டியதில்லை. 
அது, சந்தர்ப்பங்களுக்காகக் காத்திருந்த, அரசியல் முகவர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால், முகவர்களின் செயல்களால் எரிச்சலடைந்து, அதனை மக்கள் மீது வெளிப்படுத்த வேண்டிய கட்டத்துக்குக் கூட்டமைப்பு செல்லக் கூடாது. அதேபோல, தன்மீதான மக்களின் உண்மையான கோபத்தைக் கூட்டமைப்பு, சரியாக உணர்ந்து கொள்ளவும் வேண்டும்.  

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தில், முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து ஆட்சியமைத்து, நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்கிற விடயத்தைக் கிழக்கு மாகாண மக்களின் எதிர்ப்பையும் மீறி, 2012ஆம் ஆண்டு சம்பந்தன் முன்னெடுத்தார்.  முதலமைச்சர் பதவி உள்ளிட்ட முக்கிய பதவிகள் அனைத்தையும் விட்டுத்தருவதாகக் கூட்டமைப்பு வெளிப்படையாக அறிவித்தது. ஆனால், ராஜபக்‌ஷக்களை எதிர்ப்பதற்குத் திராணியில்லாத நிலையில், ஹக்கீம் வழங்கிய வாக்குறுதிகளை மீறிச் சென்று, ராஜபக்‌ஷக்களோடு இணைந்து ஆட்சியமைத்தார்.  

அப்படியான நிலையில், 2015ஆம் ஆண்டு, ஆட்சி மாற்றத்துக்குப் பின்னராக கிழக்கு மாகாண சபையில், ஆட்சிக்குழப்பம் ஏற்பட்டபோது, கடந்த காலத்தில் ஏமாற்றிவிட்டு ராஜபக்‌ஷக்களோடு சவாரி செய்த, முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு பெருந்தன்மையோடு செயற்பட்டது. அப்போதும், முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்து முக்கிய பதவிகளையும் விட்டுக்கொடுத்து ஆட்சியமைத்தது. அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக, எந்தவித நிபந்தனைகளுமின்றி, நல்லெண்ணம் என்கிற ஒற்றைப் புள்ளியில் நின்று சம்பந்தன் செயற்பட்டார். ஆனால், நல்லெண்ணம் என்பது, ஒற்றைத்தரப்பால் மாத்திரம் முன்னெடுக்கப்படுவது அல்ல என்கிற விடயத்தை அவர், புரிந்து கொள்ள மறுக்கிறார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாது தவிர்த்தார். 

2015ஆம் ஆண்டு காலத்திலாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தை ஒரு நிபந்தனையாக, ஏன் முன்வைக்கவில்லை என்பதுதான், கூட்டமைப்பு மீது கிழக்கு மாகாண மக்கள் முன்வைக்கும் கேள்வி.  
கூட்டமைப்பு அமைச்சரவையில் அங்கம் வகிக்கவில்லை. அமைச்சரவைப் பத்திரங்களை முன்வைப்பதற்கு முடியாது. ஆகவே, இவ்வாறான விடயங்களில் அதிக காலம் தேவைப்படுவது இயல்பானதுதான் என்கிற வாதம் கூட்டமைப்பால் மக்களை நோக்கிச் சொல்லப்படுகின்றது.   

ஆனால், அரசாங்கத்தோடு, குறிப்பாக ரணிலோடு பேச்சுக்குச் செல்லும் கூட்டமைப்பு, தங்களது கோரிக்கைகள் சார்ந்து உடும்புப்பிடியாக இருப்பதில்லை. எந்தவொரு தருணத்திலும் ராஜபக்‌ஷக்களின் கைகளில் மீண்டும் ஆட்சி செல்லக்கூடாது என்கிற ஒற்றை விடயத்தை வைத்துக் கொண்டு, ரணிலின் இழுப்புகளில் கூட்டமைப்பு விட்டுக்கொடுப்பை, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நின்று செய்கிறது.   

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்குப் பின்னரான, பதற்றமான சூழ்நிலைகளைப் பிடித்துக் கொண்டு, தேரர்கள் தம்முடைய சதிராட்டத்தை வெற்றிகரமாக ஆடி வருகின்றனர். சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த புத்தனை, நிராவியடி, கன்னியா தொடங்கி தமிழர் நிலங்கள் பூராவும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக முன்னிறுத்திக் கொண்டு செல்கின்றனர்.  

அதே, தேரர்கள், தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளும் போது, அதற்குச் சந்தர்ப்பவாத அரசியல் முகவர்கள் ஒத்தோதுவது அயோக்கியத்தனமானது; அந்த அரசியலைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

சம்பந்தனோ, சுமந்திரனோ அல்லது கூட்டமைப்பிலுள்ள யாராக இருந்தாலும் அரசியல் மாற்றங்களில் போக்கில் செயற்பட வேண்டியிருக்கும். அது, உலக ஒழுங்கிலும் வழக்கமானதுதான். ஆனால், சொந்த மக்களின் குரலை, அதன் ஒவ்வொரு கட்டத்திலும் உள்வாங்கி அதன் போக்கில், பிரதிபலிக்க வேண்டும்.   

தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் பல இருந்தாலும், அந்தக் கட்சிகளை எல்லாம் மீறி, கூட்டமைப்புக்கான ஆதரவைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதன் கனதியை, எதிர்பார்ப்பைப் புரிந்து கொள்ள வேண்டும்.   

அது, யாழ்ப்பாணத்தின் குரலை மாத்திரமல்ல; அம்பாறையின் குரலையும் கேட்டு வெளிப்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் தேசிய அரசியல், சந்தர்ப்பவாத அரசியல் முகவர்களாலும் தென்னிலங்கையாலும் இலகுவாகச் சிதறடிக்கப்பட்டுவிடும்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்முனைக்-கோபம்-கூட்டமைப்பு-என்ன-செய்ய-வேண்டும்/91-234606

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.