Jump to content

தமிழர்களிற்கு கல்முனையை கொடுத்தால், நாளை ஜனாதிபதி, பிரதமர் பதவியையும் கேட்பார்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று பல கோரிக்கைகளை முன்வைத்து ஆயுதமேந்திப் போராடியதை போன்று இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மற்றும் கருணா ஆகியோர் உண்ணாவிரத போராட்டம் என்ற ரீதியில் போராடி பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இதற்கு ஒரு தலைப்பட்சமாக ஆதரவு வழங்கும் பௌத்த பிக்குகள் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் தூரநோக்குடன் ஆராய்ந்து பொறுப்புடன் செயற்படுதல் அவசியமாகும் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார்.

ஏப்ரல் குண்டுத்தாக்குதலை தொடர்ந்து முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை உள்ளடக்கிய 10 கோரிக்கைகளை முன்வைத்து முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று செவ்வாய்க்கிழமை புதுக்கடை நீதிமன்றத்தின் அருகில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மில்ஹான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் 21ம் திகதி அடிப்படைவாதிகளினால் நடத்தப்பட்ட தொடர் குண்டு தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத் தாக்குதல்தாரிகள் இறந்ததன் பின்னர் கூட அவர்கள் நல்நிலையினை அடையாத வகையில் முஸ்லிம் மக்கள் கடுமையாக செயற்பட்டனர். மையவாடிகளில் கூட தாக்குதல்தாரிகளின் உடல்களை அடக்கம் செய்ய விடவில்லை.

குண்டுத்தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்கள் உளவியல்ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தை தரமுயர்த்துமாறு கோர வியாழேந்திரன், கருணா போராட்டத்தை முன்னெடுப்பது எதிர்காலத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரைமாக அமைந்தது. இன்று அதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகளுடன் இணைந்து போராட்டத்தை தொடர்கிறார்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது தரமுயர்த்தினால், தமிழர்கள் நாளை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு போராடுவார்கள். இவற்றை நிறைவேற்ற நாட்டு மக்கள் ஒத்துழைப்பார்களா?“ என்றார்.

http://battinaatham.net/description.php?art=20613

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க அடங்க மாட்டீங்க உங்கடை அலப்பறை தாங்காமால் உண்மையிலே தமிழன் பிரதமரா ஜனாதிபதியா சிங்களவர்களே தெரிவு செய்தாலும் வியப்பில்லை உங்களிடம் கொஞ்சநாள் அதிகாரத்தை தந்ததுக்கு  மற்றைய இனமக்கள் படும் பாட்டைத்தான் பார்த்தோமே ஒருபக்கம் புனுகு பூசிக்கொண்டு அடுத்தபக்கம் மிளகாய் பூசுவதில்  வல்லவர்கள் நீங்கள் நேற்றும் கொளுத்தி விளயாடி கொண்டு இருக்கிறீர்கள் உங்கடை டிசைன் அப்படி .

Link to comment
Share on other sites

3 hours ago, colomban said:

 

இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே மில்ஹான் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில

........,............. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய தற்போது தரமுயர்த்தினால், தமிழர்கள் நாளை நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு போராடுவார்கள்

http://battinaatham.net/description.php?art=20613

ஜனாதிபதி,பிரதமர் பதவிகள் போராட்டம் நடத்திப்பெறக்கூடியவை என்று இந்த மனுசன் நினைத்துக்கொண்டிருக்குது.

எந்தப்பள்ளியில படிச்சிருப்பார் ?

Link to comment
Share on other sites

"கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­நகர்"அதனை பாது­காப்­பது முஸ்­லிம்­க­ளி­னது கட­மை­யாகும்: யஹ்­யாகான்

முஸ்­லிம்­களின் தலை­ந­க­ரான கல்­மு­னையை பாது­காக்­க­ வேண்­டிய பொறுப்பு இலங்கை வாழ் ஒவ்­வொரு முஸ்­லி­முக்கும் இருக்க வேண்டும். குழுக்­களை அமைப்­பதால் மட்டும் மக்­களின் தேவை­களை நிவர்த்­திக்க முடி­யாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட உறுப்­பி­னர் யஹ்­யாகான் தெரி­வித்­துள்ளார்.  

இது குறித்து அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, கல்­முனை வடக்குஉப பிர­தேச செய­லகம் என்ற கோரிக்­கையை முன்­னி­றுத்தி தமிழ் சகோ­த­ரர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த போராட்டம் அவர்­க­ளுக்­கான பிர­தேச செய­ல­கத்தை பெறு­வது என்­ப­தை­விட அடை­யா­ள­மற்று இருந்த சில அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளது முக­வ­ரி­களை புதுப்­பிக்கும் நிகழ்­வாகும்.

virakesari.jpg

கல்­முனை வடக்குஉப பிர­தே­ச செய­லகம் அவ­சியம் என்று அந்த மக்கள் கரு­தினால் துற­வி­க­ளதும் அர­சி­யல்­வா­தி­க­ளதும் நிகழ்ச்சி நிர­லுக்கு அடி­ப­ணிந்­து­வி­டாது சிவில் சமூக தலை­வர்கள் பேசி சிறந்த முடி­வுக்கு வர­மு­டியும்.

மறு­புறம் கல்­முனை விட­யத்­துக்கு தீர்வு ஒன்றைப் பெற்­றுக்­கொ­டுக்க பல்­வேறு எத்­த­னிப்­புக்கள் எடுக்­கப்­ப­டு­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் முப்­பது வரு­டங்­க­ளாக உள்­ளூராட்­சி­மன்ற கோரிக்­கையை முன்­னி­றுத்தி போரா­டி­வரும் சாய்ந்­த­ம­ருது மக்­களின் கோரிக்­கையும் கிடப்பில் போடப்­பட்­டுள்­ளது.

இந்த மக்­க­ளது பிரச்­சி­னையை தீர்ப்பதற்கும் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டன. அவற்றுக்கும் என்ன நடந்தது என்று புரியவில்லை. அந்த மக்களின் கோரிக்கையும் சமாந்தரமாக தீர்க்கப்பட வேண்டும்.

https://www.virakesari.lk/article/59105

 
Link to comment
Share on other sites

6 hours ago, colomban said:

முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார். 

இந்த முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு தடை செய்யப்பட்டு அதில் உள்ள எல்லாரையும் சிறைகளில தள்ளனும் என்டு நான் சொல்றன்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.