Jump to content

உலகப் பொது நாணயம் டொலரா? லிப்ராவா?


Recommended Posts

கடந்த சில வருடங்களாக உலகை, மெய்நிகர் நாணயங்கள் (Crypto Currencies) ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கின்றன.

மெய்நிகர் நாணயங்களின் வரலாறானது, Bitcoin எனப்படும் முதல் மெய்நிகர் நாணயத்தின் அறிமுகத்துடனேயே ஆரம்பிக்கின்றது. Bitcoin, உண்மையில் ஒரு தொழில்நுட்பமாகப் பார்க்கப்படவேண்டிய போதிலும் எந்தவொரு தங்குதடையுமின்றி, எந்தவோர் அரசாங்கத்தின் அழுத்தங்களுமின்றி, பணப் பரிவர்த்தனையை, மிகப் பாதுகாப்பாக, மிக விரைவாக, சந்தையின் கேள்வி-நிரம்பல் ஆகியவற்றின் அடிப்படையில் இலகுபடுத்தும் தொழில்நுட்பமாக அமைந்ததன் விளைவாக, Bitcoin, தற்போது நடைமுறையிலுள்ள பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு மாற்றீடாகப் பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையின் அடிப்படையில், பல்வேறு மெய்நிகர் நாணயங்கள், சந்தையில் அறிமுகமாகியிருந்த போதிலும், தற்போது சந்தைக்கு அறிமுகமாகாத, ஆனால் அறிவிப்பிலேயே அனைவரது ஆதரவையும் எதிர்ப்பையும், ஒருமித்தே சம்பாதித்துள்ள மெய்நிகர் நாணயமாக “லிப்ரா” மாறியிருக்கிறது.   
லிப்ரா என்பது என்ன?

உலகில் அநேகமானோரால் அறிமுகம் செய்யப்பட்ட மெய்நிகர் நாணயப் பட்டியலில், தற்போது புதிதாக இணையவுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பே இந்த “லிப்ரா” ஆகும். உலகின் பில்லியன் கணக்கான மக்களை, ஒரே இணையதளத்தில் இணைக்கும் பேஸ்புக், அம்மக்களுக்கான பொது மெய்நிகர் நாணயமொன்றை வெளியிடுவதாக அறிவித்திருப்பதே, அனைத்து சலசலப்புகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.   

கடந்த வாரத்தில், பேஸ்புக் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், லிப்ரா மெய்நிகர் நாணயத்தை, 2020ஆம் ஆண்டளவில், பேஸ்புக் மூலமாக இணைந்துள்ள மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் நடைமுறைக்குக் கொண்டுவர எதிர்பார்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலமாக, உலகளாவிய ரீதியிலான பொதுநாணயப் பயன்பாட்டையும் நிதியியல் உட்கட்டமைப்பு வசதிகளையும் முன்னேற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தது.   

உத்தியோகபூர்வ பரிமாற்று ஊடகமாக அமையுமா ?

உண்மையில், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் மெய்நிகர் நாணயத்தையும் அதுசார்ந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூலமாக, பல பில்லியன் மக்கள் அதை மிக இலகுவாகப் பயன்படுத்தும் நிலை ஏற்படும். இதன் மூலமாக, லிப்ரா போன்ற மெய்நிகர் நாணயமானது, பொது பரிமாற்ற ஊடகமாக வரக்கூடிய சாத்தியப்பாடு உள்ளது. ஆனாலும், அந்தப் பொது பரிமாற்ற ஊடகமெனும் நிலையை அடைய அல்லது நாம் தற்போது பயன்படுத்தும் பணத்தைத் தாண்டி, மற்றுமோர் ஊடகத்தைப் பரிமாற்று ஊடகமாகப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு, லிப்ரா மிகப்பெரும் தடைகளைத் தாண்ட வேண்டியதாகவிருக்கும்.   

ஆரம்பகட்ட தகவல்களின்படி, லிப்ரா மெய்நிகர் நாணயமானது, எந்தவிதமான சட்ட ஒப்புதல்களையும் பெற்றுக்கொண்டமைக்கான உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவுமே வெளியிடப்படவில்லை. எனவே, லிப்ரா தனது சட்ட ஒப்புதல்களை இனித்தான் பெற வேண்டுமாயின், அது, அதீத சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இவற்றைத் தாண்டி, 2020இல் மக்கள் பாவனைக்கு வருவதென்பது, குதிரைக் கொம்பாகவே இருக்கும். குறிப்பாக, பேஸ்புக் நிறுவனம் மீது பயனாளர் பாதுகாப்புத்தன்மை தொடர்பில் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்தப் பொது பரிமாற்ற ஊடகச் செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியே.   

லிப்ரா யாருக்குச் சொந்தமானது?

ஒவ்வொரு நாட்டின் நாணயமும் அந்த நாட்டின் அரசாங்கத்துக்கே சொந்தமானதாக இருக்கும். ஆனால், மெய்நிகர் நாணயங்கள் அவ்வாறாக இருப்பதில்லை. அதை உருவாக்கும் தனிநபர், நிறுவனங்கள் அல்லது குழுக்கள் ஆகியவற்றுக்கே சொந்தமானதாக இருக்கும். அந்த வகையில், லிப்ரா மெய்நிகர் நாணயம் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் செய்தியை வெளியிட்டிருந்தாலும், அது முழுமையாக பேஸ்புக் நிறுவனத்துக்கு மாத்திரம் சொந்தமானதாக இருக்கப்போவதில்லை. மாறாக லிப்ரா அமைப்பில் உறுப்புரிமை பெற்றுக்கொண்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்.   

அந்த வகையில், லிப்ரா அமைப்பானது, சுவிற்ஸர்லாந்து நாட்டில் ஓர் இலாபநோக்கற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளதுடன், இந்த அமைப்பில் இதுவரை 27 அமைப்புகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் தற்போதுவரை பெரும்பங்கை, பேஸ்புக் நிறுவனம் கொண்டிருக்கிறது.

அத்துடன், நம் அனைவருக்கும் பரீட்சயமான Paypal, Visa, Ebay, Uber, Mastercard, B Booking.com போன்ற நிறுவனங்களும் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்த அமைப்பின் தொடக்கநிலை அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ள, இந்த 27 நிறுவனங்களும் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடானது, லிப்ரா எனும் மெய்நிகர் நாணயத்தை உருவாக்கவும், அதன் செயற்பாடுகளை மக்களிடத்தே கொண்டுசேர்க்கவும் பயன்படுத்தப்படுமென, பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருக்கிறது.   

இந்த லிப்ரா அமைப்பானது, லிப்ரா மெய்நிகர் நாணயத்தின் பயன்பாட்டையும் அதன் பாதுகாப்புத் தன்மையையும் உறுதிசெய்கின்ற அமைப்பாகச் செயற்படுமென, பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளதுடன், குறித்த அமைப்பில் எந்தவொரு நிறுவனமும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தாத வகையில், மேலதிக நிறுவனங்கள் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்திருக்கிறது. அத்துடன், குறித்த அமைப்பில் பெரும் பங்கைக் கொண்டிருக்கும் பேஸ்புக் நிறுவனம், லிப்ரா நாணயம் பாவனைக்கு வரும் 2020ஆம் ஆண்டில் முழுமையாக, தனது பங்கை வழங்கிவிட்டு, லிப்ரா அமைப்பைக் கண்காணிக்கும் சுயாதீன நிறுவனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது.   

எனவே, லிப்ரா மெய்நிகர் நாணயம், யாருடைய முழுமையான கட்டுப்பாட்டிலுமிருக்கக் கூடாதென்பதில், பேஸ்புக் நிறுவனமும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் உறுதியாக இருக்கின்றன. ஆனாலும், லிப்ரா நாணயம் பயன்பாட்டுக்கு வந்ததன் பின்னராகவே, இந்த நிலைப்பாட்டின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.   

எவ்வாறு பயன்படுத்தலாம்?

லிப்ரா மெய்நிகர் நாணயம் அறிமுகமாகின்றபோது, அதைக் கொள்வனவு செய்வதற்கு ஆரம்பத்தில் Visa, Mastercard சேவைகளைப் பயன்படுத்தி, உங்களது சொந்தப் பணத்தை லிப்ரா மெய்நிகர் நாணயமாக மாற்றிக்கொள்ள முடியும். எனவே, லிப்ரா நாணயத்தை ஆரம்பத்தில் பயன்படுத்த, தற்போது பாவனையிலிருக்கும் பணத்தின் தேவைப்பாடு அவசியமாகும்.   

நன்மைகள்

 லிப்ரா மெய்நிகர் நாணயமானது, உங்களது கொடுக்கல்வாங்கல் செயல்பாடுகளை எவ்விதமான இடையூறுமின்றி இலகுவாகக் கொண்டு நடத்த, மிகப்பெரும் உறுதுணையாக அமையும். குறிப்பாக, நீங்கள் நாளாந்தம் சாதாரணமாகப் பயன்படுத்தும் facebook, messanger, what’s app போன்ற செயலிகளின் மூலமாக, வெளிநாடுகளிலிருக்கும் எந்தவொரு நபருக்கும் மிகக்குறைந்த அல்லது எவ்விதமான சேவைக் கட்டணமுமில்லாமல் நொடிப்பொழுதில் பணப்பரிமாற்றத்தை நிகழ்த்தக் கூடியதாயிருக்கும்.   

அத்துடன், குறித்த லிப்ரா மெய்நிகர் நாணயமானது, தனித்து பேஸ்புக் வலைப்பின்னலுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட போவதில்லை. குறிப்பாக, லிப்ரா அமைப்பின் அங்கத்துவம் கொண்ட அனைத்து நிறுவனங்களுமே பயன்படுத்தும் மெய்நிகர் நாணயமாக இருக்கப்போகின்றது.

தற்போதுபோல நீங்கள் வழங்கும் கடனட்டை தொடர்பான விவரங்கள், வங்கி விவரங்கள், உங்கள் இரகசிய விவரங்களை நீங்கள் எதிர்காலத்தில் அனைவருக்கும் வழங்கவேண்டிய தேவையிருக்காது. தனியே, லிப்ரா நாணயத்தின் மூலமாக மட்டுமே கொடுக்கல், வாங்கல்களைச் செய்துகொள்ள முடியும்.   

அமெரிக்க டொலரைப் போல பொது நாணயமாக மாற்றமடையுமா? 

உண்மையில், இந்தக் கேள்விக்கு தற்போதைய நிலையில் பதிலளிக்க முடியாது. லிப்ரா பாவனைக்கு வரும்போதுதான், இதை உறுதியாகக் கூற முடியும். ஆனால், அமெரிக்க டொலருக்கு நிகராக, லிப்ரா பாவனையை கொண்டுவரக் கூடியவகையிலே, பேஸ்புக் தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது என்பது வெளிப்படையாக உள்ளது.

குறிப்பாக, பேஸ்புக் பாவனையாளர்கள், வங்கி கணக்குகளே இல்லாது வாழும் சுமார் 1.7 பில்லியன் மக்களுமே, இந்த லிப்ரா நாணயத்தின் இலக்காக உள்ளது. இந்த இலக்கை அவர்கள் அடைவார்களாயின், நிச்சயமாக அமெரிக்க டொலருக்கும், ஏனைய நாடுகளின் நாணயங்களும் இணையாக லிப்ரா உருவாக்கம் பெறுவதைத் தடுக்க முடியாது.     

http://www.tamilmirror.lk/business-analysis/உலகப்-பொது-நாணயம்-டொலரா-லிப்ராவா/145-234583

 

தொடர்புபட்ட இணைப்புக்கள் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அகவை என்பது ஒரு எண்ணிக்கை  அவ்வளவுதான்!   முக்கியம் வேண்டியது  ஆரோக்கியமும் வலிமையையும்  நல்ல சிந்தனையும் கருத்தாடலும்    அது தான் என் எண்ணம் அது இருக்கும் மட்டும் நீ இளைஞனே    ஆகவே நான் மௌனமாகிறேன் 
    • இங்கே இரவு பாடல் ஆடல் மற்றும் கேள்வி பதில் போட்டிகள் நடக்கும். அவற்றில் என் மக்கள் மற்றும் மருமக்கள் பங்கு பெற்று பரிசுகளையும் பெற்றார்கள். அதனால் பலருக்கும் கோட்டலில் அறிமுகமாகி விட்டனர். இங்கே வந்திருப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு என் குடும்பம் முழுமையாக வந்து நின்று தாயின் பிறந்த நாள் பரிசாக தாமே முழுவதுமாக பொறுப்பெடுத்து செய்வது ஆச்சரியமாக முன்னுதாரணமாக இருக்கிறது. என்னிடம் பலரும் கை கொடுத்து நல்ல வளர்ப்பு படிப்பு பண்புகள் என்று பாராட்டி செல்கின்றனர். அதை நானும் உணர்கிறேன். என் பிள்ளைகள் மட்டும் அல்ல அவர்களுக்கு வாய்த்தவர்களும் அவ்வாறே அமைந்திருப்பது பாராட்டப்பட்டது. நேற்று கரோக்கோ இசையில் எனது இரண்டு மருமக்களும் பாடி அனைவரதும் பாராட்டைப்பெற்றார்கள். (எனது மூன்று பிள்ளைகள் மணம் முடித்து விட்டனர். மூன்றும் காதல் திருமணம். என்னுடைய சம்மதத்துக்காக காத்திருந்து திருமணம் செய்தார்கள். அதுவும் ஒரு பெரிய கதை. நேரம் இருந்தால் பார்க்கலாம்) இன்று சிறிய கப்பலில் கடலில் சென்று குளித்து சாப்பிட்டு கோட்டல் திரும்பினோம்.   நாளை நாடு திரும்புகிறோம்... இந்த தீவு மற்றும் விபரங்களை முடிவுரையில் நாடு திரும்பியதும் எழுதுகிறேன். நன்றி.
    • மின்னம்பலம்  சர்வே : விழுப்புரம் விஸ்வரூபம் எடுப்பது யார்? Apr 15, 2024 21:54PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விழுப்புரம்(தனி) தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்ரவிகுமார் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் முரளிசங்கர் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயக்குநர் மு.களஞ்சியம் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விழுப்புரம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  விழுப்புரம்,  திண்டிவனம்(தனி) ,  விக்கிரவாண்டி,  திருக்கோயிலூர்,  உளுந்தூர்பேட்டை மற்றும் வானூர் (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிகுமார் 42% வாக்குகளைப் பெற்று மீண்டும்இரண்டாவது முறையாக விழுப்புரம் தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் பாக்யராஜ் 34% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்.  பாமக வேட்பாளர் முரளிசங்கர் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியம் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விழுப்புரம் தொகுதியில் இந்த முறையும் ரவிகுமார் வெற்றி பெற்று விடுதலை சிறுத்தைகளின்கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-vilupuram-constituency-who-wins-the-race/   மின்னம்பலம் மெகா சர்வே: நாகப்பட்டினம்… வெல்லப் போவது யார்? Apr 16, 2024 08:32AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் நாகப்பட்டினம் (தனி) தொகுதியில்  திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ)  சார்பில் வை.செல்வராஜ் களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்த்திகா போட்டியிடுகிறார். சிபிஐ, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில்,  இத்தொகுதி மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக நாகப்பட்டினம்  நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம். 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருத்துறைப்பூண்டி (தனி),  நாகப்பட்டினம்,  வேதாரண்யம்,  திருவாரூர்,  நன்னிலம் மற்றும் கீழ்வேளூர் (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்… சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் 49% வாக்குகளைப் பெற்று நாகப்பட்டினம் தொகுதியில் முன்னிலை பெறுகிறார்.  அதிமுக வேட்பாளர் சுர்ஜித் சங்கர் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகா 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, நாகப்பட்டினம் தொகுதியில் இந்த முறை வை.செல்வராஜ் வெற்றி பெற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpi-candidate-vai-selvaraj-will-win-with-49-percent-votes-in-nagapattinam-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: சேலம்… வெற்றிக் கனி பறிப்பது யார்? Apr 16, 2024 10:34AM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் செல்வகணபதி களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் விக்னேஷ் போட்டியிடுகிறார். பாமக சார்பில் அண்ணாதுரை போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின்சார்பில் க.மனோஜ்குமார் போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சேலம் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சேலம் (மேற்கு),  சேலம் (வடக்கு),  சேலம் (தெற்கு),  எடப்பாடி,  வீரபாண்டி மற்றும் ஓமலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் செல்வகணபதி 45% வாக்குகளைப் பெற்று சேலம் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் அண்ணாதுரை 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் க.மனோஜ்குமார் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சேலம் தொகுதியில் இந்த முறை செல்வகணபதி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-selvaganapathy-will-win-with-45-percent-votes-in-salem-parliamentary-constituency/   மின்னம்பலம் மெகா சர்வே: தூத்துக்குடி… யார் கப்பலில் வெற்றிக் கொடி? Apr 16, 2024 13:55PM IST  2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? தூத்துக்குடி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரொவினா ரூத் ஜேன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, தமாகா ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தூத்துக்குடி, விளாத்திக்குளம், திருச்செந்தூர்,  ஒட்டப்பிடாரம்,  கோவில்பட்டி மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் கனிமொழி 50% வாக்குகளைப் பெற்று மீண்டும் தூத்துக்குடி தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் 13% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜேன் 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தூத்துக்குடி தொகுதியில் இந்த முறை கனிமொழி வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-kanimozhi-won-tuticorin-loksabha-constituency-in-minnambalam-mega-survey/   மின்னம்பலம் மெகா சர்வே : விருதுநகர் Apr 16, 2024 14:46PM IST   2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணிக்கம் தாகூர் மீண்டும் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் சி.கவுசிக் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்குஎன்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பரங்குன்றம்,  திருமங்கலம்,  சாத்தூர்,  சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் விருதுநகர் பகுதிகளில் நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 45% வாக்குகளைப் பெற்று மீண்டும் விருதுநகர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகர் 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சி.கவுசிக் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, விருதுநகர் தொகுதியில் இந்த முறையும் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்று மீண்டும் காங்கிரசின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-virudhunagar-constituency-result-congress-manickam-thakoor-wins-dmdk-came-second-place/
    • பையா உடல்நலத்தைக் கவனாமாகப் பேணவும் ........!   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.