Jump to content

சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில்  பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.

 

2lj52l1.jpg 

2nbvi1l.jpg 

fc5ymq.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரசிகர்களைப் போலவே நானும் உணர்கிறேன்.. கிராமத்திலிருந்து மதுரை மற்றும் விருதுநகர் திரையரங்குகளுக்கு சென்று பலமுறை பார்த்த படம் இந்த வசந்த மாளிகை..!

அக்கால இளமைத் துடிப்பை உணர்கிறேன்..

Nostalgic..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதைய வெள்ளி விழா கண்ட படத்திற்கு இப்பொழுது கட்-அவுட், மாலை, பால் எல்லாமே.. ஆனால் ரசிகர்கள் மட்டும் அப்போதைய இளைஞர்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் திருப்பத்தில் அமைந்துள்ள 'ஆல்பெர்ட்' திரையரங்கில் இந்தக் காட்சி..! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழிற்நுட்ப ரீதியாக இந்த படத்தின் நவீன மறு உருவக்கம்(Digital Re-mastering) இந்த ட்ரெயிலரில் பார்க்கும்போது நன்றாகவே உள்ளது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

தொழிற்நுட்ப ரீதியாக இந்த படத்தின் நவீன மறு உருவக்கம்(Digital Re-mastering) இந்த ட்ரெயிலரில் பார்க்கும்போது நன்றாகவே உள்ளது..

 

 

4K இல் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நானும் பார்ப்பேன்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமாளிகை  படம் ஓடும் திரை அரங்குகள்  "ஹவுஸ் ஃபுல்" லாக  ஓடுகின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

வசந்தமாளிகை  படம் ஓடும் திரை அரங்குகள்  "ஹவுஸ் ஃபுல்" லாக  ஓடுகின்றனவா?

திரையரங்குகள் பாதி நிறைந்தாலே இப்படத்திற்கு வெற்றிதான்..

அக்கால இளைஞர்கள் இன்னமும் வாழ்ந்திருக்கணும், படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க மனமும், நேரமும், உடல்நிலையும் நலமாக இருக்க வேணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ராசவன்னியன் said:

திரையரங்குகள் பாதி நிறைந்தாலே இப்படத்திற்கு வெற்றிதான்..

அக்கால இளைஞர்கள் இன்னமும் வாழ்ந்திருக்கணும், படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க மனமும், நேரமும், உடல்நிலையும் நலமாக இருக்க வேணுமே?

Bildergebnis für à®à®¿à®´à®µà®©à¯

அக்கால இளைஞர்களுக்கு.... வசந்த மாளிகை  படம்  மீண்டும்  திரையில் ஓடுது என்ற செய்தி தெரிந்திருக்குமோ தெரியவில்லை.
அத்துடன் படத்தை பார்ப்பதற்கு... பார்வையும், காதும் கேட்க வேணுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2019 at 10:04 PM, ராசவன்னியன் said:

இந்த ரசிகர்களைப் போலவே நானும் உணர்கிறேன்.. கிராமத்திலிருந்து மதுரை மற்றும் விருதுநகர் திரையரங்குகளுக்கு சென்று பலமுறை பார்த்த படம் இந்த வசந்த மாளிகை..!

அக்கால இளமைத் துடிப்பை உணர்கிறேன்..

Nostalgic..

 

 

ராஜவன்னியன்....  இந்தக் காணொளியில்... இரண்டாவது நிமிடம், நாற்பதாவது வினாடியில்,
பேட்டி கொடுப்பவரின் கழுத்தில்... பூநூல்  தெரிகின்றது. அவர் ஐயரா?
அவர் நல்ல வெறியில் நிற்பது போலவும் தெரிகின்றது.

நமது ஊரில்.. ஐயர்மார், சினிமா தியேட்டர்களுக்கு,  போக மாட்டார்கள்.
அப்படி போனாலும், பக்தி படங்களுக்கு மட்டும்... ஒரு சிலர் போவார்கள்.
தமிழ் நாட்டில்... இப்படி நடப்பது, சாதாரணமானதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

```வசந்தமாளிகை'யை ஏன் இன்னமும் கொண்டாடுகிறார்கள்?!'' - தியேட்டர் விசிட்

 

47 ஆண்டுகள் கழித்தும், சிவாஜி கணேசன் நடிப்பில் புதுப்பொலிவோடு வெளியாகியிருக்கும் 'வசந்தமாளிகை' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரீ-ரிலீஸில் இப்படத்தைப் பார்த்த அனுபவம் இது.

வசந்தமாளிகை

வசந்தமாளிகை

"லைலாவைப் பார்க்கவேண்டுமானால் மஜ்னுவின் கண்களால்தான் பார்க்கவேண்டும்'' என்பார்கள். அப்படித்தான், 'வசந்தமாளிகை'யைப் பார்க்கவேண்டுமானால், சிவாஜி ரசிகனாக இருந்து பார்த்தால்தான் காலத்தால் அழிக்க முடியாத அந்தக் காவியத்தை முழுமையாக ரசிக்க முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் படத்தைப் பார்க்க வந்த பலர், தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்திப் பல ஆண்டுகளாகிப் போனவர்கள். காலத்தின் வேகம், குடும்பச் சூழல், பிள்ளைகளின் கல்வி, திருமணம், பணத் தேவை எனப் பலதிசைகளில் பயணித்து வறட்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களுக்குச் சோலைவனமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. டிஜிட்டலில் வந்து மெருகு குலையாத புத்தம் புதிய காப்பியாக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

படம் வெளியாகி பத்து நாள்கள் ஆன நிலையில், ஒரு சாதாரண நாளில்தான் ஆல்பர்ட் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றோம். ஆனாலும், ஆறரை மணிக் காட்சிக்கு ஐந்தரை மணியிலிருந்தே ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். ஏனென்றால், இவர்களின் மனோபாவம் எப்படியென்றால் எழுத்துப் பிக்சரிலிருந்து வணக்கம் போட்டுத் திரை மூடும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் இருக்கையைவிட்டு எழுந்திருப்பார்கள்.

சரி அப்படி என்னதான் இருக்கிறது 'வசந்தமாளிகை'யில்?!

வசந்தமாளிகை வசந்தமாளிகை

சிங்கிள் டீ குடிக்கக் காசில்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்மகனுமே தன்னை அழகாபுரி ஜமீனாகத்தான் நினைப்பான். ஆனால், வாணிஶ்ரீயைப் போன்ற ஒரு அழகு தேவதை தன் வாழ்க்கையை வந்து மாற்றுவாள் என்று எதிர்பார்ப்பான். சிலருக்கு அந்தத் தேவதை கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஆனால், அந்த தேவதையோடுதான் மனத்தளவில் வாழ்வான், இதுதான் ஆணின் மனநிலை. இதுவே இந்தப் படம் ஆண்களால் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம்.

 

காட்சிப்பொருளாகத் தன்னை நினைப்பதைவிட, சுயமரியாதையும் நேர்மையுமே ஒருபெண்ணின் அழகு என்பதை நிரூபித்து, வறுமையிலிருந்தாலும் வைராக்கியத்துடன் வாழும் பெண்ணாக வாணிஶ்ரீயைக் காண்பித்ததால், பெண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள்.

சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

படம் வெளிவந்த 1972-ஆம் ஆண்டு எல்லாப் பத்திரிகைகளிலும் பின் அட்டை மற்றும் நடுப்பக்கத்தில் ஆரஞ்சு வண்ணப் பட்டுப் புடவையில் வாணிஶ்ரீயும், வெளிர்நீல கோட்டில் சிவாஜியும் அரவணைத்துக்கொள்ளும் படம்தான் இடம்பெற்றது. இன்றைக்கு அறுபது வயதிலிருக்கும் பலரின் ஞாபக மலராக இந்தப் புகைப்படம்தான் சினிமா ஸ்டில்லாக இருந்து வருகிறது.

தமிழக நகரங்களிலிருந்த பழைய ஜவுளிக் கடைகளெல்லாம் ரங்கசாமி அன் சன்ஸ், குமாரசாமி அன் கோ என்ற பெயர்களிலிருந்து விடுபட்டு, 'கீதா சில்க்ஸ்', 'ராதா சில்க்ஸ்' என மாடர்ன் பெயராக மாறியது இந்தப் படத்தின் வருகைக்குப் பிறகுதான். அதிலும் குறிப்பாக, கண்ணாடி ஷோ கேஸ்களில் வாணிஶ்ரீயின் எழில்மிக்க பெரிய கொண்டை ஊசி சிகை அலங்காரத்துடன் கூடிய பொம்மைகள் பட்டுப் புடவையுடன் வாடிக்கையாளரை வரவேற்கத் தொடங்கியது, 'வசந்தமாளிகை'யின் வருகைக்குப் பிறகுதான்.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

இதன் காரணமாகத்தான் மதுரை அண்ணாமலை தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகைகளைக் குலுக்கல் முறையில் தேர்வுசெய்து பட்டுப் புடவையை இப்போது பரிசளிக்கிறார்கள்.

 

இதற்கொரு விசேஷக் காரணம் உண்டு. 'பிரேம் நகர்' என்ற இந்தக் கதையை எழுதியவர், கௌசல்யா தேவி எனும் தெலுங்குப் பெண் எழுத்தாளர். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் உன்னதமான கதை.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

ராமா நாயுடுவின் தயாரிப்பு என்பதால், கே.பாலாஜி, நாகேஷ், வி.கே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், ஶ்ரீகாந்த், டி.கே.பகவதி, எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன், புஷ்பலதா, குமாரி பத்மினி எனப் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் சிறிய சிறிய பாத்திரங்கள். ஆனால், கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பும் பேட்ஸ்மேன்களைப்போல் அநாயசாமக் கையாண்டு அத்தனைபேரும் அசத்தியிருப்பார்கள்.

'வசந்தமாளிகை' எனும் கதையைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கிய வேறு இருவர் கவியரசர் கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும்தான்.
சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

திரையில் இடம்பெற்ற பாடல்களை டி.எம்.எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் குரல் வளத்தால் கேட்கத் திகட்டாத தேன்கிண்ணமாக்கினார்கள். தமிழக வானொலியிலும், இலங்கை வானொலியிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை. டீக்கடையில் பாட்டைக் கேட்டால் சைக்கிளை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். காரணம் டேப்-ரெக்கார்டர், சிடிக்கள், டி.விக்கள் இல்லாத காலம் அது.

 

இதற்கொரு விசேஷக் காரணம் உண்டு. 'பிரேம் நகர்' என்ற இந்தக் கதையை எழுதியவர், கௌசல்யா தேவி எனும் தெலுங்குப் பெண் எழுத்தாளர். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் உன்னதமான கதை.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

ராமா நாயுடுவின் தயாரிப்பு என்பதால், கே.பாலாஜி, நாகேஷ், வி.கே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், ஶ்ரீகாந்த், டி.கே.பகவதி, எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன், புஷ்பலதா, குமாரி பத்மினி எனப் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் சிறிய சிறிய பாத்திரங்கள். ஆனால், கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பும் பேட்ஸ்மேன்களைப்போல் அநாயசாமக் கையாண்டு அத்தனைபேரும் அசத்தியிருப்பார்கள்.

'வசந்தமாளிகை' எனும் கதையைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கிய வேறு இருவர் கவியரசர் கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும்தான்.
சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

திரையில் இடம்பெற்ற பாடல்களை டி.எம்.எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் குரல் வளத்தால் கேட்கத் திகட்டாத தேன்கிண்ணமாக்கினார்கள். தமிழக வானொலியிலும், இலங்கை வானொலியிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை. டீக்கடையில் பாட்டைக் கேட்டால் சைக்கிளை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். காரணம் டேப்-ரெக்கார்டர், சிடிக்கள், டி.விக்கள் இல்லாத காலம் அது.

இவை மட்டும்தான் காரணமா என்ன? ஒரு திரைப்படம் உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் கைதேர்ந்த கலைஞர்களிடம் கிடைக்கும்போது அதைச் சிற்பமாகச் செதுக்கிவிடுவார்கள்.

படத்தில் இடம்பெற்ற வசனங்கள்

''லதா விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுனு சொன்ன... விஷத்தைக் குடிக்கக்கூடாதுனு சொல்லலையே...''
''நான் பொறந்தது யாருக்காகன்னு தெரியாது...! ஆனா, நீ பொறந்தது எனக்காகத்தான்...''
வசந்தமாளிகை வசந்தமாளிகை
“இது இறந்துபோன காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல, உயிரோடு இருக்கும் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல. சந்நிதி. ஆண்டவன் மட்டும் எனக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால், அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழப்போகும் வீட்டுக்கு வண்ணத் தோரணங்களாகத் தொங்க விட்டிருப்பேன்.''

இவையெல்லாம் வசனத் துளிகளின் சாம்பிள். காதல் கதைகளில் இப்படி ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை.

''என் இதய மாளிகையில் என்றும் குடியிருப்பவர் 'வசந்தமாளிகை' சிவாஜி. என் அனுபவத்தில் நான் 'வசந்த மாளிகை' திரைப்படத்தை 40 முறைக்குமேல் பார்த்திருப்பேன். முதல் முறை மட்டுமே சிவாஜிக்காகப் பார்த்தேன். மீதம் 39 முறைகளிலும் நான் சிவாஜியாகிவிட்டேன். உணர்வு ரீதியாக நானும் சிவாஜியும் ஒன்றாகவே பயணித்தோம்.''
இது சிவாஜி ரசிகர் ஒருவரின் கருத்து.

இது அவரின் கருத்து மட்டுமல்ல. 40 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பிறகும் இன்னமும் இதைக் கொண்டாடும் அத்தனை ரசிகர்களின் கருத்தும் இதுதான்.

''புதிய படங்களே ஒரு வாரங்களுக்குமேல் ஓடுவதில்லை. 47 வருடங்களுக்கு முன்பு வெளியான 'வசந்தமாளிகை' படம் இன்றும் மூன்று வாரங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது!"

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் இப்படிச் சொல்கிறார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/vasantha-maligai-movie-experience-after-47-years

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1972 இல் வெளியான வசந்த மாளிகை இலங்கையில் கேபிடல், யாழ் வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல்   ஓடி சாதனை படைத்தது. இரு தடைவைகள் 70 களில் பார்த்தேன். இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெரும் பங்கு இலங்கை வானொலிக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்....  இந்தக் காணொளியில்... இரண்டாவது நிமிடம், நாற்பதாவது வினாடியில்,
பேட்டி கொடுப்பவரின் கழுத்தில்... பூநூல்  தெரிகின்றது. அவர் ஐயரா?
அவர் நல்ல வெறியில் நிற்பது போலவும் தெரிகின்றது.

நமது ஊரில்.. ஐயர்மார், சினிமா தியேட்டர்களுக்கு,  போக மாட்டார்கள்.
அப்படி போனாலும், பக்தி படங்களுக்கு மட்டும்... ஒரு சிலர் போவார்கள்.
தமிழ் நாட்டில்... இப்படி நடப்பது, சாதாரணமானதா? 

என்னுடன் 70களில் படித்த கல்லூரி அறைத்தோழன் |(ஐயர்மார்தான்) எப்பொழுதாவது மாமிசமும் சாப்பிடுவான். இப்பொழுது பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக உள்ளான். இப்பொழுதும் சாப்பிடுகிறானா..? என தெரியவில்லை.

காலத்திற்கேற்ப நகரங்களில் அவர்கள் மாறுகிறார்கள், கிராமங்களில் இன்னமும் பழமை அடிப்படைவாதிகளாக இருப்பதைக் காணலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின் நிரந்தர விசா 18 APR, 2024 | 05:05 PM   பொன்டியின் வணிகவளாகத்தில் கத்திக்குத்திற்கு இலக்காகிய பாக்கிஸ்தானை சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நிரந்தர விசாவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் பிரஜைக்கு அவுஸ்திரேலியா அவ்வாறான நிரந்தரவிசாவை வழங்கியுள்ள நிலையிலேயே அன்டனி அல்பெனிஸ்இதனை தெரிவித்துள்ளார். பொன்டி வணிகவளாக தாக்குதலின் போது துணிச்சலை வெளியிட்டவர்கள்அனைவரும் இருளின் மத்தியில் வெளிச்சமாக திகழ்ந்தவர்கள் என தெரிவித்துள்ள அன்டனி அல்பெனிஸ் அவர்கள் அவுஸ்திரேலியாவின் பாராட்டுகளை பெறவேண்டியவர்கள் என தெரிவித்துள்ளார். முகமட் டாஹாவிற்கு நிரந்தர வதிவிடத்தை அல்லது விசா நீடிப்பை வழங்குவது குறித்து  அரசாங்கம் சிந்திக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181371
    • 🤣 ஒரு வேளை @பையன்26 கால இயந்திரத்தில் அடிக்கடி முன்னுக்கும் பின்னுக்கும் போய் வருவதால் கன்பியூஸ் ஆகி விட்டாரோ?
    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.