Jump to content

சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை மறுவெளியீட்டில் சாதனை (முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாணிஶ்ரீ நடிப்பில் 1972 ஆம் ஆண்டு திரையிடப்பட்டு 200 நாட்களுக்குமேல் ஓடி வெற்றி கண்ட வசந்த மாளிகை மீண்டும் மறுவெளியீடாக யூன் 21 முதல் தமிழகம் எங்கும் திரையிடப்பட்டு புதிய படங்களுக்கு இணையாக சாதனை ஏற்படுத்தி வருகின்றது . இது பற்றி இணையத்தளங்கள் முகநூல் போன்றவற்றில்  பதிவுகள் அதிகம் இடம்பெற்றுள்ளன .அப்பதிவுகள் பார்வைக்கு இங்கே.

 

2lj52l1.jpg 

2nbvi1l.jpg 

fc5ymq.jpg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரசிகர்களைப் போலவே நானும் உணர்கிறேன்.. கிராமத்திலிருந்து மதுரை மற்றும் விருதுநகர் திரையரங்குகளுக்கு சென்று பலமுறை பார்த்த படம் இந்த வசந்த மாளிகை..!

அக்கால இளமைத் துடிப்பை உணர்கிறேன்..

Nostalgic..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதைய வெள்ளி விழா கண்ட படத்திற்கு இப்பொழுது கட்-அவுட், மாலை, பால் எல்லாமே.. ஆனால் ரசிகர்கள் மட்டும் அப்போதைய இளைஞர்கள்

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் திருப்பத்தில் அமைந்துள்ள 'ஆல்பெர்ட்' திரையரங்கில் இந்தக் காட்சி..! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொழிற்நுட்ப ரீதியாக இந்த படத்தின் நவீன மறு உருவக்கம்(Digital Re-mastering) இந்த ட்ரெயிலரில் பார்க்கும்போது நன்றாகவே உள்ளது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ராசவன்னியன் said:

தொழிற்நுட்ப ரீதியாக இந்த படத்தின் நவீன மறு உருவக்கம்(Digital Re-mastering) இந்த ட்ரெயிலரில் பார்க்கும்போது நன்றாகவே உள்ளது..

 

 

4K இல் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நானும் பார்ப்பேன்!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமாளிகை  படம் ஓடும் திரை அரங்குகள்  "ஹவுஸ் ஃபுல்" லாக  ஓடுகின்றனவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

வசந்தமாளிகை  படம் ஓடும் திரை அரங்குகள்  "ஹவுஸ் ஃபுல்" லாக  ஓடுகின்றனவா?

திரையரங்குகள் பாதி நிறைந்தாலே இப்படத்திற்கு வெற்றிதான்..

அக்கால இளைஞர்கள் இன்னமும் வாழ்ந்திருக்கணும், படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க மனமும், நேரமும், உடல்நிலையும் நலமாக இருக்க வேணுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ராசவன்னியன் said:

திரையரங்குகள் பாதி நிறைந்தாலே இப்படத்திற்கு வெற்றிதான்..

அக்கால இளைஞர்கள் இன்னமும் வாழ்ந்திருக்கணும், படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க மனமும், நேரமும், உடல்நிலையும் நலமாக இருக்க வேணுமே?

Bildergebnis für à®à®¿à®´à®µà®©à¯

அக்கால இளைஞர்களுக்கு.... வசந்த மாளிகை  படம்  மீண்டும்  திரையில் ஓடுது என்ற செய்தி தெரிந்திருக்குமோ தெரியவில்லை.
அத்துடன் படத்தை பார்ப்பதற்கு... பார்வையும், காதும் கேட்க வேணுமே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2019 at 10:04 PM, ராசவன்னியன் said:

இந்த ரசிகர்களைப் போலவே நானும் உணர்கிறேன்.. கிராமத்திலிருந்து மதுரை மற்றும் விருதுநகர் திரையரங்குகளுக்கு சென்று பலமுறை பார்த்த படம் இந்த வசந்த மாளிகை..!

அக்கால இளமைத் துடிப்பை உணர்கிறேன்..

Nostalgic..

 

 

ராஜவன்னியன்....  இந்தக் காணொளியில்... இரண்டாவது நிமிடம், நாற்பதாவது வினாடியில்,
பேட்டி கொடுப்பவரின் கழுத்தில்... பூநூல்  தெரிகின்றது. அவர் ஐயரா?
அவர் நல்ல வெறியில் நிற்பது போலவும் தெரிகின்றது.

நமது ஊரில்.. ஐயர்மார், சினிமா தியேட்டர்களுக்கு,  போக மாட்டார்கள்.
அப்படி போனாலும், பக்தி படங்களுக்கு மட்டும்... ஒரு சிலர் போவார்கள்.
தமிழ் நாட்டில்... இப்படி நடப்பது, சாதாரணமானதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

```வசந்தமாளிகை'யை ஏன் இன்னமும் கொண்டாடுகிறார்கள்?!'' - தியேட்டர் விசிட்

 

47 ஆண்டுகள் கழித்தும், சிவாஜி கணேசன் நடிப்பில் புதுப்பொலிவோடு வெளியாகியிருக்கும் 'வசந்தமாளிகை' படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரீ-ரிலீஸில் இப்படத்தைப் பார்த்த அனுபவம் இது.

வசந்தமாளிகை

வசந்தமாளிகை

"லைலாவைப் பார்க்கவேண்டுமானால் மஜ்னுவின் கண்களால்தான் பார்க்கவேண்டும்'' என்பார்கள். அப்படித்தான், 'வசந்தமாளிகை'யைப் பார்க்கவேண்டுமானால், சிவாஜி ரசிகனாக இருந்து பார்த்தால்தான் காலத்தால் அழிக்க முடியாத அந்தக் காவியத்தை முழுமையாக ரசிக்க முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் படத்தைப் பார்க்க வந்த பலர், தியேட்டரில் படம் பார்ப்பதை நிறுத்திப் பல ஆண்டுகளாகிப் போனவர்கள். காலத்தின் வேகம், குடும்பச் சூழல், பிள்ளைகளின் கல்வி, திருமணம், பணத் தேவை எனப் பலதிசைகளில் பயணித்து வறட்சியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களுக்குச் சோலைவனமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. டிஜிட்டலில் வந்து மெருகு குலையாத புத்தம் புதிய காப்பியாக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

படம் வெளியாகி பத்து நாள்கள் ஆன நிலையில், ஒரு சாதாரண நாளில்தான் ஆல்பர்ட் தியேட்டருக்குப் படம் பார்க்கச் சென்றோம். ஆனாலும், ஆறரை மணிக் காட்சிக்கு ஐந்தரை மணியிலிருந்தே ரசிகர்கள் காத்துக் கிடந்தார்கள். ஏனென்றால், இவர்களின் மனோபாவம் எப்படியென்றால் எழுத்துப் பிக்சரிலிருந்து வணக்கம் போட்டுத் திரை மூடும் வரை இருந்து பார்த்துவிட்டுத்தான் இருக்கையைவிட்டு எழுந்திருப்பார்கள்.

சரி அப்படி என்னதான் இருக்கிறது 'வசந்தமாளிகை'யில்?!

வசந்தமாளிகை வசந்தமாளிகை

சிங்கிள் டீ குடிக்கக் காசில்லாவிட்டாலும், ஒவ்வொரு ஆண்மகனுமே தன்னை அழகாபுரி ஜமீனாகத்தான் நினைப்பான். ஆனால், வாணிஶ்ரீயைப் போன்ற ஒரு அழகு தேவதை தன் வாழ்க்கையை வந்து மாற்றுவாள் என்று எதிர்பார்ப்பான். சிலருக்கு அந்தத் தேவதை கிடைக்கலாம்; கிடைக்காமல் போகலாம். ஆனால், அந்த தேவதையோடுதான் மனத்தளவில் வாழ்வான், இதுதான் ஆணின் மனநிலை. இதுவே இந்தப் படம் ஆண்களால் இன்றும் கொண்டாடப்படுவதற்குக் காரணம்.

 

காட்சிப்பொருளாகத் தன்னை நினைப்பதைவிட, சுயமரியாதையும் நேர்மையுமே ஒருபெண்ணின் அழகு என்பதை நிரூபித்து, வறுமையிலிருந்தாலும் வைராக்கியத்துடன் வாழும் பெண்ணாக வாணிஶ்ரீயைக் காண்பித்ததால், பெண்களும் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள்.

சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

படம் வெளிவந்த 1972-ஆம் ஆண்டு எல்லாப் பத்திரிகைகளிலும் பின் அட்டை மற்றும் நடுப்பக்கத்தில் ஆரஞ்சு வண்ணப் பட்டுப் புடவையில் வாணிஶ்ரீயும், வெளிர்நீல கோட்டில் சிவாஜியும் அரவணைத்துக்கொள்ளும் படம்தான் இடம்பெற்றது. இன்றைக்கு அறுபது வயதிலிருக்கும் பலரின் ஞாபக மலராக இந்தப் புகைப்படம்தான் சினிமா ஸ்டில்லாக இருந்து வருகிறது.

தமிழக நகரங்களிலிருந்த பழைய ஜவுளிக் கடைகளெல்லாம் ரங்கசாமி அன் சன்ஸ், குமாரசாமி அன் கோ என்ற பெயர்களிலிருந்து விடுபட்டு, 'கீதா சில்க்ஸ்', 'ராதா சில்க்ஸ்' என மாடர்ன் பெயராக மாறியது இந்தப் படத்தின் வருகைக்குப் பிறகுதான். அதிலும் குறிப்பாக, கண்ணாடி ஷோ கேஸ்களில் வாணிஶ்ரீயின் எழில்மிக்க பெரிய கொண்டை ஊசி சிகை அலங்காரத்துடன் கூடிய பொம்மைகள் பட்டுப் புடவையுடன் வாடிக்கையாளரை வரவேற்கத் தொடங்கியது, 'வசந்தமாளிகை'யின் வருகைக்குப் பிறகுதான்.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

இதன் காரணமாகத்தான் மதுரை அண்ணாமலை தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகைகளைக் குலுக்கல் முறையில் தேர்வுசெய்து பட்டுப் புடவையை இப்போது பரிசளிக்கிறார்கள்.

 

இதற்கொரு விசேஷக் காரணம் உண்டு. 'பிரேம் நகர்' என்ற இந்தக் கதையை எழுதியவர், கௌசல்யா தேவி எனும் தெலுங்குப் பெண் எழுத்தாளர். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் உன்னதமான கதை.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

ராமா நாயுடுவின் தயாரிப்பு என்பதால், கே.பாலாஜி, நாகேஷ், வி.கே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், ஶ்ரீகாந்த், டி.கே.பகவதி, எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன், புஷ்பலதா, குமாரி பத்மினி எனப் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் சிறிய சிறிய பாத்திரங்கள். ஆனால், கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பும் பேட்ஸ்மேன்களைப்போல் அநாயசாமக் கையாண்டு அத்தனைபேரும் அசத்தியிருப்பார்கள்.

'வசந்தமாளிகை' எனும் கதையைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கிய வேறு இருவர் கவியரசர் கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும்தான்.
சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

திரையில் இடம்பெற்ற பாடல்களை டி.எம்.எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் குரல் வளத்தால் கேட்கத் திகட்டாத தேன்கிண்ணமாக்கினார்கள். தமிழக வானொலியிலும், இலங்கை வானொலியிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை. டீக்கடையில் பாட்டைக் கேட்டால் சைக்கிளை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். காரணம் டேப்-ரெக்கார்டர், சிடிக்கள், டி.விக்கள் இல்லாத காலம் அது.

 

இதற்கொரு விசேஷக் காரணம் உண்டு. 'பிரேம் நகர்' என்ற இந்தக் கதையை எழுதியவர், கௌசல்யா தேவி எனும் தெலுங்குப் பெண் எழுத்தாளர். பாத்திரங்களின் சிருஷ்டியிலேயே சம்பவங்களைக் கருக்கொள்ளச் செய்யும் உன்னதமான கதை.

வசந்தமாளிகை வசந்தமாளிகை

ராமா நாயுடுவின் தயாரிப்பு என்பதால், கே.பாலாஜி, நாகேஷ், வி.கே ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், ஶ்ரீகாந்த், டி.கே.பகவதி, எஸ்.வி.ரங்காராவ், வி.எஸ்.ராகவன், புஷ்பலதா, குமாரி பத்மினி எனப் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் சிறிய சிறிய பாத்திரங்கள். ஆனால், கிடைத்த பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பும் பேட்ஸ்மேன்களைப்போல் அநாயசாமக் கையாண்டு அத்தனைபேரும் அசத்தியிருப்பார்கள்.

'வசந்தமாளிகை' எனும் கதையைக் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக்கிய வேறு இருவர் கவியரசர் கண்ணதாசனும், கே.வி.மகாதேவனும்தான்.
சிவாஜி கணேசன் சிவாஜி கணேசன்

திரையில் இடம்பெற்ற பாடல்களை டி.எம்.எஸ், சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் தங்களின் குரல் வளத்தால் கேட்கத் திகட்டாத தேன்கிண்ணமாக்கினார்கள். தமிழக வானொலியிலும், இலங்கை வானொலியிலும் இந்தப் பாடல்கள் ஒலிக்காத நாள்களே இல்லை. டீக்கடையில் பாட்டைக் கேட்டால் சைக்கிளை நிறுத்திப் பாடலைக் கேட்டுவிட்டுத்தான் போவார்கள். காரணம் டேப்-ரெக்கார்டர், சிடிக்கள், டி.விக்கள் இல்லாத காலம் அது.

இவை மட்டும்தான் காரணமா என்ன? ஒரு திரைப்படம் உள்ளடக்கத்திலும், உருவாக்கத்திலும் கைதேர்ந்த கலைஞர்களிடம் கிடைக்கும்போது அதைச் சிற்பமாகச் செதுக்கிவிடுவார்கள்.

படத்தில் இடம்பெற்ற வசனங்கள்

''லதா விஸ்கியைத்தானே குடிக்கக்கூடாதுனு சொன்ன... விஷத்தைக் குடிக்கக்கூடாதுனு சொல்லலையே...''
''நான் பொறந்தது யாருக்காகன்னு தெரியாது...! ஆனா, நீ பொறந்தது எனக்காகத்தான்...''
வசந்தமாளிகை வசந்தமாளிகை
“இது இறந்துபோன காதலிக்காகக் கட்டப்பட்ட தாஜ்மஹால் அல்ல, உயிரோடு இருக்கும் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்த மாளிகை. இது சமாதி அல்ல. சந்நிதி. ஆண்டவன் மட்டும் எனக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்திருந்தால், அந்த வானத்து நட்சத்திரங்களையெல்லாம் எடுத்து வந்து நீ வாழப்போகும் வீட்டுக்கு வண்ணத் தோரணங்களாகத் தொங்க விட்டிருப்பேன்.''

இவையெல்லாம் வசனத் துளிகளின் சாம்பிள். காதல் கதைகளில் இப்படி ஒரு படம் வந்ததுமில்லை, இனி வரப்போவதுமில்லை.

''என் இதய மாளிகையில் என்றும் குடியிருப்பவர் 'வசந்தமாளிகை' சிவாஜி. என் அனுபவத்தில் நான் 'வசந்த மாளிகை' திரைப்படத்தை 40 முறைக்குமேல் பார்த்திருப்பேன். முதல் முறை மட்டுமே சிவாஜிக்காகப் பார்த்தேன். மீதம் 39 முறைகளிலும் நான் சிவாஜியாகிவிட்டேன். உணர்வு ரீதியாக நானும் சிவாஜியும் ஒன்றாகவே பயணித்தோம்.''
இது சிவாஜி ரசிகர் ஒருவரின் கருத்து.

இது அவரின் கருத்து மட்டுமல்ல. 40 ஆண்டுகள் கழித்து வெளிவந்த பிறகும் இன்னமும் இதைக் கொண்டாடும் அத்தனை ரசிகர்களின் கருத்தும் இதுதான்.

''புதிய படங்களே ஒரு வாரங்களுக்குமேல் ஓடுவதில்லை. 47 வருடங்களுக்கு முன்பு வெளியான 'வசந்தமாளிகை' படம் இன்றும் மூன்று வாரங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது!"

சென்னை ஆல்பர்ட் தியேட்டர் மேனேஜர் மாரியப்பன் இப்படிச் சொல்கிறார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/vasantha-maligai-movie-experience-after-47-years

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1972 இல் வெளியான வசந்த மாளிகை இலங்கையில் கேபிடல், யாழ் வெலிங்டன் ஆகிய திரையரங்குகளில் 200 நாட்களுக்கு மேல்   ஓடி சாதனை படைத்தது. இரு தடைவைகள் 70 களில் பார்த்தேன். இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பெரும் பங்கு இலங்கை வானொலிக்கு உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன்....  இந்தக் காணொளியில்... இரண்டாவது நிமிடம், நாற்பதாவது வினாடியில்,
பேட்டி கொடுப்பவரின் கழுத்தில்... பூநூல்  தெரிகின்றது. அவர் ஐயரா?
அவர் நல்ல வெறியில் நிற்பது போலவும் தெரிகின்றது.

நமது ஊரில்.. ஐயர்மார், சினிமா தியேட்டர்களுக்கு,  போக மாட்டார்கள்.
அப்படி போனாலும், பக்தி படங்களுக்கு மட்டும்... ஒரு சிலர் போவார்கள்.
தமிழ் நாட்டில்... இப்படி நடப்பது, சாதாரணமானதா? 

என்னுடன் 70களில் படித்த கல்லூரி அறைத்தோழன் |(ஐயர்மார்தான்) எப்பொழுதாவது மாமிசமும் சாப்பிடுவான். இப்பொழுது பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் இயக்குநராக உள்ளான். இப்பொழுதும் சாப்பிடுகிறானா..? என தெரியவில்லை.

காலத்திற்கேற்ப நகரங்களில் அவர்கள் மாறுகிறார்கள், கிராமங்களில் இன்னமும் பழமை அடிப்படைவாதிகளாக இருப்பதைக் காணலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.