Jump to content

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு

Jun 29, 20190

 
 

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக மீண்டும் மாவை தெரிவு

இலங்கை தமிழரசு கட்சியின் பொதுக்குழு தெரிவின் போதே, தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பொதுக்குழு தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.அதையடுத்து, பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பான விடயத்தை தலைவர் சபையில் முன்வைத்தார். அப்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரது பெயர்கள் பொதுச் செயலாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டன.

எனினும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனின் பெயரை வழிமொழிய ஆள் இல்லாத காரணத்தால் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோரது பெயர்கள் பதவிக்காக முன்மொழிந்து, வழிமொழிந்து சபையில் அறிவிக்கப்பட்டன.itak-jaffna-290619-seithy (1)

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் குலநாயகம், தாம் சுயமாக விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து சிரேஸ்ட சட்டத்தரணியும், நீண்ட அரசியல் அனுபவமும் உள்ள கிழக்கு மாகாணத்தின் முன்னாள் அமைச்சரான துரைராசசிங்கம் இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளராக ஏகமனதாக சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

இதன் பின்னர் ஏனைய பதவிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் மரபாக உள்ள தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளில் வடக்கு, கிழக்கை சேர்ந்த இருவர் அமர்த்தப்படுவது கடந்த காலத்திலிருந்து வழமையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறான நிலையில் இம்முறையும் அந்த வழமை பேணப்பட்டுள்ளது. தமிழர்களின் கடந்த கால போராட்ட வரலாற்றில் நீண்ட அரசியல் அனுபவம் உடைய நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவு செய்யப்பட்டதுடன், ஏனைய தெரிவுகளும் மிகவும் அமைதியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.itak-jaffna-290619-seithy (3)

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு, நாளை காலை 9 மணிக்கு தந்தை செல்வா சதுக்கத்தில் ஆரம்பமாகி, தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.இலங்கை தமிழரசு கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மாதர் முன்னணி மாநாடு, வாலிப முன்னணி மாநாடு ஆகியன இன்று நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றன.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/இலங்கை-தமிழரசு-கட்சியின-2/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Untitled.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people standing

சம்பந்தனுக்கு,  சக்கர நாற்காலி ஒன்று  அவசரம் தேவைப் படுகின்றது.

Link to comment
Share on other sites

கட்சி அதிகாரம் என்பது பரவலாக்கப்பட்டு புதியவர்களை சேர்த்து புதுமையான பாதையில் பயணிக்க மறுத்து மீண்டும் அரைத்த 'மாவை'களையே அரைப்பதால் இருப்பை கொஞ்ச காலம் தக்க வைக்க முடியும். 

Link to comment
Share on other sites

உந்த சம்பந்தனுக்கு என்ன பதவி?
வழமை போல இந்தியாக்கு வால் பிடிக்கிற பதவியை வெளிப்படையா அறிவிச்சிருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.