சிங்கள அரசை உருவாக்க உதவுமாறு பிக்குகளுக்கு அறைகூவல்

 

gnanasara-release-1-300x199.jpgசிங்கள அரசை உருவாக்குவதற்கு பௌத்த பிக்குகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர் அழைப்பு விடுத்துள்ளார்.

கண்டியில் நேற்று நடத்திய பேரணியில் உரையாற்றிய அவர்,

“நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் வெளியேற்றப்பட வேண்டும்.

பௌத்த பிக்குகள் அனைவரும் ஒன்றிணைந்து, சிங்கள அரசை உருவாக்குவதற்கு உதவுவதற்கான நேரம் வந்திருக்கிறது.

சிறிலங்கா ஒரு சிங்கள நாடு என்பதை அனைத்து சமூகங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

உலமாக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மாற்றப்பட வேண்டும்.

உலமாக்களுடன், அரச தரப்பும் எதிர்க்கட்சிகளும் பேசுவதை நிறுத்த வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.