Jump to content

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.

தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.

அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/tna-warns-to-restore-of-arms-struggle-for-tamil-eelam-355642.html

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

மறுபடியும் இரத்தப் பொட்டா..? :rolleyes:

முதல்ல அங்கே 'போராட மக்களுக்கு விருப்பமிருக்கா' என இவருக்கு தெரியுமா..?

பாவமப்பா மக்கள், சிந்தித்து வாழ விடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

மறுபடியும் இரத்தப் பொட்டா..? :rolleyes:

முதல்ல அங்கே 'போராட மக்களுக்கு விருப்பமிருக்கா' என இவருக்கு தெரியுமா..?

பாவமப்பா மக்கள், சிந்தித்து வாழ விடுங்களேன்.

Image may contain: 3 people, people standing

தன்னுடைய... குடையை கூட,  தூக்க முடியாதவர்தான்... ஆயுதம் தூக்கப் போகிறாராம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயையோ ஓடுங்கோ! எல்லோரும் தப்பிச்சு ஓடுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் உயிர்தியாகம் செய்து இனத்துக்காக மண்ணுக்காகப் போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்துவிட்டு.. இன்று இவர்கள் வாயால் வடை சுடுகிறார்கள்.

ஒரு தூரநோக்கற்ற அரசியல் வியாதிகள் இவர்கள். இவர்களின் குறுகிய சிந்தனையை சிலர் சாணக்கியம் என்று சொல்லி... சிங்களவன் நினைத்ததை செய்ய அவனுக்கு வசதி செய்து கொடுத்தது தான் மிச்சம்.

இவர்கள் ஆயுதம் எல்லாம் தூக்க வேண்டாம்... விடுதலைப்புலிகளை அழித்ததும் தீர்வு என்று சொன்ன சர்வதேச நாடுகளிடம் போய் அதை கேட்டு வாக்கிக் கொள்ளலாமே. குறிப்பாக ஹிந்தியா.. மற்றும்.. இணைத்தலைமை நாடுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் எனக்குச் சந்தோசமாக இருக்கு வெளிநாட்டுக்கு எனது உறவுகளில சிலரை இழுத்துவிடவேணும் என்ன செய்யலாம் என யோசிச்சுக்கொண்டிருந்தனான். எப்ப பார்த்தாலும் ஊரில இருந்து வைப்பரில அடிச்சபடி இருக்கினம். இங்க கூப்பிட்டு விட்டா ஏஜன்சிக்காரனுக்குக் கட்டிய காசை கூப்பிட்டவயளிட்ட அறவிடமுதல் புடிச்செல்லெ அனுப்புறாங்கள்.

சம்பந்தன் ஐயா அடிபாட்டைத் தொடங்கினால் துணிஞ்சு முதலிடலாம்.  அவையள் வருகிற நேரமாப்பார்த்து ஒரு சீட்டைத் தொடங்கி கழிவு கூடினாலும் பறுவாயில்லை எடுத்துப்போட்டு வாறவயளிட்டைப் பொறுப்பித்துவிடலாம்.

இஞ்சேருமப்பா உமக்குத் தெரிஞ்சவயளிட்டை விசாரியும் நம்பிக்கையானவர்கள் யாராவது கிட்டடியில சீட்டுத்தொடங்கினமோ எண்டு.

இந்தியாவை முழுமையாக நம்புறம் எனச்சொல்லும்போதே இன்னுமொரு முள்ளிவாய்க்காலுக்கு இந்தியா திட்டம் போடுது என யோசிச்சனான்.

எழுந்து நடக்க முடியாதாம் ஆனால் ஏழெட்டுப் பொண்டாட்டி கேக்கிறார் என்பதுபோல் சம்பந்தரை தூக்கிச் சுமந்துகொண்டு திரியேக்கையும் பார்ரா அவற்றை வீரத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

பெரும் உயிர்தியாகம் செய்து இனத்துக்காக மண்ணுக்காகப் போராடியவர்களையும் பயங்கரவாதிகள் என்று சொல்லி அழித்துவிட்டு.. இன்று இவர்கள் வாயால் வடை சுடுகிறார்கள்.

ஒரு தூரநோக்கற்ற அரசியல் வியாதிகள் இவர்கள். இவர்களின் குறுகிய சிந்தனையை சிலர் சாணக்கியம் என்று சொல்லி... சிங்களவன் நினைத்ததை செய்ய அவனுக்கு வசதி செய்து கொடுத்தது தான் மிச்சம்.

இவர்கள் ஆயுதம் எல்லாம் தூக்க வேண்டாம்... விடுதலைப்புலிகளை அழித்ததும் தீர்வு என்று சொன்ன சர்வதேச நாடுகளிடம் போய் அதை கேட்டு வாக்கிக் கொள்ளலாமே. குறிப்பாக ஹிந்தியா.. மற்றும்.. இணைத்தலைமை நாடுகள். 

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பழசுக்கு சிங்களவன் கொடுக்க வெளிக்கிட்ட  கொழும்பு வீடு கிடைப்பதில் சிக்கல் போல் உள்ளது அதுதான் இப்படி பாஞ்சு விட்டத்துக்கு  எகிறுக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியன்

த வி பு வின் அழிவில் சம்பந்தனின் பங்கைப்பற்றி அறியவேண்டுமெனில் ஏக்க ராஜய எனும் சொல்லை வைத்து ஒரு அகராதியையே உருவாக்கியிருக்கும் சுமந்திரனிடம் போய் கேழுங்கள்.

சம்பந்தன் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் த வி புக்கள் அழிந்துவிட்டினம் அடுத்து தமிழர்கள் அனைவரையும் அழிக்காமல் சுடலைக்குப் போகமாட்டன் என்று சொல்லுறார்.

காரணம் இந்தியா அவரைச் சும்மா இருக்க விடாது மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தும். 

தமிழர்களுக்கான தீர்வையோ உரிமையையோ அன்றேல் தனிநாட்டையோ அடையவேண்டுமெனில் 

நீங்கள் போயிட்டு வாங்கோ இதுவரை செய்த துரோகத்துக்கு எல்லாம் மிக்க நன்றி எதிர்காலத்தில் எம்மீதான துரோகத்துக்கு உங்களுக்கு நாம் இடம்கொடோம் போய் வராதையுங்கோ என இந்தியாவுக்கு எல்லோரும் சொன்னாலே போதும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்.

ஒன்றில் சிங்களவன் முற்றிலுமாக எம்மை அழிப்பான் இல்லையேன் அவன் ஒரு இணக்கத்துக்கு வருவான். தமிழர் விரோததேசம் இந்தியா இருக்கும்வரை அதனை நம்பும்வரை பல முள்ளிவாய்க்கால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

TNA warns to restore of Arms Struggle for Tamil Eelam

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழக அரசு கட்சியின் 16-வது மாநாட்டில் இரா. சம்பந்தன் பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்காக தந்தை செல்வா தமிழரசு கட்சியை தொடங்கினார். 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் எமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இருக்கிறது.

இலங்கை விடுதலை பெறுவதற்கு முன்னரே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க முடியும். அதிகபட்சமாக கூட்டாட்சி அடிப்படையிலாவது பிரச்சனைகளை தீர்க்க கோரிக்கைகளை முன்வைத்தோம். 13-வது அதிகாரப் பகிர்வின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த குறைந்தபட்ச சுயாட்சி கிடைத்தது.

தற்போது அதுவும் இல்லை என்றாகிவிட்டது. கடந்த காலங்களில் இது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் எற்படவில்லை. வடமாகாணத்தில் பல்வேறு இனத்தவரின் குடியேற்றம் நடைப்றுகிறது. இதற்கு நாம் விரைவில் முடிவு காண வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல ஆயுதம் ஏந்தி போராடினால்தான் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என நினைக்கிறோம். ஆயுத பலம் இல்லாத தமிழர்களது பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படாமல் கைவிட நீங்கள் நினைத்தால் அது தவறான முடிவாகிவிடும்.

அப்படி நீங்கள் நினைத்தால் நாங்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பற்றி சிந்திக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதை பரிசீலிக்க வேண்டிய சூழல் வந்துவிடும். இவ்வாறு இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

Read more at: https://tamil.oneindia.com/news/srilanka/tna-warns-to-restore-of-arms-struggle-for-tamil-eelam-355642.html

  எனக்கு வாயில  வருகுது

யாழுக்கும்  அதில்  உடன்பாடிருந்தாலும்

இங்கு அதை யாழ் களம் அதை  அனுமதிக்காது😡😡

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

  எனக்கு வாயில  வருகுது

யாழுக்கும்  அதில்  உடன்பாடிருந்தாலும்

இங்கு அதை யாழ் களம் அதை  அனுமதிக்காது😡😡

இங்கும் அதே தான்

Link to comment
Share on other sites

10 hours ago, தமிழ் சிறி said:

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை

இவர் எந்த ஆயுதத்தை சொல்றார் என்டு முதல்ல கண்டுபிடிக்கோனும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரும் தடுக்கபடாது .. 👍

65780649_446099542835773_513889948600893

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….


 

உங்களுக்கு இண்டைக்குக் காலம் சரியில்லை! 😎

6 hours ago, Elugnajiru said:

சாமானியன்

த வி பு வின் அழிவில் சம்பந்தனின் பங்கைப்பற்றி அறியவேண்டுமெனில் ஏக்க ராஜய எனும் சொல்லை வைத்து ஒரு அகராதியையே உருவாக்கியிருக்கும் சுமந்திரனிடம் போய் கேழுங்கள்.

சம்பந்தன் இப்போ என்ன சொல்ல வருகிறார் என்றால் த வி புக்கள் அழிந்துவிட்டினம் அடுத்து தமிழர்கள் அனைவரையும் அழிக்காமல் சுடலைக்குப் போகமாட்டன் என்று சொல்லுறார்.

காரணம் இந்தியா அவரைச் சும்மா இருக்க விடாது மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கக் கருவியாகப் பயன்படுத்தும். 

தமிழர்களுக்கான தீர்வையோ உரிமையையோ அன்றேல் தனிநாட்டையோ அடையவேண்டுமெனில் 

நீங்கள் போயிட்டு வாங்கோ இதுவரை செய்த துரோகத்துக்கு எல்லாம் மிக்க நன்றி எதிர்காலத்தில் எம்மீதான துரோகத்துக்கு உங்களுக்கு நாம் இடம்கொடோம் போய் வராதையுங்கோ என இந்தியாவுக்கு எல்லோரும் சொன்னாலே போதும் அனைத்தும் நல்லவிதமாக நடக்கும்.

ஒன்றில் சிங்களவன் முற்றிலுமாக எம்மை அழிப்பான் இல்லையேன் அவன் ஒரு இணக்கத்துக்கு வருவான். தமிழர் விரோததேசம் இந்தியா இருக்கும்வரை அதனை நம்பும்வரை பல முள்ளிவாய்க்கால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

சரி, எங்களுக்குப் பதிலெல்லாம் தெரியாது! அதுக்கு சும் சம் தான் வேண்டும்! கேள்வி மட்டும் தான் நாங்கள் கேட்பம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….
 

இவர்களின் 3 நடவடிக்கைகள் போதுமானது. இவர்களை இனங்காண.. 

1. இறுதிப் போர் காலத்தில் போனை சுவிச் ஆவ் செய்துவிட்டு ஹிந்தியாவில் கிடந்தவர் தான் இவர்.

2. நேற்று வரை விடுதலைப்புலிகளின் தோல்வியை.. பயங்கரவாத அழிப்பாக உச்சரித்தவர் தான் இவர்.

3. தங்களை தாங்களே.. இரத்தக்கறை படியாத சுத்தவான்களாக சிங்களவர்கள் முன் இனங்காட்டிக் கொண்டு.. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் உயிர்ப்போடு இருந்த காலங்களில் அதற்கு எதிரான திட்டங்களில்.. எல்லாம் ஹிந்திய மற்றும் சொறீலங்கா ஆட்சியாளர்களுக்கு துணை போனவர்கள் தான் இவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சாமானியன் said:

70 களில் இருந்து இலங்கை தமிழர் பிரச்சினையின் நடுவே இருந்து வளர்ந்தவன் என்ற முறையில் , எனக்கு புரியாமல் இருக்கும்  "தவிபு களின் அழிவில் சம்பந்தனின் பங்கு " என்னவென்று அறியத் தருவீர்களா ….

உங்களைப்போலத்தான்  நானும்  நினைக்கின்றேன்

அவர்  நேரடியாக எதையும் செய்ததாக  தெரியவில்லை

அதனால்  தானோ  என்னமோ 

அவரை  கருணாநிதியைப்போல

 சாணக்கிய  அரசியல்வாதி  என்கிறார்களோ??????????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ ஒருவர் மு.புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.அப்படி ஆயுதம் ஏந்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சம்மந்தரை தான் முதலில் சுடுவாராம் 😉
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தனோ,கூட்டமைப்போ ஈழம் பெற்றுத் தரோணும் என்று மக்கள் எதிர் பார்க்கவில்லை...ஆனால் குறைந்த பட்ச உரிமையையாவது பெற்றுக் கொடுக்காமல்,கிடைத்த சின்ன,சின்ன சந்தர்ப்பங்களை சரி வரப் பயன் படுத்தாமல் உ+ம் கிழக்கின் முதலமைச்சர் பதவியை நசீருக்கு தூக்கி கொடுத்தது போன்று பல சந்தர்ப்பங்கள்... 
முஸ்லீம் எம்பிக்கள்,அமைச்சர்களால் தங்கட மக்களுக்கு உரிமைகள்,சலுகைகள் பெற்றுக் கொடுக்க முடியும் என்றால் ஏன் இவர்களால் முடியாது?
மக்களது அடிப்படை உரிமைகள்,மக்கள் சொந்த நிலத்திற்காய் போராடுகிறார்கள்...அதைக் கூட  மீட்டுக் கொடுக்க வக்கில்லை 
மனோ கணேசன் செய்வதை கூட இவர்களால் செய்ய முடியாமல் உள்ளது..
வெட்கமில்லாமல் இன்னும் பதவியில் குந்திக் கொண்டு ...
மக்கள் இவர்களுக்கு வோட் போடுவதன் முக்கிய காரணம் சிங்களவர்களையோ,முஸ்லீம்களையோ பதவிக்கு வர விடக் கூடாது என்பதால் தான் ...
கூட்டமைப்பு இப்படியே காலத்தை கடத்த நினைத்தால் இனி மேல் வட,கிழக்கிலும் சிங்கள கட்சிகள் தான் ஆடசி அமைக்கும் 
 

Link to comment
Share on other sites

9 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

நீங்கள் ஒரு மணித்தியாலத்துக்கு முன் தான் கோமாவில் இருந்து எழும்பி உள்ளீர்கள் போல?😝😝

Link to comment
Share on other sites

10 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

65265774_2285547171528861_74946125416124

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சாமானியன் said:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு யாழ் கள வாசிகள் எவராவது நடைமுறைச் சாத்தியமான , ஆக்கபூர்வமான குறுகிய , மற்றும் நீண்டகால தீர்வுத திட்டங்கள் வைத்திருக்கிறார்களா. 

இருப்பின் பகிர்ந்து  கொண்டால் செயல் படுத்தும் திறன் கொண்ட எவருக்காவது பயன் படக் கூடுமே !!

 

மன்னிக்க வேண்டும் சாமான்யன்! ஒரு முக்கியமான கேள்வியை அப்பாவித் தனமாகக் கேட்டு விட்ட உங்களுக்கு என்ன ஆகப் போகிறது என்ற காரணத்தை வைத்தே சிரிப்புக் குறி இட்டேன்! மேலே இருக்கும் பதில்கள், குறிப்பாக நுணா இணைத்திருக்கும் செய்திகளில் இருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும் தீர்வு பற்றிப் பேசுவதில் யாழில் இருப்போர் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் கேள்வியின் நாயகர்கள் மட்டுமே, பதில் எல்லாம் எதிர்பார்க்கக் கூடாது! துரோகிப் பட்டம் Trump University degree போல உடனே கிடைக்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள் ஏன் கொதிக்கிறியள்?

1. சம்பந்தன் ஆயுதம் ஏந்த வேண்டும் எண்டே சொன்னவர். அல்லது ஆயுதம் ஏந்துவோம் எண்டே சொன்னவர். ஆயுதம் ஏந்துவதை பற்றி “சிந்திக்க” வேண்டி “வரலாம்” என்றுதான் சொன்னவர். அதாவது நாங்கள் சிலசமயம் சிந்திப்போமே, நயந்தாராவுடன் ஹனிமூன் போக வேண்டும், தமன்னாவுடன் தள்ளாட வேண்டும், அப்படி, “சிந்திக்க வேண்டி வரலாம்” சிந்திப்போம் கூட இல்லை😂

2. சம்பந்தனுக்குகோ வேறு எந்த அரசியல் வாதிக்கோ, எமக்கான உரிமையை எப்படி பெறுவது என்ற திட்டம், மூலோபாயம் கொஞ்சமும் இல்லை. ஆங்கிலத்தில் சொன்னால் they are clueless. ஆனால் அதை அப்படியே வெளியே சொல்ல முடியுமே? அதனால காலத்துக்கு காலம் இப்படி புருடா விடுறது. தேர்தல் நெருங்க, நெருங்க சுருதி கூடும். இன்னும் சில மாதங்களில் மனிதர் பிரபாகரன் பற்றி உயர்வுநவிழ்சியாக சொல்லுவார் பாருங்க்கோ.

3. ஆனால் இது சம்பந்தர் போல அரசியல்வாதிக்கு மட்டும் இல்லை, இங்கே யாழில் கருத்தெழுதும் நாம் யாவரும் கூட we are all clueless as to how to realize  our aims. None of us have a workable strategy or even any short term tactics that would get us closer to the solution we want. ஆனால் அதை ஒத்து கொள்ளும் பக்குவம் கருத்தாளருக்கும் இல்லை. அதனால்தான், சுமந்திரன் போய் இந்தியாவிடம் கேட்கலாமே, சர்வதேசத்திடம் கேட்கலாமே என சாத்தியமிலாதவற்ரை எழுதுகிறோம். அல்லது 10 வருடங்களுக்கு முன் இறந்து போன பிரபாகரன் 25 வருடத்துக்கு முன் சொன்ன விடயத்தை இப்போ வெட்டி ஒட்டி, இதைதானே நாம்ன்கேட்கிரோம் என்பதாக எழுதுவது.

சம்சும் போய் கேட்டா இந்தியா சொல்லப்போகும் ஒரே பதில் “ஆகட்டும் பார்கலாம்”.

இலங்கையும் இந்தியாவும் ஏதோ வடகிழக்கு இணைந்த தீர்வை லாபாய், லாபாய் என கூவி விப்பதுபோலவும், சம்சும் அதை காலால் தள்ளி விடுவதுபோலவும் போகுது கதை 😂.

சம் சும் வேலைக்காகாத வெறும் பயல்கள்தான், ஆனால் சம்சும் ஆல் ஒரு ஆணியைதானும் பிடுங்க முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு சம்சும் இடத்தில் எந்த தமிழன், அது நுணாவோ, நெடுக்கோ, சாமானியனோ, ஜஸ்டீனோ, கோசானோ இருந்தாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது என்பதும் உண்மையே.

நாம் முதலில்

1. நாம் எல்லோரும் clueless என்ற பேருண்மையை ஏற்க வேண்டும்

2. அடுத்து நாம் முஸ்லீம்கள் போல் சலுகை அரசியல் செய்யப் போகிரோமா அல்லது தொடர்ந்து உரிமை அரசியல் செய்ய போகிரோமா என்று துணிய வேண்டும்.

இவையிரெண்டும் இலாமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெறும் வாய்பேச்சு வடை சுடுதலாகவே முடியும்.

ஒன்றில் சம்பந்தனது ஊர்வடை அல்லது உங்களது/எங்களது புலம்பெயர் வடை.

  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.