Jump to content

ஈழத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால்... ஆயுதம் ஏந்தி போராட்டம்: இரா. சம்பந்தன் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் கண்டிப்பாக ஆயுத  போராட்டம் ஆரம்பிக்கபடவேண்டும்,

அந்த போராட்டத்திற்கு நீங்கள் தலைவராகவும், மாவை படை தளபதியாகவும், சுமந்திரன் கட்டளை தளபதியாகவும் மற்றும் உங்கள் கட்சி தொண்டர்கள் ஆயுதமேந்திய போராளிகளாகவும் மாறவேண்டும்,

சிங்கள படைகளை எதிர்த்து மூர்க்கமாக போராடுங்கள் , வாழ்வா சாவா என்று ஒரு கை பார்த்திடுங்கள் .

ஒன்று அவர்கள் வாழவேண்டும் இல்லையென்றால் நீங்கள் வாழவேண்டும்.

ஆனால் தயவு செய்து உங்கள் ஆயுத போராட்டத்திற்கு உதவி தேடி தமிழ்மக்களிடம் மட்டும்  வராதீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 112
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

சாமானியனோ ...ஜஸ்டின் அண்ணையோ ..சுவையோ 
யார் கேட்டாலும் இப்போதைக்கான தீர்வு 

1.வடக்கு ,கிழக்கு என்பன வேறுபட்ட  இரண்டு மாகாணங்கள் என்பதை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளல் .

2.கூத்தமைப்பு கேட்கும் வடக்கு கிழக்கு இணைப்பு இரண்டாவது தமிழீழம் (எப்போதுமே சாத்தியமில்லை)

3.யாழ் மையவாத அரசியல் சூழலில் இருந்துகொண்டு கிழக்கின் பிரச்சினையை அணுகவும் முடியாது 
   தீர்க்கவும் முடியாது (Cluelesness இற்கு இதுதான் காரணம்)

4. கூத்தமைப்பின் கிழக்கு மாகாண கச போக்கிலிகளுக்கும் தலைமைக்கும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் 
   செய்ய  தெரியவேண்டிய Basic Requirement முஸ்லிம்களுடனான சமாந்தர அரசியல் (சரணாகதி அரசியல் அல்ல)  

5. (தாயக மக்கள் தாமாக கண்டு கொல்வார்கள், மாடு கொல்வார்கள் என்பதெல்லாம் சுத்த அலப்பறை. விடுதலை புலிகளின் ராசதந்திரத்தையே எதிர்கொண்ட சிங்கள ராசதந்திரத்தை, மக்கள் ஒரு நிறுவன மயப்பட்ட தலைமை இலாமல் எதிர்தாடுவார்கள், வெல்லுவார்கள் என்பது வெறும் காகித படிப்பு படித்து விட்டு, ஊரில் நாலன்ஞ்சு பேரை வச்சு கலர் காட்டும் பேர்வழிகளின் அபத்த பிதற்றல்)

கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினை சிங்களவர்கள் அல்ல தமிழ் தேசியமும் அல்ல அவர்களது தற்போதைய  பிரச்சினை முஸ்லிம்கள் (ஈஸ்ரர் தாக்குதலில் கிழக்கு மாகாண தமிழர்களும் ஒரு இலக்கு )

6.கல்முனை விவகாரத்தில் மக்கள் பக்கம் நியாயம் இருந்தும், ஒரு பிக்குவால், அதுவும் ஞானசாரர் போன்ற, மங்களராமய சுமனே போன்ற பச்சை இனவாதிகளால்தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கூட கிடைக்கும் என்பதும், தமிழ் தலைவர்களை தமிழர்களை வைத்தே விரட்டி அடிப்பதும் (குறிப்பாக மனோவை விரட்டியமை) ஈற்றில் இந்த மக்களை தலைமை அற்றவர்களாக்கி, அடையாளம் அற்றவர்களாக்கி, பிக்குகள் சொல்கேட்கும் அடிமை சமூகமாக மாற்றும் நீண்டகால நோக்கின் முதல் படியே இந்த கல்முனை நகர்வு என்பது, மூளையை அதிகம் கசக்காமலே புரியக்கூடிய விடயம்தான்

மிக இலகுவான பதில் ஒரு பிக்குவால், பச்சை இனவாதிகளால் தான் தமிழருக்கு கொஞ்ச நஞ்ச உரிமையும் கிடைக்கும் எனும் நிலைமைக்கு கிழக்கு மாகாண தமிழர்களை கொண்டுவந்த பெருமை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான கூத்தமைப்பின் கச போக்கிலிகளையே சேரும். (உ +ம் 11 உறுப்பினர்களை வைத்துக்கொண்டு 7 உறுப்பினர் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தது கிழக்கு தமிழர்களுக்கு வாய்க்கரிசி போடுவதை துரிதப்படுத்தியமை)  

6. சுமேயை விடுங்கள், கருணாவா, ஞானசாரரா, மனோ கணேசனா, தமிழ் தேசியத்துக்கு குழிபறித்தவர்கள்? மனோக்கு எதிர்ப்பு, அவர்களுக்கு வரவேற்பு! இது மட்டுமே போதும் இந்த கல்முனை போராட்டமும் இனி வரப்போகும் இத்தகைய போராட்டங்களும், எத்தகைய நச்சு வலைபின்னல் என்பதை எடுத்துக் காட்ட.

தமிழ் தேசியம் கிழக்கில்  மர்கயா ... வேண்டுமென்றால் வடக்கு மாகாணமும் ,கூத்தமைப்பின் வடக்கு மாகாண போக்கிலிகளும் வடக்கில் தமிழர்கள் இரண்டாம் தர (சிறுபான்மை ) ஆகும்/ஆக்கும்  வரை தேசிய அரசியலை முன்னெடுக்கலாம் 


7. இதை எல்லாம் ஆராய மறுத்து( அல்லது ஆராய இயலாமல்), இந்த போக்க்கின் ஆபத்துகளை மறைத்து, மக்கள் வழி கண்டார்கள் என்று வெற்றுக் கோசங்களை காவித் திரிபவர்கள், ஒன்றில் சிந்திக்கிம் திறனற்று இருக்க வேண்டும் அல்லது, ஊரில் தாம் சிங்கள முதலாளிகளுக்கு “யெஸ் சேர்” போட்டு காரியம் சாதிப்பதற்க்காக, தமிழ் இனத்துக்கு இரண்ட்கம் செய்பவர்களாக இருக்க வேண்டும். 

Very True ,கூத்தமைப்பின் மொள்ளமாரித்தனத்தை கண்கூடாக கண்டபின்னர்தான் கூத்தமைப்பின் கூடாரத்தில் இருந்து வியாழேந்திரன் வெளியேறி கிழக்கு தமிழர்களுக்கு சார்பான அவசியமான அரசியலை முன்னெடுக்கிறார், கோடீஸ்வரனின் நிலையிலும் நல்ல முன்னேற்றம் , இவர்களை இணைத்து முஸ்லிம்களை வெட்டி ஓடி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை தக்கவைப்பதே கிழக்கு மாகாண தமிழர்களுக்கு முன்னுள்ள அரசியல் . சிங்கள எஜமானர்களுக்கு எஸ் சேர் போடுவது யார் குற்றியாவது அரிசியாகட்டும் என்பதால் தான்
இந்த நிலைமைக்கும் மக்களை கொண்டு வந்தது சாட்சாத் கூத்தமைப்பு கச போக்கிலிகளே ... 
முதலில் மனோ கணேசன் துரத்தபடவில்லை ,சும்மொடு சேர்ந்து வந்ததால் அவரும் ஓட வேண்டி வந்தது 
அதனை அவரது முகப்புத்தக பதிவை பார்த்தால் விளங்கும். 

சரி இவை அனைத்தையும் கூத்தமைப்பு தடுத்திருக்கலாமா ...அவர்களது அரசியல் திறனால் முடியாது 
ஆனால் சேதத்தை குறைத்திருக்கலாம்... எப்படி...? ....ஆண்டுக்கொரு தீர்வுத்திட்டத்தை தமிழர் திருநாட்களில் ஏலம் விட்டு அவர்களது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி தமிழர்களுக்கான மாற்றுத்தெரிவை அறவே இல்லாமல் செய்திருக்கிறார்கள் , இவர்களுக்கான மாற்றுத்தெரிவின் அவசியம் வடக்கில் உணரப்படவில்லை 
ஆனால் கிழக்கில் .....?

முதலிலேயே தங்கள் கையாலாகாத்தனத்தை மக்களின் முன் பட்டவர்த்தனமாக கூறியிருந்தால் அவசியமில்லாத எதிர்பார்ப்பும் அதனால் ஏமாற்றமும் மக்களுக்கு வந்திருக்காது. 
(மிகப்பெரிய கேள்வி அரிச்சுவடியில் ஆ வே எழுதப்படாத தீர்வு விடயத்தை எப்படி எதை வைத்துக்கொண்டு 2015 இலிருந்து கூவி கூவி விற்றீர்கள் இங்கே நீங்கள் வைத்த வேட்டு தான் இன்றைய  கிழக்கு மாகாண தமிழர்களின் கையறு நிலை )   


 

1. நீங்கள் மேலே கூறியவற்றில் முரண்பட பெரிதாக ஒன்றும் இல்லை. சுற்றி வளைச்சு நீங்கள் சொல்ல வருவது யாதெனில், கிழக்கில் இனி சலுகை/சமாந்திர அரசியலே சரிவரும். வடக்கில் இன்னும் கொஞ்ச காலத்துக்கு உரிமை அரசியல் இழுபடும்(அங்கேயும் தமிழர் பலம் குறையும் வரை). பின்பு அங்கேயும் அதே நிலைதான் என்பது. இது என்னை பொறுத்த மட்டில் ஒரு தெளிவான புரிந்து கொள்ளலல்தான். அப்படியாயின் இதை மக்கள்முன் வைத்து, வியாழேந்திரன், கோடீஸ்வரன், கருணா இன்னும் பலரைச் சேர்த்து ஒரு புதிய அரசியல் கட்சியை உருவாக்கி, இதுவரை முஸ்லீம்கள் செய்த சலுகை அரசியலே இனி நாம் செய்வோம், வடக்கு-கிழக்கு இணைப்பு தேவையில்லை, என்பதை மையமாக வைத்து ஒரு விஞ்ஞாபனத்தை வைத்து - தேர்தலில் ஏன் போட்டியிடக் கூடாது? 

2. கிழக்கில் தமிழர்களுக்கு என்று ஒரு பிரதியேக தலைமை உருவாகி, அது கிழக்கு தமிழர் நலன் சார்ந்து முடிவெடுக்கும் போது, கிழக்கில், காணி, அரச உத்தியோகம், மாடு மேச்சல் உரிமை என எல்லா வழிகளிலும் எம்மக்கள் தரம் உயரும். இந்த தலைமை கிழக்கு தமிழர்களிடமே இருக்க வேண்டும், ஞானசாரவிடம் அல்ல. (அவரையும் உள்ளே எடுத்து பயன் படுத்தலாம்).

3. இருக்கும் அரசியல்வாதிகளையும் சேர்த்து, இப்படி ஒரு தலைமையை கிழக்கில் உருவாக்க வேண்டியது, கிழக்கு இண்டலெக்சுவள்சின் கடமை அல்லவா? கூடிய விரைவில் இதை செய்யுங்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை தூக்கி எறிந்து விட்டு, சலுகை அரசியல் மூலம் மக்கள் வாழ்வை மேம்படுத்தும், நேர்மையான அரசியல் கட்சிக்கு எப்போதும் மக்கள் நலத்தை விரும்பும் சக தமிழர்களின் ஆதரவு இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, சுவைப்பிரியன் said:

இப்ப என்ன பிரச்சனை புதுசாக வந்தது.சம் சும் +குட்டமைப்பு எல்லாம் வேலைக்கு ஆகாது என்டது இங்கு ஏகமனதாக தீர்மானித்தாச்சு.இப்ப அடுத்த கட்டம்.யார் எமக்கு சரியான தலமை என்டது.அதைப்பற்றி கதைக்கலாம்.எனது தனிப்பட்ட கருத்து விக்கியர் சரிவரார்.புதுக்கட்சி என்டால் கொள்கை என்ன என்பது தான் அலசலாமே.இப்படியே போனால் தேசிய கட்டச்சிகள் ஆட்ச்சிக்கு வருவதை தடுக்க முடியாது.அண்மையில் ஊரில் பலரை கேட்டேன் உங்கள் வாக்கு யாருக்கு என்டு உடன் பதில் வீட்டுக்கு என்டு வந்தது.இங்கை இருந்து ஒன்டும் பிடுங்க முடியாது என்டதுக்கு இது ஒரு சின்ன உதாரனம்.

எனது பார்வையில் தமிழர் முன் உள்ள தெரிவுகளாவன,

1. தனிநாட்டு அரசியல்- புலிகள் முன்னெடுத்தது

2. உரிமை/சமஸ்டி அரசியல் - செல்வா-சம் முன்னெடுப்பதாக சொல்லப்படுவது.

3. சலுகை/சமாந்திர அரசியல் - 30 வருடமாக முல்லீம்கள் முன்னெடுத்தது. மனோ எடுப்பது.

4. சரணாகதி அரசியல் - இப்போ தெற்கில் இருக்கும் முஸ்லீம்களில் சிலர் முன்னெடுப்பது, டக்லஸ், கருணா, பிள்ளையான் முன்னெடுப்பது.

இதில் 1ம் 4ம் கடைப்பிடிக்க முடியாத, வேண்டாத தெரிவுகள்.

3 ஐ உடனடி இலக்காயும், 4ஐ நீண்ட கால இலக்காகும் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தனி தனியே, ஆனால் ஒத்துழைப்போடு முன்னெடுக்கபடும் அரசியலே இப்போதைக்கு உகந்தது.

இது என் கருத்து மட்டுமே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபாதாசன் said:

இன்னுமா இந்த உலகம் நம்புது .....எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே .....என்னத்த  சொல்ல ...அப்படியே அடிச்சு விடுங்க ...

என்ன 2015 இல் சம்பந்தரின் ராஜதந்திரம் அது இது என்று புகழ்ந்து விக்னேஸ்வரனை எதிர் புகழ் பாடியதை மறந்து விடடீர்களா ?  அப்பவே தெரியும் இந்த சாம் சும் வெறும் வெற்று வேட்டுக்கள் என்று ....

காலம் கடந்து அறிவு வந்ததுக்கு நன்றி ....அப்படியே புலிகளுக்கு முன்னாள் எவ்வளவு சவால்கள் இருந்ததையும் உணரும் காலம் வரும்.  

அப்பப்ப அடிச்சு விடக்கூடாது ....

உங்களை போலன்றி, நான் ஒரு தனிமனிதனின் தாசன் கிடையாது. எனக்கு அந்தந்த தறுவாயில் சரியெனப்படுவதை சொல்வேன். என் கணிப்பு பிழைக்கும் போது, அல்லது நான் கணித்திருந்த பாதையில் நான் சுட்டிய ஆள் போகாதபோது, என் கருத்தை மாற்றி, அவர் மீது விமர்சனமும் வைப்பேன். நான் பிரபாதாசனும் இல்லை, சுமந்திரதாசனும் இல்லை.

சும்-சீவி குடுமிபிடியில் நான் யார் பக்கமும் பாடியதில்லை. இவர்கள் வெளிப்பூச்சுக்கு சண்டை போல காட்டுகிறார்களோ? என்று சில சமயம் யோசித்தேன். ஆனால் சும்முக்காக விக்கியையோ, அல்லது விக்கிக்காக சும்மையோ நான் திட்டவில்லை.

ஒற்றுமை இல்லாமல் போகிறேர்களே என இருவரையும் திட்டி உள்ளேன்.

புலிகளுக்கு முன்னால் எத்துணை பெரிய சவால்கள் இருந்தன என்பது, புலிகள் இருக்கும் போதே எனக்குத் தெரியும். அதனால்தான் 2009 வரை யாழ் போன்ற ஒரு சிறு தளத்தில் கூட, அவர்களை விமர்சித்து ஒரு வார்த்தை எழுதியதில்லை. 2012 ற்கு பின் அவர்களை விமர்சித்தது, அதே பிழைகளை நான் மீண்டும் விடக்கூடாது என்பதற்க்காக. இப்போ அதற்க்கான தேவையும் இல்லை. விமர்சனமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

எனது பார்வையில் தமிழர் முன் உள்ள தெரிவுகளாவன,

1. தனிநாட்டு அரசியல்- புலிகள் முன்னெடுத்தது

2. உரிமை/சமஸ்டி அரசியல் - செல்வா-சம் முன்னெடுப்பதாக சொல்லப்படுவது.

3. சலுகை/சமாந்திர அரசியல் - 30 வருடமாக முல்லீம்கள் முன்னெடுத்தது. மனோ எடுப்பது.

4. சரணாகதி அரசியல் - இப்போ தெற்கில் இருக்கும் முஸ்லீம்களில் சிலர் முன்னெடுப்பது, டக்லஸ், கருணா, பிள்ளையான் முன்னெடுப்பது.

இதில் 1ம் 4ம் கடைப்பிடிக்க முடியாத, வேண்டாத தெரிவுகள்.

3 ஐ உடனடி இலக்காயும், 4ஐ நீண்ட கால இலக்காகும் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தனி தனியே, ஆனால் ஒத்துழைப்போடு முன்னெடுக்கபடும் அரசியலே இப்போதைக்கு உகந்தது.

இது என் கருத்து மட்டுமே. 

2 நீன்ட நாள் இலக்கு என்டு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.எனது நிலைப்பாடும் இது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, சுவைப்பிரியன் said:

2 நீன்ட நாள் இலக்கு என்டு வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.எனது நிலைப்பாடும் இது தான்.

உண்மைதான். 2ம் 3ம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை எதையும் தமிழர்  இதுவரை  செய்து  பார்க்கவில்லை  என்பது  போலிருக்கிறது 

உங்களது  கருத்தும்  பார்வையும்.

இவை  அனைத்தையும் 40 களிலிருந்து மீண்டும்   பொருத்திப்பாருங்கள்  புரியும்

இவை  அனைத்தும்  தோல்வியடையத்தான்

பிரபாகரன்  சிறு  வலுவோடு  பேச  ஆயுதம்  எடுத்தார்

அதுவும்  முடியாது போனது

அதன்  அடுத்த  நகர்வான

சர்வதேசத்திடம் வலுவான இன  அழிப்பு ஆதாரத்தோடு  விட்டுச்சென்றார்

அதிலிருந்து தான்  தொடரணும்

அதற்கு  எவுரமே தயாரில்லை

அப்படியென்றால்

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

அது தான் நடக்கும் நடக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

இவை எதையும் தமிழர்  இதுவரை  செய்து  பார்க்கவில்லை  என்பது  போலிருக்கிறது 

உங்களது  கருத்தும்  பார்வையும்.

இவை  அனைத்தையும் 40 களிலிருந்து மீண்டும்   பொருத்திப்பாருங்கள்  புரியும்

இவை  அனைத்தும்  தோல்வியடையத்தான்

பிரபாகரன்  சிறு  வலுவோடு  பேச  ஆயுதம்  எடுத்தார்

அதுவும்  முடியாது போனது

அதன்  அடுத்த  நகர்வான

சர்வதேசத்திடம் வலுவான இன  அழிப்பு ஆதாரத்தோடு  விட்டுச்சென்றார்

அதிலிருந்து தான்  தொடரணும்

அதற்கு  எவுரமே தயாரில்லை

அப்படியென்றால்

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

அது தான் நடக்கும் நடக்கிறது

 

நாற்பதுஇல் இருந்தே 1,2,4 தான். 3 ஐ இதுவரை தமிழர் தரப்பு செய்யவில்லை. இப்போது சிங்களம் தன் கோரப்பிடியை முஸ்லிம்கள் மீது இறக்கி இருபதால், 3ம் முறைக்கு ஒரு கூடுதல் கவர்சியும் வந்திருகிறது.

நீங்கள் சொன்னது 5ம் வழி. அதில் நான் காணும் குறைகள்:

1. இதை ஊரில் இருப்போர் செய்ய முடியாது. 1ம் வழிமுறையை பின்பற்றியோரை அடக்கியது போல் 5ம் வழிமுறையை பின்பற்றுவோரும் காணாமல் ஆக்கப்படுவர்.

2. வெளியில் இருந்து இதை செய்வதாயினும், போர்குற்ற விசாரணையை பாவித்து இலங்கையில் எமக்கு எப்படி உரிமைகளை பெறமுடியும்? சர்வதேசம் இலங்கையை நிர்பந்தித்து? அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

 அது தான் நடக்கும் நடக்கிறது

 

நாலவதுக்கும் கீழே.
முஸ்லீம்கள் பெட்டி பெட்டியாக வாங்கி தமது மக்களுக்கு நல்லதைச் செய்கிறார்கள்.

எமது தலைவர் பெட்டியை வாங்குவதோடு மட்டுமே நிற்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் என்பது எவ்வளவு பெறுமதியானது என்பது கூட தெரியாத சாணக்கியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாலவதுக்கும் கீழே.
முஸ்லீம்கள் பெட்டி பெட்டியாக வாங்கி தமது மக்களுக்கு நல்லதைச் செய்கிறார்கள்.

எமது தலைவர் பெட்டியை வாங்குவதோடு மட்டுமே நிற்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவர் என்பது எவ்வளவு பெறுமதியானது என்பது கூட தெரியாத சாணக்கியர்.

ஈழப்பிரியன் அண்ணை, பெட்டியை சம் சும் வாங்கினார்கள் என்பதற்கு ஏதாவது செய்தி ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது சும்மா போகிற போக்கில் அடிச்சு விடுகிற கற்பனையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

எனது பார்வையில் தமிழர் முன் உள்ள தெரிவுகளாவன,

1. தனிநாட்டு அரசியல்- புலிகள் முன்னெடுத்தது

2. உரிமை/சமஸ்டி அரசியல் - செல்வா-சம் முன்னெடுப்பதாக சொல்லப்படுவது.

3. சலுகை/சமாந்திர அரசியல் - 30 வருடமாக முல்லீம்கள் முன்னெடுத்தது. மனோ எடுப்பது.

4. சரணாகதி அரசியல் - இப்போ தெற்கில் இருக்கும் முஸ்லீம்களில் சிலர் முன்னெடுப்பது, டக்லஸ், கருணா, பிள்ளையான் முன்னெடுப்பது.

இதில் 1ம் 4ம் கடைப்பிடிக்க முடியாத, வேண்டாத தெரிவுகள்.

3 ஐ உடனடி இலக்காயும், 4ஐ நீண்ட கால இலக்காகும் கொண்டு, வடக்கிலும் கிழக்கிலும் தனி தனியே, ஆனால் ஒத்துழைப்போடு முன்னெடுக்கபடும் அரசியலே இப்போதைக்கு உகந்தது.

இது என் கருத்து மட்டுமே. 

 

1 hour ago, goshan_che said:

நாற்பதுஇல் இருந்தே 1,2,4 தான். 3 ஐ இதுவரை தமிழர் தரப்பு செய்யவில்லை. இப்போது சிங்களம் தன் கோரப்பிடியை முஸ்லிம்கள் மீது இறக்கி இருபதால், 3ம் முறைக்கு ஒரு கூடுதல் கவர்சியும் வந்திருகிறது.

நீங்கள் சொன்னது 5ம் வழி. அதில் நான் காணும் குறைகள்:

1. இதை ஊரில் இருப்போர் செய்ய முடியாது. 1ம் வழிமுறையை பின்பற்றியோரை அடக்கியது போல் 5ம் வழிமுறையை பின்பற்றுவோரும் காணாமல் ஆக்கப்படுவர்.

2. வெளியில் இருந்து இதை செய்வதாயினும், போர்குற்ற விசாரணையை பாவித்து இலங்கையில் எமக்கு எப்படி உரிமைகளை பெறமுடியும்? சர்வதேசம் இலங்கையை நிர்பந்தித்து? அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

1ஐ  பிரபாகரன்  செய்யவில்லை  தொடக்கவில்லை

கூட்டணியினர்  தந்தை  செல்வா  வழியில் ஆரம்பித்தது தான்

அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

 

இதற்காகத்தான்  மேலே  குறிப்பிட்டேன்

இனி  உங்களது 4வது தெரிவு  தான்

அது தான் நடக்கும் நடக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாற்பதுஇல் இருந்தே 1,2,4 தான். 3 ஐ இதுவரை தமிழர் தரப்பு செய்யவில்லை. இப்போது சிங்களம் தன் கோரப்பிடியை முஸ்லிம்கள் மீது இறக்கி இருபதால், 3ம் முறைக்கு ஒரு கூடுதல் கவர்சியும் வந்திருகிறது.

நீங்கள் சொன்னது 5ம் வழி. அதில் நான் காணும் குறைகள்:

1. இதை ஊரில் இருப்போர் செய்ய முடியாது. 1ம் வழிமுறையை பின்பற்றியோரை அடக்கியது போல் 5ம் வழிமுறையை பின்பற்றுவோரும் காணாமல் ஆக்கப்படுவர்.

2. வெளியில் இருந்து இதை செய்வதாயினும், போர்குற்ற விசாரணையை பாவித்து இலங்கையில் எமக்கு எப்படி உரிமைகளை பெறமுடியும்? சர்வதேசம் இலங்கையை நிர்பந்தித்து? அமேரிக்கா, சீனா, இந்தியாவுக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்தது. இந்த கூட்டுகளவாணிகள், தம் கூட்டாளி களவாணியை நிர்பந்தித்து எதையும் செய்து தர மாட்டார்கள். ஒபாம, ஜனாதிபதியாக, மிலிபேண்ட் யூகே வெளிநாட்டமைச்சராக இருந்த போதே முள்ளிவாய்க்காலைத் தடுக்கவில்லை. இப்போ டிரம்ப், ஜோன்சன் ஆளும் சூழ்நிலையில் இது ஒரு போதும் சாத்தியப்படாது. என்ன நடந்தாலும், தமது நலனுக்கு பங்கம் வராதாவரை இவர்கள் இந்தியாவை கைகாட்டி விட்டு ஒதுங்கி விடுவார்கள். இந்தியாவின் நிலைப்பாடு நமக்கு தெரிந்ததே.

ஒபாமாவால் தடுக்கப் பட முடியாத இனப் படுகொலையை ஜோன்சனும், ட்ரம்பும், ஐரோப்பாவில் பெருகி வரும் வலது சாரிகளும் இனித் தடுக்கார் என்பது மட்டுமல்ல, நடந்தால் ஊக்குவிப்பார்கள் என்று இங்கு பல தடவை எழுதப் பட்டு விட்டது!

இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வதேச தலையீட்டை நம்பி எதுவும் செய்வது, 9/11 இற்குப் பின்னான நிலைமை தெரியாமல் புலிகளின் தலைமை ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்த தவறுக்கு ஒப்பானது! அந்தத் தவறின் விளைவையே ஏற்றுக் கொள்ளாத பலர் இங்கே இருக்கும் போது, இந்த சர்வதேச தலையீடு கோரும் வாதம் இருப்பதில் ஆச்சரியமில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Justin said:

ஒபாமாவால் தடுக்கப் பட முடியாத இனப் படுகொலையை ஜோன்சனும், ட்ரம்பும், ஐரோப்பாவில் பெருகி வரும் வலது சாரிகளும் இனித் தடுக்கார் என்பது மட்டுமல்ல, நடந்தால் ஊக்குவிப்பார்கள் என்று இங்கு பல தடவை எழுதப் பட்டு விட்டது!

இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு சர்வதேச தலையீட்டை நம்பி எதுவும் செய்வது, 9/11 இற்குப் பின்னான நிலைமை தெரியாமல் புலிகளின் தலைமை ராஜபக்ஷவைப் பதவிக்குக் கொண்டு வந்த தவறுக்கு ஒப்பானது! அந்தத் தவறின் விளைவையே ஏற்றுக் கொள்ளாத பலர் இங்கே இருக்கும் போது, இந்த சர்வதேச தலையீடு கோரும் வாதம் இருப்பதில் ஆச்சரியமில்லை! 

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

சர்வதேச தலையீடு வேலைக்காவாது என்று சொல்பவர் தான் தீர்வும் சொல்ல வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, பெட்டியை சம் சும் வாங்கினார்கள் என்பதற்கு ஏதாவது செய்தி ஆதாரம் வைத்திருக்கிறீர்களா? அல்லது சும்மா போகிற போக்கில் அடிச்சு விடுகிற கற்பனையா?

ஜஸ்ரின் அவர்களது நடைமுறையை வைத்தே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஊகிக்க முடியவில்லையா?

யாராவது இவ்வளவு பிரச்சனைகள் தமிழருக்கு இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்கு போட்டுக் கொண்டே இருப்பார்களா?

நாங்கள் உங்கள் அளவுக்கு படிக்கவில்லை.ஆனால் படித்த உங்களால் சிலசில கீறிட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Justin said:

சர்வதேச தலையீடு வேலைக்காவாது என்று சொல்பவர் தான் தீர்வும் சொல்ல வேண்டுமா?

யாரது???

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜஸ்ரின் அவர்களது நடைமுறையை வைத்தே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று ஊகிக்க முடியவில்லையா?

யாராவது இவ்வளவு பிரச்சனைகள் தமிழருக்கு இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து கொண்டு அரசுக்கு ஆதரவாக வாக்கு போட்டுக் கொண்டே இருப்பார்களா?

நாங்கள் உங்கள் அளவுக்கு படிக்கவில்லை.ஆனால் படித்த உங்களால் சிலசில கீறிட்ட இடங்களை நிரப்ப முடியவில்லை என்பது வேதனையாக உள்ளது.

ஈழப்பிரியன் அண்ணை, ஊகிப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால் இப்ப சில விடயங்களை நானும் ஊகித்து இங்கு எழுத முடியும், அதை விடுங்கள்!

கோடிட்ட இடங்களை நிரப்ப படிப்பெதுக்கு? உண்மையா என்று தெரியாத விடயங்களைஅவர்கள் எதிரியாக இருந்தாலும் குற்றச் சாட்டாக முன்வைத்தல் தவறு என்று உணர மனச்சாட்சி மட்டும் போதுமே? உங்களுக்குப் பச்சை போட்ட பெருமாள் இணைத்த பொன்சேகாவின் புலிகள் தொடர்பான செய்தி பார்த்தீர்களா? அது தான் integrity என்பது!

ஆனால் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்குது. சம்பந்தரையும் சுமந்திரனையும் திட்டும் சிங்களவர்களோ எதிர் தமிழ் தரப்போ கூட அவர்களுடைய ஊழலின்மை பற்றி மதிப்புத் தான் வைத்திருக்கிறார்கள். சம்பந்தனுக்கெல்லாம் அரசியலுக்கு வந்து பெட்டி வாங்கித் தான் உழைக்க வேண்டுமென்ற தேவை இல்லை என்பது என்னை விட வயதில் அனுபவத்தில் கூடிய உங்களுக்கு தெளிவாக விளங்கும்!தமிழ் தரப்பில் இருந்து எம்.பி யானால் காசு வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுத்தல், தம் பிள்ளைகளை உறவுகளை diplomatic கவரில் வெளிநாடு கூட்டிச் சென்று அசைலம் எடுத்துக் கொடுத்தல் போன்ற நிலைமை தான் பல முன்னாள் போராளிகள் எம்.பி யான போது நடந்தது. இப்படியில்லாமல் நேர்மையாக இருப்பதே சுமந்திரன் மீது மதிப்பு வர எனக்கு ஒரு காரணம். சம் சும் தீர்வு விடயத்தில் செய்வது தவறாகவோ போதாததாகவோ இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து நேர்மையான ஆட்களை இலஞ்சப் பேர்வழிகளாகக் குற்றம் சாட்டுவது தவறு!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

 சம் சும் தீர்வு விடயத்தில் செய்வது தவறாகவோ போதாததாகவோ இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து நேர்மையான ஆட்களை இலஞ்சப் பேர்வழிகளாகக் குற்றம் சாட்டுவது தவறு!  

சரி

அப்படியானால்

கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான  சொத்துக்களும்

சொகுசு  வாகனங்களும்  எப்படி  வந்தது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

சரி

அப்படியானால்

கூட்டமைப்பு பாராளுமன்ற  உறுப்பினர்களுக்கு கோடிக்கணக்கான  சொத்துக்களும்

சொகுசு  வாகனங்களும்  எப்படி  வந்தது?????

அது பா.உ எல்லோருக்கும் அரசு வழங்கிறதெல்லோ?!😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

அது பா.உ எல்லோருக்கும் அரசு வழங்கிறதெல்லோ?!😋

அண்மையில்

செல்வம் அடைக்கலநாதன்

மற்றும்  மாவை சேனாதிராசா ஆகியவர்களது தாயக வீடுகள் சார்ந்து

படங்கள்வெளியாகி  தாயக  மக்களால் விமர்சிக்கப்பட்டன

எனக்கே  தனிப்பட  சிறீதரனிடம் அனுபவமுண்டு

எந்த அனுபவத்தில்  அல்லது  ஆதாரத்துடன்

Justin அவர்களை  அப்படி  சொல்வது  தவறு  என்கிறார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

கோடிட்ட இடங்களை நிரப்ப படிப்பெதுக்கு? உண்மையா என்று தெரியாத விடயங்களைஅவர்கள் எதிரியாக இருந்தாலும் குற்றச் சாட்டாக முன்வைத்தல் தவறு என்று உணர மனச்சாட்சி மட்டும் போதுமே? உங்களுக்குப் பச்சை போட்ட பெருமாள் இணைத்த பொன்சேகாவின் புலிகள் தொடர்பான செய்தி பார்த்தீர்களா? அது தான் integrity என்பது!

அது பொன்சேகாவின் நேர்மை அல்ல  சைக்கிள் கப்புக்குள் அவரின் எதிர்கால அரசியலுக்கு தேவையான துண்டு போட்டு இடம் பிடிக்கும் விளயாட்டு நாங்க டமில்ரசு கட்சி யாகினும் சரி அதுக்கு வால் பிடிக்கும் கூட்டமாகிலும் சரி நாலு இங்கிலுசு சொல் போட்டு தாங்கள் படித்தவர்கள் என்பதை மற்றவர்களுக்கு சொல்லும் விதம் இருக்கே தாங்க முடியலைடா சாமி .(integrity என்பதை நேர்மை என்று தமிழில் தமிழ் களத்தில் சொல்ல உங்களால் ஏன் முடியவில்லை ?)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, ஊகிப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டுமென்றால் இப்ப சில விடயங்களை நானும் ஊகித்து இங்கு எழுத முடியும், அதை விடுங்கள்!

கோடிட்ட இடங்களை நிரப்ப படிப்பெதுக்கு? உண்மையா என்று தெரியாத விடயங்களைஅவர்கள் எதிரியாக இருந்தாலும் குற்றச் சாட்டாக முன்வைத்தல் தவறு என்று உணர மனச்சாட்சி மட்டும் போதுமே? உங்களுக்குப் பச்சை போட்ட பெருமாள் இணைத்த பொன்சேகாவின் புலிகள் தொடர்பான செய்தி பார்த்தீர்களா? அது தான் integrity என்பது!

ஆனால் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்குது. சம்பந்தரையும் சுமந்திரனையும் திட்டும் சிங்களவர்களோ எதிர் தமிழ் தரப்போ கூட அவர்களுடைய ஊழலின்மை பற்றி மதிப்புத் தான் வைத்திருக்கிறார்கள். சம்பந்தனுக்கெல்லாம் அரசியலுக்கு வந்து பெட்டி வாங்கித் தான் உழைக்க வேண்டுமென்ற தேவை இல்லை என்பது என்னை விட வயதில் அனுபவத்தில் கூடிய உங்களுக்கு தெளிவாக விளங்கும்!தமிழ் தரப்பில் இருந்து எம்.பி யானால் காசு வாங்கிக் கொண்டு வேலை வாங்கிக் கொடுத்தல், தம் பிள்ளைகளை உறவுகளை diplomatic கவரில் வெளிநாடு கூட்டிச் சென்று அசைலம் எடுத்துக் கொடுத்தல் போன்ற நிலைமை தான் பல முன்னாள் போராளிகள் எம்.பி யான போது நடந்தது. இப்படியில்லாமல் நேர்மையாக இருப்பதே சுமந்திரன் மீது மதிப்பு வர எனக்கு ஒரு காரணம். சம் சும் தீர்வு விடயத்தில் செய்வது தவறாகவோ போதாததாகவோ இருக்கலாம்! அதைச் சுட்டிக் காட்டுவதை விடுத்து நேர்மையான ஆட்களை இலஞ்சப் பேர்வழிகளாகக் குற்றம் சாட்டுவது தவறு!  

ஜஸ்ரின் உங்கள் மனச்சாட்சியை வைத்து சொல்லுங்கள் 

நல்லாட்சி அரசு அமைந்த போது இவர்கள் செயல்பட்ட விதம் சரியா?

மக்களை கொண்டு போராட்டம் நடாத்த வேண்டியவர்கள் மக்கள் தாமாக போராட்டங்கள் நடாத்தும் போது கூட அவர்களுக்கு ஆதரவாக இல்லையே?

இன்னமும் சொந்த வீடுகளில் இருந்த தமிழ் மக்கள் முகாம்களில் இருக்கையில் எப்படி சிங்கள முஸ்லீம் மக்களை கொண்டுவந்து தமிழர் நிலங்களில் பெருவாரியாக குடியேற்றுகிறார்கள்?

உங்களுக்கு நிறைய விடயங்கள் தெரியுது.வாதாடக் கூடிய திறமையும் இருக்குது.அதை வைத்து யாரும் ஒன்று என்றால் இல்லை இது இரண்டு என்கிறீர்கள்.சரி இது இரண்டு என்றால் இல்லை இல்லை இது ஒன்று தான் என்கிறீர்கள்.

நீங்கள் டாக்ரராக இருப்பதை விட வக்கீலாக வந்திருந்தால் இன்னும் திறமையாக இருந்திருக்கலாம்.
நன்றி.சகோதரம்.

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

சரி

அப்போ  தமிழரின் தாயக  வாழ்வு???

தன் கையே தனக்குதவி. ஒவ்வொருவரின் எதிர்காலம் அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. ஈழத்தமிழரின் எதிர்காலம் ஈழத்தமிழரின் கையிலேயே தங்கியுள்ளது. 

நாம் எப்படி பலமுள்ள வளமுள்ள மக்கள் கூட்டமாக எழுகின்றோமோ அப்போது எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பவர்களாக இருப்போம். அதுவரை நாம் இலகு பார்த்த கிளிகளே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, manimaran said:

தன் கையே தனக்குதவி. ஒவ்வொருவரின் எதிர்காலம் அவர்களின் கையிலேயே தங்கியுள்ளது. ஈழத்தமிழரின் எதிர்காலம் ஈழத்தமிழரின் கையிலேயே தங்கியுள்ளது. 

நாம் எப்படி பலமுள்ள வளமுள்ள மக்கள் கூட்டமாக எழுகின்றோமோ அப்போது எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிப்பவர்களாக இருப்போம். அதுவரை நாம் இலகு பார்த்த கிளிகளே

 

அதைத்தான்  சகோ  நானும்சொல்கின்றேன்

நான்  புலத்திலிருந்து சொல்வதால்

அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பார்க்கிறார்கள்

இது  புலத்தின் பலம்  என்பது  எமது பெரும் சக்தி என்பதை  அறியாதவர்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.