Jump to content

போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய நிலை பிரபாகரனுக்கு இருக்கவில்லை - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
Sumanthiran-2.jpg?zoom=0.902499988675117
போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் நடத்தியே தமிழர் ஆயுதப் போராட்டம் நடத்தியதாக ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் செயற்பாடு என்றும் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இதனை  கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பில், இன்று நிகழ்வொன்றில் எம்.ஏ சுமந்திரன் தனது கருத்துக்களை தெரிவித்தா்ர. இதன்போது, விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நடத்திய போராட்டத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் இருந்து தமிழர்கள் அதற்கு பெருமளவான நிதிப் பங்களிப்பை செய்துள்ளதாகவும் இந்த வரலாறு தெரியாமல் ஜனாதிபதி இப்படி கூறுவது முற்று முழுதான தவறு என்றும் அதனை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும்  தெரிவித்துள்ளார்.அத்துடன் இது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் ஒரு பொய்த்தகவல் என்றும் இப்படி ஒரு குற்றச்சாட்டு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.
Link to comment
Share on other sites

நன்றி நீங்கள் புதினராகிவிட்டிர்கள் உங்களை அல்லா காப்பாற்றுவார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு 

புலிகளின் வரலாறு

புலிகளின் வருமானம் முழுமையாக  தெரியாது என்பது தெரிகிறது.

Link to comment
Share on other sites

'சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானத்தின் ஊடாகவே, புலிகள் செயற்பட்டனர்.' – ஜனாதிபதி சிறிசேன Jul 1, 2019

'புலிகளுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை இல்லை. இது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறது.' - சுமந்திரன் Jul 1, 2019

'30 ஆண்டுகளாக வடக்கில் போர் நடந்தபோதும், காடுகளை அழியாமல் பாதுகாத்தார் பிரபாகரன்.' – ஜனாதிபதி சிறிசேன Oct 04, 2018

'விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்தார்கள். அவை பற்றிய விபரங்களை சமர்ப்பிக்கத் தயார்' - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் – Jan 11, 2019

'ரயிலில் பயணிக்கும் போது தமிழரை துரத்தி விட்டு, சிங்களவர் ஆசனங்களில் அமர்ந்து கொள்வர். அவர்கள் பாதுகாப்புக்காக மலசல கூடங்களில் ஒளிந்து கொள்வர். இவ்வாறு தான் பிரபாகரன்கள் உருவானார்கள்.' - ஜனாதிபதி சிறிசேன Mar 7, 2019

'ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களையும், தமது இயக்கத்தில் இருந்தவர்களையும் புலிகள் கொன்றார்கள்' - சுமந்திரன் Jan 5, 2019

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

'சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வருமானத்தின் ஊடாகவே, புலிகள் செயற்பட்டனர்.' – ஜனாதிபதி சிறிசேன Jul 1, 2019

'புலிகளுக்கு போதைப்பொருள் வியாபாரம் நடத்தவேண்டிய தேவை இல்லை. இது தமிழர் போராட்டத்தையே கொச்சைப்படுத்துகிறது.' - சுமந்திரன் Jul 1, 2019

'30 ஆண்டுகளாக வடக்கில் போர் நடந்தபோதும், காடுகளை அழியாமல் பாதுகாத்தார் பிரபாகரன்.' – ஜனாதிபதி சிறிசேன Oct 04, 2018

'விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்தார்கள். அவை பற்றிய விபரங்களை சமர்ப்பிக்கத் தயார்' - நாடாளுமன்றத்தில் சுமந்திரன் – Jan 11, 2019

'ரயிலில் பயணிக்கும் போது தமிழரை துரத்தி விட்டு, சிங்களவர் ஆசனங்களில் அமர்ந்து கொள்வர். அவர்கள் பாதுகாப்புக்காக மலசல கூடங்களில் ஒளிந்து கொள்வர். இவ்வாறு தான் பிரபாகரன்கள் உருவானார்கள்.' - ஜனாதிபதி சிறிசேன Mar 7, 2019

'ஜனநாயக வழியில் அரசியலில் ஈடுபட்டவர்களையும், தமது இயக்கத்தில் இருந்தவர்களையும் புலிகள் கொன்றார்கள்' - சுமந்திரன் Jan 5, 2019

 

என்ன செய்வது போட்டி கூடி விட்டது விக்கியர் மாமா வேலை பார்க்க கூடாது எனும் சொல் நிறையவே அடிவேண்டி விட்டது அதான் நடக்கவே ஏலாமல் கிடப்பவரின் தீர்வு இல்லாவிடின் போர் எனும் பிதற்றல் இவரின் பிரபாகரன் புராணம் தேர்தல் நெருங்க நெருங்க சுமத்திரன் அன்டன் பாலசிங்கமாகி தேர்தலில் பின்கதவோ முன்கதவால் உள்ளே வந்த பின் கதிர் காமராய் மாறுவார் இது வழகமான ஒன்றுதானே .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.