Jump to content

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது


Recommended Posts

17 hours ago, valavan said:

இந்த தாக்குதலின் மூலம் தமிழனும் சிங்களவனும் பகையை கொஞ்சமாவது மறந்து செண்டிமீட்டர் அளவில் ஒன்றுபடுவான் என்று தெரிந்திருந்தால் 

மறந்தும்  மருந்துக்குகூட இந்த தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள்.

இந்த தாக்குதலை செய்தவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இருந்தால்? 

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
2 hours ago, Jude said:

உலகில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் விசா பெற வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அந்த நாடுகள் தான் விசா அலுவலகங்களை வடக்கு கிழக்கில் திறக்க வேண்டும். 

எந்தெந்த நாட்டு விசா வடக்கு கிழக்கில் பெறும் நிலையை விரும்புகிறீர்கள்?

கொழும்பு போய் தான் விசா பெற வேண்டுமானால் கொழும்பு போயே விமானம் ஏறலாமே. பலாலியில் சர்வதேச விமான நிலையம் எதற்கு? 😎

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் ஆரம்பித்த மாதிரி நுணாவிலான் அவர்கள் இணைத்த இணைப்பிலுள்ள நாடுகளுக்கான விசா பெறும் வகையில் அந்நாடுகளும் துணை தூதரகமோ, அல்லது வேறு ஏதும் அலுவலகமோ திறந்து விசா வழங்கும் முறையை கொண்டு வரலாம். நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பலாலியிலிருந்து விமானம் செல்வதாக கூறப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி 

இதை தமிழர்கள் தாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் விஜய் படங்களை எடுப்பதை விட்டிட்டு 
  
Jaffna Airways என ஒன்றை உருவாக்க்கி இதன் மூலம்  தமிழர்களை வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். 

மேலும்  duty free / rent a car / போறன்றவை திற‌ந்து அங்குள்ள இளைஞசர் யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

கொழும்பு போய் தான் விசா பெற வேண்டுமானால் கொழும்பு போயே விமானம் ஏறலாமே. பலாலியில் சர்வதேச விமான நிலையம் எதற்கு? 😎

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் ஆரம்பித்த மாதிரி நுணாவிலான் அவர்கள் இணைத்த இணைப்பிலுள்ள நாடுகளுக்கான விசா பெறும் வகையில் அந்நாடுகளும் துணை தூதரகமோ, அல்லது வேறு ஏதும் அலுவலகமோ திறந்து விசா வழங்கும் முறையை கொண்டு வரலாம். நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பலாலியிலிருந்து விமானம் செல்வதாக கூறப்படவில்லை.

 

பலாலிக்கு வரும் விமானத்தில் வருபவர்களுக்கு நுழைவு விசா, பலாலி விமான நிலையத்திலேயே வழங்குவார்கள்.அதற்கு வருபவர்கள் கொழும்பு போக தேவை இல்லை.

பலாலியில் விமானம் ஏறுபவர்கள் அந்த விமானம் நேரடியாக செல்லும் நாட்டுக்கு மட்டும் செல்பவர்களாக மட்டுமே இருக்க போவதில்லை. உதாரணமாக உகண்டா போகும் ஒருவரும், சோமாலியா போகும் ஒருவரும், அமெரிக்கா போகும் ஒருவரும் பலாலியில் இருந்து துபாய் போகும் விமானத்தில் ஏறி பின்னர் துபாயில் தாம் போகும் இடங்களுக்கான விமானத்தில் ஏறுவர். இவர்கள் துபாய்க்கு வடக்கில் விசா எடுத்து பின்னர் துபாயில் தாம் போகும் நாடுகளுக்கு விசா எடுக்கும் நடைமுறைக்கு தேவையான நிர்வாக அமைப்புகள் எந்த நாட்டிலும் இல்லை. பலாலியில் விமானம் ஏறுபவர்கள் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போபவர்களாகவும், பலாலிக்கு வருபவர்கள் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களாகவும் இருப்பர்.

ஆகவே இந்த நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த எந்த நாடுகள் வடக்கில் துணை தூதரகம் அல்லது விசா அலுவலகம் திறக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த நாடுகளுக்கு மக்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இந்தியாவுக்கு வடக்கில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே அவர்களின் துணை தூதரகம் உள்ளது. முஸ்லிம் மக்கள் கேட்டால் துபாய் தனது அலுவலகத்தையும் திறக்க கூடும். சீனாவுக்கும் ஆர்வம் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தமிழர்களின் பொருண்மியத்தை நீண்ட கால நோக்கில் கட்டி எழுப்பவும்.. பலாலியை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்கவும் சகல வகையிலும் செயற்படுதல் அவசியம். இது ஒரு பலாலி விடுவிப்பாக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.. சிறந்தது. 

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:
பலாலிக்கு வரும் விமானத்தில் வருபவர்களுக்கு நுழைவு விசா, பலாலி விமான நிலையத்திலேயே வழங்குவார்கள். அதற்கு வருபவர்கள் கொழும்பு போக தேவை இல்லை.

பலாலியில் விமானம் ஏறுபவர்கள் அந்த விமானம் நேரடியாக செல்லும் நாட்டுக்கு மட்டும் செல்பவர்களாக மட்டுமே இருக்க போவதில்லை. உதாரணமாக உகண்டா போகும் ஒருவரும், சோமாலியா போகும் ஒருவரும், அமெரிக்கா போகும் ஒருவரும் பலாலியில் இருந்து துபாய் போகும் விமானத்தில் ஏறி பின்னர் துபாயில் தாம் போகும் இடங்களுக்கான விமானத்தில் ஏறுவர். இவர்கள் துபாய்க்கு வடக்கில் விசா எடுத்து பின்னர் துபாயில் தாம் போகும் நாடுகளுக்கு விசா எடுக்கும் நடைமுறைக்கு தேவையான நிர்வாக அமைப்புகள் எந்த நாட்டிலும் இல்லை. பலாலியில் விமானம் ஏறுபவர்கள் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போபவர்களாகவும், பலாலிக்கு வருபவர்கள் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களாகவும் இருப்பர்.

ஆகவே இந்த நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த எந்த நாடுகள் வடக்கில் துணை தூதரகம் அல்லது விசா அலுவலகம் திறக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த நாடுகளுக்கு மக்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இந்தியாவுக்கு வடக்கில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே அவர்களின் துணை தூதரகம் உள்ளது. முஸ்லிம் மக்கள் கேட்டால் துபாய் தனது அலுவலகத்தையும் திறக்க கூடும். சீனாவுக்கும் ஆர்வம் இருக்கலாம்.

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவது முக்கியமாக இந்தியாவுடனான விமானப்போக்குவரத்தை ஆரம்பிக்க. அதன் பின் தான் ஏனையவற்றுக்கு முக்கியத்துவம்.

பலாலிக்கு வந்திறங்குவோரை மட்டும்  கருத்தில் கொண்டு விமானம் ஓட்ட மாட்டார்கள். வந்திறங்குவோருக்கு ஏற்ப ஏறுவோரும் இருக்க வேண்டும்.

சில நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். (ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திரும்ப வேண்டும்).

இலங்கையிலிருந்து வெளியே செல்பவர்களாக இருப்பின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர் தான் அதிகம்.

வேறு பல முக்கிய நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் இருப்பினும் இலங்கையிலிருந்து சென்று அங்கே அகதி கேட்டு விடுவார்கள் என நினைத்து பலரது விசா கோரிக்கை நிராகரிக்கப்படுவதுண்டு. சிலருக்கு வழங்கப்படுவதுமுண்டு.

கட்டுநாயக்கா விமான நிலையம் இருக்கத்தக்கதாக பலாலி விமான நிலையத்திற்கு அதிக விமானம் வந்து செல்லுமா என்பது கேள்விக்குறி. விமானம் ஓடத்தொடங்கியதும் தான் அது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் vfs மூலம் சில நாடுகளுக்கு விசா விண்ணப்பிப்பர். பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்ட பின் vfs மூலமே மேலும் பல நாடுகளுக்கு விசா விண்ணப்பிக்கும் நிலை உருவாக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

நல்லதொரு முயற்சி 

இதை தமிழர்கள் தாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் விஜய் படங்களை எடுப்பதை விட்டிட்டு 
  
Jaffna Airways என ஒன்றை உருவாக்க்கி இதன் மூலம்  தமிழர்களை வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். 

மேலும்  duty free / rent a car / போறன்றவை திற‌ந்து அங்குள்ள இளைஞசர் யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

சுத்தம்

அங்கு உள்ளவர்கள் எப்படி அந்த விமான நிலையத்தை வைத்து எப்படி வெளி நாடு சென்று அசைலம் அடிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள்.

ஏன் விரைவில்  பாருங்கோ எவனாவது முகப்புத்தகத்தில் கதை கட்டுவான் அந்த விமான நிலையத்தில் இருந்து  சென்றால் இலகுவில் செல்லாம் என்றும் உங்கட தொலைபேசி இலக்கத்தை தாங்கோ என்பான் உடனே எல்லாறும் நம்பரை போட்டு விட்டு இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

எல்லாம் சரி... பலாலியைச் சுற்றி வாழந்த பல தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகள், காணிகள், தோட்டம் துரவுகளைவிட்டுக் கொழும்பிலும். புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் உறவினர்களுக்கு, அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடும் மனநிலையும் இல்லாது.... எப்போ விலை கூடும்,  ஏறும் அப்போது விற்றுப் பெரும் பணம் புரட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது பலருடன் கதைத்த அனுபவத்தில் அறிந்த உண்மை.

அப்படிப் பெரும் தொகை கொடுத்து வாங்கக்கூடியவர்களாக தமிழர்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. சர்வதேச விமான நிலையமென்றால் அங்கு பணிபுரியப்போகும் பணியாளர்கள் யார்..... நிச்சயம் தமிழர் ஒரு சுண்டக்காய் அளவு இருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுசார்ந்த பணியாளர்களாகவே இருப்பார்கள். தற்பொழுதபகூட பலாலி விமானநிலையம் சென்றால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்களைக் காண்பது அரிது. முன்நாள் முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் கூறியதுபோல் முதலில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும். அதன்பின் அபிவிருத்தி தானே விருத்திபெறும்.  

 

 

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

பலாலியை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்கவும் சகல வகையிலும் செயற்படுதல் அவசியம். இது ஒரு பலாலி விடுவிப்பாக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.. சிறந்தது. 

இராணுவத்திடம் இருப்பது தான் எமக்கு பாதுகாப்பு, இல்லாவிட்டால் அரபு நிதி உதவியுடன் இந்த காணிகள் அவர்களுக்கு விற்கப்படும்.எங்கடைகளும் வித்து போட்டு இங்க வந்து அசைவம் அடிக்குங்கள்;இல்லா விட்டால் புலம்பெயர் நாடுகளில் வீட்டு mortgage கட்டுவீனம், இல்லா விடில் 2/3 வது வீட்டுக்கு deposit கட்டுவீனம், Audi Q7 வாங்கி ஓடுவீனம், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Dash said:

இராணுவத்திடம் இருப்பது தான் எமக்கு பாதுகாப்பு, இல்லாவிட்டால் அரபு நிதி உதவியுடன் இந்த காணிகள் அவர்களுக்கு விற்கப்படும்.எங்கடைகளும் வித்து போட்டு இங்க வந்து அசைவம் அடிக்குங்கள்;இல்லா விட்டால் புலம்பெயர் நாடுகளில் வீட்டு mortgage கட்டுவீனம், இல்லா விடில் 2/3 வது வீட்டுக்கு deposit கட்டுவீனம், Audi Q7 வாங்கி ஓடுவீனம், 

வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊரில் உள்ள சொத்துக்களை வித்துச் சுட்டு வாழ்வதுகளை ஒன்றும் செய்ய ஏலாது. அவர்களை திருத்தனும் என்றால்..அமெரிக்க அதிபர் ரம் செய்வது போல மேற்கு நாடுகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து அகதி அந்தஸ்துக் கோரிய அனைவரையும் அவரவர் நாட்டுக்கு அமைதி நிலையை காட்டி திருப்பி அனுப்பினால்.. அன்றி.. இவர்களைத் திருத்த ஏலாது.

ஆனாலும்.. ஊரில் போய் வாழனும் என்று விரும்பும் பல உறவுகளையும்.. ஊரில் உள்ள சொத்துக்களை பரம்பரைக்கும் காக்க வேண்டும் என்று செயற்படும் உறவுகளையும் நாம் காண்கிறோம். 

Link to comment
Share on other sites

13 hours ago, Jude said:

இந்த தாக்குதலை செய்தவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இருந்தால்? 

இந்த தாக்குதலை செய்யாதவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இல்லாது இருந்தால்?

Link to comment
Share on other sites

12 minutes ago, Rajesh said:

இந்த தாக்குதலை செய்யாதவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இல்லாது இருந்தால்?

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

Link to comment
Share on other sites

3 minutes ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

ஓ! அவரையும் தெரியுமோ?
பரவாயில்ல, இப்ப ஆவது ஒரு உருப்படியான ஒருவரின் போதனை ஞாபகம் வந்திருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையம் தொழில்பட தொடங்கியதும், சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து கணிசமான பயணிகளின் பறப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கொச்சின் பொதுவாக கொழும்பை விட 100£ குறைவாக டிக்கெட் இருக்கும் ஊர். எதாவது ஒரு இந்திய அல்லது மத்திய கிழக்கு விமானம் கொச்சின் போகும் விமானத்தையோ அல்லது கோட் ஷேர் செய்தோ பலாலிக்கு கொழும்பைவிட ஐரோபாவில் இருந்து 80£ குறைவாக டிக்கெட் போட்டால், ஒரு தொகை ஐரோப்பிய/கனேடிய தமிழ் பயணிகள் இதை விரும்புவர்.

வானுக்கு கொடுக்கும் செலவு, 8 மணத்தியால அசதியான பயணம், விபத்து ஆபத்து இவற்றை ஒப்பிடும் போது, நானாக இருந்தால் £50 வரை கூடக் கொடுத்தேனும் நேரே பலாலி போவதையே விரும்புவேன்.

விமான நிலையம் செயல்படத் தொடங்கவும், லைக்கா போன்றோர் வீண் ஜம்பத்துக்காகவேனும் ஒரு no frills airline ஒன்றை, பழைய 771 தட்டிவான் ரேஞ்சிலாவது இந்தியாவரை இயக்குவார்கள் என நினக்கிறேன்.

இலங்கையில் இருந்து வெளியே போகும், இலங்கை பிரஜைகள் என்று பார்த்தால், இந்தியாவுக்கு யாழிலே வீசா எடுக்கலாம். யூகே வீசா முழுக்க முழுக்க ஒன்லைன்/தபால் மூல விண்ணப்பம். சிங்கபூர், துபாய் ஒன் அரைவல்.  ஆகவே இது பெரிய பிரச்சனையாக இராது.

மருது போல இந்த துறைசார் நிபுணர்கள் என்ன நினக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எல்லாம் சரி... பலாலியைச் சுற்றி வாழந்த பல தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகள், காணிகள், தோட்டம் துரவுகளைவிட்டுக் கொழும்பிலும். புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் உறவினர்களுக்கு, அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடும் மனநிலையும் இல்லாது.... எப்போ விலை கூடும்,  ஏறும் அப்போது விற்றுப் பெரும் பணம் புரட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது பலருடன் கதைத்த அனுபவத்தில் அறிந்த உண்மை.

அப்படிப் பெரும் தொகை கொடுத்து வாங்கக்கூடியவர்களாக தமிழர்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. சர்வதேச விமான நிலையமென்றால் அங்கு பணிபுரியப்போகும் பணியாளர்கள் யார்..... நிச்சயம் தமிழர் ஒரு சுண்டக்காய் அளவு இருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுசார்ந்த பணியாளர்களாகவே இருப்பார்கள். தற்பொழுதபகூட பலாலி விமானநிலையம் சென்றால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்களைக் காண்பது அரிது. முன்நாள் முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் கூறியதுபோல் முதலில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும். அதன்பின் அபிவிருத்தி தானே விருத்திபெறும்.  

 

 

இதை ஊரில் உள்ளவன் சொல்ல வேணும்.எங்களை மாதிரி எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவக்கிறன் சொல்க்குடாது.நன்றி.

Link to comment
Share on other sites

15 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை ஊரில் உள்ளவன் சொல்ல வேணும்.எங்களை மாதிரி எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவக்கிறன் சொல்க்குடாது.நன்றி.

எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவிக்கும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து, முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் இதனைச் சொல்லவில்லை, ஊரிலிருந்தே சொன்னார். அவர் சொன்னதையே நானும் குறிப்பிட்டேன். 🙏

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

 

2 hours ago, Rajesh said:

ஓ! அவரையும் தெரியுமோ?
பரவாயில்ல, இப்ப ஆவது ஒரு உருப்படியான ஒருவரின் போதனை ஞாபகம் வந்திருக்கே!

உருப்படியான ஒருவரின் உருப்படியான போதனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசலார் நாயனாரை போல் ஒரு செய்தி பலகனவுகள் காணுகின்றோம்  என்ன களவாணி நோக்கத்துக்கு இரண்டு நாடும் அவசரபடுகினம் என்று தெரியவில்லை .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விமானநிலையம் தொழில்பட தொடங்கியதும், சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து கணிசமான பயணிகளின் பறப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கொச்சின் பொதுவாக கொழும்பை விட 100£ குறைவாக டிக்கெட் இருக்கும் ஊர். எதாவது ஒரு இந்திய அல்லது மத்திய கிழக்கு விமானம் கொச்சின் போகும் விமானத்தையோ அல்லது கோட் ஷேர் செய்தோ பலாலிக்கு கொழும்பைவிட ஐரோபாவில் இருந்து 80£ குறைவாக டிக்கெட் போட்டால், ஒரு தொகை ஐரோப்பிய/கனேடிய தமிழ் பயணிகள் இதை விரும்புவர்.

வானுக்கு கொடுக்கும் செலவு, 8 மணத்தியால அசதியான பயணம், விபத்து ஆபத்து இவற்றை ஒப்பிடும் போது, நானாக இருந்தால் £50 வரை கூடக் கொடுத்தேனும் நேரே பலாலி போவதையே விரும்புவேன்.

விமான நிலையம் செயல்படத் தொடங்கவும், லைக்கா போன்றோர் வீண் ஜம்பத்துக்காகவேனும் ஒரு no frills airline ஒன்றை, பழைய 771 தட்டிவான் ரேஞ்சிலாவது இந்தியாவரை இயக்குவார்கள் என நினக்கிறேன்.

இலங்கையில் இருந்து வெளியே போகும், இலங்கை பிரஜைகள் என்று பார்த்தால், இந்தியாவுக்கு யாழிலே வீசா எடுக்கலாம். யூகே வீசா முழுக்க முழுக்க ஒன்லைன்/தபால் மூல விண்ணப்பம். சிங்கபூர், துபாய் ஒன் அரைவல்.  ஆகவே இது பெரிய பிரச்சனையாக இராது.

மருது போல இந்த துறைசார் நிபுணர்கள் என்ன நினக்கிறீர்கள்?

இப்போது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் (இனொன்று பேருக்கு மட்டும் இருக்கு) கொழும்பில் தமது 
கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிதாக சட்ட திடடம் ஒன்றும் இல்லை 
நானோ நீங்களோ கூட ஒரு விமானத்தை வாங்கி சென்னை 
விமான நிலையத்துக்கு பயணிக்க கூடியதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரும்போது 
சட்டதிட்டங்கள் மாறும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

இங்கு பயணிகளாகவும் வருமானம் தருவிகளாகவும் 
மட்டுமே தமிழர்கள் இருப்பார்கள் என்பதுதான் எனது 
எண்ணம். இவற்றை சரியாக நிறுவி பலன் பெற கூடிய அரசியல் 
தலைமை எதுவும் எம்மிடம் இல்லை.
1990 களில் அஷ்ரப் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது 
ஏர்லங்கா விமான சேவையின் பணிப்பெண்களாக 40 வீதம் வரை 
முஸ்லீம் பெண்களை உள்ளே புகுத்தினார்.
அப்படி செய்ய கூடிய யாரும் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. 

விமான சேவையை இலங்கையிலே பதிவு செய்தால் 
குறைவான பணம்தான் கேட்க்கிறார்கள் .... 2 மில்லியன் உள்ளான ரூபாய்கள் மட்டுமே. 

 

https://www.caa.lk/images/stories/pdf/regulations/Fees_Charges.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

 யோகர் அவர் பாட்டுக்கு சொல்லீட்டுப் போட்டார். வடிவேலு சாமிகளிட்ட கேளுங்கோ சும்மா இருப்பது எவ்வளவு கஸ்டம் என்று 😂.

ஒரு பொல்லாப்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

இப்போது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் (இனொன்று பேருக்கு மட்டும் இருக்கு) கொழும்பில் தமது 
கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிதாக சட்ட திடடம் ஒன்றும் இல்லை 
நானோ நீங்களோ கூட ஒரு விமானத்தை வாங்கி சென்னை 
விமான நிலையத்துக்கு பயணிக்க கூடியதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரும்போது 
சட்டதிட்டங்கள் மாறும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

இங்கு பயணிகளாகவும் வருமானம் தருவிகளாகவும் 
மட்டுமே தமிழர்கள் இருப்பார்கள் என்பதுதான் எனது 
எண்ணம். இவற்றை சரியாக நிறுவி பலன் பெற கூடிய அரசியல் 
தலைமை எதுவும் எம்மிடம் இல்லை.
1990 களில் அஷ்ரப் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது 
ஏர்லங்கா விமான சேவையின் பணிப்பெண்களாக 40 வீதம் வரை 
முஸ்லீம் பெண்களை உள்ளே புகுத்தினார்.
அப்படி செய்ய கூடிய யாரும் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. 

விமான சேவையை இலங்கையிலே பதிவு செய்தால் 
குறைவான பணம்தான் கேட்க்கிறார்கள் .... 2 மில்லியன் உள்ளான ரூபாய்கள் மட்டுமே. 

 

https://www.caa.lk/images/stories/pdf/regulations/Fees_Charges.pdf

உண்மைதான். இங்கே சிவியை உதாரணம் காட்டி பலர் சொன்னது போல, இங்கே விமானநிலைய பொறுப்பதிகாரி முதல், பாதுகாப்பு கடமையில் இருக்கும் விமானப்படை வீரர் வரை 80% தொழில்கள் தமிழர் அல்லாதோருக்கே போகும். ஆனால் 20% தொழில்களாவது உள்ளூர் வாசிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது, இதுவரை இல்லாத 20% என்பதும் உண்மையே.

யுத்தம் முடிந்து, 2010 இல் போனபோது, முறிகண்டியில் பெரேரோ அண்ட் சன்ஸ் ஐ பார்த போது, எங்கள் தெருவோர உணவங்கள் ஈட்டிய வருவாயை இவர்கள் எடுக்கிறார்களே என எண்ணினேன். உள்ளே போய் பார்த்ததும் வேலையாட்கள் யாவரும் தமிழராய் இருக்க, குறைந்த பட்சம், தெருவோர தமிழ் கடைக்கார் கொடுப்பதை விட கூடிய சம்பளத்துக்கு இவர்களுக்காவது வேலை கிடத்திருக்கிறதே எனவும் தோன்றியது.

விமானநிலையம் வருவதால், வர்த்தகம் பெருகும், ஆகவே அதில் பல தனியார் துறை வாய்புகள் உருவாகலாம். உதாரணத்துக்கு நாமே கூட, கொழும்பில்  3 நாள் தங்கி செலவழிக்கும் காசை ஊரில் அல்லவா செலவழிப்போம்.

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

இவை எல்லாற்றையும் விட பாக்குநீரிணைக்கு இரு மருங்கும் இருக்கும் தமிழர்கள் நேரடி தொடர்பை ஏற்படுத்துவர். 

இப்படி பல அனுகூலங்களை நான் இதில் காண்கிறேன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உண்மைதான். இங்கே சிவியை உதாரணம் காட்டி பலர் சொன்னது போல, இங்கே விமானநிலைய பொறுப்பதிகாரி முதல், பாதுகாப்பு கடமையில் இருக்கும் விமானப்படை வீரர் வரை 80% தொழில்கள் தமிழர் அல்லாதோருக்கே போகும். ஆனால் 20% தொழில்களாவது உள்ளூர் வாசிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது, இதுவரை இல்லாத 20% என்பதும் உண்மையே.

யுத்தம் முடிந்து, 2010 இல் போனபோது, முறிகண்டியில் பெரேரோ அண்ட் சன்ஸ் ஐ பார்த போது, எங்கள் தெருவோர உணவங்கள் ஈட்டிய வருவாயை இவர்கள் எடுக்கிறார்களே என எண்ணினேன். உள்ளே போய் பார்த்ததும் வேலையாட்கள் யாவரும் தமிழராய் இருக்க, குறைந்த பட்சம், தெருவோர தமிழ் கடைக்கார் கொடுப்பதை விட கூடிய சம்பளத்துக்கு இவர்களுக்காவது வேலை கிடத்திருக்கிறதே எனவும் தோன்றியது.

விமானநிலையம் வருவதால், வர்த்தகம் பெருகும், ஆகவே அதில் பல தனியார் துறை வாய்புகள் உருவாகலாம். உதாரணத்துக்கு நாமே கூட, கொழும்பில்  3 நாள் தங்கி செலவழிக்கும் காசை ஊரில் அல்லவா செலவழிப்போம்.

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

இவை எல்லாற்றையும் விட பாக்குநீரிணைக்கு இரு மருங்கும் இருக்கும் தமிழர்கள் நேரடி தொடர்பை ஏற்படுத்துவர். 

இப்படி பல அனுகூலங்களை நான் இதில் காண்கிறேன்/

மிகச்சரியான ,தெளிவான நோக்கு அண்ணை 
என்னதான் சிங்களவர்கள் கடை வைத்தாலும் கொள்வனனவு செய்யப்போவது நாம் தானே 
எமது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவருவோம் ,பத்து ரூபாய் அதிகமென்றாலும் கொள்வனவினை தமிழர்களிடமே மேற்கொள்வோம் .போகும் பணம் தமிழர்களுக்கே போய் சேரட்டும் ,ஆனால் தமிழ் முதலாளிகள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பகல் கொள்ளை அடிக்க முற்படக்கூடாது, இருபக்கமும் ஒத்துழைப்பு இருப்பின் சிறுக சிறுக எம்மவர் பொருளாதாரத்தை நாமே முன்னேற்றலாம்  

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

பூசலார் நாயனாரை போல் ஒரு செய்தி பலகனவுகள் காணுகின்றோம்  என்ன களவாணி நோக்கத்துக்கு இரண்டு நாடும் அவசரபடுகினம் என்று தெரியவில்லை .

இந்தியா வெளிப்படையாக கூறியது,

இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இலங்கை வெளிப்படையாக கூறியது,

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

இந்தியா வெளிப்படையாக கூறியது,

இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இலங்கை வெளிப்படையாக கூறியது,

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

போக போகத்தான் தெரியும் .

Link to comment
Share on other sites

7 minutes ago, Lara said:

.இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

1987 - 1990 வரை இந்தியா பயன்படுத்தியது. சர்வதேச விமானநிலையமாக்கினால் தான் இந்தியாவால் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது சரியாக படவில்லை. ஏனைய நாட்டு இராணுவங்களுக்கும் இது பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.