Jump to content

பலாலி விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகிறது


Recommended Posts

17 hours ago, valavan said:

இந்த தாக்குதலின் மூலம் தமிழனும் சிங்களவனும் பகையை கொஞ்சமாவது மறந்து செண்டிமீட்டர் அளவில் ஒன்றுபடுவான் என்று தெரிந்திருந்தால் 

மறந்தும்  மருந்துக்குகூட இந்த தாக்குதலை செய்திருக்க மாட்டார்கள்.

இந்த தாக்குதலை செய்தவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இருந்தால்? 

Link to comment
Share on other sites

  • Replies 63
  • Created
  • Last Reply
2 hours ago, Jude said:

உலகில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் விசா பெற வேண்டிய நிலையில் உள்ளது. அந்த அந்த நாடுகள் தான் விசா அலுவலகங்களை வடக்கு கிழக்கில் திறக்க வேண்டும். 

எந்தெந்த நாட்டு விசா வடக்கு கிழக்கில் பெறும் நிலையை விரும்புகிறீர்கள்?

கொழும்பு போய் தான் விசா பெற வேண்டுமானால் கொழும்பு போயே விமானம் ஏறலாமே. பலாலியில் சர்வதேச விமான நிலையம் எதற்கு? 😎

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் ஆரம்பித்த மாதிரி நுணாவிலான் அவர்கள் இணைத்த இணைப்பிலுள்ள நாடுகளுக்கான விசா பெறும் வகையில் அந்நாடுகளும் துணை தூதரகமோ, அல்லது வேறு ஏதும் அலுவலகமோ திறந்து விசா வழங்கும் முறையை கொண்டு வரலாம். நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பலாலியிலிருந்து விமானம் செல்வதாக கூறப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி 

இதை தமிழர்கள் தாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் விஜய் படங்களை எடுப்பதை விட்டிட்டு 
  
Jaffna Airways என ஒன்றை உருவாக்க்கி இதன் மூலம்  தமிழர்களை வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். 

மேலும்  duty free / rent a car / போறன்றவை திற‌ந்து அங்குள்ள இளைஞசர் யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

கொழும்பு போய் தான் விசா பெற வேண்டுமானால் கொழும்பு போயே விமானம் ஏறலாமே. பலாலியில் சர்வதேச விமான நிலையம் எதற்கு? 😎

யாழ்ப்பாணத்தில் இந்திய துணை தூதரகம் ஆரம்பித்த மாதிரி நுணாவிலான் அவர்கள் இணைத்த இணைப்பிலுள்ள நாடுகளுக்கான விசா பெறும் வகையில் அந்நாடுகளும் துணை தூதரகமோ, அல்லது வேறு ஏதும் அலுவலகமோ திறந்து விசா வழங்கும் முறையை கொண்டு வரலாம். நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பலாலியிலிருந்து விமானம் செல்வதாக கூறப்படவில்லை.

 

பலாலிக்கு வரும் விமானத்தில் வருபவர்களுக்கு நுழைவு விசா, பலாலி விமான நிலையத்திலேயே வழங்குவார்கள்.அதற்கு வருபவர்கள் கொழும்பு போக தேவை இல்லை.

பலாலியில் விமானம் ஏறுபவர்கள் அந்த விமானம் நேரடியாக செல்லும் நாட்டுக்கு மட்டும் செல்பவர்களாக மட்டுமே இருக்க போவதில்லை. உதாரணமாக உகண்டா போகும் ஒருவரும், சோமாலியா போகும் ஒருவரும், அமெரிக்கா போகும் ஒருவரும் பலாலியில் இருந்து துபாய் போகும் விமானத்தில் ஏறி பின்னர் துபாயில் தாம் போகும் இடங்களுக்கான விமானத்தில் ஏறுவர். இவர்கள் துபாய்க்கு வடக்கில் விசா எடுத்து பின்னர் துபாயில் தாம் போகும் நாடுகளுக்கு விசா எடுக்கும் நடைமுறைக்கு தேவையான நிர்வாக அமைப்புகள் எந்த நாட்டிலும் இல்லை. பலாலியில் விமானம் ஏறுபவர்கள் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போபவர்களாகவும், பலாலிக்கு வருபவர்கள் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களாகவும் இருப்பர்.

ஆகவே இந்த நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த எந்த நாடுகள் வடக்கில் துணை தூதரகம் அல்லது விசா அலுவலகம் திறக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த நாடுகளுக்கு மக்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இந்தியாவுக்கு வடக்கில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே அவர்களின் துணை தூதரகம் உள்ளது. முஸ்லிம் மக்கள் கேட்டால் துபாய் தனது அலுவலகத்தையும் திறக்க கூடும். சீனாவுக்கும் ஆர்வம் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தமிழர்களின் பொருண்மியத்தை நீண்ட கால நோக்கில் கட்டி எழுப்பவும்.. பலாலியை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்கவும் சகல வகையிலும் செயற்படுதல் அவசியம். இது ஒரு பலாலி விடுவிப்பாக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.. சிறந்தது. 

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:
பலாலிக்கு வரும் விமானத்தில் வருபவர்களுக்கு நுழைவு விசா, பலாலி விமான நிலையத்திலேயே வழங்குவார்கள். அதற்கு வருபவர்கள் கொழும்பு போக தேவை இல்லை.

பலாலியில் விமானம் ஏறுபவர்கள் அந்த விமானம் நேரடியாக செல்லும் நாட்டுக்கு மட்டும் செல்பவர்களாக மட்டுமே இருக்க போவதில்லை. உதாரணமாக உகண்டா போகும் ஒருவரும், சோமாலியா போகும் ஒருவரும், அமெரிக்கா போகும் ஒருவரும் பலாலியில் இருந்து துபாய் போகும் விமானத்தில் ஏறி பின்னர் துபாயில் தாம் போகும் இடங்களுக்கான விமானத்தில் ஏறுவர். இவர்கள் துபாய்க்கு வடக்கில் விசா எடுத்து பின்னர் துபாயில் தாம் போகும் நாடுகளுக்கு விசா எடுக்கும் நடைமுறைக்கு தேவையான நிர்வாக அமைப்புகள் எந்த நாட்டிலும் இல்லை. பலாலியில் விமானம் ஏறுபவர்கள் உலகின் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போபவர்களாகவும், பலாலிக்கு வருபவர்கள் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வருபவர்களாகவும் இருப்பர்.

ஆகவே இந்த நூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் எந்த எந்த நாடுகள் வடக்கில் துணை தூதரகம் அல்லது விசா அலுவலகம் திறக்க வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டால் அந்த நாடுகளுக்கு மக்களும் அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் விடுக்கலாம். இந்தியாவுக்கு வடக்கில் இருக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே அவர்களின் துணை தூதரகம் உள்ளது. முஸ்லிம் மக்கள் கேட்டால் துபாய் தனது அலுவலகத்தையும் திறக்க கூடும். சீனாவுக்கும் ஆர்வம் இருக்கலாம்.

பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவது முக்கியமாக இந்தியாவுடனான விமானப்போக்குவரத்தை ஆரம்பிக்க. அதன் பின் தான் ஏனையவற்றுக்கு முக்கியத்துவம்.

பலாலிக்கு வந்திறங்குவோரை மட்டும்  கருத்தில் கொண்டு விமானம் ஓட்ட மாட்டார்கள். வந்திறங்குவோருக்கு ஏற்ப ஏறுவோரும் இருக்க வேண்டும்.

சில நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வர முடியும். (ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் திரும்ப வேண்டும்).

இலங்கையிலிருந்து வெளியே செல்பவர்களாக இருப்பின் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வோர் தான் அதிகம்.

வேறு பல முக்கிய நாடுகளுக்கு செல்ல விரும்புவோர் இருப்பினும் இலங்கையிலிருந்து சென்று அங்கே அகதி கேட்டு விடுவார்கள் என நினைத்து பலரது விசா கோரிக்கை நிராகரிக்கப்படுவதுண்டு. சிலருக்கு வழங்கப்படுவதுமுண்டு.

கட்டுநாயக்கா விமான நிலையம் இருக்கத்தக்கதாக பலாலி விமான நிலையத்திற்கு அதிக விமானம் வந்து செல்லுமா என்பது கேள்விக்குறி. விமானம் ஓடத்தொடங்கியதும் தான் அது பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் vfs மூலம் சில நாடுகளுக்கு விசா விண்ணப்பிப்பர். பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்ட பின் vfs மூலமே மேலும் பல நாடுகளுக்கு விசா விண்ணப்பிக்கும் நிலை உருவாக்கப்படலாம்.

Link to comment
Share on other sites

2 hours ago, colomban said:

நல்லதொரு முயற்சி 

இதை தமிழர்கள் தாங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புலம்பெயர் தமிழர்கள் விஜய் படங்களை எடுப்பதை விட்டிட்டு 
  
Jaffna Airways என ஒன்றை உருவாக்க்கி இதன் மூலம்  தமிழர்களை வருமாறு ஊக்கப்படுத்த வேண்டும். 

மேலும்  duty free / rent a car / போறன்றவை திற‌ந்து அங்குள்ள இளைஞசர் யுவதிகளுக்கு பல வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாம்.

சுத்தம்

அங்கு உள்ளவர்கள் எப்படி அந்த விமான நிலையத்தை வைத்து எப்படி வெளி நாடு சென்று அசைலம் அடிக்கலாம் என்று தான் யோசிப்பார்கள்.

ஏன் விரைவில்  பாருங்கோ எவனாவது முகப்புத்தகத்தில் கதை கட்டுவான் அந்த விமான நிலையத்தில் இருந்து  சென்றால் இலகுவில் செல்லாம் என்றும் உங்கட தொலைபேசி இலக்கத்தை தாங்கோ என்பான் உடனே எல்லாறும் நம்பரை போட்டு விட்டு இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

எல்லாம் சரி... பலாலியைச் சுற்றி வாழந்த பல தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகள், காணிகள், தோட்டம் துரவுகளைவிட்டுக் கொழும்பிலும். புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் உறவினர்களுக்கு, அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடும் மனநிலையும் இல்லாது.... எப்போ விலை கூடும்,  ஏறும் அப்போது விற்றுப் பெரும் பணம் புரட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது பலருடன் கதைத்த அனுபவத்தில் அறிந்த உண்மை.

அப்படிப் பெரும் தொகை கொடுத்து வாங்கக்கூடியவர்களாக தமிழர்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. சர்வதேச விமான நிலையமென்றால் அங்கு பணிபுரியப்போகும் பணியாளர்கள் யார்..... நிச்சயம் தமிழர் ஒரு சுண்டக்காய் அளவு இருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுசார்ந்த பணியாளர்களாகவே இருப்பார்கள். தற்பொழுதபகூட பலாலி விமானநிலையம் சென்றால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்களைக் காண்பது அரிது. முன்நாள் முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் கூறியதுபோல் முதலில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும். அதன்பின் அபிவிருத்தி தானே விருத்திபெறும்.  

 

 

Link to comment
Share on other sites

12 minutes ago, nedukkalapoovan said:

பலாலியை இராணுவ மயமாக்கத்தில் இருந்து விடுவிக்கவும் சகல வகையிலும் செயற்படுதல் அவசியம். இது ஒரு பலாலி விடுவிப்பாக அமைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.. சிறந்தது. 

இராணுவத்திடம் இருப்பது தான் எமக்கு பாதுகாப்பு, இல்லாவிட்டால் அரபு நிதி உதவியுடன் இந்த காணிகள் அவர்களுக்கு விற்கப்படும்.எங்கடைகளும் வித்து போட்டு இங்க வந்து அசைவம் அடிக்குங்கள்;இல்லா விட்டால் புலம்பெயர் நாடுகளில் வீட்டு mortgage கட்டுவீனம், இல்லா விடில் 2/3 வது வீட்டுக்கு deposit கட்டுவீனம், Audi Q7 வாங்கி ஓடுவீனம், 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Dash said:

இராணுவத்திடம் இருப்பது தான் எமக்கு பாதுகாப்பு, இல்லாவிட்டால் அரபு நிதி உதவியுடன் இந்த காணிகள் அவர்களுக்கு விற்கப்படும்.எங்கடைகளும் வித்து போட்டு இங்க வந்து அசைவம் அடிக்குங்கள்;இல்லா விட்டால் புலம்பெயர் நாடுகளில் வீட்டு mortgage கட்டுவீனம், இல்லா விடில் 2/3 வது வீட்டுக்கு deposit கட்டுவீனம், Audi Q7 வாங்கி ஓடுவீனம், 

வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு ஊரில் உள்ள சொத்துக்களை வித்துச் சுட்டு வாழ்வதுகளை ஒன்றும் செய்ய ஏலாது. அவர்களை திருத்தனும் என்றால்..அமெரிக்க அதிபர் ரம் செய்வது போல மேற்கு நாடுகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து அகதி அந்தஸ்துக் கோரிய அனைவரையும் அவரவர் நாட்டுக்கு அமைதி நிலையை காட்டி திருப்பி அனுப்பினால்.. அன்றி.. இவர்களைத் திருத்த ஏலாது.

ஆனாலும்.. ஊரில் போய் வாழனும் என்று விரும்பும் பல உறவுகளையும்.. ஊரில் உள்ள சொத்துக்களை பரம்பரைக்கும் காக்க வேண்டும் என்று செயற்படும் உறவுகளையும் நாம் காண்கிறோம். 

Link to comment
Share on other sites

13 hours ago, Jude said:

இந்த தாக்குதலை செய்தவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இருந்தால்? 

இந்த தாக்குதலை செய்யாதவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இல்லாது இருந்தால்?

Link to comment
Share on other sites

12 minutes ago, Rajesh said:

இந்த தாக்குதலை செய்யாதவர்கள் யார்? இது அவர்களின் நோக்கமாக இல்லாது இருந்தால்?

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

Link to comment
Share on other sites

3 minutes ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

ஓ! அவரையும் தெரியுமோ?
பரவாயில்ல, இப்ப ஆவது ஒரு உருப்படியான ஒருவரின் போதனை ஞாபகம் வந்திருக்கே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையம் தொழில்பட தொடங்கியதும், சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து கணிசமான பயணிகளின் பறப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கொச்சின் பொதுவாக கொழும்பை விட 100£ குறைவாக டிக்கெட் இருக்கும் ஊர். எதாவது ஒரு இந்திய அல்லது மத்திய கிழக்கு விமானம் கொச்சின் போகும் விமானத்தையோ அல்லது கோட் ஷேர் செய்தோ பலாலிக்கு கொழும்பைவிட ஐரோபாவில் இருந்து 80£ குறைவாக டிக்கெட் போட்டால், ஒரு தொகை ஐரோப்பிய/கனேடிய தமிழ் பயணிகள் இதை விரும்புவர்.

வானுக்கு கொடுக்கும் செலவு, 8 மணத்தியால அசதியான பயணம், விபத்து ஆபத்து இவற்றை ஒப்பிடும் போது, நானாக இருந்தால் £50 வரை கூடக் கொடுத்தேனும் நேரே பலாலி போவதையே விரும்புவேன்.

விமான நிலையம் செயல்படத் தொடங்கவும், லைக்கா போன்றோர் வீண் ஜம்பத்துக்காகவேனும் ஒரு no frills airline ஒன்றை, பழைய 771 தட்டிவான் ரேஞ்சிலாவது இந்தியாவரை இயக்குவார்கள் என நினக்கிறேன்.

இலங்கையில் இருந்து வெளியே போகும், இலங்கை பிரஜைகள் என்று பார்த்தால், இந்தியாவுக்கு யாழிலே வீசா எடுக்கலாம். யூகே வீசா முழுக்க முழுக்க ஒன்லைன்/தபால் மூல விண்ணப்பம். சிங்கபூர், துபாய் ஒன் அரைவல்.  ஆகவே இது பெரிய பிரச்சனையாக இராது.

மருது போல இந்த துறைசார் நிபுணர்கள் என்ன நினக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

எல்லாம் சரி... பலாலியைச் சுற்றி வாழந்த பல தமிழ் குடும்பங்கள், தங்கள் வீடுகள், காணிகள், தோட்டம் துரவுகளைவிட்டுக் கொழும்பிலும். புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் சொத்துக்களை தங்கள் உறவினர்களுக்கு, அல்லது ஏழை எளியவர்களுக்கு வழங்கிவிடும் மனநிலையும் இல்லாது.... எப்போ விலை கூடும்,  ஏறும் அப்போது விற்றுப் பெரும் பணம் புரட்டலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இது பலருடன் கதைத்த அனுபவத்தில் அறிந்த உண்மை.

அப்படிப் பெரும் தொகை கொடுத்து வாங்கக்கூடியவர்களாக தமிழர்கள் இல்லை என்பது வெள்ளிடைமலை. சர்வதேச விமான நிலையமென்றால் அங்கு பணிபுரியப்போகும் பணியாளர்கள் யார்..... நிச்சயம் தமிழர் ஒரு சுண்டக்காய் அளவு இருந்தாலும், அவர்கள் சிங்கள அரசுசார்ந்த பணியாளர்களாகவே இருப்பார்கள். தற்பொழுதபகூட பலாலி விமானநிலையம் சென்றால் அங்கு தமிழ் உத்தியோகத்தர்களைக் காண்பது அரிது. முன்நாள் முதல்வர் விக்கினேசுவரன் அவர்கள் கூறியதுபோல் முதலில் தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பெறவேண்டும். அதன்பின் அபிவிருத்தி தானே விருத்திபெறும்.  

 

 

இதை ஊரில் உள்ளவன் சொல்ல வேணும்.எங்களை மாதிரி எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவக்கிறன் சொல்க்குடாது.நன்றி.

Link to comment
Share on other sites

15 minutes ago, சுவைப்பிரியன் said:

இதை ஊரில் உள்ளவன் சொல்ல வேணும்.எங்களை மாதிரி எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவக்கிறன் சொல்க்குடாது.நன்றி.

எல்லா அபிவிருத்திகளின் நன்மைகளும் அனுபவிக்கும் புலம்பெயர் நாடொன்றில் இருந்து, முன்னாள் முதல்வர் விக்னேசுவரன் அவர்கள் இதனைச் சொல்லவில்லை, ஊரிலிருந்தே சொன்னார். அவர் சொன்னதையே நானும் குறிப்பிட்டேன். 🙏

Link to comment
Share on other sites

2 hours ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

 

2 hours ago, Rajesh said:

ஓ! அவரையும் தெரியுமோ?
பரவாயில்ல, இப்ப ஆவது ஒரு உருப்படியான ஒருவரின் போதனை ஞாபகம் வந்திருக்கே!

உருப்படியான ஒருவரின் உருப்படியான போதனை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூசலார் நாயனாரை போல் ஒரு செய்தி பலகனவுகள் காணுகின்றோம்  என்ன களவாணி நோக்கத்துக்கு இரண்டு நாடும் அவசரபடுகினம் என்று தெரியவில்லை .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

விமானநிலையம் தொழில்பட தொடங்கியதும், சென்னை, திருச்சி விமான நிலையங்களில் இருந்து கணிசமான பயணிகளின் பறப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 

கொச்சின் பொதுவாக கொழும்பை விட 100£ குறைவாக டிக்கெட் இருக்கும் ஊர். எதாவது ஒரு இந்திய அல்லது மத்திய கிழக்கு விமானம் கொச்சின் போகும் விமானத்தையோ அல்லது கோட் ஷேர் செய்தோ பலாலிக்கு கொழும்பைவிட ஐரோபாவில் இருந்து 80£ குறைவாக டிக்கெட் போட்டால், ஒரு தொகை ஐரோப்பிய/கனேடிய தமிழ் பயணிகள் இதை விரும்புவர்.

வானுக்கு கொடுக்கும் செலவு, 8 மணத்தியால அசதியான பயணம், விபத்து ஆபத்து இவற்றை ஒப்பிடும் போது, நானாக இருந்தால் £50 வரை கூடக் கொடுத்தேனும் நேரே பலாலி போவதையே விரும்புவேன்.

விமான நிலையம் செயல்படத் தொடங்கவும், லைக்கா போன்றோர் வீண் ஜம்பத்துக்காகவேனும் ஒரு no frills airline ஒன்றை, பழைய 771 தட்டிவான் ரேஞ்சிலாவது இந்தியாவரை இயக்குவார்கள் என நினக்கிறேன்.

இலங்கையில் இருந்து வெளியே போகும், இலங்கை பிரஜைகள் என்று பார்த்தால், இந்தியாவுக்கு யாழிலே வீசா எடுக்கலாம். யூகே வீசா முழுக்க முழுக்க ஒன்லைன்/தபால் மூல விண்ணப்பம். சிங்கபூர், துபாய் ஒன் அரைவல்.  ஆகவே இது பெரிய பிரச்சனையாக இராது.

மருது போல இந்த துறைசார் நிபுணர்கள் என்ன நினக்கிறீர்கள்?

இப்போது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் (இனொன்று பேருக்கு மட்டும் இருக்கு) கொழும்பில் தமது 
கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிதாக சட்ட திடடம் ஒன்றும் இல்லை 
நானோ நீங்களோ கூட ஒரு விமானத்தை வாங்கி சென்னை 
விமான நிலையத்துக்கு பயணிக்க கூடியதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரும்போது 
சட்டதிட்டங்கள் மாறும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

இங்கு பயணிகளாகவும் வருமானம் தருவிகளாகவும் 
மட்டுமே தமிழர்கள் இருப்பார்கள் என்பதுதான் எனது 
எண்ணம். இவற்றை சரியாக நிறுவி பலன் பெற கூடிய அரசியல் 
தலைமை எதுவும் எம்மிடம் இல்லை.
1990 களில் அஷ்ரப் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது 
ஏர்லங்கா விமான சேவையின் பணிப்பெண்களாக 40 வீதம் வரை 
முஸ்லீம் பெண்களை உள்ளே புகுத்தினார்.
அப்படி செய்ய கூடிய யாரும் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. 

விமான சேவையை இலங்கையிலே பதிவு செய்தால் 
குறைவான பணம்தான் கேட்க்கிறார்கள் .... 2 மில்லியன் உள்ளான ரூபாய்கள் மட்டுமே. 

 

https://www.caa.lk/images/stories/pdf/regulations/Fees_Charges.pdf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

சும்மா இருப்பது சுகம்.😀 - யோகர் சுவாமிகள்

 யோகர் அவர் பாட்டுக்கு சொல்லீட்டுப் போட்டார். வடிவேலு சாமிகளிட்ட கேளுங்கோ சும்மா இருப்பது எவ்வளவு கஸ்டம் என்று 😂.

ஒரு பொல்லாப்பும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

இப்போது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம் (இனொன்று பேருக்கு மட்டும் இருக்கு) கொழும்பில் தமது 
கட்டுப்பாட்டில் இருப்பதால் பெரிதாக சட்ட திடடம் ஒன்றும் இல்லை 
நானோ நீங்களோ கூட ஒரு விமானத்தை வாங்கி சென்னை 
விமான நிலையத்துக்கு பயணிக்க கூடியதாக இருக்கிறது.
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரும்போது 
சட்டதிட்டங்கள் மாறும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

இங்கு பயணிகளாகவும் வருமானம் தருவிகளாகவும் 
மட்டுமே தமிழர்கள் இருப்பார்கள் என்பதுதான் எனது 
எண்ணம். இவற்றை சரியாக நிறுவி பலன் பெற கூடிய அரசியல் 
தலைமை எதுவும் எம்மிடம் இல்லை.
1990 களில் அஷ்ரப் விமான போக்குவரத்து அமைச்சராக இருந்த போது 
ஏர்லங்கா விமான சேவையின் பணிப்பெண்களாக 40 வீதம் வரை 
முஸ்லீம் பெண்களை உள்ளே புகுத்தினார்.
அப்படி செய்ய கூடிய யாரும் எமக்கு இல்லை என்பதுதான் உண்மை. 

விமான சேவையை இலங்கையிலே பதிவு செய்தால் 
குறைவான பணம்தான் கேட்க்கிறார்கள் .... 2 மில்லியன் உள்ளான ரூபாய்கள் மட்டுமே. 

 

https://www.caa.lk/images/stories/pdf/regulations/Fees_Charges.pdf

உண்மைதான். இங்கே சிவியை உதாரணம் காட்டி பலர் சொன்னது போல, இங்கே விமானநிலைய பொறுப்பதிகாரி முதல், பாதுகாப்பு கடமையில் இருக்கும் விமானப்படை வீரர் வரை 80% தொழில்கள் தமிழர் அல்லாதோருக்கே போகும். ஆனால் 20% தொழில்களாவது உள்ளூர் வாசிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது, இதுவரை இல்லாத 20% என்பதும் உண்மையே.

யுத்தம் முடிந்து, 2010 இல் போனபோது, முறிகண்டியில் பெரேரோ அண்ட் சன்ஸ் ஐ பார்த போது, எங்கள் தெருவோர உணவங்கள் ஈட்டிய வருவாயை இவர்கள் எடுக்கிறார்களே என எண்ணினேன். உள்ளே போய் பார்த்ததும் வேலையாட்கள் யாவரும் தமிழராய் இருக்க, குறைந்த பட்சம், தெருவோர தமிழ் கடைக்கார் கொடுப்பதை விட கூடிய சம்பளத்துக்கு இவர்களுக்காவது வேலை கிடத்திருக்கிறதே எனவும் தோன்றியது.

விமானநிலையம் வருவதால், வர்த்தகம் பெருகும், ஆகவே அதில் பல தனியார் துறை வாய்புகள் உருவாகலாம். உதாரணத்துக்கு நாமே கூட, கொழும்பில்  3 நாள் தங்கி செலவழிக்கும் காசை ஊரில் அல்லவா செலவழிப்போம்.

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

இவை எல்லாற்றையும் விட பாக்குநீரிணைக்கு இரு மருங்கும் இருக்கும் தமிழர்கள் நேரடி தொடர்பை ஏற்படுத்துவர். 

இப்படி பல அனுகூலங்களை நான் இதில் காண்கிறேன்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உண்மைதான். இங்கே சிவியை உதாரணம் காட்டி பலர் சொன்னது போல, இங்கே விமானநிலைய பொறுப்பதிகாரி முதல், பாதுகாப்பு கடமையில் இருக்கும் விமானப்படை வீரர் வரை 80% தொழில்கள் தமிழர் அல்லாதோருக்கே போகும். ஆனால் 20% தொழில்களாவது உள்ளூர் வாசிகளுக்கு கிடைக்கும் பட்சத்தில் அது, இதுவரை இல்லாத 20% என்பதும் உண்மையே.

யுத்தம் முடிந்து, 2010 இல் போனபோது, முறிகண்டியில் பெரேரோ அண்ட் சன்ஸ் ஐ பார்த போது, எங்கள் தெருவோர உணவங்கள் ஈட்டிய வருவாயை இவர்கள் எடுக்கிறார்களே என எண்ணினேன். உள்ளே போய் பார்த்ததும் வேலையாட்கள் யாவரும் தமிழராய் இருக்க, குறைந்த பட்சம், தெருவோர தமிழ் கடைக்கார் கொடுப்பதை விட கூடிய சம்பளத்துக்கு இவர்களுக்காவது வேலை கிடத்திருக்கிறதே எனவும் தோன்றியது.

விமானநிலையம் வருவதால், வர்த்தகம் பெருகும், ஆகவே அதில் பல தனியார் துறை வாய்புகள் உருவாகலாம். உதாரணத்துக்கு நாமே கூட, கொழும்பில்  3 நாள் தங்கி செலவழிக்கும் காசை ஊரில் அல்லவா செலவழிப்போம்.

இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்தால்,பெங்களூரு போன்ற சைபர் சிட்டிகளுக்கு ஒரு சட்டிலைட் சிட்டியாக கூட யாழை ஆக்கலாம். 

இவை எல்லாற்றையும் விட பாக்குநீரிணைக்கு இரு மருங்கும் இருக்கும் தமிழர்கள் நேரடி தொடர்பை ஏற்படுத்துவர். 

இப்படி பல அனுகூலங்களை நான் இதில் காண்கிறேன்/

மிகச்சரியான ,தெளிவான நோக்கு அண்ணை 
என்னதான் சிங்களவர்கள் கடை வைத்தாலும் கொள்வனனவு செய்யப்போவது நாம் தானே 
எமது சிந்தனையில் மாற்றத்தை கொண்டுவருவோம் ,பத்து ரூபாய் அதிகமென்றாலும் கொள்வனவினை தமிழர்களிடமே மேற்கொள்வோம் .போகும் பணம் தமிழர்களுக்கே போய் சேரட்டும் ,ஆனால் தமிழ் முதலாளிகள் இதனை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு பகல் கொள்ளை அடிக்க முற்படக்கூடாது, இருபக்கமும் ஒத்துழைப்பு இருப்பின் சிறுக சிறுக எம்மவர் பொருளாதாரத்தை நாமே முன்னேற்றலாம்  

Link to comment
Share on other sites

9 hours ago, பெருமாள் said:

பூசலார் நாயனாரை போல் ஒரு செய்தி பலகனவுகள் காணுகின்றோம்  என்ன களவாணி நோக்கத்துக்கு இரண்டு நாடும் அவசரபடுகினம் என்று தெரியவில்லை .

இந்தியா வெளிப்படையாக கூறியது,

இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இலங்கை வெளிப்படையாக கூறியது,

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Lara said:

இந்தியா வெளிப்படையாக கூறியது,

இந்தியாவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இலங்கை வெளிப்படையாக கூறியது,

இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகளை ஈர்க்க, இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள.

இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

போக போகத்தான் தெரியும் .

Link to comment
Share on other sites

7 minutes ago, Lara said:

.இவ்விரு நாடுகளும் வெளிப்படையாக கூறாதது இந்திய, ஜப்பான், அமெரிக்க படை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் என்பது. 😎

1987 - 1990 வரை இந்தியா பயன்படுத்தியது. சர்வதேச விமானநிலையமாக்கினால் தான் இந்தியாவால் எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது சரியாக படவில்லை. ஏனைய நாட்டு இராணுவங்களுக்கும் இது பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.