Jump to content

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் சுமை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரஜை ஒருவர் வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய அல்லது படு கடன் என சொல்லப்பட கூடிய அளவில் ஒருவருக்கு 530,000 ரூபாய் கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களே பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதனையும், அது கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், ஏற்கனவே காமினி விஜயசிங்க எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அல்லது ஜே.வி.பியினருடன இணைந்து அரசியலில் ஈடுப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.tamilwin.com/economy/01/219829?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இந்த நிலைமை மிகவும் பாரதூரமானது.

பிறந்த குழந்தை ஒன்றுக்கு 530,000 ரூபாய் கடன் என்று சொல்லப்படுகின்ற நிலையில் இலங்கையின் பொருளாதாரம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர வேண்டும்.

இந்த நிலைமைக்கு கடந்த 35 வருடங்களாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கங்களே பொறுப்பு கூற வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் மிகவும் மந்த கதியில் சென்று கொண்டிருப்பதனையும், அது கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை இருப்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை நீங்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லையே ...
தின்ன வழியில்லாமல் பிச்சையெடுத்தாலும்  எப்போதும் எவனோடாவது மோதி கடிபட்டுக்கொண்டிருக்க வேண்டும். இது போதாது இன்னும் இருக்கு . இலங்கை மாதான முத்தாக்கள் ரொட்டிக்காக விபச்சாரம் செய்கிறார்கள் என்ற நிலைமை வராமல் இருக்க புத்த பிரானிடம் வேண்டிக்கொள்ளுங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பொருளாதரம் மந்த கதியிம் போகின்றது.
அதற்காக இப்படியான கடன்களால்தான் மக்கள் பிச்சை எடுக்கின்றார்கள் என்பது தவறானது. இப்படியான புள்ளி விபரங்களை தவறாக புரிந்து கொள்ள கூடாது

அமெரிக்கா கூட கடன்பட்டுள்ளது அங்கு ஒவ்வொரு அமெரிக்கனும் கடன்பட்டவனாகவே இருப்பான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இலங்கையின் பொருளாதரம் மந்த கதியிம் போகின்றது.
அதற்காக இப்படியான கடன்களால்தான் மக்கள் பிச்சை எடுக்கின்றார்கள் என்பது தவறானது. இப்படியான புள்ளி விபரங்களை தவறாக புரிந்து கொள்ள கூடாது

அமெரிக்கா கூட கடன்பட்டுள்ளது அங்கு ஒவ்வொரு அமெரிக்கனும் கடன்பட்டவனாகவே இருப்பான்

அமெரிக்காவும் சொறி லங்காவும் ஒன்றா பாஸ் ? அவர்களின் gdp 19 ட்ரில்லியன்களுக்கு மேல் சொறிலங்கா வெறும் 80 பில்லியன் மட்டுமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தமிழன் படத்தில் நாட்டின் மொத்த கடனை அடைக்க தன் பங்காக ஒரு ரூபாய் தருவார்..பிறகு எல்லோரும் அதையே பாலோ செய்வினம்.. அப்படி செய்தால் அரசியல்வாதிகள் விட்டது  பீடை என்டு சந்தோஷபடுவினம் அல்லோ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

அமெரிக்காவும் சொறி லங்காவும் ஒன்றா பாஸ் ? அவர்களின் gdp 19 ட்ரில்லியன்களுக்கு மேல் சொறிலங்கா வெறும் 80 பில்லியன் மட்டுமே .

பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவும் சிறிலங்காவும் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாடும் சிறிலங்காவுடன் ஓப்பிடப் பட முடியாதது! ஆனால், 19 ட்ரில்லியன் மொத்த உற்பத்தி கொண்ட அமெரிக்காவின் சனத்தொகை 300 மில்லியனுக்கும் அதிகம். 80 பில்லியன் மொத்த உற்பத்தி கொண்ட சிறிலங்காவின் சனத்தொகை 21 மில்லியன் மட்டுமே! எனவே தான் GDP per capita என்ற அளவீடு மொத்த உற்பத்தியை விட பொருத்தமான ஒப்பீட்டு அளவீடாக இருக்கிறது. GDP per capita இன் படி, அமெரிக்கா ~அறுபதாயிரம் டொலர்கள், சிறிலங்கா 5000 டொலர்கள். வாழ்க்கைச் செலவைப் பார்க்கும் போது சிறிலங்காவில் வாழ்வோர் அமெரிக்கர்களை விட நன்றாக இருக்க வேண்டும்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விஜய் தமிழன் படத்தில் நாட்டின் மொத்த கடனை அடைக்க தன் பங்காக ஒரு ரூபாய் தருவார்..பிறகு எல்லோரும் அதையே பாலோ செய்வினம்.. அப்படி செய்தால் அரசியல்வாதிகள் விட்டது  பீடை என்டு சந்தோஷபடுவினம் அல்லோ..👍

 

நீங்கள் ஒத்தை ரூபாவாக கொடுக்க அதையும் ஆட்டையைப் போட்டுவடுவார்களே?
ஒத்தை ரூபா பலர் போட அதுவே பெரிய தொகையாக மாற அடித்த மனம் கேட்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

அறுபதாயிரம் டொலர்கள், சிறிலங்கா 5000 டொலர்கள். வாழ்க்கைச் செலவைப் பார்க்கும் போது சிறிலங்காவில் வாழ்வோர் அமெரிக்கர்களை விட நன்றாக இருக்க வேண்டும்! 
 

வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமல் துறைமுகம் களை மற்றைய நாடுகளுக்கு அமரிக்கர்கள் தாரை வார்ப்பது வழக்கமா ? வாங்கிய கடனின் வட்டியை கட்டுவதுக்கு மேலும் கடன்படுவது உண்டா அங்கும் ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமல் துறைமுகம் களை மற்றைய நாடுகளுக்கு அமரிக்கர்கள் தாரை வார்ப்பது வழக்கமா ? வாங்கிய கடனின் வட்டியை கட்டுவதுக்கு மேலும் கடன்படுவது உண்டா அங்கும் ?

இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது 
சொந்த நாட்டு மக்களை ஒடுக்க எத்தனை பேருடனும் விபச்சாரம் செய்யத் தயார் எனும் பரந்த நோக்கம் கொண்டவர்கள் தான் சிங்களவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிங்களவனே இறங்கி வந்து தீர்வை தந்தாலும் எங்கடையில் கொஞ்சம் சிங்களவனுக்கு தொண்டு செய்வம் என்று ஒத்தைக்காலில் நிக்குதுகள் இப்படியானதுகள் இருக்கும் மட்டும் சிலோனில் தமிழனுக்கு விடிவு வராது என்பதுக்கு இந்த திரியே சாட்சி பாருங்க சிங்களவன்தான் இவ்வளவு கடனாளியாகி விட்டம் என்று அழுகிறான் ஆனால் புனுகு பூசுவது நம்ம ஆட்கள் தான் எங்கை போய் இப்படி டிசைனை வரம் வாங்கி வந்திருக்கினம் என்று விளங்கவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, பெருமாள் said:

இங்கு சிங்களவனே இறங்கி வந்து தீர்வை தந்தாலும் எங்கடையில் கொஞ்சம் சிங்களவனுக்கு தொண்டு செய்வம் என்று ஒத்தைக்காலில் நிக்குதுகள் இப்படியானதுகள் இருக்கும் மட்டும் சிலோனில் தமிழனுக்கு விடிவு வராது என்பதுக்கு இந்த திரியே சாட்சி பாருங்க சிங்களவன்தான் இவ்வளவு கடனாளியாகி விட்டம் என்று அழுகிறான் ஆனால் புனுகு பூசுவது நம்ம ஆட்கள் தான் எங்கை போய் இப்படி டிசைனை வரம் வாங்கி வந்திருக்கினம் என்று விளங்கவில்லை .

பெருமாள் அண்ணை, நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலை மட்டும் தூக்குவது போல, உங்களுக்கு ஒரு பொருளியல் உண்மை சிறிலங்காவுக்குச் சாதகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டினாலும் அது சிங்கள வக்காலத்தாகத் தெரிவது ஆச்சரியமில்லை! இது தேசிக்காய் வியாதியின் ஒரு சின்ன அறிகுறி மட்டுமே! அதுக்கு மருந்தை நீங்களே தேட வேண்டும், உங்கள் நோய்க்காக மற்றவர் மேல் காரணமில்லாமல் பாய்வது சரியில்லை!

சிறி லங்காவின் பொருளாதார மந்த நிலையை  அமெரிக்காவினதுடன் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதென என எழுதியிருக்கிறேனே? ஒரு பொருளியல் அடிப்படை அறிவு இல்லை என்பது பரவாயில்லை, தமிழ் வாசிப்பும் கிரகிப்பும் கூட உங்களுக்குப் பிரச்சினையா? பிறகேன் ஐயா உங்களுக்கெல்லாம் தமிழ் தேசியமும் தமிழ் ஈழ ஆசையும்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

 

பெருமாள் அண்ணை, நாய்க்கு எங்கை அடிபட்டாலும் காலை மட்டும் தூக்குவது போல, உங்களுக்கு ஒரு பொருளியல் உண்மை சிறிலங்காவுக்குச் சாதகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டினாலும் அது சிங்கள வக்காலத்தாகத் தெரிவது ஆச்சரியமில்லை! இது தேசிக்காய் வியாதியின் ஒரு சின்ன அறிகுறி மட்டுமே! அதுக்கு மருந்தை நீங்களே தேட வேண்டும், உங்கள் நோய்க்காக மற்றவர் மேல் காரணமில்லாமல் பாய்வது சரியில்லை!

சிறி லங்காவின் பொருளாதார மந்த நிலையை  அமெரிக்காவினதுடன் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதென என எழுதியிருக்கிறேனே? ஒரு பொருளியல் அடிப்படை அறிவு இல்லை என்பது பரவாயில்லை, தமிழ் வாசிப்பும் கிரகிப்பும் கூட உங்களுக்குப் பிரச்சினையா? பிறகேன் ஐயா உங்களுக்கெல்லாம் தமிழ் தேசியமும் தமிழ் ஈழ ஆசையும்? 😎

எங்களுக்கு படிப்பறிவு இல்லிதானுங்கோ ஆனால் உங்களுக்கு வாசிச்சு நாங்க கேட்ட கேள்விக்கு விடை கிடையாது அதை தாண்டி இங்கால வந்து உங்கடை சுத்துமாத்து சுமத்திரனை போல் சவுடால் அடிக்க எப்படி முடியுது என்று விளங்க வில்லை ?

மேலும் கடன்படனும் என்றால் பிழையான தரவை காண்பித்து இருப்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, பெருமாள் said:

வாங்கிய கடனை அடைக்க வழியில்லாமல் துறைமுகம் களை மற்றைய நாடுகளுக்கு அமரிக்கர்கள் தாரை வார்ப்பது வழக்கமா ? வாங்கிய கடனின் வட்டியை கட்டுவதுக்கு மேலும் கடன்படுவது உண்டா அங்கும் ?

 

 

அண்ணை, இதுக்கு எனக்குப் பதில் தெரியாதென்று நம்புவது உங்களுக்குக் குதூகலம் தந்தால் நம்புங்கள்! நான் ஏன் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுப்பான்? ஆனால் கீழே மீளவும் கோடு காட்டியிருக்கும் கருத்து, எனது பதில் என்னவென்று deduce பண்ணும் அளவுக்கு கலிபர் உள்ள ஆட்களுக்கு மட்டும்! நீங்கள் உங்கள் மூளையைக் கஷ்டப் படுத்தாதீர்கள்!😎

".....சிறி லங்காவின் பொருளாதார மந்த நிலையை  அமெரிக்காவினதுடன் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதென என எழுதியிருக்கிறேனே? "

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

 

அண்ணை, இதுக்கு எனக்குப் பதில் தெரியாதென்று நம்புவது உங்களுக்குக் குதூகலம் தந்தால் நம்புங்கள்! நான் ஏன் உங்கள் மகிழ்ச்சியைக் கெடுப்பான்? ஆனால் கீழே மீளவும் கோடு காட்டியிருக்கும் கருத்து, எனது பதில் என்னவென்று deduce பண்ணும் அளவுக்கு கலிபர் உள்ள ஆட்களுக்கு மட்டும்! நீங்கள் உங்கள் மூளையைக் கஷ்டப் படுத்தாதீர்கள்!😎

".....சிறி லங்காவின் பொருளாதார மந்த நிலையை  அமெரிக்காவினதுடன் மட்டுமல்ல, எந்த வளர்ந்த நாட்டுடனும் ஒப்பிட முடியாதென என எழுதியிருக்கிறேனே? "

 

உங்களை சார்ந்தவர்களும் அரசியலில் கிழே விழும்போது சுமத்திரன் கூட்டம் ஒரு வார்த்தை சொல்லுவார் "நான் அப்பவே சொல்லியிட்டன் " என்று ஒரு பைல் கட்டை தூக்கி காட்டுவார் அதுபோலத்தான் உங்கள் பதில் 

லங்கா கடன் தொகை பற்றி வரும் திரிகளில் அமரிக்காவும் கடன் வேண்டுது என்று சிம்பிளா அந்த திரிகளில் நீங்கள் சொல்வது உண்டு சிங்களமே அழுவுது மீள முடியாத கடன் பொறிக்குள் மாட்டியிட்டம் என்று யாதார்த்தை எழுதினால் உங்களுக்கு சுமத்திர வாதம்  நாங்க 6 என்றால் உங்களுக்கு 9 நாங்கள் 9 சொன்னால் உங்களுக்கு 6 அதுதான் சுமத்திர வாதம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

உங்களை சார்ந்தவர்களும் அரசியலில் கிழே விழும்போது சுமத்திரன் கூட்டம் ஒரு வார்த்தை சொல்லுவார் "நான் அப்பவே சொல்லியிட்டன் " என்று ஒரு பைல் கட்டை தூக்கி காட்டுவார் அதுபோலத்தான் உங்கள் பதில் 

லங்கா கடன் தொகை பற்றி வரும் திரிகளில் அமரிக்காவும் கடன் வேண்டுது என்று சிம்பிளா அந்த திரிகளில் நீங்கள் சொல்வது உண்டு சிங்களமே அழுவுது மீள முடியாத கடன் பொறிக்குள் மாட்டியிட்டம் என்று யாதார்த்தை எழுதினால் உங்களுக்கு சுமத்திர வாதம்  நாங்க 6 என்றால் உங்களுக்கு 9 நாங்கள் 9 சொன்னால் உங்களுக்கு 6 அதுதான் சுமத்திர வாதம் .

கடன் சுமை, தனிநபர் வருமானம், பணவீக்கம், மொத்த உற்பத்தி, இவையெல்லாம் நீங்கள் நினைப்பது போல இலக்கத்தை மட்டும் பார்த்து தீர்மானிக்கும் விடயம் இல்லையென்றே கொழும்பான் சொன்னது, நானும் ஆமோதிப்பது. அப்படி ஒரு குறிகாட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பொருளியல் நிலையைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் தரவுகள் இருந்தால் இங்கே குறிப்பிடுங்கள், எல்லாரும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்! இதில் ஏன் சுமந்திர வாதம் அது இது என்று தொடர்பேயற்ற கதைகள்?

உண்மையைச் சொன்னால் நாம் சிங்களவனுக்கு ஆதராவாகி விடுவோமா? தேசிக்காய்கள் வந்து வானம் நாவல் கலரென்றால், அதை மறுப்பவர் சிங்கள விசுவாசியாகி விடுவாரா? "அடடா நாவல் கலரு தேன்!" என்று முதுகு சொறிபவர் தமிழ்தேசியராகி விடுவாரா? என்ன மொக்கைக் கருத்தையா இது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கடன் சுமை, தனிநபர் வருமானம், பணவீக்கம், மொத்த உற்பத்தி, இவையெல்லாம் நீங்கள் நினைப்பது போல இலக்கத்தை மட்டும் பார்த்து தீர்மானிக்கும் விடயம் இல்லையென்றே கொழும்பான் சொன்னது, நானும் ஆமோதிப்பது. அப்படி ஒரு குறிகாட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு நாட்டின் பொருளியல் நிலையைத் தீர்மானிக்க முடியும் என்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் தரவுகள் இருந்தால் இங்கே குறிப்பிடுங்கள், எல்லாரும் ஏதாவது கற்றுக் கொள்ளலாம்! இதில் ஏன் சுமந்திர வாதம் அது இது என்று தொடர்பேயற்ற கதைகள்?

உண்மையைச் சொன்னால் நாம் சிங்களவனுக்கு ஆதராவாகி விடுவோமா? தேசிக்காய்கள் வந்து வானம் நாவல் கலரென்றால், அதை மறுப்பவர் சிங்கள விசுவாசியாகி விடுவாரா? "அடடா நாவல் கலரு தேன்!" என்று முதுகு சொறிபவர் தமிழ்தேசியராகி விடுவாரா? என்ன மொக்கைக் கருத்தையா இது?

அறிவாளி கூட்டம் ஐயா நீங்கள் உங்களுக்கு படிப்பிச்ச வாத்தியார்கள் உங்களுக்கு படிபிச்சு விட்டு பாடசாலை வாசல் தாண்ட முதலே உங்கடை விதண்டாவாத அறிவினால மாரடைப்பு வந்து நேரே மேல் உலகம்  அல்லது தெறிச்சு ஓடியிருப்பினம் அல்லது வாத்தியார் தொழிலையே மறந்து இருப்பினம் .

Link to comment
Share on other sites

On 7/8/2019 at 11:26 AM, பெருமாள் said:

இலங்கையில் பிரஜை ஒருவருக்கு தற்போது 530,000 ரூபாய் கடன் இருப்பதாக முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் கொள்ளையடித்த சொத்துக்களை மீட்டால் இந்த தொகை பாதியாகக் குறையும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பெருமாள் said:

அறிவாளி கூட்டம் ஐயா நீங்கள் உங்களுக்கு படிப்பிச்ச வாத்தியார்கள் உங்களுக்கு படிபிச்சு விட்டு பாடசாலை வாசல் தாண்ட முதலே உங்கடை விதண்டாவாத அறிவினால மாரடைப்பு வந்து நேரே மேல் உலகம்  அல்லது தெறிச்சு ஓடியிருப்பினம் அல்லது வாத்தியார் தொழிலையே மறந்து இருப்பினம் .

பெருமாள் அண்ணை, எனக்குப் படிப்பிச்ச ஆசிரியர்களில் பலர் இன்னும் உயிரோடிருக்கீனம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு ரெக்னிகல் விடயத்தை ஒருவர் சுட்டிக் காட்டும் போது ஆராய்ந்து  ஏற்றுக் கொள்ளும் அல்லது ஆதாரங்கள் தந்து மறுதலிக்கும் பண்பில்லாமல் படிப்பு, ஆசிரியர் எண்டு அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! நான் உங்களுக்குப் படிப்பித்த ஆசிரியர்களை மட்டுமல்ல, உங்கள் படிப்பைக் கூட இழுத்துப் பேசப் போவதில்லை! யார் எவ்வளவு ஊற்றினாலும் பாத்திரம் ஓட்டையாய் இருந்தால் விளைவு பூச்சியம் என்பதை முதலாம் வகுப்பிலேயே கற்றுக் கொண்டு விட்டேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

பெருமாள் அண்ணை, எனக்குப் படிப்பிச்ச ஆசிரியர்களில் பலர் இன்னும் உயிரோடிருக்கீனம் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?

உங்களுக்கு என்ன பிரச்சினை? ஒரு ரெக்னிகல் விடயத்தை ஒருவர் சுட்டிக் காட்டும் போது ஆராய்ந்து  ஏற்றுக் கொள்ளும் அல்லது ஆதாரங்கள் தந்து மறுதலிக்கும் பண்பில்லாமல் படிப்பு, ஆசிரியர் எண்டு அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! நான் உங்களுக்குப் படிப்பித்த ஆசிரியர்களை மட்டுமல்ல, உங்கள் படிப்பைக் கூட இழுத்துப் பேசப் போவதில்லை! யார் எவ்வளவு ஊற்றினாலும் பாத்திரம் ஓட்டையாய் இருந்தால் விளைவு பூச்சியம் என்பதை முதலாம் வகுப்பிலேயே கற்றுக் கொண்டு விட்டேன்! 

குழப்பதின் மறுபெயர்தான் உங்கள் பெயராக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

குழப்பதின் மறுபெயர்தான் உங்கள் பெயராக்கும் .

சரி, தேசிய கடன் சுமை மட்டும் கொண்டு பொருளியல் நிலையைக் கணித்திருக்கும் ஒரு நாட்டை உதாரணம் தந்து குழப்பம் தீருங்கள்! தெளிவாக இருக்கிறீர்கள் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது பெருமாள் அண்ணைக்கல்ல, அவர் தெளிவாகத் தான் இருக்கிறார்! ஏனையோர் தேசிய கடன்சுமை- மொத்த உற்பத்தி விகிதத்தின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ள வாசிக்கலாம்!

https://www.thebalance.com/what-is-the-debt-to-gdp-ratio-1978993

இதுவும் பெருமாள் அண்ணைக்கல்ல! இந்த உலகவங்கி இணையத்தில் 2014 வரையான தேசிய கடன் சுமை மொத்த உற்பத்தி விகிதம் அனேகமான நாடுகளுக்கு என்ன என்று அறிந்து கொள்ளலாம் (சிங்கப்பூரைக் கவனியுங்கள்!)

https://data.worldbank.org/indicator/GC.DOD.TOTL.GD.ZS?view=chart

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

இது பெருமாள் அண்ணைக்கல்ல, அவர் தெளிவாகத் தான் இருக்கிறார்! ஏனையோர் தேசிய கடன்சுமை- மொத்த உற்பத்தி விகிதத்தின் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ள வாசிக்கலாம்!

https://www.thebalance.com/what-is-the-debt-to-gdp-ratio-1978993

இதுவும் பெருமாள் அண்ணைக்கல்ல! இந்த உலகவங்கி இணையத்தில் 2014 வரையான தேசிய கடன் சுமை மொத்த உற்பத்தி விகிதம் அனேகமான நாடுகளுக்கு என்ன என்று அறிந்து கொள்ளலாம் (சிங்கப்பூரைக் கவனியுங்கள்!)

https://data.worldbank.org/indicator/GC.DOD.TOTL.GD.ZS?view=chart

 

 

இப்படி நாங்களும் நாலு லிங்க் என்ன நூறு லிங்க் இங்கு போட முடியும் விளக்கம் முக்கியம் பாஸ் .

எனக்கு போடாவிட்டாலும் பின்னுக்கு வருபவர்களுக்கு விளக்கம் தேவை அவர்கள் உங்களை தப்பாக நினைக்க கூடாது பாருங்க .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

இப்படி நாங்களும் நாலு லிங்க் என்ன நூறு லிங்க் இங்கு போட முடியும் விளக்கம் முக்கியம் பாஸ் .

எனக்கு போடாவிட்டாலும் பின்னுக்கு வருபவர்களுக்கு விளக்கம் தேவை அவர்கள் உங்களை தப்பாக நினைக்க கூடாது பாருங்க .

விளக்கத்திற்குத் தான் அண்ணை இணைப்புப் போட்டிருக்கு! "லிங்கை அழுத்தி உள்ளே போய் வாசிக்கவும்" என்று வழிமுறை உங்களுக்குத் தேவையானால் போட்டு விடுவா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.