Jump to content

அமேசான் நிறுவனம் வளர்ந்த வரலாறு - வியக்கவைக்கும் ஒரு நிறுவனத்தின் வணிகம்


Recommended Posts

அமேசான் நிறுவனத்தை தொடங்கிய போது, அதன் நிறுவனர்களுக்கே அந்த நிறுவனம் குறித்து நம்பிக்கை இல்லை.

ஜெஃப் 1999ம் ஆண்டு, "அமேசான். காம் நிறுவனம் வெற்றிகரமான நிறுவனமாக இருக்குமென எந்த உத்தரவாதமும் இல்லை. நாங்கள் செய்ய முயல்வது சிக்கலான ஒரு விஷயம்." என்று கூறி இருக்கிறார். அதுவும் நிறுவனம் தொடங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு.

அமேசான் நிறுவனம் தொடங்கி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. உலகத்தின் மதிப்புமிக்க நிறுவனங்களில் இப்போது அதுவும் ஒன்று. உலக பணக்காரர்களின் ஜெஃபும் ஒருவர்.

ஒரு ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தளவுக்கு சாதித்தது எப்படி?

அமேசான் நிறுவனத்தின் வணிகம், அதன் பொருளாதாரம் நம்மை வியக்க வைக்கிறது.

கடந்தாண்டு அந்த நிறுவனத்தின் மதிப்பு 1 ட்ரில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டிருக்கிறது. சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக அமேசான் உள்ளது.

அமேசானின் ஆண்டு வருமானமும் அனைவரையும் மலைக்க வைக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் அதன் விற்பனை 275.06 பில்லியன் டாலராக இருக்குமென்றும், 2020 இறுதிக்குள் அதன் வருமானம் 320 பில்லியன் டாலராக இருக்குமென்றும் கணிக்கப்படுகிறது.

அமேசான்

சாத்தியமான வெற்றி

உலகெங்கும் தமது நிறுவனத்தை விரிவாக்கம் செய்தது மட்டும் அமேசானின் வெற்றிக்கு காரணமில்லை.

அமேசான்

பல தரப்பட்ட விஷயங்களை அமேசானிற்குள் கொண்டுவந்ததுதான், அதன் வெற்றிக்கு காரணம், அதாவது வீடியோ ஸ்ட்ரீமிங், ப்ரைம் ஆடியோ, அண்மையில் கொண்டுவரப்பட்ட காய்கறி விற்பனை என இந்த நிறுவனம் பல துறைகளில் கால்பதித்து வெற்றி கண்டிருக்கிறது.

இந்த நிறுவனம் நேரடியாக ஃபேஸ்புக், ஆப்பிள், கூகுள், நெட்ஃபிளீக்ஸுடன் போட்டி போடுகிறது.

அவை அனைத்துக்குமான தொடக்க புள்ளி புத்தக விற்பனைதான்.

ஆன்லைன் புத்தக விற்பனை

"நாங்கள் நான்காண்டுகளுக்கு முன்பு முதல்முதலாக புத்தக விற்பனை செய்த போது, அனைவரும் எங்களை கிண்டல் செய்தார்கள். இந்த கணிணி கூட்டத்துக்கு புத்தகம் குறித்து என்ன தெரியுமென பகடி செய்தார்கள். அது உண்மையும் கூட" என்று 1999ம் ஆண்டு ஜெஃப் கூறினார்.

அமேசான்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், அமேசான் புத்தக விற்பனையில் மாபெரும் சாதனை படைத்தது.

இ - புக்ஸ் அறிமுகமான போது, அமேசான் நிறுவனம் அந்த சந்தையையும் கைப்பற்றியது.

Amzonபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

90களின் பிற்பகுதியில் புத்தகம் மட்டும் அல்லாமல் இசை டிவிடிகள் விற்பனையிலும் அமேசான் நிறுவனம் இறங்கியது.

அதன் பின்னால், எலெக்ட்ரானிக் டாய்ஸ் மற்றும் சமையலறை பொருட்கள் விற்பனையிலும் இறங்கியது.

அதன்பின் பத்தாண்டுகளில், அமேசான். காம் இணைய விற்பனையில் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்தது.

2005ம் ஆண்டு அமேசான் நிறுவனம் பிரைம் சேவையை தொடங்கியது.

அமேசான் ப்ரைம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஏறத்தாழ இந்த நிறுவனத்திற்கு இப்போது 10 கோடி சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் பணம் கொடுத்து சந்தாதாரர்கள் இணையும் இரண்டாவது பெரிய நிறுவனம் அமேசான்.

கிண்டில் அறிமுகம்

2007ம் ஆண்டு கிண்டில் என்னும் இ புக் ரீடரை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம் அதிலும் வெற்றிகொடி நாட்டியது அந்நிறுவனம்.

அதன் பின் எக்கோ ஸ்பீக்கர் அலெக்ஸாவை அறிமுகம் செய்தது.

இப்போது அமெரிக்காவில் ஸ்மார்ட் டிவைசஸ் விற்பனையில் மூன்றாவது இடத்தில் உள்ளது அமேசான் நிறுவனம்.

வளர்ச்சியை மட்டுமல்ல வீழ்ச்சியையும் கண்டுள்ளது இந்த நிறுவனம்.

2018ம் ஆண்டு பிற்பகுதியில், இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ச்சியை கண்டது. ஆனால், அதிலிருந்து மீண்டது.

அமேசான்

இணைய விற்பனையில் உச்சியை தொட்ட இந்த நிறுவனம், நேரடி விற்பனைக்காக கடைகளையும் திறக்க திட்டமிட்டுள்ளது.

அமேசான்

அடுத்த 25 ஆண்டுகளில் அந்த நிறுவனம் எப்படியாக இருக்கும்? காத்திருந்து காண்போம்.

https://www.bbc.com/tamil/science-48901228

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.