Jump to content

இத்தால் சகலரும் அறிவது


Recommended Posts

அறிவித்தல்

யாழ் இணைய கருத்துக்களத்தின் மட்டுறுத்தினர்களாக பணியாற்றிய இராவணன், மதன் ஆகியோர் நேரமின்மை போன்ற காரணங்களால் தொடர்ந்து கருத்துக்களத்துக்கு வருகை தருவதில்லை - மட்டுறுத்தல் பணிகளில் தொடர்ந்து செயலாற்ற முடியவில்லை. இதன் காரணமாக மேலும் அவர்களுக்கு சுமையைக் கூட்டாமல், மட்டுறுத்தல் பணிகளில் இருந்து விடுவிக்கிறோம்.

கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றி, பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட மட்டுறுத்தினர்கள்:

யாழ் (சுரதா)

இளைஞன்

இராவணன்

மதன்

இளங்கோ

கரவை பரணி

கபிலன்

கவிதன்

யாழரசி

யாழினி

இதுவரை காலமும் கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றியதற்கும், பல்லாயிரக் கணக்கானோர் பார்வையிடும் இக் கருத்துக்களத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல உதவியமைக்கும் கருத்துக்கள நிர்வாகம் இவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. கருத்துக்களத்தில் அவர்களின் பணியும், தமது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கி வழங்கிய ஒத்துழைப்பும் என்றும் நினைவிலும், குறிப்பிலும் இருக்கும்.

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும், ஒவ்வொருநாளும் எழுதப்படும் கருத்துக்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டும் புதிய மட்டுறுத்துனர் ஒருவரை இன்று இணைத்துக் கொள்கிறோம். இவரது நிர்வாகப் பெயர்: எழுவான்.

இதனடிப்படையில் இப்போது கருத்துக்கள நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்றும் மட்டுறுத்தினர்கள்:

யாழ்பிரியா

யாழ்பாடி

இணையவன்

எழுவான்

கருத்துக்கள உறவுகள் அனைவரும் கருத்துக்கள விதிமுறைகளை மதித்து செயற்படுவதோடு, கருத்துக்கள மட்டுறுத்துனர்களின் மட்டுறுத்தல் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நட்புடன் கேட்டுக்கொள்கின்றோம். :huh:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 75
  • Created
  • Last Reply

அறிவித்தல்

யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம்,

நாளுக்கு நாள் யாழ் இணையத்தின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியே கருத்துக்களம் பகுதி மட்டுமல்லாது, யாழ் இணையத்தின் ஒளித்தடம் பகுதியும் பலராலும் தொடர்ந்து பார்க்கப்படுகிற ஒரு பகுதியாக இருக்கிறது. ஒருநாளைக்கு ஒருவராலேயே பல தடவைகள் பல பக்கங்கள் பார்க்கப்படுகின்றன. அந்தவகையில் யாழ் இணையத் தளத்தின் பாவனையின் அளவு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக இது மேலும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நேற்றும் இன்றும் தகவல் வங்கியின் செயற்பாட்டில் இடையிடையே தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தத் தடங்கல்களை களைந்து யாழ் இணையத்தின் இயக்கத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தகவல் வங்கி, தள வழங்கி ஆகியவற்றின் செயற்திறனை அதிகரித்து வேகமாகவும், தடங்கல் இன்றியும் யாழ் இணையப் பக்கங்களைப் பார்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எனவே, அதுவரை ஏற்படும் தடங்கல்களுக்கு வருந்துகிறோம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.

நன்றி

நட்புடன்,

யாழ் இணைய நிர்வாகம்

Link to comment
Share on other sites

திருத்தம் செய்தல்

கருத்துக்கள உறவுகளே,

கருத்துக்களத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் புதிய பதிவைத் தொடங்குவதற்கும், தொடங்கிய தலைப்புக்கு பதிலளிப்பதற்கும், உங்கள் பதிவுகளில் உள்ள (எழுத்துப்)பிழைகளைத் திருத்துவதற்கும் உங்களுக்கு அனுமதியுள்ளது. இதனை, குறிப்பாக திருத்தம் செய்வதற்கான அனுமதியை, நீங்கள் தவறாகப் பயன்படுத்தமாட்டீர்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்தோம்.

ஆனால், புதிதாக களத்தில் இணைந்துகொண்ட உறுப்பினர் கரிகாலன் நேற்று இரவு தான் தொடங்கிய தலைப்பில் தனது கருத்துக்களையெல்லாம் நீக்கியிருக்கிறார். இது அவருக்கு பதிலெழுதிய அனைத்து கருத்துக்கள உறவுகளையும் அவமதிக்கிற அதேவேளை, கருத்துக்கள நிர்வாகத்தினரை மேலும் மேலும் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் இறுக்கமாக்கச் செய்கிறது.

ஒரு புதிய தலைப்பை தொடங்குவதற்கு முதல் அல்லது ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பொறுமையுடன் யோசிக்கவேண்டும். கருத்தை எழுதியதன் பின்னும் - மற்றவர்கள் உங்கள் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - உங்கள் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், உங்கள் கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் உங்கள் கருத்தை முற்றாக நீக்குவதோ, உங்கள் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதோ தவறானது. ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் பலதடவை யோசியுங்கள். எழுதியதன் பின் அதற்கான விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற விடயங்கள் நடைபெறாது என நம்புகிறோம். கருத்துக்கள உறவு கரிகாலன் அவர்களுக்கு இன்றிலிருந்து தனது ஆக்கங்களைத் திருத்துவதற்கு அனுமதி இல்லை. அத்துடன் எச்சரிக்கை ஒன்றும் வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • 6 months later...

அறிவித்தல்

இனிவரும் காலங்களில் நிர்வாகம் தொடர்பான கருத்துக்களை நேரடியாக எமக்கு (தனிமடலூடாக) அறியத்தரலாம். பொதுவான கருத்துக்களம் தொடர்பான அல்லது கருத்தாடல்கள் தொடர்பான கருத்துக்களை யாழ் உறவோசை பகுதியில் முன்வைக்கலாம். ஆலோசனைகளையும் அங்கே பதியலாம். இது கருத்தியல் அடக்குமுறையாகப் படலாம். ஆனால், இப்படியான ஒரு முடிவை மேற்கொள்வதற்கு இன்றைய கருத்துக்கள சூழலே காரணம்.

இதுவரைகாலமும் மென்போக்கை நாம் கடைப்பிடித்து வந்தோம். ஆனால், கருத்துக்களம் குப்பைக்கூடமாகவும் - மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதால் - இனிவரும் காலங்களில் இறுக்கமான போக்கையே கடைப்பிடிக்க இருக்கிறோம். ஈவிரக்கம் இன்றி கருத்துக்கள விதிமுறைகள் அமுல்படுத்தப்படும். கருத்துக்கள விதிமுறைகளுக்கு உட்பட்டு சுதந்திரமான கருத்தாடலை செய்ய இங்கு அனுமதியுண்டு. கருத்துக்கள விதிமுறைகளை இதுவரை வாசிக்காதவர்கள் மீண்டும் ஒருமுறை வாசியுங்கள். கருத்துக்கள விதிமுறைகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையெனின் கருத்துக்களத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம் அல்லது கருத்துக்களை எழுதாமல் தவிர்த்துக்கொள்ளலாம்.

அதிகம் கோபப்படுபவர்கள், அதிகம் உணர்ச்சிவசப்படுபவர்கள், உளநலப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கருத்துக்களத்தில் எழுதுவதையோ அல்லது கருத்துக்களத்தில் கருது்துக்களை வாசிப்பதையோ தவிர்த்துக்கொள்வது நல்லது. கருத்துக்களத்துக்கு வருகை தருவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கோ அல்லது உளவியல் தாக்கங்களுக்கோ நாம் பொறுப்பாளியாக முடியாது.

கருத்துக்கள நிர்வாகம் தொடர்பாக குறைகள் இருப்பின், அவற்றை பட்டியலிட்டு கருத்துக்கள நிரந்தரப் பொறுப்பாளர் மோகனுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது பதிலளிக்கப்படும். உங்கள் ஆலோசனைகளையும் எமக்கு தனிமடலில் அனுப்பி வைக்கலாம். பரிசீலிக்கப்படும்.

Link to comment
Share on other sites

அறிவுறுத்தல்

யாழ் இணைய கருத்துக்களம் ஒரு தமிழ்க் கருத்துக்களம். தமிழில் கருத்துக்களைப் பதிவதற்கான களம். இங்கே ஆங்கிலத்தில் கருத்துக்கள் எழுதப்படுவது தவிர்க்கப்படவேண்டும். கருத்தாடலின் தேவை கருதி ஆங்கில மொழியிலான ஆவணங்களை இணைக்கலாம். ஆனால், கருத்துக்கள் தமிழிலே அமையவேண்டும். முக்கிய செய்திகளை ஆங்கில மொழியில் வருகிறபோது அவற்றின் சுருக்கத்தை தமிழில் எழுதி அதன்கீழே ஆங்கிலச் செய்தியை இணைக்கலாம்.

அதேபோல், கருத்துக்களில் ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். தமிழ் தெரியாத ஆங்கிலச் சொற்களென்றால் அவற்றை ஆங்கிலத்திலேயே எழுதலாம். ஆனால், தமிழ் தெரிந்தும் - கோமாளித்தனத்துக்காக ஆங்கிலச் சொற்களை ஆங்கில உச்சரிப்பில் (பட், டியர், ஹல்லோ போன்றன:lol: தமிழில் எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களில் இவற்றை உறுப்பினர்கள் கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன். தொடர்ந்தும் இதுபோன்ற கோமாளித்தனமான - தமிழ் மொழியைச் சிதைக்கும் வகையிலான கருத்துக்கள் இடம்பெறின் நடவடிக்கை எடுக்கப்படும். கருத்துக்களில் இடம்பெறும் குறிப்பிட்ட தமிழில் எழுதப்படும் ஆங்கிலச் சொற்களை (பட், டியர், ஹல்லோ போன்றன) மட்டுறுத்துனர்கள் தமிழில் மாத்துவார்கள் என்றோ அல்லது குறிப்பிட்ட அந்த சொற்களை மட்டும் நீக்கிவிட்டு முழுக் கருத்தையும் அனுமதிப்பார்கள் என்றோ எதிர்பார்க்கவேண்டாம். அப்படியான சொற்கள் இடம்பெறும் கருத்துக்கள் முற்று முழுதாக நீக்கப்படும். எனவே, இனிமேல் கருத்துக்கள் எழுதும்போது இதனைக் கவனத்தில் கொள்ளுங்கள். எழுதிய பின்னரும் ஒருமுறை படித்துப் பார்த்து அப்படிச் சொற்கள் இடம்பெற்றிருந்தால் திருத்திக் கொள்ளுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

  • 1 year later...

kumuthan என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

1. பிற இணையத்தள செய்திகளை தனது வலைப்பதிவில் இணைத்துவிட்டு, அதனை பின்பு யாழ் கருத்துக்களத்தில் தனது செய்தியாக இணைத்தமை.

2. ஆக்கங்களின் உண்மையான மூலத்தை குறிப்பிடாமல், யாழ் கருத்துக்களத்தில் அவற்றை இணைத்தமை.

3. யாழ் கருத்துக்களத்தை கருத்தாடலுக்கான களமாகப் பயன்படுத்தாமல், தனது வலைப்பதிவுக்கான விளம்பரத்தளமாக பயன்படுத்தியமை.

4. பலமுறை அறிவுறுத்தியும், அதனைப் புறந்தள்ளி, கருத்துக்கள விதிமுறைகளை மீறியமை.

Link to comment
Share on other sites

archunan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. பல தடவைகள் தலைப்புக்கு பொருத்தமில்லாமல் வேறு ஒரு விடயத்தை திணிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டமை.

2. ஆக்கபூர்வமான விமர்சனங்களாக இல்லாமல் வெறுமனே தனிநபர் தாக்குதலாக கருத்துகளை எழுதியமை.

3. கருத்துக்களத்தை ஆக்கபூர்வமான கருத்தாடற் களமாக பயன்படுத்தாமல் தமது தனிப்பட்ட விரோதங்களை வெளிப்படுத்தும் களமாக பயன்படுத்தியமை.

4. அதை மட்டுமே முதன்மை நோக்காக கொண்டு கருத்துக்களத்தில் எழுதியமை.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

paranthan என்னும் பெயரில் கருத்தெழுதும் உறுப்பினர் கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்

தடை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் பின்வருமாறு:

1. செய்திகளின் நேரடி மூலத்தினை குறிப்பிடாமை

2. பலமுறை அறிவுறுத்தப்பட்டும், கருத்துக்கள விதிமுறையை பின்பற்றாமை

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நம்பி என்கிற உறுப்பினர் யாழ் இணைய கருத்துக்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளார்.

பின்வரும் காரணங்களால் கருத்துக்களத்தில் எழுதுவதற்கான அனுமதி மீளப்பெறப்பட்டுள்ளது:

- செய்திகளை முழுமையாக இணைக்காமை

- செய்திகளின் மூலத்தை நேரடியாக எழுதாமை

Link to comment
Share on other sites

  • 2 years later...

விருப்பு வழங்கும் (like) முறைமை

நேற்றில் இருந்து (08-ஏப்ரல்-2012) பச்சை / சிவப்பு புள்ளிகள் வழங்கும் முறைமை மாற்றப்பட்டு விருப்பு வழங்கும் (like) முறைமை அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த முறை மாற்றம் தொழில்நுட்ப ரீதியான மாற்றம் என்பதால் கள உறுப்பினர்கள் ஏற்கனவே பெற்றிருந்த பச்சை மற்றும் சிவப்பு புள்ளிகளின் எண்ணிக்கை அனைத்தும் பூச்சியத்துக்கு வந்துள்ளது (reset ஆகியுள்ளது).

Link to comment
Share on other sites

  • 5 months later...

கருத்துக்களத்தின் உறுப்பினர்கள் மற்றும் கருத்துக்களின் எண்ணிக்கையையும் கணக்கில் கொண்டு நிழலி, இணையவனுக்கு உதவியாக புதிய மட்டுறுத்துனர்களாக நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோரை இன்று முதல் யாழ் கருத்துக்களத்தில் இணைத்துக் கொள்கிறோம். கருத்துக்கள உறவுகள் அனைவரும் உங்கள் ஒத்துழைப்பை நுணாவிலான் மற்றும் நியானி ஆகியோருக்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

Link to comment
Share on other sites

  • 4 months later...

எச்சரிக்கை

 

கள உறவுகள் மட்டுமே பார்க்கக்கூடிய நாற்சந்தியில் உள்ள விடயத்தை உறவோசைப் பகுதிக்கு காவி வந்ததாலும், பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை வேறு திரியில் தொடர முனைந்ததாலும் துளசிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

எச்சரிக்கை


நாற்சந்தியில் பூட்டப்பட்ட திரியின் கருத்தாடலை மீண்டும் உறவோசை பகுதியில் தொடர முனைந்ததால் ரதி, விசுகு ஆகியோருக்கு தலா ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.


 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை


தொடர்ந்தும் கள உறவுகள் சிலரைச் சீண்டும் கருத்துக்களைப் பதிந்ததால் வண்டுமுருகனுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

 

Link to comment
Share on other sites

easyjobs  க்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. காரணங்கள்:
 
முழு இணைப்பையும் கொடுக்காமை.இரு முறை சொல்லியும் மீண்டும் முழு இணைப்பையும் கொடுக்காமல் வாசர்கர்களை தனது தளத்துக்கு இழுக்கும் தந்திரம்.அதற்காக யாழ்களத்தை பயன்படுத்துதல்.    
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை


கள விதிகளை முற்றாக புறக்கணித்து மிக அநாகரீகமான சொற்பதங்களைப் பல கருத்துக்களில் பாவித்தமை காரணமாக தமிழ் சிறிக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பல தடவைகள் அறிவுறுத்தப்பட்டும் எச்சரிக்கை செய்யப்பட்டும் அவற்றை அலட்சியம் செய்து ஒரே விதமான செய்திகளைத் தனித் தலைப்புகளில் ஆரம்பிப்பதால் chinnavan னுக்கு 3 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

 

யாழில் பதியப்படும் செய்திகளுக்கு வெளியே இணைப்புக் கொடுக்கப்படுவதால் முன்பு போன்று ஒரே மாதிரியான செய்திகளை ஒரே தலைப்பில் ஒன்றிணைப்பதில் சிரமங்களை மட்டுறுத்தினர்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஒரே விடயத்தை இரு தலைப்புகளில் கருத்தாடல் செய்வதும் சாத்தியமற்றது. ஆகவே செய்திகளை இணைக்கும்போது அது ஏற்கனவே உள்ளதா எனக் கவனிக்குமாறு தயவுடன் வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

எச்சரிக்கை



மட்டுறுத்தப்பட்ட கருத்தை திரும்பவும் இரு தடவைகள் பதிந்தமைக்காக யாழ்அன்புக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

களவிதி: மட்டுறுத்தப்பட்ட கருத்துகளை மீண்டும் பதிவதும் வேறு தலைப்புகளில் கொண்டுவந்து பிரசுரிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்

Link to comment
Share on other sites

திரிக்கு சம்பந்தமில்லாமல் வெறுமனே ஆத்திரமூட்டுவதற்காக பதில்களை வழங்கியமைக்காக அர்ஜுனுக்கு எச்சரிக்கைப் புள்ளி 1 வழங்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை

 

யாழின் கறுப்புப்பட்டியலில் உள்ள தளத்தில் இருந்து மூலம் குறிப்பிடாமல் செய்தி ஒன்றை இணைத்தமைக்காக துன்னையூரானுக்கு இரு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.
 

 

Link to comment
Share on other sites

எச்சரிக்கை

 

--நிர்வாகத்தினர் தனிமடல்களில் வேண்டுகோள்கள் விடுத்தும், தொடர்ந்தும் கள விதிகளை கருத்தில் எடுக்காது தொடர்ச்சியாக கண்ணியமற்ற சொற்களை பயன்படுத்தியமையால் ஆசான் இற்கு 2 எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

Link to comment
Share on other sites

அநாகரீகமான முறையில் கருத்துக்கள் எழுதியதனால் துன்னையூரான் 7 நாட்கள் கருத்துக் களத்தில் தடை செய்யப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

 
யாழ்கள உறவுகளுக்கு, புங்கையூரானுக்கு வாழ்த்து தெரிவித்து (பச்சை புள்ளிகளுக்கு) திறக்கப்பட்ட திரி சில கோப்புக்களை  ஒருங்கிணைக்க முற்பட்ட போது தவறுதலாக அழிக்கப்பட்டு விட்டது என்பதை மிக்க மன வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

எச்சரிக்கை


திரி ஒன்றில் சக கள உறவு ஒருவரை அநாகரீகமான முறையில் நையாண்டி செய்ததற்காக சுண்டலுக்கு ஒரு எச்சரிக்கைப் புள்ளி வழங்குகின்றேன். பாலியல் ரீதியான வசைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ அனுமதிக்கப்படமாட்டாது.

Link to comment
Share on other sites

நிர்வாகத்தினரை விமர்சித்துத் திண்ணையில் எழுதியமைக்காக துளசிக்கு 1 எச்சரிக்கைப் புள்ளி வழங்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.