Jump to content

புக்காரா குண்டுகள்! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள்! தீபச்செல்வன்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
July 9, 2019

Navali.png?zoom=1.1024999499320984&resiz

இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா.

இலங்கை அரசின் புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டைகளில் ஒன்றுதான் நவாலி தேவாலயப் படுகொலை. இன்று அதன் நினைவுநாள்.

இருபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதூங்க நவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். நவாலிப்படுகொலை நடைபெற்று இருபத்து நான்கு வருடத்தின் பின்னர் அவர் இவ்வாறு தெரிவித்தார். அந்தப் படுகொலை இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இராணுவத்தையும், விமானப்படையையும் நோக்கி உரத்துக் கத்தியதாகவும் இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கூறியிருந்தார்.

உண்மையில் நவாலிப்படுகொலை என்பது ஈழத் தமிழ் மக்களால் மறக்க முடியாத வடு. வலிகாமம் பகுதியில் இலங்கை அரச படைகள் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த காலத்தில் அந்த படை நடவடிக்கை்கு சாதகம் தேடும் பொருட்டு நடத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டு. ஜூலை ஒன்பதாம் நாள். பலாலி, அளவெட்டிப் பகுதிகளிலிருந்து தாக்குதல் நடவடிக்கையை இலங்கை அரச படைகள் தொடங்கின. நிலைகுலைந்த மக்கள் இடம்பெயரத் தொடங்கினர்.

கையில் அகப்பட்டவற்றை எடுத்தபடி, உடுத்த உடையுடன் வெளியேறிய மக்கள் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு தஞ்சம் தேடி அலைந்தனர். இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் ஆலயத்தில் தங்கி இளைப்பாறி தாகம் தீர்த்தவேளையில்தான் மாலை 5.45 மணியளவில் கொடிய புக்கார குண்டு வீச்சு விமானங்கள் நவாலிசென்பீட்டர் ஆலயத்தில் குண்டுகளை சொரிந்தன. யாழ் நகரத்திலிருந்து அராலி நோக்கி வந்த விமானங்கள் 13 குண்டுகளை அந்த ஆலயத்தின்மீீது கொட்டி வெறி தீர்த்தன.

இலங்கை அரசாங்கம் போராளிகளை நிலைகுலையச் செய்வதற்காக அப்பாவி மக்கள்மீது சட்டவிரோதமான முறையில் குண்டுகளை வீசி தமிழ் மக்களை இனப்படுகொலைசெய்கிறது என்பதை இந்த தாக்குதல் அம்பலப்படுத்தியது. இந்த இனப்படுகொலைத் தாக்குதலில் 147 பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள். சுமார் 360க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள் என்று ஆலய வாசல்களிலும் முற்றங்களிலும் மக்கள் கொன்று வீசப்பட்ட அந்தக் காட்சிகளை தமிழ் மக்களின் மனங்களிலிருந்து என்றும் அழி்க்க முடியாது.

உயிரை பாதுகாக்க தஞ்சம் தேடி வந்த மக்களை ஆலயங்களின் முன்னால் வைத்து படுகொலை செய்தது இலங்கை அரசு. அலைந்தோடி வந்த மக்கள், கையின்றியும், காலின்றியும் துடித்துக் கிடந்தனர். மக்கள் தொண்டாற்ற வந்த 48 தொண்டர்களும் அந்த இடத்தில துடித்து இறந்தார்களாம். நவாலி கிராமே இந்த இன அழிப்பு விமானத் தாக்குதலால் அதிர்ந்தது. கிராமாம் முழுவதும் தசைத் துண்டுகளும் குருதியும் தெறித்தனவாம். இலங்கை அரசு எமது அரசல்ல என்றும் எமது அரசாக இருந்தால், அது மக்களை கொன்றிராது என்றும் ஈழத் தமிழ் மக்களை உணர வைத்த, ஆழப் படிந்த இனப்படுகொலைகளில் இதுவும் ஒன்றானது.

இலங்கையில் தமிழ் மக்கள் இவ்வாறு பல இனப்படுகொலைகளை சந்தித்து வந்திருக்கிறார்கள். பெரும்பாலும் இலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் இனப்படுகொலைகளை ஏற்பதில்லை. அதை ஒரு புனித யுத்தம் என்றும் அதை ஒரு வெற்றி யுத்தம் என்றுமே சித்திரிப்பதுண்டு. நாவாலிப் படுகொலைக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று கூறினாலும் இந்த சம்பவம் இடம்பெற்று இருபது வருடங்களின் பின்னர், தான் ஆட்சியை இழந்து பத்து வருடங்களின் பின்னர், இலங்கையில் ஒரு ஆட்சி மாற்ற அரசியல் – தேர்தல் காலத்தில்தான் அவர் இப்படிப் பேசியுள்ளார் என்ற அடிப்படையிலும் இதனைப் பார்க்க வேண்டும்.

நவாலிப்படுகொலையில் அழிக்கப்பட்ட மக்களை அந்த மக்கள் ஆண்டு தோறும் நினைவுகூர்ந்து வருகிறார்கள். நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலிசின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் மக்கள் நினைவு வழிபாடுகளில் பங்கெடுக்கிறார்கள்.இதேவேளை நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலிசென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள இனப்படுகொலைச் சின்னங்களிலும் மக்கள் தமது அஞ்சலியை செலுத்துகிறார்கள். அத்துடன் புலம்பெயர் நாடுகளிலும் மக்கள் இந்தப் படுகொலையை நினைவு கூர்கிறார்கள். ஆறாத காயம் இந்தப் படுகொலை.

போரை செய்தவர்களும் இனப்படுகொலையை புரிந்தவர்களும் மிக எளிதாக நல்லிணக்கம் பேசுகிறார்கள். உண்மையில் தாம் இழைத்த குற்றங்களை மறைக்கவும் இனப்படுகொலைப் போருக்குப் புனிதம் கற்பிக்கவுமே அவர்கள் நல்லிணக்கம் என்ற போலிக் கோசங்களை எழுப்புகிறார்கள். அப்படித்தான் இலங்கை ஆட்சியாளர்களும் நல்லிணக்கம் என்ற வாசகத்தை உச்சரிக்கின்றனர். எம் நெஞ்சில், எம் வரலாற்றில், எம் மண்ணில் பல நவாலிப்படுகொலைகளை உருவாக்கிவிட்டு, அவைகளுக்குப் பொறுப்புக்கூறாமல், மன்னிப்புக் கேட்காமல் பேசும் நல்லிணக்கம் என்பது மிக மிக போலியும் அநீதியுமானது.

சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் பல விமானத் தாக்குதல்கள் நடந்துள்ளன. பாடசாலைகள், மருத்துவமனைகள் என்று குண்டுகள் கொட்டாத இடங்களில்லை. ஒட்டுமொத்தமாக நடந்த இந்த இனப்படுகொலைத் தாக்குதல்கள் குறித்து, ஒரு முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும், முன்யை அரசு என்ற வகையிலும் சந்திரிக்கா பண்டார நாயக்க மன்னிப்பு கேட்க வேண்டும். சந்திரிக்கா பண்டார நாயக்கா இழைத்த இனப்படுகொலைகளை பின்பற்றித்தான் மருத்துவமனைகள்மீதும் பாடசாலைகள்மீதும் பதுங்குகுழிகள்மீதும் போர் தவிர்ப்பு வலயங்கள்மீதும் ராஜபக்சேக்கள் குண்டுகளை கொட்டினர்.

போரும், அப்பாவிகள்மீதான விமானத் தாக்குதல்களும் இனப்படுகொலைகளும் தவறானவை,இனியும் அவைகள் இடம்பெறக்கூடாது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமிழ் மக்களாக, அவர்களின் உரிமையுடன், அவர்களின் மண்ணில் அவர்களுக்கான விடுதலையுடன் வாழ, நிலையான நியாயமான தீர்வு ஒன்றை காண நவாலிப்படு இனப்படுகொலைக்குப் பொறுப்பான சந்திரிக்கா, அதற்கு மன்னிப்புக் கோருவதே முதற்படியாக அமையும். இல்லாவிட்டால், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தப் படுகொலைகளை வடுக்களை சுமந்தபடி இந்த நாட்களை கடப்போம். இருதயத்தில் மீண்டும் மீண்டும் புக்காரக்கள் குண்டுகளை வீசும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2019/126172/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவாலி படு­கொ­லையின்  24 ஆவது ஆண்டு நினைவு

 

தமிழர் வர­லாற்றில் மக்­களால் ஜீர­ணித்­துப்­பார்க்க முடி­யாத படுகொலை என்றால் அது நவாலி படு­கொ­லை­யையே உல­க­மெங்கும் பறை­சாற்றி நிற்கும். இந்­தப்­ப­டு­கொ­லையின் 24 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை ஆகும். இவ் நினைவு தினம் இவ்­வாண்டு உல­கெங்கும் நினைவு கூரப்­ப­ட­வுள்­ளது.

navali.jpg

பூமியில் இடம்­பெற்ற தமி­ழி­னப்­ப­டு­கொ­லைகள் என்றும் மறைக்­கவோ - மறுக்­கப்­ப­டாத சூழலில் வர­லாற்று பதி­வு­க­ளாக பதி­யப்­பட்டு ஆய்வு செய்­யப்­ப­டு­கின்­றன.இப்­ப­டு­கொ­லை­களின் விளை­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சொந்த உற­வு­க­ளது நலன்கள் ஏன் தீர்வு செய்­யப்­ப­டாமல் உள்­ளன என்பது தொடர்­பாக உள்­நாட்­டிலும், சர்­வ­தேச புலம்­பெ­யர்­நா­டு­க­ளிலும் ஆரா­யப்­ப­டு­வ­துடன்இஇது தீர்வு எட்­டப்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யிலும் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாக சமூ­க­வியல் நிபு­ணர்கள் கருத்து வெளியிட்டு வரு­கின்­றனர். 

இப்­ப­டு­கொலை வருந்­தத்­தக்­கது இதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. எனது காலத்தில் இப்­பே­ரிடர் ஏற்­பட்­ட­தை­யிட்­டு­க­வ­லை­ய­டை­கின்றேன் என யாழில் 2017 இல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை வெளியிட்­டி­ருந்தார். 

நவாலி பிர­தா­ன­வீ­தி­யிலும் ஆலய வளா­கத்­திலும் களைப்­ப­டைந்து ஆறு­த­லுக்­காக தங்கியிருந்த வேளையில் விமானத்திலிருந்து வீசப்பட்ட13 குண்­டு­க­ளுக்கு 147 பேர் மர­ண­ம­டைந்த கொடூ­ர­மான தாக்­குதல் சம்­ப­வத்தை உல­கெங்கும் வாழும் தமிழர் நெஞ்­சங்கள் ஒரு போதும் மறக்­க­மாட்­டாது. 

முன்னாள் அரச தலை­வர்கள் ஆட்­சி­யா­ளர்­களின் பணிப்­பு­ரையின் பேரில் நடத்­தப்­பட்ட விமா­ன­த்தாக்­கு­தலில் 147 பேர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தை நாம் ஒரு­கணம் மீண்டும் மீட்­டிப்­பார்க்­கின்றோம்.

இந்த கொடூ­ர­மான நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்­காம முருகன் ஆலயம் முன் இடம்­பெற்ற உயி­ரி­ழப்பு சர்­வ­தேச சமூ­கத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் சம்­பந்­தப்­பட்ட தமிழ் உற­வு­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் சொல்­லொ­ணாத்­து­ய­ரத்­திற்கு இட்டுச் சென்­றுள்­ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஈழத்­தமிழ் வர­லாற்றில் நவா­லியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோர­மான கொடிய நாளாக ஜூலை 9 பதி­யப்­பட்­ட­துடன் இன்று சர்­வ­தே­சத்­திலும் பதி­யப்­பட்டு ஐ.நா. வரை கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

இத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களின் உற­வு­க­ளுக்கு அரசின் உத­விகள், நிவா­ர­ணங்கள் எவையும் வழங்­கப்­ப­டாத சூழலே இன்றும் உள்­ளது. அன்று தான் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவா­லயம் மற்றும் ஸ்ரீ கதிர்­காம முருகன் (சின்­னக்­க­திர்­காமம்) ஆலயம் என்­ப­வற்றின் மீதான தாக்­கு­தலில் அப்­பா­வி­க­ளான 147 பேர் காவு கொள்­ளப்­பட்­டனர். வலி­காமம் முழு­வதும் இடம்­பெற்ற வான் தாக்­கு­தலால் அந்­தப்­ப­குதி முழு­வதும் அதிர்ந்து கொண்­டி­ருந்த வேளையில், மாலை நேரத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்து கொண்­டி­ருந்த தரு­ணத்தில் இலங்கை விமான படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இனப்­ப­டு­கொ­லை­யாக பதி­யப்­பட்­டது. 

வட­மா­கா­ணத்தின் வலி­காமம் தென்­மேற்கு பிர­தேச செய­லக பிரிவின் நவா­லியூர் வர­லாற்றின் இந்த இரத்­தக்­கறை படிந்த நாளில் நிகழ்ந்த உயி­ரி­ழப்­பு­களை தமி­ழினம் ஒரு போதும் மறக்­காது, மறக்­கவும் முடி­யாது என்று அன்­றைய நிகழ்­வை­யொட்டி லண்டன் பி.பி.சி.(டீடீஊ) தமி­ழோசை செய்தி நிறு­வனம் செய்தி வெளியிட்­டது.

முன்­னோக்கி பாய்தல் எனப் பெய­ரிட்ட (டுநயி குழசறயசன) இரா­ணுவ நட­வ­டிக்­கையை வலி­காமம் பகு­தியில் தொடங்­கிய இரா­ணு­வத்­தினர் பலா­லி­யி­லி­ருந்தும் அள­வெட்­டி­யி­லி­ருந்தும் மிகக்­கொ­டூ­ர­மான முறையில் நிமி­டத்­திற்கு 30 இற்கும் மேற்­பட்ட எறி­க­ணை­களை நாலா புறமும் மேற்­கொண்­ட­துடன் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

திடீ­ரென வலி­காமம் தென்­மேற்குஇ வலி. மேற்கு, வலி. தெற்கு, வலி­வ­டக்கு பகு­தியில் உள்ள மக்கள் குடி­யி­ருப்­புகள்இ ஆல­யங்கள் பொது நிறு­வ­னங்கள், அர­சாங்க மற்றும் பொது­ச்சேவை நிலை­யங்­களை நோக்கி அதி­காலை 5.20 மணியில் இருந்து தொடர்ச்­சி­யான விமான தாக்­கு­தல்­க­ளும், எறி­க­ணைத்­தாக்­கு­தல்­களும் சர­மா­ரி­யாக நடத்­தப்­பட்­டன. அந்த வேளையில் சகல வீதி­க­ளிலும் உலங்கு வானூர்­தி­களின் தாக்­கு­தல்கள் மற்றும் அகோ­ர­மான எறி­க­ணைத்­தாக்­கு­த­ல்க­ளினால் வீதிக்கு வீதி இறந்­த­வர்கள், காய­ம­டைந்து இரத்தம் சிந்­திக்­கொண்­டி­ருந்­த­வர்­களை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்ல வாக­னங்கள் கூட இல்­லாத அவல நிலை, வாக­னங்­களை இயக்­கு­வ­தற்கு எரி­பொ­ருள்­களும் அற்ற பொரு­ளா­தார தடையால் இந்த பேரிடர் தொடர்ந்­தது. 

காயப்­பட்ட மக்­களை காப்­பாற்ற மருந்­த­கங்­களோ, மருத்­து­வர்­களோ சிகிக்சை நிலை­யங்­களோ காணப்­ப­டாத அவ­ல­மான சூழல் நில­வி­யது.

இறு­தியில் காய­ம­டைந்­த­வர்கள் சிகிச்­சை­யின்றி இறந்த நிகழ்­வு­க­ளையும் நாம் மறக்க முடி­யாது. அன்­றைய தினம் குடா­நாட்டின் பல்­வேறு வீதி­களின் ஊடாக இடம்­பெ­யர்ந்து கொண்­டி­ருந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆல­யத்­திலும் தாகம் தீர்ப்­ப­தற்­காக அமர்ந்து களைப்­பாறி அச­தியால் படுத்­து­றங்­கினர். அந்த வேளையில் யாழ். நக­ரப்­ப­கு­தியில் இருந்து தொடர்ச்­சி­யாக விமானத்திலிருந்து வீசப்பட்ட 13 குண்­டுகள் தான்­தோன்­றித்­த­ன­மாக மக்கள் ஒன்­று­கூ­டி­யி­ருந்த மேற்­படி இரு ஆல­யங்கள் மீதும் வீசப்­பட்­டன . 

அவ்­வ­ளவு தான் நவாலி கிராமம் ஒரு­கணம் அதிர்ந்­தது. வீதி­களில் காணப்­பட்ட மரங்கள் முறிந்து விழுந்­தன. வீடுகள் தரை­மட்­ட­மா­கின மதில்கள் வீழ்ந்து நொறுங்­கின. அந்­தப்­ப­குதி முழு­வ­திலும்  மக்கள் இரு­மணி நேரம் செல்ல முடி­யாத பெரும் புகை­மூட்டம் உரு­வா­னது. நவாலி சென்­பீற்றர்ஸ் தேவா­ல­யமும் சின்­னக்­க­திர்­காம ஆல­யமும், அயலில் உள்ள 67 இற்கு மேற்­பட்ட வீடு­களும் முற்­றாக அழிந்து சிதைந்­தன. சுமார் 147 பேர் அந்த இடத்­தி­லேயே நீர் அருந்த தண்ணீர் கேட்டு அந்த இடத்­தி­லேயே இரத்தம் சிந்தி உயி­ரி­ழந்­தனர். இந்த நிகழ்வில் கையி­ழந்து இகாலி­ழந்துஇதலை­யி­ழந்து ,வீதியில் சிதறிஇ குற்­று­யி­ராக கிடந்த மக்­களை இல­குவில் மறந்­து­விட முடி­யாது. 

சுமார் 360இற்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்த நிலையில் சிகிச்சை பய­ன­ளிக்­காத நிலையில் நீண்ட நேரம் குரு­தி­சிந்தி உயி­ரி­ழந்­ததை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. 

அன்­றைய தாக்­கு­தலில் பொது­மக்கள் சேவையில் முனைப்­புடன் செயற்­பட்ட நவாலி மகா­வித்­தி­யா­லய மாண­வத்­த­லைவன் செல்வன் சாம்­ப­சிவம் பிரதீஸ் தலை­சி­தறி  சாவ­டைந்தார். இதனை விட மக்­க­ளுக்­காக அர­சாங்­கத்தின் சார்பில் முழுச் சேவை­யாற்­றிய மக்­க­ளுடன் மக்­க­ளாக பங்­கு­கொண்டு அர்ப்­ப­ணித்து சேவை­யாற்­றிய வலி.தென்­மேற்கு சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­லக பிரி­வி­னையும் -134 நவாலி வடக்கு கிராம அலுவலரான செல்வி ஹேமலதா செல்வராஜா ,  சில்லாலை பிரிவு மூத்த கிராம அலுவலர் பிலிப்புபிள்ளை கபிரியேல் பிள்ளை ஆகியோர் அந்த சேவையின் போது அந்த சம்பவத்தில் மரணமடைந்த அரசாங்க அலுவலர் சார்பில் பதியப்பட்டனர். 

அன்றையதினம் மக்கள் தொண்டு பணியில் உணவு,குடிதண்ணீர் வழங்கிக்கொண்டிருந்த 48 தொண்டர்களும்  அந்த இடத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை நாம் மறக்க முடியுமா?

என்பதனை இப்படுகொலை சம்பவம் சுட்டி காட்டி நிற்கின்றது. இதனை விட நவாலி படுகொலை சம்பவம் தொடர்பாக நவாலி சென் பீற்றர்ஸ் ஆலய வீதியிலும் நவாலி வடக்கு புலவர் வீதியிலும் உள்ள நினைவுச்சின்னங்கள் வரலாறுகளை நினைவூட்டுகின்றன. ஓவ்வொரு ஜுலை 9 இலும் இந்த நினைவுச்சின்னங்களில் ஒளியேற்றப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றன.

 

https://www.virakesari.lk/article/60074

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலையின் 26 ம் ஆண்டு நினைவு நாள் இன்று!

AdminJuly 9, 2021
FB_IMG_1562663551956.jpg?resize=640%2C40

150க்கும் மேற்பட்டோரின் உயிர்களை காவுகொண்ட நவாலி தேவாலயத் தாக்குதலின் 26ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது சிறிலங்கா விமானப் படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் 150இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 150 பேருக்கு மேல் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 26ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனாலும் அன்றைய கோரத் தாக்குதலின் வலியிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தற்போதும் நிர்க்கதியற்ற நிலையில் சொல்லொணாத் துயரத்துடனேயே வாழ்கின்றனரென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த சம்பவம் தொடர்பாக விரிவாக நோக்கினால், குறித்த காலப்பகுதியில், வலிகாமம் பகுதியில் சிறிலங்கா அரசினரால் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் எறிகணைத் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர்.
இதன்காரணமாக பொதுமக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி இதேபோலதொரு நாளிலேயே குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்துகொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. இரண்டு ஆலயங்களும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.
இத்தாக்குதலில் ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 150 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். அத்தோடு அவயங்களை இழந்தும் உறவுகளை இழந்தும் 150இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 26 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் எம் மக்களின் மனங்களில் நீங்காதுள்ள ரணங்களுக்கு இதுவரையில் மருந்தில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நவாலி தேவாலய படுகொலை : பொது மக்கள் இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டது -சிவாஜிலிங்கம்

 

sivajilinga யாழ் நவாலி தேவாலய படுகொலை : பொது மக்கள் இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டது -சிவாஜிலிங்கம்

யாழ். நவாலி தேவாலயத்தில் இருப்பது பொது மக்கள் என்று தெரிந்தே சிறீலங்காவின் விமானப் படையினர், தேவாலயத்தின் மீது தாக்குதல்  நடத்தினார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம்  நவாலி சென் பீட்டர் தேவாலயத்தின் மீது இலங்கை அரசு விமான குண்டு தாக்குதல் நடத்தி இன்று 26 வருடங்கள் கடந்து இருக்கின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், “1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி இதே  கால கட்டத்தில் சிறீலங்கா விமானப் படையினரால் குண்டு தாக்குதல் நடாத்தி 100க்கும் மேற்பட்ட உயிர்கள் கோரமாக கொல்லப்பட்டு 26 வருடங்கள் கடந்து இருக்கின்றது.

சந்திரிகா அம்மையாரினுடைய ஆட்சி காலத்தில் தமிழர் தாயகப் பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இராணுவ நடவடிக்கையின்  போது பொது மக்கள் ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் தஞ்சமடைந்து இருந்தார்கள். அப்போது இலங்கையினுடைய விமானப் படைக்கு சொந்தமான இரண்டு ‘புக்காரா’ விமானங்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.  இதில் சிறுவர்கள் பெரியவர்கள் பெண்கள் முதியோர்கள் என்று வேறுபாடு இல்லாமல் உடல் சிதறி பலியானார்கள் பலர் படுகாயம் அடைந்தார்கள்.

இது ஒரு அப்பட்டமான தமிழ் இனப் படுகொலையாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தாலும் நீதி வழங்கப்படவில்லை.

அந்த அகோர சம்பவத்தில் இறந்தவர்களுடைய உறவுகள் இன்னும் அந்த துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உறவுகளுக்கு நினைவேந்தல் செய்வதற்கும் கூட தற்போதைய ஆட்சியாளர்கள் தடுத்து வருகிறார்கள். இவ்வாறு இனப் படுகொலை செய்யப்பட்ட நினைவுச் சின்னங்கள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் கடந்த ஆண்டும் இம்முறையும் புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு நினைவேந்தலை செய்வதற்கு இலங்கை இனவாத சிங்கள அரசாங்கம்  தடை விதித்து வருகின்றது.

இது அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலாக இருக்கின்றது. ஏனெனில் ஒரு உரிமைக்காக போராடிய இனம். அந்த போராட்ட காலத்தில் நடைபெற்ற படு கொலைகளை நினைவுகூற இந்த ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் மறுத்து வருகின்ற நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி இந்த நாட்டில் நீதி கிடைக்கும் என்ற ஒரு கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்து இருக்கின்றது.

ஆகவே இவற்றிற்கு எல்லாம் ஒரு சர்வதேச நீதி பொறி முறை வேண்டும் என்பதற்காகத் தான் தமிழினம் சர்வதேச நீதி கோரி நிற்கின்றது. ஆகவே இந்த சர்வதேச நீதி கோரலில் நவாலி படுகொலையும் இடம் பெற வேண்டும். அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இவ்வாறான இந்த படுகொலைகளுக்கு  நீதி கிடைக்கின்ற போது தான் எதிர் காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு உறுதியான பாதுகாப்பும் அவர்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்தகின்ற நியாயமான சூழ்நிலைகள் உருவாகும் என்பதை நான் கூற விரும்புகின்றேன்” என்றார்.

https://www.ilakku.org/m-k-shivajilingam-navaly-church-bombing/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.