Jump to content

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Actress Sridevi death not accidential,says Kerala DGP

ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்!

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.

உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.

ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் உமாடாதனின் கருத்து. இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/actress-sridevi-death-not-accidential-says-kerala-dgp-356453.html



 

Link to comment
Share on other sites

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

கொலை செய்பவர்கள் வீடியோவோ படமோ எடுத்துக் கொண்டு கொலை செய்வதில்லையே தமிழ்சிறி? அதனால் கொலை தான் செய்திருப்பர்! அவர் செத்ததை அவரே வீடியோ எடுத்து அதைப் பார்த்தால் மட்டுமே நாம் அவராகவே செத்தார் என்று நம்புவோம்! (லாராவிடம் இருந்து கற்றுக் கொண்ட லொஜிக்!😎)

Link to comment
Share on other sites

ஜஸ்டினை பொறுத்தவரை ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பிவிட வேண்டும். (ஊடகங்கள் கொலையாளிகளுக்கு சார்பாக செய்தி பிரசுரித்தாலும்). 😊

Link to comment
Share on other sites

On 7/10/2019 at 5:02 AM, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

திரைப்படத்துறையில் கொலை என்பது சகஜம்.

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்ட பின் போனி கபூரும் அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரும் ஒட்டாக திரிந்தார்கள். (கபூர் குடும்ப மீளிணைவு).

ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வெளியாகவுள்ள நேரம் பார்த்து நடந்த கொலை. அர்ஜுன் கபூரின் முதல் படம் வெளியாக முன் அவரது தாயாரும் போனி கபூரின் முதல் மனைவியுமான மோனா கபூர் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

கபூர் குடும்பம் தான் கொலையை செய்ததாக வட இந்தியாக்காரர் கதைக்கினம். 

பாதாள உலக குழுவின் தலைவரான தாவூத் இப்ராஹிம் துபாயில் செல்வாக்குடையவர் என்பதால் அவரை பயன்படுத்தி துபாயில் விடயங்களை கையாண்டிருக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் Ved Bhushan முன்னர் கூறியிருந்தார். அவரும் ஶ்ரீதேவி கொலை தொடர்பாக விசாரணை செய்து வந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für Arjun Kapoor

எனக்கு இவரிலை ஒரு டவுட்டு....:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎11‎/‎2019 at 12:56 PM, Kadancha said:

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 2:15 PM, Kadancha said:

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

காப்புறுதி நிறுவனம் ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா என சந்தேகமாக இருப்பதாக கூறியதாக தான் முன்னர் வாசித்தேன். பின் அது பற்றிய செய்திகள் எனது கண்ணில் படவில்லை என்பதால் என்ன நடந்தது என தெரியாது. ஆனால் துபாய் அரசு, பொலிஸ் என அனைவரும் கொலையாளிகள் பக்கம் இருக்க இவர்களால் ஏதும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்.

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 10:59 AM, ரதி said:

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

 

On 7/12/2019 at 9:07 PM, ரதி said:

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம்

எங்களுக்கு இப்பவும் விருப்பம் இருக்குதாக்கும்! நாங்கள் ஐந்து வயதிலிருந்தே உயிரையும் கொடுக்கும் விசிறிகளாக்கும்😍

Screen+Shot+2018-07-13+at+11.26.11+AM.pn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள்.

ஶ்ரீ தேவியின் தாயாரின் சத்திர சிகிச்சையின் தவறுதலால் வந்த நஷ்டயீட்டு பணத்தை அப்படியே போனிகபூருக்கு கொடுத்ததாகவும் ஒரு கதை உலாவியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎14‎/‎2019 at 10:16 AM, Lara said:

 

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.


இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 


முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.


எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.


இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 


முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.


எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

நான் எழுந்தமானதாக கதைக்கவில்லை. நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

கொலை செய்யப்பட்டமைக்கு பல காரணங்கள், அதில் ஒரு காரணமான insurance பணத்துக்காக துபாயில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என எழுதினேன். (ஶ்ரீதேவி உயிருடன் இருப்பதை விட இறப்பதன் முலம் அவர்களுக்கு அதிக இலாபம். இறந்த பின் ஶ்ரீதேவியின் சொத்துக்களை யார் எடுப்பது என ஒரு பிரச்சினையும் நடந்தது.)

அதே நேரம் இன்னொரு காரணமாக ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வரும் வெளிவரும் நேரம் நடந்த கொலை என்றும் எழுதினேன். அர்ஜூன் கபூரின் முதல் படம் வெளிவரும் நேரம் அவர் தாயார் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது என எழுதியிருந்தேன். கொலை என்றே நான் நினைக்கிறேன். அது Bollywood சம்பந்தமான விடயம். அது பற்றி விரிவாக எழுத யாழில் மட்டுக்கள் விட மாட்டார்கள். அதனால் தான் மேலதிகமாக எழுதவில்லை. அவருக்கு புற்று நோய் இருந்தது எனக்கு முன்னமே தெரியும். நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வேண்டியதில்லை). 

இன்னொரு காரணமாக கபூர் குடும்ப மீளிணைவுக்காக என எழுதியிருந்தேன் (அதில் அர்ஜூன் கபூரையும் சேர்த்து தான் கூறினேன்).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் எழுதினேன்.

அர்ஜுனுக்கு தனது தாய் தந்தையை பிரித்தது ஶ்ரீதேவி என்பதால் கதைக்காமல் இருந்தார், எந்த மானமுள்ள பிள்ளையும் அதைத்தான் செய்யும் என எழுதியிருந்தீர்கள். அர்ஜுனும் இன்னொரு குடும்பத்தை பிரித்தவர் என்பதால் அவரை நீங்கள் மானமுள்ள பிள்ளை என கூற முடியாது. 

அர்ஜூனுக்கு ஏதும் நடந்தால் மலைக்காவின் மகன் ஏதும் செய்து விட்டார் என நான் சொல்லப்போவதில்லை. காரணம் அர்ஜுனை ஶ்ரீதேவிக்கு எதிராக ஶ்ரீதேவியை வெறுக்குமளவுக்கு அவரது தாயார் திருப்பியது போல் மலைக்காவின் மகனை அர்ஜுனுக்கு எதிராக யாரும் திருப்பப்போவதில்லை.

ஶ்ரீதேவி மரணம் பற்றி வந்த செய்திகளை பார்த்தவர்களுக்கு அது கொலை என இலகுவில் விளங்கியிருக்கும், அது பற்றி ஒரு சிலவற்றை பின்னர் எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

20 ஆம் திகதி திருமண நிகழ்வில் போனி கபூர், ஶ்ரீதேவி, இரண்டாவது மகள் கலந்து கொண்டார்கள். முதல் மகள் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. கபூர் குடும்பத்தை சேர்ந்த வேறு பலரும் கலந்து கொண்டார்கள். பின் கபூர் குடும்பத்தினர் இந்தியா திரும்பியிருந்தார்கள். 

ஶ்ரீதேவியை துபாய் ஹொட்டலில் தனியா விட்டிட்டு போனியும் மகளும் கூட இந்தியா திரும்பியிருந்தார்கள். ஶ்ரீதேவி தனது சகோதரியை சந்திக்க நின்றதாக ஒருக்காவும், ஷொப்பிங் செய்ய நின்றதாக ஒருக்காவும், ஓவியங்களை ஏலம் விட நின்றதாக இன்னொருக்காவும் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

ஶ்ரீதேவி மரணமடைந்த செய்தி வந்ததும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் கபூர் மீண்டும் துபாய்க்கு சென்று அங்கிருந்து போனி தரப்பில் ஊடகத்துக்கு கூறியது ஶ்ரீதேவி இரவு (24 ஆம் திகதி) 11, 11.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார், அதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணவீடு முடிஞ்சு இந்தியாவுக்கு போன போனி கபூர்  திரும்பி  சிறிதேவிக்கு இன்ப அதிர்ச்சி குடுக்க துபாய்க்கு திரும்பி வந்தவராம். 
புருசன் வீட்டிலை தனிய இருக்க பொண்டாட்டி  பாத்றூமை பூட்டிப்போட்டு குளிக்க போனாராம்.🤪

Link to comment
Share on other sites

பின் மாரடைப்பால் மரணமடைந்த கதை, “accidental drowning” ஆக மாறிய கதை பலருக்கும் தெரியும்.

ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக போனி தரப்பு முதலில் கொடுத்த விளக்கம்.

இந்தியா திரும்பிய போனி மகளை இந்தியாவில் விட்டுட்டு ஶ்ரீதேவிக்கு சப்ரைஸ் குடுக்க நினைத்து மீண்டும் 24 ஆம் திகதி துபாய்க்கு போனாராம். (வந்திட்டு திரும்பி போக இது என்ன பக்கத்து வீடா?) மாலை 5.30 க்கு ஹொட்டல் அறைக்கு சென்று ஶ்ரீதேவியை எழுப்பி சுமார் 15 நிமிடங்கள் அவருடன் கதைத்து விட்டு பின் dinner க்கு போக அழைத்ததாகவும் ஶ்ரீதேவி fresh ஆகிட்டு வாறதா சொல்லி bathroom உள்ளே சென்றாராம். 15 நிமிடங்களாகியும் காணவில்லை என்றதும் தான் கதவை தட்டிப்பார்த்து பதிலில்லாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஶ்ரீதேவி குளியல் தொட்டிக்குள் ஒரு அசைவுமில்லாமல் இருந்தவராம். (Dinner போக fresh ஆகிட்டு வாறதா சொன்னவா குளியல் தொட்டிக்குள் bath எடுக்க நினைத்திருப்பாவா, தொட்டிக்குள் அவ்வளவு விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்குமா?) உடனே தனது நண்பர் ஒருவரை அழைத்திருந்தாராம். பின் 9 மணிக்கு பொலிஸுக்கு call பண்ணினார்களாம். (6 மணியிலிருந்து 9 மணிவரை பொலிஸ், மருத்துவர், அம்புலன்ஸ் எதையும் அழைக்காமல் என்ன செய்தார்கள்?) 

பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஶ்ரீதேவி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்களாம். ஶ்ரீதேவி 11 மணியளவில் இறந்திருப்பதாக கூறப்பட்டது. (9 மணிக்கு பொலிஸுக்கு சொன்னவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 11 மணிக்கு மேலானதா?)

பின் நேரத்தையும் சம்பவங்களையும் மாற்றி மாற்றி கதைத்தார்கள்.

ஹொட்டல் தரப்பில் துபாய் ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்டதாக வந்த செய்தி, ஶ்ரீதேவி 24 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் room service க்கு அழைத்து தண்ணீர் தருமாறு கேட்டிருந்தாராம். 15 நிமிடத்தால் hotel staff ஶ்ரீதேவி தங்கியிருந்த அறைக்கு வந்து பெல் அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. அதனால் பயத்தில் alarm ஐ அடித்ததாகவும். தாம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது குளியலறை நிலத்தில் (தொட்டியிலல்ல) ஶ்ரீதேவியை கண்டதாகவும் அவர் தனியாக தான் இருந்ததாகவும் (போனி அருகில் இல்லை) அப்பொழுது 11 மணியிருக்கும், அவருக்கு pulse இருந்ததாகவும் உடனே தாம் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்கள்.

இரு வேறு செய்தி.

Link to comment
Share on other sites

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

ஶ்ரீதேவியின் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் அது பற்றி முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை எனவும் துபாயிலுள்ள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஶ்ரீதேவி மரணம் பற்றி சரியான விசாரணை நடத்த பலரும் கேட்டார்கள். ஆனால் 24 ஆம் திகதி ஶ்ரீதேவி மரணிக்க 27 ஆம் திகதி துபாயில் case ஐ அவசரமாக முடித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.