Jump to content

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Actress Sridevi death not accidential,says Kerala DGP

ஸ்ரீதேவியின் மரணம், வெளியுறவுத் துறை சந்தேகம்!

நடிகை ஶ்ரீதேவி, படுகொலை செய்யப்பட்டார்.. கேரளா டிஜிபி ரிஷிராஜ் சிங் பகீர்

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்தவர் டாக்டர் உமாடாதன். இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் காலமானார்.

உமாடாதன் கூறியதாக கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் ஶ்ரீதேவி மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஶ்ரீதேவியின் மரணம் பற்றி அறிய உமாடாதனை சந்தித்தேன். அப்போதுதான் ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணையில் கிடைத்த பல ஆதாரங்களும் அவரது மரணம் நிச்சயம் விபத்து அல்ல என்பதையே வெளிப்படுத்தியதாக உமாடாதன் கூறினார்.

ஶ்ரீதேவி அதிகமாக குடித்துவிட்டு குளியல் அறையில் மூழ்கிவிட்டார் என்பது அபத்தம். அப்படியே அதிகமாக குடித்திருந்தாலும் 1 அடி தண்ணீரில் ஒருவர் மூழ்க முடியாது.

அவரது தலையை பிடித்து யாரேனும் அழுத்தினால்தான் மரணிக்க முடியும் என்பதும் உமாடாதனின் கருத்து. இவ்வாறு டிஜிபி ரிஷிராஜ்சிங் கூறியுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/thiruvananthapuram/actress-sridevi-death-not-accidential-says-kerala-dgp-356453.html



 

Link to comment
Share on other sites

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Lara said:

ஶ்ரீதேவி கொல்லப்பட்டார் என்றே நானும் நினைக்கிறேன்.

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

கொலை செய்பவர்கள் வீடியோவோ படமோ எடுத்துக் கொண்டு கொலை செய்வதில்லையே தமிழ்சிறி? அதனால் கொலை தான் செய்திருப்பர்! அவர் செத்ததை அவரே வீடியோ எடுத்து அதைப் பார்த்தால் மட்டுமே நாம் அவராகவே செத்தார் என்று நம்புவோம்! (லாராவிடம் இருந்து கற்றுக் கொண்ட லொஜிக்!😎)

Link to comment
Share on other sites

ஜஸ்டினை பொறுத்தவரை ஊடகங்கள் சொல்வதை அப்படியே நம்பிவிட வேண்டும். (ஊடகங்கள் கொலையாளிகளுக்கு சார்பாக செய்தி பிரசுரித்தாலும்). 😊

Link to comment
Share on other sites

On 7/10/2019 at 5:02 AM, தமிழ் சிறி said:

ஸ்ரீதேவி... வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாய்.
மற்றைய நடிகைகள் மாதிரி.. பல திருமணம் செய்யாமல், 
ஒரு கணவருடன், வாழ்க்கையை நடத்தி வந்தவர்.
அப்படி இருக்கவும்... வெளி நாட்டில், கொலை செய்யப் படுவதற்கு... 
என்ன காரணமாக இருக்கும் என்பதுதான்... புரியாத  புதிராக உள்ளது.

திரைப்படத்துறையில் கொலை என்பது சகஜம்.

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்ட பின் போனி கபூரும் அவரது முதல் மனைவியின் மகனான அர்ஜுன் கபூரும் ஒட்டாக திரிந்தார்கள். (கபூர் குடும்ப மீளிணைவு).

ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வெளியாகவுள்ள நேரம் பார்த்து நடந்த கொலை. அர்ஜுன் கபூரின் முதல் படம் வெளியாக முன் அவரது தாயாரும் போனி கபூரின் முதல் மனைவியுமான மோனா கபூர் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம்.

கபூர் குடும்பம் தான் கொலையை செய்ததாக வட இந்தியாக்காரர் கதைக்கினம். 

பாதாள உலக குழுவின் தலைவரான தாவூத் இப்ராஹிம் துபாயில் செல்வாக்குடையவர் என்பதால் அவரை பயன்படுத்தி துபாயில் விடயங்களை கையாண்டிருக்கலாம் என்று ஓய்வு பெற்ற டெல்லி துணை பொலிஸ் கமிஷனர் Ved Bhushan முன்னர் கூறியிருந்தார். அவரும் ஶ்ரீதேவி கொலை தொடர்பாக விசாரணை செய்து வந்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Lara said:

ஓமானில் ஶ்ரீதேவியின் பெயரில் 240 கோடி (இந்திய) ரூபாய் மதிப்புள்ள life insurance செய்திருந்தார்களாம், அதிலுள்ள நிபந்தனை ஶ்ரீதேவி ஜக்கிய அரபு இராச்சியத்தினுள் இறந்தால் தான் அத்தொகையை பெற முடியும். அதனால் தான் துபாயில் வைத்து கொன்றார்கள் என நினைக்கிறேன்.

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für Arjun Kapoor

எனக்கு இவரிலை ஒரு டவுட்டு....:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎11‎/‎2019 at 12:56 PM, Kadancha said:

பிள்ளைகள் உள்ள எந்தவொரு தம்பதியும் பிரிவதற்கான காரணமாக, மூன்றாம் நபரை (இந்த இடத்தில  சிறிதேவி) ஒருபோதும் குற்றம் குறை கூற முடியாது.

மூன்றாம் நபர் பிரிப்பதற்கு, தம்பதியினரின் சித்த சுவாதீனம் அற்றவர்கள் அல்ல.

பிரிந்தவரில் ஒருவரோ அல்லது இருவருமே ஆழமாக சிந்தித்தே, பிரியும் முடிவை எடுத்திருக்க முடியும்.

பிரிவின் காரணம் ஏதுவாகிலும், மூன்றாமவருடன் உள்ள பாலியல் கவர்ச்சியானாலும்.   

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 2:15 PM, Kadancha said:

இதில் உள்ள நேர்மறையான முரண்பாடு, காப்புறுதி, அதுவும் இவ்வளவு பெரிய தொகையை, இத்தகைய சர்ச்சைகள் இருக்குமிடத்தில் காப்புறுதி நிறுவனம் தன்னுடைய தனிப்பட்ட தடயவியல் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கும்.  

சூழ்நிலை ஆதாரங்கள், கொலை செய்யப்படுவதற்கான ஏதுக்களையும், சாத்தியக்கூறையும் காட்டி நிற்க்கின்றது என்பதுவும் வெளிப்படடை.   

காப்புறுதி நிறுவனம் ஶ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா என சந்தேகமாக இருப்பதாக கூறியதாக தான் முன்னர் வாசித்தேன். பின் அது பற்றிய செய்திகள் எனது கண்ணில் படவில்லை என்பதால் என்ன நடந்தது என தெரியாது. ஆனால் துபாய் அரசு, பொலிஸ் என அனைவரும் கொலையாளிகள் பக்கம் இருக்க இவர்களால் ஏதும் செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்.

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 10:59 AM, ரதி said:

போனி கபூர் படங்கள் எடுத்து நட்டம் என்றும்,அதனால் அவர்களுக்குள் பிரச்சனை இருந்தது என்றும் வாசித்த நினைவு ...போனி  கபூரின் முதல் மனைவி இறந்தது புற்று நோயால்...அவர்கள் பிரிந்து கண காலம் உயிரோடு இருந்து தான் இறந்தவர்...அர்ஜுன் கபூருக்கு தன்னுடைய அப்பாவையும்,அம்மாவையும் பிரித்தது சிறிதேவி என்பதால் அவர்கள் இருவரோடும் கதைக்காமல் இருந்தார்...அது அவர் மட்டுமல்ல எந்த மானம் உள்ள பிள்ளையும் அதைத் தான் செய்வார்கள் 

 

On 7/12/2019 at 9:07 PM, ரதி said:

ஏன் சிறிதேவி மேல் பிழை சொல்ல முடியாது...அவர் மேல் தான் முழுப் பிழையும்...போனி கல்யாணம் கட்டி வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் அவரை திருமணம் செய்தது இவவின் பிழை தான்..போனி கபூரும் முதல் மனைவியை காதலித்தது திருமணம் செய்திருந்தும், வளர்ந்த இரு பிள்ளைகள் இருந்தும் வெறும் வடிவில மயங்கி கல்யாணம் கட்டினது பிழை.

ஆனால் நான் நினைக்கவில்லை இவவுடைய மரணம் கொலை என்று ...மகன்  கொல்ல நினைத்திருந்தால் எப்பவோ கொன்றிருப்பான்...தகப்பனை பொறுத்த வரை இவ ஒரு பணம் காய்ச்சி மரம் ...கண காலம் நடிக்காமல் இருந்தவ ,நடிக்க வந்ததே காசுக்காய் தான் 
 

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம்

எங்களுக்கு இப்பவும் விருப்பம் இருக்குதாக்கும்! நாங்கள் ஐந்து வயதிலிருந்தே உயிரையும் கொடுக்கும் விசிறிகளாக்கும்😍

Screen+Shot+2018-07-13+at+11.26.11+AM.pn

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள்.

ஶ்ரீ தேவியின் தாயாரின் சத்திர சிகிச்சையின் தவறுதலால் வந்த நஷ்டயீட்டு பணத்தை அப்படியே போனிகபூருக்கு கொடுத்ததாகவும் ஒரு கதை உலாவியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎14‎/‎2019 at 10:16 AM, Lara said:

 

போனி கபூருக்கு ஶ்ரீதேவி மேல் 70 களின் இறுதியிலேயே விருப்பம் இருந்ததாம் (ஶ்ரீதேவியின் தமிழ் படம் பார்த்து, முதலாவது ஹிந்தி படம் பார்த்து). தயாரிப்பாளர் என்ற ரீதியில் தனது படத்தில் ஶ்ரீதேவியை நடிக்க வைக்க முயற்சி செய்து ஶ்ரீதேவியின் தாயாருடன் கதைத்து Mr India படத்தில் நடிக்க வைத்தார். அப்படம் 1987 இல் வெளியிடப்பட்டது. அப்பட வெளியீட்டின் பின் ஶ்ரீதேவிக்கு பின்னால் சுற்றி திரிந்தவர்.

போனி கபூரும் மோனா கபூரும் 1983 இல் திருமணம் செய்திருந்தார்கள். இங்கு திருமணம் செய்த பின்னும் இன்னொருவர் பின் சுற்றியது போனி கபூர். போனி கபூருக்கும் மோனா கபூருக்கும் 1989 இலிருந்து பிரச்சினை இருந்து வந்தது என்றும் வாசித்தேன். அவர்கள் முன்னமே விவாகரத்து பெற்றிருக்க வேண்டியவர்கள், ஶ்ரீதேவி பிரச்சினையுடன் பிரிந்தார்கள் என நினைக்கிறேன். பிரிந்ததும் மோனா கபூர் போனி கபூரின் குடும்பத்தினரையும் தனது பிள்ளைகளையும் ஶ்ரீதேவிக்கு எதிராக திருப்பி விட்டிருந்தார். அதனால் தான் அர்ஜுன் கபூருக்கு ஶ்ரீதேவியை பிடிக்கவில்லை. ஶ்ரீதேவியின் பிள்ளைகளுக்கு எதிராகவும் கதைத்து வந்தவர். மற்றும்படி அர்ஜுன் கபூரும் அதே விடயத்தை தான் செய்தவர். Malaika Arora என்ற ஏற்கனவே திருமணம் செய்த, வளர்ந்த பிள்ளையை கொண்ட ஒருவருடன் சுற்றித்திரிந்து அவர் விவாகரத்து பெற்று முன்னர் ஒளிச்சொளிச்சு இடைக்கிட மட்டும் மீடியா கண்ணில் பட சுற்றினவை இப்ப வெளிப்படையா சொல்லிட்டு சுத்தினம்.

அக்காலகட்டங்களில் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் கறுப்பு பணத்தை தான் சம்பளமாக கொடுப்பார்கள் என்றும் அப்பணத்தை ஶ்ரீதேவியின் தந்தை தனது உறவினர்கள், நண்பர்கள் பலரிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் அவர் இறந்ததும் அவர்கள் அப்பணத்தை ஶ்ரீதேவிக்கு மீள கொடுக்காமல் துரோகம் செய்து விட்டார்கள் என்றும் வாசித்தேன். 90 களில் ஶ்ரீதேவியின் தாய்க்கு brain tumor இருந்தது. அவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யும்படி போனி கபூர் கூறி அமெரிக்காவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அங்கு இடது பக்கத்தில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை வலது பக்கத்தில் மாறி செய்து விட்டார்கள். இதனால் அமெரிக்காவில் அந்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடுத்து பின் பணம் வழங்கப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட்டது. இக்காலகட்டத்தில் போனி கபூர் ஶ்ரீதேவியுடன் நின்றார் என்றும் வாசித்தேன். 

ஶ்ரீதேவியை சுற்றியிருந்த பலரும் அவரை விட்டு விலகிய நேரம் போனி கபூர் அருகில் இருந்ததால் ஶ்ரீதேவிக்கு அவரில் விருப்பம் வந்திருக்கலாம். ஶ்ரீதேவியின் சூழ்நிலையை போனி பயன்படுத்தியிருக்கலாம். ஶ்ரீதேவி போனி கபூரை திருமணம் செய்ய முன்னமே போனி கபூர் சில படங்களில் தோல்வியடைந்து கடனில் இருந்தவர். ஶ்ரீதேவியின் சொத்துக்கள் பலவற்றை விற்று தான் அவரது கடனை அடைத்தார்கள். அதனால் தான் ஶ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். ஶ்ரீதேவியை பணமீட்டும் இயந்திரமாக போனி பயன்படுத்தி வந்தவர். ஆனால் ஶ்ரீதேவியின் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின் ஶ்ரீதேவி அவருக்கு தேவையில்லை. ஶ்ரீதேவியின் மரணத்துடன் பிள்ளைகளுக்கு விளம்பரம் தேடி முதல் மகளின் படமும் வெற்றி பெற்று விட்டது. இனி அவர்கள் இருக்கிறார்கள் காசு மரமாக.

ஶ்ரீதேவி இறந்ததும் உடனே அர்ஜுன் கபூர் துபாய்க்கு ஓடிப்போய் தந்தையுடன் நின்றார். திடீரென அவ்வளவு பாசம் வந்திருக்கும் என நான் நினைக்கவில்லை. ஏற்கனவே அனைவரும் போட்ட பிளான் படி செயற்பட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.


இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 


முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.


எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

Link to comment
Share on other sites

1 hour ago, ரதி said:

நீங்கள் தான் மேலே எழுதினீர்கள் இன்சூரன்ஸ் பணத்திற்காக கொலை செய்து விட்டார்கள் என்று. அதே நீங்கள் போனிக்கு சிறீதேவியால்  வரும் பணம் பெரிதில்லை என்று எழுதுகிறீர்கள் ..சினிமாத துறையில் இருப்பவர்கள் எல்லோரும்,எல்லோருடன் படுப்பது தான்...நாளைக்கே அர்ஜுனுக்கு ஏதாவது நடந்தால் மலைக்காவின் மகன் தான் எதோ செய்து விட்டார் என்று சொல்வீர்கள் போல இருக்கு.


இருவரும் பிரியும் பிள்ளைகள் ரீன் ஏஜ் பருவத்தில் இருந்தார்கள்...தாயாரோடு இருந்ததால் தகப்பன் மேல் இன்னும் கோபம் அதிகமாய் இருந்திருக்கும்...ஆனால் தப்பான மேல் பாசம் இருக்கும்... அதனால் தகப்பனின் துயரத்தில் பங்கு எடுத்திருக்கலாம்...சில நேரம் அர்ஜுனுக்கு சிறிதேவி செத்தது சந்தோசமாய் இருக்கும்...ஆனால் அவர்கள் தான் கொன்றது என்பது விசர்க்கதை 


முதல், எழுதும் போது முதல் மனைவியை அவர் கொன்றார் என்று எழுதினீர்கள்...நான் வந்து எழுதின பிறகு மகனையும்,தகப்பனையும் குற்றம் சாட்டுகிறீர்கள்.


எழுந்தமானமாய் கதைப்பதை நிப்பாட்டுங்கள் 

நான் எழுந்தமானதாக கதைக்கவில்லை. நீங்கள் எனது கருத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.

கொலை செய்யப்பட்டமைக்கு பல காரணங்கள், அதில் ஒரு காரணமான insurance பணத்துக்காக துபாயில் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என எழுதினேன். (ஶ்ரீதேவி உயிருடன் இருப்பதை விட இறப்பதன் முலம் அவர்களுக்கு அதிக இலாபம். இறந்த பின் ஶ்ரீதேவியின் சொத்துக்களை யார் எடுப்பது என ஒரு பிரச்சினையும் நடந்தது.)

அதே நேரம் இன்னொரு காரணமாக ஶ்ரீதேவியின் மூத்த மகளின் முதல் படம் வரும் வெளிவரும் நேரம் நடந்த கொலை என்றும் எழுதினேன். அர்ஜூன் கபூரின் முதல் படம் வெளிவரும் நேரம் அவர் தாயார் இறந்தார். (அதுவும் கொலையா என தெரியாது என எழுதியிருந்தேன். கொலை என்றே நான் நினைக்கிறேன். அது Bollywood சம்பந்தமான விடயம். அது பற்றி விரிவாக எழுத யாழில் மட்டுக்கள் விட மாட்டார்கள். அதனால் தான் மேலதிகமாக எழுதவில்லை. அவருக்கு புற்று நோய் இருந்தது எனக்கு முன்னமே தெரியும். நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வேண்டியதில்லை). 

இன்னொரு காரணமாக கபூர் குடும்ப மீளிணைவுக்காக என எழுதியிருந்தேன் (அதில் அர்ஜூன் கபூரையும் சேர்த்து தான் கூறினேன்).

இன்னும் பல காரணங்கள் இருக்கலாம் என்றும் எழுதினேன்.

அர்ஜுனுக்கு தனது தாய் தந்தையை பிரித்தது ஶ்ரீதேவி என்பதால் கதைக்காமல் இருந்தார், எந்த மானமுள்ள பிள்ளையும் அதைத்தான் செய்யும் என எழுதியிருந்தீர்கள். அர்ஜுனும் இன்னொரு குடும்பத்தை பிரித்தவர் என்பதால் அவரை நீங்கள் மானமுள்ள பிள்ளை என கூற முடியாது. 

அர்ஜூனுக்கு ஏதும் நடந்தால் மலைக்காவின் மகன் ஏதும் செய்து விட்டார் என நான் சொல்லப்போவதில்லை. காரணம் அர்ஜுனை ஶ்ரீதேவிக்கு எதிராக ஶ்ரீதேவியை வெறுக்குமளவுக்கு அவரது தாயார் திருப்பியது போல் மலைக்காவின் மகனை அர்ஜுனுக்கு எதிராக யாரும் திருப்பப்போவதில்லை.

ஶ்ரீதேவி மரணம் பற்றி வந்த செய்திகளை பார்த்தவர்களுக்கு அது கொலை என இலகுவில் விளங்கியிருக்கும், அது பற்றி ஒரு சிலவற்றை பின்னர் எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

20 ஆம் திகதி திருமண நிகழ்வில் போனி கபூர், ஶ்ரீதேவி, இரண்டாவது மகள் கலந்து கொண்டார்கள். முதல் மகள் படப்பிடிப்பில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை. கபூர் குடும்பத்தை சேர்ந்த வேறு பலரும் கலந்து கொண்டார்கள். பின் கபூர் குடும்பத்தினர் இந்தியா திரும்பியிருந்தார்கள். 

ஶ்ரீதேவியை துபாய் ஹொட்டலில் தனியா விட்டிட்டு போனியும் மகளும் கூட இந்தியா திரும்பியிருந்தார்கள். ஶ்ரீதேவி தனது சகோதரியை சந்திக்க நின்றதாக ஒருக்காவும், ஷொப்பிங் செய்ய நின்றதாக ஒருக்காவும், ஓவியங்களை ஏலம் விட நின்றதாக இன்னொருக்காவும் கூறினார்கள்.

Link to comment
Share on other sites

ஶ்ரீதேவி மரணமடைந்த செய்தி வந்ததும் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு இந்தியா திரும்பிய சஞ்சய் கபூர் மீண்டும் துபாய்க்கு சென்று அங்கிருந்து போனி தரப்பில் ஊடகத்துக்கு கூறியது ஶ்ரீதேவி இரவு (24 ஆம் திகதி) 11, 11.30 மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார், அதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள் என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணவீடு முடிஞ்சு இந்தியாவுக்கு போன போனி கபூர்  திரும்பி  சிறிதேவிக்கு இன்ப அதிர்ச்சி குடுக்க துபாய்க்கு திரும்பி வந்தவராம். 
புருசன் வீட்டிலை தனிய இருக்க பொண்டாட்டி  பாத்றூமை பூட்டிப்போட்டு குளிக்க போனாராம்.🤪

Link to comment
Share on other sites

பின் மாரடைப்பால் மரணமடைந்த கதை, “accidental drowning” ஆக மாறிய கதை பலருக்கும் தெரியும்.

ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக போனி தரப்பு முதலில் கொடுத்த விளக்கம்.

இந்தியா திரும்பிய போனி மகளை இந்தியாவில் விட்டுட்டு ஶ்ரீதேவிக்கு சப்ரைஸ் குடுக்க நினைத்து மீண்டும் 24 ஆம் திகதி துபாய்க்கு போனாராம். (வந்திட்டு திரும்பி போக இது என்ன பக்கத்து வீடா?) மாலை 5.30 க்கு ஹொட்டல் அறைக்கு சென்று ஶ்ரீதேவியை எழுப்பி சுமார் 15 நிமிடங்கள் அவருடன் கதைத்து விட்டு பின் dinner க்கு போக அழைத்ததாகவும் ஶ்ரீதேவி fresh ஆகிட்டு வாறதா சொல்லி bathroom உள்ளே சென்றாராம். 15 நிமிடங்களாகியும் காணவில்லை என்றதும் தான் கதவை தட்டிப்பார்த்து பதிலில்லாததால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல ஶ்ரீதேவி குளியல் தொட்டிக்குள் ஒரு அசைவுமில்லாமல் இருந்தவராம். (Dinner போக fresh ஆகிட்டு வாறதா சொன்னவா குளியல் தொட்டிக்குள் bath எடுக்க நினைத்திருப்பாவா, தொட்டிக்குள் அவ்வளவு விரைவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்குமா?) உடனே தனது நண்பர் ஒருவரை அழைத்திருந்தாராம். பின் 9 மணிக்கு பொலிஸுக்கு call பண்ணினார்களாம். (6 மணியிலிருந்து 9 மணிவரை பொலிஸ், மருத்துவர், அம்புலன்ஸ் எதையும் அழைக்காமல் என்ன செய்தார்கள்?) 

பின் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஶ்ரீதேவி ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார்களாம். ஶ்ரீதேவி 11 மணியளவில் இறந்திருப்பதாக கூறப்பட்டது. (9 மணிக்கு பொலிஸுக்கு சொன்னவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 11 மணிக்கு மேலானதா?)

பின் நேரத்தையும் சம்பவங்களையும் மாற்றி மாற்றி கதைத்தார்கள்.

ஹொட்டல் தரப்பில் துபாய் ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்டதாக வந்த செய்தி, ஶ்ரீதேவி 24 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் room service க்கு அழைத்து தண்ணீர் தருமாறு கேட்டிருந்தாராம். 15 நிமிடத்தால் hotel staff ஶ்ரீதேவி தங்கியிருந்த அறைக்கு வந்து பெல் அடித்தும் அவர் கதவை திறக்கவில்லை. அதனால் பயத்தில் alarm ஐ அடித்ததாகவும். தாம் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்ற போது குளியலறை நிலத்தில் (தொட்டியிலல்ல) ஶ்ரீதேவியை கண்டதாகவும் அவர் தனியாக தான் இருந்ததாகவும் (போனி அருகில் இல்லை) அப்பொழுது 11 மணியிருக்கும், அவருக்கு pulse இருந்ததாகவும் உடனே தாம் விரைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறப்பட்டதாகவும் கூறினார்கள்.

இரு வேறு செய்தி.

Link to comment
Share on other sites

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

ஶ்ரீதேவியின் தலையிலும் உடலிலும் காயங்கள் இருந்ததாகவும் அது பற்றி முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை எனவும் துபாயிலுள்ள ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ஶ்ரீதேவி மரணம் பற்றி சரியான விசாரணை நடத்த பலரும் கேட்டார்கள். ஆனால் 24 ஆம் திகதி ஶ்ரீதேவி மரணிக்க 27 ஆம் திகதி துபாயில் case ஐ அவசரமாக முடித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

accidental drowning என்பது நம்பும் வகையில் இல்லை என பலர் கூற traces of alcohol இருந்ததாக கூறினார்கள். (ஶ்ரீதேவி உண்மையில் அல்கஹோல் பானங்கள் அருந்துவதில்லை என அவரை நெருங்கிய பலர் கூறியிருந்தார்கள்).

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.