Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குருநாகலில் பசியின் கொடுமை காரமாண தாயும் மகளும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கல்கமுவ பிரதேசத்தில் பல நாட்களாக உணவின்றி தவித்த தாயும் மகளுமே தற்கொலை செய்ய முயன்றுள்ளனர். எனினும் பொலிஸார் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

கணவனால் கைவிடப்பட்ட 38 வயதான பெண்ணும் அவரது 10 வயது மகளுமே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.

தாயும் மகளும் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் கண்ணீருடன் நிற்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களை அவ்விடத்தில் இருந்து காப்பாற்றிய வேளையில், கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி ரயில் ஒன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டிருக்கவில்லை என்றால் இரண்டு உயிர்களும் பறி போயிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணுடன் கணவனுக்கு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எந்தவித வருமானமும் இல்லாத நிலையில், வீதியில் சென்றவர்களிடம் உதவி கோரிய போதிலும் எவரும் உதவி செய்யவில்லை.

வீட்டில் உடல் நிலை கோளாறுடன் வயோதிப தந்தை ஒருவரும் உள்ளார். பசிக்கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை முயற்சியை எடுத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் வறுமையின் காரணமாக தமிழ் பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் ரயிலில் வீழ்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கொள்ளுப்பிட்டி - பம்பலப்பிட்டிக்கு இடையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/220032?ref=imp-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தின் தலைநகரில் ஒரு சோமாலியா - அரசியல்வாதிகளும் இந்நிலைக்கு காரணமே - Thina Seithy

By venuja -
ddddd.jpg

தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் பாட்டாளிபுரம் என்ற இடத்தில் வாழ்ந்துவரும் தமிழ் குடும்பங்களின் இருப்பிடங்கள்தான் இவை.

gfgggggggggggg.jpgddddddddvvvvvv.jpg

வறுமையும் பசியும் வாட்டிவதைக்கும் அந்த உறவுகளையும் கொஞ்சம் நினைத்துக்கொள்வோம் – தமிழ் தேசியம் பற்றிப் பேசுகின்ற போது…

இந்தப்பகுதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனின் தேர்தல் தொகுதி.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து பேச்சு நடத்தி அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்தேசியக் கூட்மைப்பு இந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக செய்தது தான் என்ன? ரணில் அரசாங்கம் கவிழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக முண்டுகொடுத்துவருபவர்கள் இந்த மக்களாலேயே தாம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதனை ஏன்மறந்தனர்.

கம்பெரலிய திட்டத்தினூடாக பெருமளவு நிதியைப்பெற்று தனிநபர் வீடுகளுக்குச் செல்லும் வீதிகளையும் துரித கதியில் புனரமைப்பு செய்வதில் காட்டப்படும் வேகம் இந்த மக்களின் அடிப்படை வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முனையாதது ஏன்?

இந்தநிலையில் மக்களை மறந்து வாழும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட மக்களின் நிலை தெரியவரவில்லையா?

கடந்த முப்பது வருடங்களாக யுத்தவாழ்வுக்குள் நிர்க்கதியாக வாழ்ந்த மக்கள் தற்போது சொந்த இடத்துக்கு திரும்பியும் திரும்பாமலும் உள்ளநிலையில் அடிப்படை வாழ்வுக்கே அல்லலுறுகின்றனர்.

உறவுகளை இழந்து,தமது உடல் உறுப்புக்களை இழந்து எவருமே உதவ முன்வரமாட்டார்களா என ஏங்கும் எம்மவருக்கு அவர்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே முதுகை காட்டுவதுதான் வேதனை.

அத்துடன் தற்போது வரவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை ஆதரிக்கலாம் என மந்திராலோசனை வேறு. மக்களிடம் பல்வேறு பொய்களைச் சொல்லி ஆதரவுக்கரம் கோரவும் தீட்டப்படுகிறது திட்டம்

ஆனால் மக்களின் வாழ்வோ அதேநிலைதான்..

https://thinaseithy.com/தமிழீழத்தின்-தலைநகரில்-ஒ/?fbclid=IwAR0RFDJHmcZeDvfrYy0pyNfWBgz5NeIW3TYuii7XhTZvG_ICWGBWM6Sa7OQ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.