Jump to content

கிரிக்கெட் உலகக் கிண்ணம் - சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து

இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

D_HGkDGW4AIpSXz.jpg

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. 

நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது.

இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

240 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுகளில் திணறி அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.

D_G1Df9WwAAWLp3.jpg

ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் தலா ஒவ்வொரு ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேற அடுத்த வந்த தினேஷ் கார்த்திக்கும் சற்று நேரம் தாக்குப் பிடித்தாடி ஒன்பதாவது ஓவரின் இறுதிப் பந்தில் 6 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 

இதனால் இந்திய அணி முதல் 10 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 24 ஓட்டங்கள‍ை பெற்றது. 5 ஆவது விக்கெட்டுக்காக ரிஷாத் பந்த் மற்றும் பாண்டியா ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அதனால் இந்திய அணி 15 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 43 ஓட்டத்தையும், 20 ஓவரில் 70 ஓட்டத்தையும் பெற்றது. எனினும் 22.5 ஆவது ஓவரில் ரிஷாத் பந்த் 32 ஓட்டத்துடன் மிட்செல் சாண்டனரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார் (71-5) .

தொடர்ந்து தோனி களமிறங்கிய துடுப்பெடுத்தாட மறுமுணையில் பாண்டியா 30.3 ஆவது ஓவரில் 32 ஆட்டமிழந்தார் (92-6).

7 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஜடேஜா தோனியுடன் கைகோர்த்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பிக்க இந்திய அணியின் ஓட்ட குவிப்பு வேகம் அதிகரித்தது. அதன்படி 35 ஓவரில் 119 ஓட்டங்களையும், 40 ஓவரில் 150 ஓட்டங்களையும் இந்தியா பெற்றது. இந் நிலையில் 41.5 ஆவது ஓவரில் ஜடேஜா அரைசதம் விளாசினார். 

D_HcwZoX4AAiSMF.jpg

இதேவேளை 44 ஆவது ஓவருக்காக ஜேம்ஸ் நீஷம் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள அந்த ஓவரில் இரண்டு பிடியொடுப்புக்களை நியூஸிலாந்து அணி நழுவ விட்டது. 

ஒரு கட்டத்தில் இந்திய அணி 45 ஓவருக்கு 6 விக்கெட்டுக்களை இழந்த் நிலையில் 188 ஓட்டங்கள‍ை பெற்றது. ஆடுகளத்தில் ஜடேஜா 66 ஓட்டத்துடனும், தோனி 33 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடிவர வெற்றிக்கு 30 பந்துகளுக்கு 52 ஓட்டம் தேவைப்பட்டது. 

இதன் பின்னர் தோனி மற்றும் ஜடேஜாவின் இணைப்பாட்டம் 45.3 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை தொட்டதுடன் இந்திய அணி 46.3 ஓவரில் 200 ஓட்டங்களை பெற்றது. 

இந் நிலையில் ஜடேஜா 47.5 ஆவது ஓவரில் மொத்தமாக 59 பந்துகளை எதிர்கொண்டு 4 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 77 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார் 208-7) இதனால் வெற்றிவாய்ப்பு நியூஸிலாந்து அணிப் பக்கம் திரும்பியது. 

ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ஓட்டம் என்ற நிலையுமிருக்க தோனி 48.3 ஆவது ஓவரில் 50 ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சஹால் களமிங்கி துடுப்பெடுத்தாட இந்திய அணி இறுதியாக 49.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 18 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பில் ஹென்றி 3 விக்கெட்டுக்கயைும், டிரெண்ட் போல்ட், மிட்செல் சாண்டனர் ஆகியோர் 2 விக்கெட்டுக்களையும், லொக்கி பெர்குசன் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

D_G1z-OXsAUbUNZ.jpg

photo credit ; ICC

 

https://www.virakesari.lk/article/60212

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.