Jump to content

ரணில் அரசின் தலைவிதி நாளை! ஆட்டம் காணுமா அரசு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று ஆரம்பமான விவாதம் நாளை மாலை வரை தொடரும்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தையடுத்து நாளை மாலை 6.30 மணியளவில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்குப் பொது எதிரணி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஆதரவாக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.

https://www.tamilwin.com/politics/01/220090?ref=imp-news

Link to comment
Share on other sites

ஒரு நாட்டின் பணமும் பங்கு சந்தையும் ஒரு நாட்டின் அரசியல் வலுவை எதிர்வு கூற வல்லவை.

#1 : இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 177.4561 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது நேற்றையதினம் (09) ரூபா 177.7867 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள

 

#2: . பங்குச்சந்தை Market Closed
பங்கு மதிப்பு 18,372,150
புரள்வு 548,349,610.80

https://www.cse.lk/home/market

ஆக, அரசு கவிழும் மாதிரி தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

Quote

 

அதேவேளை, பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிராத அரசு கவிழுமா அல்லது காப்பாற்றப்படுமா என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கைகளிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போதே அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதா? எதிர்ப்பதா? அல்லது நடுநிலை வகிப்பதா? என்பது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுக்கவுள்ளனர்.

 

அநேகமாக ஆதரவு தான்.  பிறகென்ன கூட்டம்??

Link to comment
Share on other sites

பிரதமர், அரசாங்கம் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. 

parliment.jpg

ஜே.வி.பி.யின் பிரேரணையை ஆதரித்து 92 வாக்குகளும் பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகளும் பதியப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்ததுடன் 13 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

https://www.virakesari.lk/article/60299

 

வாக்குறுதிக்காகவே பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்தோம் - ரிஷாத் 

மக்கள் விடுதலை முன்னணியின் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் உள்ளக்கங்கள் நூறுவீதம் உண்மையாகும். என்றாலும் அரசாங்கத்துக்கு கொடுத்த வாக்குறுதியை பாதுகாப்பதற்காக மனசாட்சிக்கு விரோதமாக எதிர்த்து வாக்களிக்க தீர்மானித்தேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சி என் மீது முன்வைத்திருக்கும் பத்து குற்றச்சாட்டுக்களில் ஒன்றையேனும் நிரூபித்தால் நான் எனது அரசியலில் இருந்து விலகுவேன் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவந்திருந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் இந்த சபையில் இனவாதத்தை கக்கி வருகின்றார். கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழ் மக்களை திருப்ப முயற்சிக்கின்றார். ஆனால் தமிழ் மக்கள் இவரின் பேச்சைக்கேட்க முட்டாள்கள் அல்ல. எமக்கிடையே இருக்கும் பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்ளலாம். 

அத்துடன் அவர் ஷாபி வைத்தியர் மீது மேற்கொண்ட குற்றச்சாட்டு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்து அவர் எதிர்பார்க்கும் தீர்ப்பு வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றார். இது அவரின் மடமைத்தனமாகும். இதுபோன்ற பல இனவாத கருத்துக்களை தனது அரசியலுக்காக அவர் தெரிவித்து வருகின்றார் என்றும் இதன்போது குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/60302

 

Link to comment
Share on other sites

வக்கற்ற அரசாங்கத்தின் மீது  நம்பிக்கை வைப்பவர்கள் முட்டாள்கள் - வியாழேந்திரன் 

தமிழ் தலைமைகள் அரசாங்கத்தால் ஏமாற்றப்படவில்லை. மாறாக அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு தமிழ் தலைமைகள் தான் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வினைத் தருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களாகியும அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத வக்கற்ற அரசாங்கத்தின் மீது இனியும் நம்பிக்கை வைப்பவர்கள் முட்டாள்களே என்று பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இணங்கிய கடந்த வரவு - செலவு திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்தது. 

ஆனால் ஒரே இரவில் வர்த்தமானியில் வெளியிடக்கூடிய இந்த சிறிய விடயத்தைக் கூட செய்யாமல் அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. 

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போதும் இதே போன்று தான். வழங்கிய வாக்குறுதிகளையும் எவற்றையுமே நிறைவேற்றவில்லை. 

எனவே இந்த அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் எந்த தவறும் கிடையாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/60265

Link to comment
Share on other sites

கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் பிரதமர் - ஜே.வி.பி.

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க எழுத்து  மூலம் சம்பந்தன்  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு உத்தரவாதம் கொடுத்தே அவர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டார்.  ரணில் விக்கிரமசிங்க வழமைபோன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொண்டார் என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் சரியான ஒரு தீர்மானம் எடுத்திருந்தால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாம் வெற்றிகொண்டிருக்க முடியும். 

ஆனால் பிற்பகல் 4.30 மணியளவில் கல்முனை வடக்கு பிரதேசசபை விவகாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் சம்பந்த  உள்ளிட்ட  தமிழ் தேசிய கூட்டமைபினருக்கு  இணக்கம்  தெரிவித்திருந்தார். 

எழுத்துமூல வாக்குறுதிகளை அடுத்தே கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரித்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழைமை போன்று கப்பம் கொடுத்தே நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றி கொண்டார். அகவே இவர்கள் அரசாங்கத்தை கப்பம் மூலமாகவே காப்பாற்றியுள்ளனர். இவர்களுக்கு இல்லையென்றால் 119 வாக்குகள் கிடைதிருக்காது என்றார். 

https://www.virakesari.lk/article/60306

Link to comment
Share on other sites

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரணில் அரசை ஆதரித்து அதை காப்பாற்றியது உண்மை என்றால், அதற்கு அவரக்ளுக்கு கிடைத்தது கல்முனை வடக்கு பிரதேச சபை தரமுயர்த்தல் என மேலே உள்ள செய்தி குறிப்பு கூறுகின்றது.

இதை விட பெரிதாக ஒன்றும் கொடுக்காமல் இரணில் அரசு தன்னை தக்கவைத்ததே அதி சாதுரியமாக தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ampanai said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரணில் அரசை ஆதரித்து அதை காப்பாற்றியது உண்மை என்றால், அதற்கு அவரக்ளுக்கு கிடைத்தது கல்முனை வடக்கு பிரதேச சபை தரமுயர்த்தல் என மேலே உள்ள செய்தி குறிப்பு கூறுகின்றது.

இதை விட பெரிதாக ஒன்றும் கொடுக்காமல் இரணில் அரசு தன்னை தக்கவைத்ததே அதி சாதுரியமாக தெரிகின்றது.

அம்பனை, ஜே.வி.பி  எப்பவும் சுதந்திரக் கட்சியை (இப்ப பொ.ஐ. முன்னணி) ஆட்சிக்குக் கொண்டு வந்து தங்களை கிங் மேக்கர்களாக வைத்திருக்க விரும்பும் மூன்றாம் சிங்களத் தரப்பு என்பது என் அபிப்பிராயம். ரணிலுக்கு ஆதரவு தெரிவித்திரா விட்டால் மகிந்த குழுவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தவர்களாவோம். எப்பவும் உள்ள சிங்களத் தலைமைகளில் எது எங்களைக் குறைவாக வருத்துகின்றனர் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தான் த.தே.கூ முடிவெடுக்கிறது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

அரசுக்கு ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை;சபையில் சம்பந்தன்

அரசுக்கு ஆதரவு வழங்குவதை எமது மக்கள் விரும்பவில்லை.திருகோணமலை யில் எனது வீட்டின் முன்னால் இன்று மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆனால் இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது என்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார் இரா.சம்பந்தன்.

அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்;

இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கத்தை விட கொஞ்சம் பரவாயில்லை. கடந்த ஆட்சியின் போது இருந்ததை விட இந்த அரசு மனித உரிமைகள் விடயத்தில் பரவாயில்லை. இந்த அரசை கவிழ்த்துவிட்டு நாம் என்ன என்ன செய்யப்போகிறோம். எனவே நாங்கள் கவனமாக செயற்பட வேண்டும்.

இன்று திருகோணமலையில் என் வீட்டிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடந்தது. எனது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில்லை . இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளிப்பதை எமது மக்கள் விரும்பவில்லை. அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் சரியான தீர்மானம் எடுப்போம்.

http://thinakkural.lk/article/31654

Link to comment
Share on other sites

27 வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

sri-lankan-parliament-300x199.jpgசிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சற்று முன்னர், 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நேற்றும் இன்றும் நடந்த விவாதங்களை அடுத்து, இன்று மாலை 6.35 மணியளவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகள் அளிக்கப்பட்டன. ஆதரவாக 92 வாக்குகளே கிடைத்தன.

இதனால் 27 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ஐதேக மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஜேவிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கூட்டு எதிரணி உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

http://www.puthinappalakai.net/2019/07/11/news/38949

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.