Jump to content

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை


Recommended Posts

தமிழர் தாயகம் வட மாகாணம் யாழ்ப்பாணம்

நாவற்குழி விகாரை திறப்பு- வழக்கை வாபஸ் பெற்றது பிரதேச சபை

அமைச்சர் சம்பிக்க ரணவக்க நோில் சென்று விகாரையில் வழிபாடு
 
 
main photomain photomain photo
  •  
தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம் நாவற்குழிப் பிரதேசத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கும் இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்போடு புதிதாகக் கட்டப்பட்ட விகாரை எதிர்வரும் 13 ஆம் திகதி இரவு ஏழு மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. நாவற்குழி சம்புத்தி சுமன விகாரைத் திறப்பு விழா எனப் பெயரிடப்பட்ட அழைப்பிதழ் கொழும்பில் உள்ள பிரமுகர்களுக்கு அதிகாரபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 
 
பின்னர் 2015 ஆம் ஆண்டு 48 சிங்களக் குடும்பங்களுக்கு நாவற்குழிப் பிரதேசத்தில் காணி அனுமதிப் பத்திரம் மைத்திரி- ரணில் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு விகாரை ஒன்றைக் கட்டுவதற்காக காணி ஒதுக்கப்பட்டு, கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதற்கெதிராக சாவகச்சேரிப் பிரதேச சபை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

காணி உறுதிப்பத்திரங்கள் உள்ளிட்ட உரிய ஆவணங்கள் எதவுமின்றி விகாரை கட்டப்படுவதாகக் குற்றம் சுமத்தி, சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இதனால் விகாரையைத் தொடர்ந்து கட்டுவதற்கு நீதிபதி சிறிநிதி நந்தசேனன் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பிறப்பித்திருந்தார்.

 

சம்பிக்க
share-fb.png share-tw.png
விகாரை கட்டுவதற்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபை தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெற்றப்பட்ட பின்னர், அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க நாவற்குழி விகாரைக்குச் சென்று வழிபடும் காட்சி இது. பாட்டாளி சம்பிக்க ரணவக்க, 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து யானைச் சின்னத்தில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மகரகம தொகுதி அமைப்பாளராக சம்பிக்க ரணவக்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான அனுமதியை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு வழங்கியுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

 

ஆனால் சென்ற ஆண்டு ஆவணி மாதம் 20 ஆம் திகதி உரிய ஆவணங்கள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. விகாரை கட்டப்படும் காணி இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குரியது என்பதால் குறித்த காணியில் விகாரை கட்டுவதற்கு கொழும்பில் உள்ள வீடமைப்பு அதிகார சபையின் சிங்கள உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கிய கடிதம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனால் விகாரை கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையும் தமது மனுவை மீளப் பெற்றுக் கொண்டது. அத்துடன் சென்ற ஆண்டு பத்தாம் மாதம் பதினொராம் திகதி விகாரையைக் கட்டுவதற்கான அனுமதியையும் சாவகச்சேரி பிரதேச சபை வழங்கியுள்ளது.

அனுமதி வழங்கப்பட்டது என்பதை சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் கந்தையா வாமதேவன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் குறித்த விகாரை அவசர அவசரமாக கட்டிமுடிக்கப்பட்டு திறப்பு விழாவும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது குறித்து கூர்மைச் செய்தித் தளத்திடம் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி காண்டீபன், விகாரை கட்டப்படுவதற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்றார்.

ஏனெனில், நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காண்பித்தால் பிரதேச சபை கட்டடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கியே ஆகவேண்டும். இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள சட்டங்கள் மூலமாக ஈழத் தமிழர்கள், தமது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த முடியாது.

எனவே ஈழத் தமிழர் பிரதேசங்களில் காணி அபகரித்தல், விகாரை கட்டுதல், புத்தர் சிலைகள் வைத்தல் போன்ற விடயங்களுக்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து நீதியைப் பெற முடியாது. ஆகவே இந்த விவகாரத்தை ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சனையாகவே நோக்கியிருக்க வேண்டும் என்று காண்டீபன் கூறினார்.

இதேவேளை, புதிதாகத் திறக்கப்படவுள்ள விகாரைக்கான புனிதத் தாது, நாளை மறுதினம் 12 ஆம் திகதி குருநாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து காலை எட்டு மணிக்கு ஊர்வலமாக (பெரகரா) எடுத்துச் செல்லப்படும்.

அன்று இரவு அனுராதபுரம் துபாராம சைத்திய விகாரையைச் சென்றடையும் ஊர்வலம், அடுத்த நாள் 13 ஆம் திகதி காலை ஏழு மணிக்கு மீண்டும் அங்கிருந்து ஆரம்பமாகி அன்றைய தினம் மாலை ஐ;ந்து மணிக்குப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நாவற்குழி சம்புத்தி சுமன விகாரையைச் சென்றடையுமென அழைப்பிதழில் கூறப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நல்லிணக்கம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்தின் காலத்திலேயே இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு இலங்கை ஒற்றையாட்சியின் சட்டங்களுக்கு அமைவாக விகாரைகள் துரிதமாகக் கட்டப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கடந்த ஆண்டு மாசி மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆயிரம் விகாரைகள் கட்டப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயற்பாட்டாளர் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க, வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் விகாரைகள் கட்டும் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றார்.

நாவற்குழி விகாரையை கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்ட பின்னர், கடந்த மாதம் அங்கு சென்ற அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, அந்த விகாரையில் வழிபட்டார்.

ஆயிரம் விகாரைகள் கட்டப்படுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கூறியிருந்தார்.

சாவகச்சேரி பிரதேச சபை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளது.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உண்டு. ஆனால் அந்த அதிகாரங்கள் எதுவுமே இதுவரை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காணி அதிகாரங்களை கொழும்பு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் நிர்வாகம் தம்வசப்படுத்தியுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு அல்ல. ஆனால் அந்தத் திருத்தச் சட்டத்தைக் கூட உரிய முறையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்த விரும்பவில்லையென தமிழ்த் தரப்பு ஏலவே குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1072&fbclid=IwAR2JA1cxrtp-3bgRu3JRHxBwZVuQLySMq2QplZcL7mBLlNmhyJG_gB7R3Hc

Link to comment
Share on other sites

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் புத்த மதத்திற்கு மாறினால் மொழியையும் நிலத்தையும் தக்கவைக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையில் எதுவும் செய்யலாம்! 

மதம் மாறினவையள் தான் இன்று பெரும்பான்மை சிங்களவர்களாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.

 

Link to comment
Share on other sites

17 hours ago, ampanai said:

இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் புத்த மதத்திற்கு மாறினால் மொழியையும் நிலத்தையும் தக்கவைக்கலாம் என எண்ணத்தோன்றுகின்றது. 

 

12 hours ago, ஏராளன் said:

அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்தால் இலங்கையில் எதுவும் செய்யலாம்! 

மதம் மாறினவையள் தான் இன்று பெரும்பான்மை சிங்களவர்களாகியுள்ளதாக நான் கருதுகிறேன்.

 

ஐம்பெரும் காப்பிய காலம் நினைவுக்கு வருகிறது. காவிரி பூம்பட்டணம் செழித்து ஓங்கிய காலம் அது. பின்னர் சோழர் காலத்தில் பௌத்தம் அழிக்கப்பட்ட சிங்களமும் பாளியும் தான் பௌத்தத்தை பாதுகாத்தன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நிலத்தில் சொந்த இனத்தால் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டும்.தேர் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு பதிலாய் பொக்லைன் இயந்திரமூலம் இழுக்கப்பட்டும் அவமானபடுத்தபடும்  தாயக தமிழர்கள்  பெளத்ததிற்கு மாறி இதுபோன்ற விகாரைகளில் போய் நிம்மதியாய் வழிபாடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு..

புல்டோசரையும் பொக்லைனையும்விட சக தமிழன் தரம் குறைந்தவனென்றால் புத்தரை தொழுவதில் ஒன்றும் தப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

சொந்த நிலத்தில் சொந்த இனத்தால் கோவில்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டும்.தேர் வடம் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு பதிலாய் பொக்லைன் இயந்திரமூலம் இழுக்கப்பட்டும் அவமானபடுத்தபடும்  தாயக தமிழர்கள்  பெளத்ததிற்கு மாறி இதுபோன்ற விகாரைகளில் போய் நிம்மதியாய் வழிபாடு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு..

புல்டோசரையும் பொக்லைனையும்விட சக தமிழன் தரம் குறைந்தவனென்றால் புத்தரை தொழுவதில் ஒன்றும் தப்பில்லை.

உண்மைதான்.தமிழினம் தனக்குத்தானே சூனியம் வைத்து அழிந்து கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துவும் எமது மதம் இல்லை.

பெளத்தமும் எமது மதமில்லை.

தமிழுக்கு, தமிழர்க்கு என ஒரு நிறுவன மயப்பட்ட மதம் இருந்திருக்கவில்லை.  இயற்கையையும், மூதாதையையும் வழிபட்ட நம் இனத்தில், இறை எனும் தத்துவம் இருந்தது ஆனால் நிறுவனமயப்பட்ட மதம் இருக்கவில்லை.

இந்த வெற்றிடத்தை இந்து (பிரம்மணியம்), சமண, பெளத்த, கிறீஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் நிரப்பி கொண்டன.

தமிழர்களின் பெரும்பான்மை மதமாக எப்போதும் பிரம்மணியம்தான் இருந்தது என்றில்லை.

வர்ணாசிரம அடிப்படையில் அமைவதால் இந்து சமயத்தில், மானம் உள்ள எந்த தலித்தும் இருக்க மாட்டன்(ள்) என்பதும் உண்மையே.

எனவே இன்னொரு முறை மத அடையாளத்தை மாற்றுவதால், நம் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க முடியும் என்றால் ஏன் அப்படி செய்ய கூடாது? என்ற கேள்வியில் நியாயம் இருந்தாலும்,

1. ஆக்கிரமிப்புக்கு அடி பணிந்து எம் தற்போதைய மத அடையாளத்தை விட்டு கொடுப்பது இழுக்கில்லையா?

2. நீர்கொழும்பு-மன்னார் வரை கத்தோலிக்கராக மாறிய தமிழர், ஈற்றில் இன மொழி அடையாளத்தையும் இழந்துவிட்டது போல் எமக்கும் ஆகாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

D_FpVltXUAApfP_.jpgD_FpVlvW4AAZ7pQ.jpgD_FpVlvX4AAs6dW.jpg

ஈழத்தில் 11 ஆம் வகுப்பு வரை சமய பாடம் ஒரு கட்டாய பாடம். நாங்கள் இந்துக்கள் அல்ல, சைவர்கள்.

 

Link to comment
Share on other sites

எமது மக்கள் ஒரு நலிவுற்ற நிலையில் இன்று உள்ளார்கள்.


தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரங்கேறும் நில அகபரிப்பு, பறிபோகும் வாழ்வாதாரங்கள்.
வறுமை, விரக்தி, யாருமே அற்ற நாதி நிலை.

இந்த நிலைமையில் நாளைக்கு எவ்வாறு தனி நபராக, குடும்பமாக, சமூகமாக வாழ்வை தக்கவைத்து வாழ்வது என விடை கண்டால் மட்டுமே, வாழ்ந்தால் மட்டுமே, நாளைமறுநாள் பற்றி யோசிக்க மக்களும் நிலமும் இருக்கும்.

சிங்கள குயேற்றத்தையும் கொஞ்சம் குறைக்கலாம். மொழியை ஒரு பிரேதச ரீதியாக தக்கவைக்கலாம்.

இதை விட மாற்று வழிகள் இருக்கும் என்றால் அவையும் மக்களால், மக்கள் விரும்பிகளால் நிச்சயம் ஆராயப்படல் வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

எமது மக்கள் ஒரு நலிவுற்ற நிலையில் இன்று உள்ளார்கள்.


தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, அரங்கேறும் நில அகபரிப்பு, பறிபோகும் வாழ்வாதாரங்கள்.
வறுமை, விரக்தி, யாருமே அற்ற நாதி நிலை.

இந்த நிலைமையில் நாளைக்கு எவ்வாறு தனி நபராக, குடும்பமாக, சமூகமாக வாழ்வை தக்கவைத்து வாழ்வது என விடை கண்டால் மட்டுமே, வாழ்ந்தால் மட்டுமே, நாளைமறுநாள் பற்றி யோசிக்க மக்களும் நிலமும் இருக்கும்.

சிங்கள குயேற்றத்தையும் கொஞ்சம் குறைக்கலாம். மொழியை ஒரு பிரேதச ரீதியாக தக்கவைக்கலாம்.

இதை விட மாற்று வழிகள் இருக்கும் என்றால் அவையும் மக்களால், மக்கள் விரும்பிகளால் நிச்சயம் ஆராயப்படல் வேண்டும்.  

அந்த தமிழ் தலைவர்கள் என்ன செய்கின்றார்கள்? ஆட்சியை தக்க வைப்பதில் கவனம் செலுத்துகின்றார்களோ? இலங்கையின் ஆட்சியை நிர்மாணிக்கும் வல்லமை பெற்றவர்கள் தன் இனத்தின் தலைவிதியை மாற்ற முடியாத  பொய்யர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

D_FpVltXUAApfP_.jpgD_FpVlvW4AAZ7pQ.jpgD_FpVlvX4AAs6dW.jpg

ஈழத்தில் 11 ஆம் வகுப்பு வரை சமய பாடம் ஒரு கட்டாய பாடம். நாங்கள் இந்துக்கள் அல்ல, சைவர்கள்.

 

இதே பாடத்திட்டம்தான் இலங்கையில் தமிழர் வந்தேறிகள் என்றும், தமிழ் மன்னன் முந்து சிவனின் மகன் ஒரு சிங்கள மன்னம் எண்டும் கூட எமக்கு படிபிச்சது. அதுக்காக அதையும் ஏற்போமா?

சைவம் எமது மதம் என்போரே,

1. முதன் முதலில் சைவம் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்தில், எந்த கல்வெட்டில் வந்தது?

2. சைவம் எமது வாழ்வின் ஆரம்ப சமயம் எனில், ஏன் எமது சங்க இலக்கியங்கள் சைவ இலக்கியங்களாக இல்லை?

சைவமோ, வைணவமோ, காணபத்யமோ, சாக்தமோ, செளமாரமோ இவற்றை சாம்பாராக்கி ஆதி சங்கரர் உருவாக்கிய “இந்து” வோ எமது மதம் அல்ல.

இஸ்லாத்துக்கு முந்திய அரேபியர்களை போல எமக்கும், நிறுவனமயப்படாத, உள்ளுர் நம்பிக்கைகளுக்கு ஏற்ப இடத்துக்கு இடம் வேறு பட்ட ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் மதம் இருக்கவில்லை. 

இப்போதைய அந்தமான் பழங்குடிகளுக்கு, அமேசன் பழங் குடிகளுக்கு எப்படி நிறுவன மயப்பட்ட மதம் இல்லாமல் ஆனால் இறையியல் இருக்கின்றதோ, அப்படி.

இந்த பண்டைதமிழர் இறையியலை முதலில் ஆக்கிரமித்து அழித்தொழித்தது பிரம்மணியம். எம் கடவுளாரை காட்டு மிராண்டி ஆக்கி, எம் வணக்க முறையை கவிச்சி என்றாக்கி. எங்கள் குறு நிலத் தெய்வங்களான முருகனை தங்கள் சிவனுக்கு இரண்டாம் மகனாக சுவீகரித்து, எம் மேல் ஆக்கிரமிப்பு மூலம் வலுக் கட்டயமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டமைப்பே சைவம்/இந்து எல்லாமே.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமிப்பாளனின் மொழியில், அவன் முறையில் அவனை கடவுளுக்கும் நமக்குமான ஏஜெண்டாக கொண்டு வழிபட்டு, எம் இலக்கியமும், பக்திமார்க்கம் என்று பிரம்மணிய ஆசான்களின் நாயன்மாரின் வழிப்பட்டு போன பின், இப்போ நாமே ஆக்கிரமிப்பாளனின் மதத்தை தலையில் சுமந்து “நான் இந்து என மார்தட்டுகிறோம்”.

நிற்க,

இதேபோல் இப்போ நாமெல்லாம் தமிழ் பெளத்தராக மாறிவிட்டால், இன்னும் ஒரு 100 வருடத்தில் இன்னொரு சின்ன குமாரசாமி வந்து “நான் தமிழ் பெளத்தன்” என்று மார்தட்டி விட்டுப் போகட்டுமே?

தமிழ் தப்பினால் போதாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள்  புகுத்தப்படும் போது வேண்டாத மொழிகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புகுத்தப்படுகின்றது. இதுதான் ஐரோப்பியர்களின் வணிக படையெடுப்புகளிலும் நடந்தது.
இன்று  இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலும் இந்திய தமிழ் நாட்டிலும் ஒரு நாடு  எனும் பெயர்ல் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.

ஈழத்தமிழன் மதவெறி பிடித்தவனல்ல. ஆனால் மொழி சிதையும் போது மதத்தை கெட்டியாக பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.......

main photo

புத்தமதம் ஏன் தமிழை அரவணைக்கவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் ஏன் சைவம் எமது மதம் இல்லை என்பது தெளிவாக விளங்கும்.

1. எமது பழ வகைகள் எவை? மா பலா வாழை. ஏன் சங்க இலங்கியங்களிலோ, கல்வெட்டுகளிலோ அப்பிள் திராட்சை பற்றி ஏதுமில்லை? ஏனென்றால் அவை எம் நிலத்துக்குரியன அல்ல. அவை பற்றி தமிழுலகு அப்போது அறிந்திருக்கவில்லை.

2. எமக்கு ஏன் நானிலங்கள் மட்டும்( முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி). ஏனென்றால் பாலை எமக்கு அந்நியமானது. தமிழர் நிலத்தில் பாலை இல்லை.

3. ஏன் தமிழ் இலக்கியங்களில் பனிச் சரிவு பற்றிய பதிவுகள் இல்லை ஆனால் கடற்கோள் பற்றிய பதிவு இருக்கிறது? ஏனென்றால் நாம் பனிசூழ் பகுதியில் வாழவில்லை.

4. சரி அப்போ சைவத்தின் முழுமுதற் கடவுள் யார்? சிவன்.

5. சிவன் எங்கே இருக்கிறார்? வடக்கே, திபெத்தில், கைலாய மலையில்.

6. எனது, மொழி, உணவு, இலக்கியம், பண்பாடு எல்லாமே என்னை சுற்றியே இருக்க , என் மதம் மட்டும் எப்படி கைலாயத்தில் இருந்து வந்தது?

7. அப்போ எனது மதம் இங்கே உருவாகவில்லை, கைலாயத்துக்கு அருகில் இருந்த யாரோ என் நிலத்துக்கு வந்து எனக்கு என்மதம் பற்றி சொல்லி என்னையும் மதம் மாற்றி இருக்கிறார்களா?

8. அப்போ நான் இப்படி மாறும் முன் என்னிடம் இருந்த இறையியல் என்ன?

9. அதுதானே என் உண்மையான மதம்? அல்லது நம்பிக்கை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

மதங்கள்  புகுத்தப்படும் போது வேண்டாத மொழிகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் புகுத்தப்படுகின்றது. இதுதான் ஐரோப்பியர்களின் வணிக படையெடுப்புகளிலும் நடந்தது.
இன்று  இலங்கையின் தமிழ் பிரதேசங்களிலும் இந்திய தமிழ் நாட்டிலும் ஒரு நாடு  எனும் பெயர்ல் சிறப்பாக நடந்தேறி வருகின்றது.

ஈழத்தமிழன் மதவெறி பிடித்தவனல்ல. ஆனால் மொழி சிதையும் போது மதத்தை கெட்டியாக பிடிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.......

main photo

புத்தமதம் ஏன் தமிழை அரவணைக்கவில்லை?

ஒரு காலத்தில் பெளத்தமே தமிழின் பிரதான மதம். பிரமணியத்துக்கும் பெளத்ததுக்குமான சண்டையில் தமிழில் இருந்து பெளத்தம் விரட்டப் பட்டது. இந்திய துணைக் கண்டத்தின் கடைக்கோடி வரை துடைத்தெறியப்பட்ட பெளத்தம், சிங்களவர் மத்தியில் மட்டும் தங்கியது. அங்கேயாவது தன் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில், தேரர்கள் மூலம், பெளத்தத்தை சிங்கள இன அபிமானத்துடன் சேர்த்து, பெளத்த-சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பியது. நீ சிங்களவன் என்ற அடையாளத்தை பேண வேண்டுமா? அப்போ பெளத்தனாயிரு. ஒன்றை இழந்தால் மற்றதயும் இழப்பாய் என்று பயமுறுத்தி, பெளத்தம் சிங்களத்தில் குருவிச்சை போல ஒட்டுண்ணி வாழக்கை வாழ்கிறது.

தன் இருப்பை சிங்களத்திடம் பேண, பெளத்தம் பிரம்மணியம் சேர் தமிழை, தமிழரை கருவறுக்க வேண்டிய பரம்பரை வைரியாக சிங்களத்திடம் காட்டுகிறது.

புத்தம் ஏன் தமிழை ஆதரிக்கவில்லை என்பதற்கான பதில் மட்டுமில்லை. சிங்கள-பெளத்த மஹாவம்ச மனோநிலை என்றால் என்ன, எப்படி உருவானது என்பதற்கும் இதுவே விளக்கம்.

Link to comment
Share on other sites

நிலமா? மதமா? மொழியா? என கேட்டால் முதலில் நிலம்தான், நிலம் மட்டும்தான்.


நிலம் இருந்த படியால்தான் புத்தமதம் அன்று தப்பியது.

இன்று தமிழன் நூறு வருடங்கள் பின்னரும் இலங்கை தீவில் இருக்க இன்று நிலத்தை தக்க வைக்கவேண்டும். 

அதற்கு அரசியல்வாதிகளை மட்டும் மக்கள் நம்பி இருக்க கூடாது.

  • ஒன்று இணைந்த போராட்டங்கள்,
  • சுயநலம் அற்ற தலைமைகளை உருவாக்குதல்,
  • தலைமைகள் மீதான விழிப்புணர்வை வளர்த்தல்.
  • குடும்ப பெண்களை முன்வைத்து பொருளாதார வளத்தை உருவாக்குதல் ......

என என் கருத்தை கூறினாலும், தாயக மக்கள் தான் இறுதியில் தமக்கு சரியான பாதைகளை தெரிந்து அவற்றை முன்னெடுக்கவேண்டும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ampanai said:

நிலமா? மதமா? மொழியா? என கேட்டால் முதலில் நிலம்தான், நிலம் மட்டும்தான்.


நிலம் இருந்த படியால்தான் புத்தமதம் அன்று தப்பியது.

இன்று தமிழன் நூறு வருடங்கள் பின்னரும் இலங்கை தீவில் இருக்க இன்று நிலத்தை தக்க வைக்கவேண்டும். 

அதற்கு அரசியல்வாதிகளை மட்டும் மக்கள் நம்பி இருக்க கூடாது.

  • ஒன்று இணைந்த போராட்டங்கள்,
  • சுயநலம் அற்ற தலைமைகளை உருவாக்குதல்,
  • தலைமைகள் மீதான விழிப்புணர்வை வளர்த்தல்.
  • குடும்ப பெண்களை முன்வைத்து பொருளாதார வளத்தை உருவாக்குதல் ......

என என் கருத்தை கூறினாலும், தாயக மக்கள் தான் இறுதியில் தமக்கு சரியான பாதைகளை தெரிந்து அவற்றை முன்னெடுக்கவேண்டும். அதற்கு புலம்பெயர் மக்கள் உதவவேண்டும்.

உங்களை போல நானும் முன்பு சிந்திப்பதுண்டு. ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள்.

சிங்கள-பெளத்தம் என்பது இரெட்டைக் குழல் துப்பாக்கி. சிங்கள மொழியின் ஆதிக்கம். பெளத்த மதத்தின் ஆதிக்கம். ரெண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறையாத குறிக்கோள்கள்.

அதனால்தான் தமிழில், தமிழால் இலங்கையில் பெளத்தம் வளர்க்க அரசோ, பிக்குகளோ முனவதில்லை.

மதம் ➡️ மொழி ➡️ நிலம்

மொழி ➡️ மதம் ➡️ நிலம் 

எந்த வகையிலும் தமிழ்-இந்து/கிறீஸ்த பகுதியை, சிங்கள-பெளத்த பகுதியாக மாற்றும் மட்டும், மஹாவம்ச மனோநிலையின் பசி அடங்குமா என்பது கேள்விக் குறியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு காலத்தில் பெளத்தமே தமிழின் பிரதான மதம். பிரமணியத்துக்கும் பெளத்ததுக்குமான சண்டையில் தமிழில் இருந்து பெளத்தம் விரட்டப் பட்டது. இந்திய துணைக் கண்டத்தின் கடைக்கோடி வரை துடைத்தெறியப்பட்ட பெளத்தம், சிங்களவர் மத்தியில் மட்டும் தங்கியது. அங்கேயாவது தன் இருப்பை தக்க வைக்க வேண்டும் என்ற அவதியில், தேரர்கள் மூலம், பெளத்தத்தை சிங்கள இன அபிமானத்துடன் சேர்த்து, பெளத்த-சிங்கள அடையாளத்தை கட்டி எழுப்பியது. நீ சிங்களவன் என்ற அடையாளத்தை பேண வேண்டுமா? அப்போ பெளத்தனாயிரு. ஒன்றை இழந்தால் மற்றதயும் இழப்பாய் என்று பயமுறுத்தி, பெளத்தம் சிங்களத்தில் குருவிச்சை போல ஒட்டுண்ணி வாழக்கை வாழ்கிறது.

அந்த கும்பலில் வேற்று மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லவா?
 

Link to comment
Share on other sites

இனஅழிப்புக்கு பிந்திய தமிழீழம் மீதான ஆக்கிரமிப்பின் குறீயீடு சம்புத்தி

 

வடதமிழீழம்: யாழ்ப்பாணம் – நாவற்குழியில் முதல் சிங்கள குடியேற்றத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பௌத்த விகாரை திறந்துவைக்கப்படவுள்ளது.

இன அழிப்பு யுத்தத்திற்கு பின்னர் வடக்கில் அமைக்கப்படும் பிரமாண்டமான பௌத்த விகாரை இதுவாகும். இந்த விகாரையின் திறப்பு விழா இன்று இடம்பெறவுள்ளது.

சம்புத்தி சுமன என பெயரிடப்பட்டுள்ள இந்த விகாரை ஶ்ரீலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பௌத்த மதகுருமார்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதற்கு முன்னோடியாக, குருநாகல் நெவகட செல்கிரி விகாரையிலிருந்து நேற்று காலை 8 மணிக்கு நாவற்குழி நோக்கி பேரணியாக புறப்பட்ட விகாரைக்கான புனித தாது, அநுராதபுரம் தூபராம சைத்திய விகாரையை நேற்று இரவு வந்தடைந்தது.

2010ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் நாவற்குழி ரயில் நிலையத்திற்கு அருகில், நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் அத்துமீறி குடியிருந்தனர்.

தமிழர்களுக்கு எதிரான மனநிலையுடன், நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்களவர்கள் அத்துமீறி குடியமர்த்தப்பட்டனர்.

அந்த மக்களுக்கு நிரந்தர குடியிருப்புக்களை அமைக்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஹெல உறுமய உதவிபுரிந்தது.

பின்னர் விகாரை அமைக்கும் பணி ஆரம்பித்தபோது, சாவகச்சேரி பிரதேசசபையினால் அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன்பின்னர் அமைச்சர் சஜித்தின் தலையீட்டையடுத்து, சாவகச்சேரி பிரதேசசபையும் விகாரை அமைக்க அனுமதியளித்தது.

தமிழர்கள் வாழும் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக தமிழ் மக்கள் மற்றும் தமிழ் தலைமைகளினால் பரவலாக குற்றம் சுமத்தப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் இவ்வாறு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.thaarakam.com/news/79246?fbclid=IwAR0R6qeBzW2FdqaN2w16b4vmY2R90NpcZXbeZkizw1WbI8Crea5t6sGk4zw

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

அந்த கும்பலில் வேற்று மதத்தவர்களும் இணைந்து பணியாற்றுகின்றார்கள் அல்லவா?
 

தமிழ்-இந்து/தமிழ்-கிறிஸ்தவர்/முஸ்லீம்களின் கதையை முடித்த பின் அவர்களின் கதை முடிவும் தொடங்கும்.

எ. எல் குணசேகர என்று ஒரு வக்கீல், பக்கா இனவாதி. கீழ்நாட்டு, கிறீஸ்தவ சிங்களவர். 94-99 வரையில் தொலைகாட்சி பேட்டிகளில், சும்மா தூள்பறக்க இனவாதம் பேசுவார். குமார் பொன்னருக்கும் இவருக்கும் தொலைக்காட்சியில் நடந்த விவாதங்களில் அத்தனை சூடு இருக்கும்.

பின்னர் எதோ ஒரு விடயத்தில், ஒரு சிங்கள ஊரில் வைக்கப்பட்ட மாதா சிலை விவகாரம் என நினக்கிறேன், இவர் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசப் போக, முழு பெளத்த-சிங்கள இயந்திரமுமே இவருக்கு எதிராக திரும்பியது. 

துரோகிபட்டம், போத்துகீசருக்கு மூதாதையர் பாலியல் சேவகம் என்பதாக கிழிச்சு தொங்க விடப்பட்டார்😂.

கடைசியில் நீ சிங்களவனே இல்லை என்றெல்லாம் சொல்லி, எனக்கா இந்த நிலை என ஆள் கண்ணீர்விட்டது, பொது வெளியில்.

 

Link to comment
Share on other sites

22 hours ago, goshan_che said:

உங்களை போல நானும் முன்பு சிந்திப்பதுண்டு. ஆனால் நீங்கள் ஒன்றை கவனிக்க தவறுகிறீர்கள்.

சிங்கள-பெளத்தம் என்பது இரெட்டைக் குழல் துப்பாக்கி. சிங்கள மொழியின் ஆதிக்கம். பெளத்த மதத்தின் ஆதிக்கம். ரெண்டுமே ஒன்றுக்கு ஒன்று குறையாத குறிக்கோள்கள்.

அதனால்தான் தமிழில், தமிழால் இலங்கையில் பெளத்தம் வளர்க்க அரசோ, பிக்குகளோ முனவதில்லை.

மதம் ➡️ மொழி ➡️ நிலம்

மொழி ➡️ மதம் ➡️ நிலம் 

எந்த வகையிலும் தமிழ்-இந்து/கிறீஸ்த பகுதியை, சிங்கள-பெளத்த பகுதியாக மாற்றும் மட்டும், மஹாவம்ச மனோநிலையின் பசி அடங்குமா என்பது கேள்விக் குறியே.

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள். மேலதிக பதில்கள் இப்பொழுது என்னிடம் இல்லை. 

நிலத்தில் பொருளாதார பலத்துடன் இருந்தால் அது மற்றைய கதவுகளை திறக்கும்.  ஆனால், பொருளாதார பலம் பெற எமக்கு இதர கதவுகள் திறந்து இருக்க வேண்டும் என்பதும் உண்மை. 

எவரும் வெற்றிபெற்றவர்களை தான் பின் தொடருவார்கள். அந்த வகையில் பெரும்பான்மை சமூகம் இன்று அந்த வெற்றி மன வட்டத்துள் உள்ளது.  

 

Link to comment
Share on other sites

On 7/11/2019 at 3:48 AM, nunavilan said:

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் 2010 ஆம் ஆண்டு முதன் முதலாக மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றது. ஆரம்பத்தில் 45 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. 

 

On 7/12/2019 at 12:48 PM, குமாரசாமி said:

உண்மைதான்.தமிழினம் தனக்குத்தானே சூனியம் வைத்து அழிந்து கொண்டிருக்கின்றது.

நாவற்குழிப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்திற்கு அத்தியடிக் குத்தியன் மூலகாரணம் என்று வந்த செய்திகள் படித்த ஞாபகம் உள்ளது.

Link to comment
Share on other sites

யாழ். நாவற்குழியில்

சமித்தி சுமண விகாரை திறப்பு

யாழ்ப்பாணம், நாவற்குழியில் அமைக்கப்பட்ட நல்லிணக்க விகாரை என அழைக்கப்பட்ட சமித்தி சுமண விகாரை இன்று (13) பௌத்த மத சம்பிரதாயங்களுக்கு அமைய திறந்து வைக்கப்பட்டது.

இராணுவம் உட்பட முப்படைகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணம், நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், யாழ்ப்பாண நகரின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள சிங்கள குடியேற்றத்திற்கு அருகில் கட்டப்பட்ட மிகப்பெரிய விகாரையான சமித்தி சுமண விகாரை இவ்வாறு இன்று (13) திறந்து வைக்கப்பட்டது.

 

குறித்த குடியேற்றத்தில் சுமார் 9 சிங்கள குடும்பங்களே வசிப்பதாக குறித்த பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள தென்மராட்சி பிரதேச சபையின் தலைவர் வாமதேவன் கந்தையா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடியேற்றத்தில் இராணுவத்தினால் 28 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அதில் சுமார் 20 பயன்பெறும் குடும்பங்கள் அங்கு தங்கியிருப்பதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விகாரைக்கான புனித தாது குருணாகல் நெவகட செல்கிரி விகாரையில் இருந்து இன்று (13) மாலை எடுத்து வரப்பட்டது.

நாவற்குழி சந்தியில் இருந்து, விகாரைக்கான புனித தாது மற்றும், பௌத்த மத அனுஷ்டான முறைப்படி, தீப் பந்தம், பௌத்த கொடி, ஆலவட்டங்களுடன், பிக்குகளின் தலைமையில் புனித தாது, விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வடமேல் மாகாணம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டு, சாது எனும் நாமத்துடன் புதிதாக அமைக்கப்பட்ட விகாரையின் மேல் , புனித தாது வைக்கப்பட்டது.

 

இந்த புனித தாதுவை, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி தர்ஷண ஹெட்டியாராச்சி, உட்பட முப்படைகளின் தளபதிகள், உட்பட விகாராதிபதிகள், விகாரையின் மேல் வைத்தனர்.

அதன் பின்னர், பௌத்த சமய விதிமுறைகளின் படி, பிரித் ஓதப்பட்டது.

இவ்விகாரை திறப்பு விழாவில், புனித தாது எடுத்து வரப்பட்டது முதல் விகாரையின் மேல் வைக்கும் வரை, இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு அளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.thinakaran.lk/2019/07/13/உள்நாடு/37162/யாழ்-நாவற்குழியில்-சமித்தி-சுமண-விகாரை-திறப்பு

யாழà¯. நாவறà¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®®à®¿à®¤à¯à®¤à®¿ à®à¯à®®à®£ விà®à®¾à®°à¯ திறபà¯à®ªà¯-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

யாழà¯. நாவறà¯à®à¯à®´à®¿à®¯à®¿à®²à¯ à®à®®à®¿à®¤à¯à®¤à®¿ à®à¯à®®à®£ விà®à®¾à®°à¯ திறபà¯à®ªà¯-Jaffna Navatkuli Sammidhi Sumana Vihara Opening

Link to comment
Share on other sites

On 7/12/2019 at 7:35 AM, goshan_che said:

8. அப்போ நான் இப்படி மாறும் முன் என்னிடம் இருந்த இறையியல் என்ன?

9. அதுதானே என் உண்மையான மதம்? அல்லது நம்பிக்கை?

தமிழரின் இறையியலில் வைரவர் முக்கியமானவர். முருகனும் தமிழர் கடவுள்.

சிங்கள மொழி உருவாக முதல் சிங்களவரும் தமிழ் பேசும் முருக பக்தர்கள்.

பௌத்தம் தமிழகத்தை தன்னகத்தே கொண்ட போது சிங்களவரும் பௌத்தராகினர். 

பின்னர் பிராமணருக்கு ஆதரவாக பௌத்தத்தை சோழர் அழித்த போது தமிழகம் சைவமானது.

ஆனால் சிங்களவரை தமிழ் மொழி மூலம் சைவராக்க முடியவில்லை. 

தமிழரின் பண்டைய கடவுள்களான முருகன், வைரவர் கோவில்களை அமைத்து தமிழர் பண்பாடு மீண்டும் சிறக்க வேண்டும்.

தமிழ் பௌத்தத்தை உயிர்ப்பித்து சிங்கள பௌத்தத்தின் ஏகாதிபத்தியத்தையும் மகாசங்கத்தின் வல்லாதிக்கத்தையும் 

கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

தமிழரின் இறையியலில் வைரவர் முக்கியமானவர். முருகனும் தமிழர் கடவுள்.

சிங்கள மொழி உருவாக முதல் சிங்களவரும் தமிழ் பேசும் முருக பக்தர்கள்.

பௌத்தம் தமிழகத்தை தன்னகத்தே கொண்ட போது சிங்களவரும் பௌத்தராகினர். 

பின்னர் பிராமணருக்கு ஆதரவாக பௌத்தத்தை சோழர் அழித்த போது தமிழகம் சைவமானது.

ஆனால் சிங்களவரை தமிழ் மொழி மூலம் சைவராக்க முடியவில்லை. 

தமிழரின் பண்டைய கடவுள்களான முருகன், வைரவர் கோவில்களை அமைத்து தமிழர் பண்பாடு மீண்டும் சிறக்க வேண்டும்.

தமிழ் பௌத்தத்தை உயிர்ப்பித்து சிங்கள பௌத்தத்தின் ஏகாதிபத்தியத்தையும் மகாசங்கத்தின் வல்லாதிக்கத்தையும் 

கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்.

 

இதனால்  கள்ளம் கபடமறியா எமது முஸ்லீம் அன்புச்சகோதரர்களுக்கு சொல்ல விளைவது என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.