Jump to content

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள துடிக்கும் ஜனாதிபதி

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜூலை 10 புதன்கிழமை, மு.ப. 03:25 Comments - 0

image_b151f18510.jpgஇலங்கை வரலாற்றில் எந்தவோர் அரசியல்வாதியும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் போல், தமது அரசியல் இருப்புக்காக, இவ்வளவு மாற்றுத் திட்டங்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். அவரது சில திட்டங்கள், ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், அவை அனைத்தும் அவரது இருப்புக்காகவே என்பது தெளிவான விடயமாகும்.   

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அவர், தமது முன்னாள் தலைவரான, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் குடும்பத்தினரைச் சிறையில் அடைத்து, தமது எதிர்காலத்தைப் பலப்படுத்திக் கொள்ள முயன்றார். ஐக்கிய தேசியக் கட்சி, அத்திட்டத்தை முறியடிக்கவே, அவர் மறுபுறம் திரும்பி, தாமும் மஹிந்தவுடன் இணைந்து, ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்தவைப் பிரதமராக நியமித்தார்.  

மஹிந்தவின் குடும்பத்தினரைச் சிறையில் தள்ளிவிட முயன்ற மைத்திரி, பின்னர் மஹிந்த தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று, அடுத்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறும் நிலை ஏற்படவே, பெரமுனவின் சார்பில், மீண்டும் ஜனாதிபதியாக முயன்றார்.   

அது தோல்வியடையவே, தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள முயன்றார். அதுவும் தோல்வியடைந்த போது, தமது பதவிக் காலம் ஆரம்பித்த நாளை, நீதிமன்றத்தின் மூலம் பிற்போட்டு, அதன் மூலம், தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள நினைத்தார்.   

அந்த முயற்சி, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாத் தாக்குதல்களை அடுத்து, சில மாதங்களாக, அவரது நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒதுக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த நினைத்தார்.   

அதற்கிடையே அவர், மக்களைக் கவரலாம் என நினைத்து, போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதாக அறிவித்தார். இப்போது, மீண்டும் பதவிக் காலத்தை நீடித்துக் கொள்வதற்கான முயற்சி, மீண்டும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்துள்ளது.  

மைத்திரிபால சிறிசேன, 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, ஜனவரி ஒன்பதாம் திகதி, ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அப்போது அமுலில் இருந்த அரசமைப்பின் படி, அவர் ஆறு வருடங்கள் பதவியில் இருக்கலாம்.   

ஆனால், 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறு வருடங்களில் இருந்து, ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டது. எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலமும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதியோடு முடிவடைகிறது என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருந்தது.   

ஆனால், இந்தப் பதவிக் காலக் குறைப்பு, தமது ஆறு வருட பதவிக் காலத்தைப் பாதிக்கவில்லை என்று, ஜனாதிபதி கடந்த வருடம் ஜனவரி மாதம் கூற முயன்றார். அதனை, நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்து கொள்ளவும் முயன்றார்.   

அதன்படி அவர், அதே மாதம் தமது பதவிக் காலம் ஆறு வருடங்களா அல்லது ஐந்து வருடங்களா என, உயர் நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கேட்டார். அது, ஆறு வருடங்களே என, அப்போதைய சட்டமா அதிபரும் தற்போதைய பிரதம நீதியரசருமான ஜயந்த ஜயசூரிய நீதிமன்றத்தில் வாதாடினார். ஆனால், தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலமும் ஐந்து வருடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம், அப்போது தீர்ப்பு வழங்கியது.   

கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டுக்கு, சில தினங்களுக்கு முன்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதியின் நெருங்கிய சகாவுமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, “ஜனாதிபதி, தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்தது என, உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தைக் கோர உத்தேசித்துள்ளார்” என்று கூறினார்.   

ஆனால், சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிவடையும் முன், அதாவது ஏப்ரல் 21 ஆம் திகதி, தவ்ஹீத் ஜமாஆத் பயங்கரவாதிகள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் நடத்திய தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதியின் இந்தத் திட்டம் அடிபட்டுப் போயிற்று. அதைப் பற்றிப் பேசுவதற்கு, அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இப்போது, அந்த விடயம் மீண்டும் ஊடகங்களில் உலாவி வருகிறது.   

முதலாவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வருடம் ஜனவரி மாதம், தமது பதவிக்காலம் ஆறு வருடங்களா, அல்லது ஐந்து வருடங்களா என உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்ட போது, தமது பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதிக்கு அப்பால், அதாவது, 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரை நீடித்துக் கொள்வதே, அவரது நோக்கமாக இருந்தது.  

அதையடுத்து, இந்த வருடம் ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில், அவர், தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பித்தது என, உயர் நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கோரப் போவதாக தயாசிறி ஜயசேகர கூறினார். அதனையே, இப்போது ஜனாதிபதி செய்யப் போகிறார். அதன் நோக்கமும் தமது பதவிக் காலத்தை 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு அப்பால் நீடித்துக் கொள்வதேயாகும்.   

தமது பதவிக் காலம், தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற 2015ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி ஆரம்பிக்கப்பட்டாலும், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், தமது பதவிக் காலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால், அத்திருத்தம் நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்ற திகதியிலிருந்தே தமது பதவிக் காலம் ஆரம்பித்துள்ளது எனக் கருதப்பட வேண்டும் என்பதே, இப்போது அவரது நிலைப்பாடாக இருக்கிறது. அதன் நோக்கமும் தமது பதவிக் காலத்தை, 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதிக்கு அப்பால், நீடித்துக் கொள்வதேயாகும்.  

கடந்த ஏப்ரல் மாதம், இந்தக் கருத்தை தயாசிறி ஜயசேகர முன்வைத்த போது, 2015ஆம் திகதி ஜூன் 21ஆம் திகதியே சபாநாயகர் 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்குத் தமது ஒப்புதலை வழங்கினார் என அவர் கூறியிருந்தார். ஆனால், உண்மையிலேயே 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியே சபாநாயகர் அந்த ஒப்புதலை வழங்கியிருந்தார். அதனைத் திருத்தி, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதியே, தமது பதவிக் காலம் ஆரம்பித்துள்ளது என, ஜனாதிபதி இப்போது வாதிடுவதாக ஊடகங்கள் தெரிவித்தன.   

உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக் கொண்டால், ஜனாதிபதியின் பதவிக் காலம் 2020ஆம் ஆண்டு மே மாதம் 15 திகதியே முடிவடையும். அதாவது, சட்டப்படி 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். அவர் ஏன், தமது பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ள முயல்கின்றார் என்பதைத் தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  

பதவிக் காலத்தை நீடித்து ஜனாதிபதி என்ன சாதிக்கப் போகிறார்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது பதவிக் காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என, கடந்த வருடம் உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்டதில் சிறிதளவு நியாயமும் இருந்தது.   

ஏனெனில், ஆறாண்டு காலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலத்தை, ஐந்தாண்டுகளாகக் குறைத்த 19ஆவது அரசமைப்புத் திருத்தம், அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னரே நிறைவேற்றப்பட்டது.  

எனவே, ஏற்கெனவே ஆறு ஆண்டுகளுக்காக மக்கள் ஆணையை பெற்றவரது பதவிக் காலமும் குறைக்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் சிலரிடம் ஏற்படக்கூடும்.  

ஆனால், ஜனாதிபதியின் ஏனைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அவரது நோக்கம் அது மட்டுமா என்ற சந்தேகமும் எழுகிறது. குறிப்பாக, தமது பதவிக் காலம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்று உயர்நீதிமன்றத்திடம் அபிப்பிராயம் கேட்கும் அவரது திட்டத்தையும், சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் உடனடியாகப் பொதுத் தேர்தலொன்றை நடத்தும் அவரது திட்டத்தையும் கருத்தில் கொள்ளும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே அவரது நோக்கமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.   

தமது பதவிக் காலத்தை ஆறு வருடங்களாக, அதாவது 2021ஆம் ஆண்டு ஜனவரி ஒன்பதாம் திகதி வரையிலோ, அதனை 2020ஆம் ஆண்டு மே மாதம் வரையிலோ நீடித்துக் கொள்வதில் அவர் எதனை சாதிக்கப் போகிறார்? ஐந்து வருட பதவிக் காலத்துக்குள், சாதிக்காத எதையும் அந்தப் பதவிக் கால நீடிப்புகளால் சாதிக்கப் போவதில்லை. ஆனால், இந்தப் பதவிக் கால நீடிப்புகளால் அவருக்கு நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடையும்முன் அதனைக் கலைக்க அதிகாரம் கிடைக்கிறது.  

19ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும்முன், தேர்தலில் தெரிவான நாடாளுமன்றமொன்றை ஒரு வருட காலத்துக்குப் பின்னர் கலைக்க, ஜனாதிபதிக்கு அதிகாரம் இருந்தது. 19ஆவது அசமைப்புத் திருத்தம், ஜனாதிபதியின் அந்த அதிகாரத்தைப் பறித்து, நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தில், நாலரை ஆண்டுகள் கழிந்த பின்னர், அதனைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கியது.  

அதாவது, அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்குப் பின்னரே, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். ஜனாதிபதியின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்றோ அல்லது 2020ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடிக்கும் என்றோ, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் அவரால் நாடாளுமன்றத்தைக் கலைத்து, புதிதாகப் பொதுத் தேர்தலை நடத்த அதிகாரம் கிடைத்துவிடுகிறது.   

சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், இந்த வருடத்துக்குள்ளேயே பொதுத் தேர்தலை நடத்த, அவர் திட்டமிட்டதைக் கருத்திற் கொள்ளும் போது, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே ஜனாதிபதியின் நோக்கமாக இருக்கிறது போல் தெரிகிறது.  

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடித்து, ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப் போடுவதன் மூலம், அவர் எதைச் சாதிக்க முயற்சிக்கிறார்? அது முடியாது போனால், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம், பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்தி, எதைச் சாதிக்க முயல்கின்றார்?   

இப்போதைக்கு, மஹிந்தவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவே, ஜனாதிபதி வேட்பாளராக வருவார் போல்த் தெரிகிறது. ஆனால், அதற்கு முன்னர், பொதுத் தேர்தல் நடைபெற்று பொதுஜன பெரமுன வெற்றி பெற்றால் நிலைமை மாறலாம்.  

அந்தத் தேர்தலில் மஹிந்த பிரதமராகலாம். அதற்காக ஜனாதிபதியாக இருந்து கொண்டே அவருக்கு உதவியளித்து, அதன் பின்னர் அவர் மூலம் பொதுஜன முன்னணி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என மைத்திரி நினைக்கிறாரோ தெரியாது. ஆனால் அது சாத்தியப்படாது.   

ஏனெனில், பொதுத் தேர்தல் மூலம் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று, மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமராகப் பதவியேற்றால், அவர் முன்னரைப் போல் உடனடியாக ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தை மீண்டும் கொண்டு வரலாம். அதன் பின்னர், ஜனாதிபதித் தேர்தலில் தாமே போட்டியிடலாம்.  

ஆனால், முன்னர் மைத்திரி திட்டமிட்டபடி, சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பொதுத் தேர்தலை முன் கூட்டியே, இவ்வருடமே நடத்த முற்பட்டால், மஹிந்தவுக்கு அவ்வாறு 18ஐ மீண்டும் கொண்டு வரக் காலம் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஏனெனில், சட்டப் படி டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.   

அதாவது, நவம்பர் இரண்டாம் வாரத்துக்கு முன்னராவது, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னர், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்தி, பொதுத் தேர்தலையும் நடத்த முடியுமா என்பது சந்தேகமே. அவ்வாறாயின், ஜனாதிபதி எதற்காக இவ்வாறு பல திட்டங்களை போடுகிறார்.   

பதவிக் காலத்தை நீடிப்பதன் மூலமும், சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அவரால் ஒரு விடயத்தை மட்டும் நிச்சயமாகச் சாதிக்க முடியும். அதாவது, தமது பரம எதிரியாக மாறியிருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அவரது பதவிக் காலம் முடிவடையும்முன் பதவி துறக்கச் செய்ய முடியும். அதுதான் பல்வேறு உத்திகள் மூலம், அவர் நிறைவேற்றிக் கொள்ளப் போகும் நோக்கமா என்று இறுதியாக நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பதவிக்-காலத்தை-நீடித்துக்-கொள்ள-துடிக்கும்-ஜனாதிபதி/91-235076

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.