Jump to content

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீதி மறுக்கப்பட்ட திருகோணமலை ஐவர் படுகொலை

on July 11, 2019

 

image3.jpeg?zoom=3&resize=736,337&ssl=1

 

படங்கள், Ian Treherne

திருகோணமலை கடற்கரையில் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெற்ற ஐந்து மாணவர்களின் படுகொலைகள் “திருகோணமலை ஐவர் சம்பவம்” (Trinco 5) என அழைக்கப்படுகின்றது. இலங்கையில் தண்டனைக்கு அச்சமின்றி குற்றச்செயல்களை நிகழ்த்தும் போக்கினை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அது இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான டாக்டர் மனோகரனின் துணிச்சல் காரணமாக இந்தச் சம்பவம் பிரபல்யமடைந்தது. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்ற விடயத்தை டாக்டர் மனோகரன் அறிந்திருந்ததுடன், இது தொடர்பாக தொடக்கத்தில் நடத்தப்பட்ட ஒரு விசாரணையில் அவர் சாட்சியமளித்திருந்தார். திருகோணமலை ஐவருக்கு நீதியைக் கோரும் முயற்சியில் உள்ளூர் செயற்பாட்டாளர்களுடன், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இணைந்திருந்தன. இந்தச் சம்பவம் பரவலான விதத்தில் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் 2007ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தது: “இந்தக் குற்றச் செயலை நிகழ்த்துவதில் சீருடை அணிந்த ஆளணியினர் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதனை அனுமானிப்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருந்து வருகின்றன.” எவ்வாறிருப்பினும், இது தொடர்பான வினைத்திறன் மிக்க புலன் விசாரணைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் புலன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென 2007ஆம் ஆண்டின் ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. மேலும், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் இது தொடர்பாக மீண்டும் மீண்டும் பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. இவற்றுக்கு மத்தியிலும் கூட, இந்த விசாரணைகள் மந்த கதியிலேயே இடம்பெற்று வந்துள்ளன. இந்த வழக்கு திருகோணமலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆமை வேகத்தில் இடம்பெற்றுவந்த நிலையில், சந்தேக நபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.  அதன் பின்னர் போதியளவில் சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் இது  தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் ‘விடுவிக்கப்பட்டதாக’ ஜூலை 03ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பொறுத்தவரையில் இந்தத் தீர்ப்பு இலங்கையின் குற்றவியல் நீதித்துறை தொடர்பான தமது நம்பிக்கையை தகர்த்தெறிந்த ஒரு குண்டுத் தாக்குதலாக இருந்து வந்தது.

உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான உரிமையை சம்பந்தப்பட்டவர்களுக்கு மறுத்திருக்கும் திருகோணமலை ஐவர் போன்ற வழக்குகள், குற்றச் செயல்கள் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்புப் படையினரை குற்றவாளிகளாக்கும் விடயத்தில் இலங்கையின் நீதித்துறை தோல்வி கண்டிருப்பதனை எடுத்துக் காட்டுகின்றன. டாக்டர் மனோகரன் தனிப்பட்ட துயரத்துக்கு மத்தியிலும் கூட, நீண்டகாலமாக முன்னெடுத்து வந்த ஒரு பிரச்சாரத்தின் ஊடாக இது தொடர்பான நிவாரணங்களைக் கோரியிருந்தார். 2007ஆம் ஆண்டின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வீடியோ மூலம் சாட்சியமளிக்கும் நடைமுறையை இடைநிறுத்தியது. அத்துடன், அந்த ஆணைக்குழு அதன் அறிக்கையையும் வெளியிடத் தவறியிருந்தது. அச்சந்தர்ப்பத்தில், டாக்டர் மனோகரன் இது தொடர்பாக நீதியைப் பெற்றுக்கொள்வதற்கென சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் நிகழ்வொன்றின் போது, அதற்கு வெளியில் இடம்பெற்ற ஓர் உரையாடலில் அவர் இது குறித்துப் பேசியதுடன், திருகோணமலையில் மிகவும் கொடூரமான விதத்தில் கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களுக்கும் நேர்ந்த கதி குறித்த உண்மையை இலங்கை அரசாங்கம் கூற வேண்டுமென வேண்டுகோள் விடுத்திருந்தார். அரசாங்கம் இது தொடர்பாக கால அவகாசத்தை கோரியிருந்தது. பின்னர் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை தொடர்பான உலகலாவிய பருவகால மீளாய்வின் போது டாக்டர் மனோகரன் இலங்கை அரசாங்கத்திடம் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைத்திருந்தார். அத்துடன், கொலை செய்யப்பட்ட ரவிகர் மற்றும் அவருடைய நான்கு நண்பர்கள் ஆகியோர் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துவக்கி வைப்பதற்குத் தேவையான முதற்தோற்ற சாட்சியங்கள் இருந்து வருகின்றனவா என்பதனை நிர்ணயித்துக் கொள்வதற்கென அந்த விடயம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தது. இது தொடர்பான மேலும் விசாரணைகளை நடத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். மீண்டும் ஒரு முறை இலங்கை அரசாங்கம் இது தொடர்பாக மேலும் கால அவகாசத்தை கேட்டிருந்தது. இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் திருகோணமலை ஐவர் படுகொலை சம்பவத்தை குறிப்பிட்டிருந்ததுடன், இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு, கொலைக் குற்றவாளிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டுமென வலுவாக பரிந்துரை செய்திருந்தது. இப்பொழுது 13 வருடங்கள் கழிந்திருப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பதிலளிப்பதற்கு அரசாங்கம் என்ன செய்திருக்கின்றது?

திருகோணமலை ஐவர் சம்பவம் பொறுப்புக்கூறும் விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் செய்யக் கூடிய காரியங்களை எடுத்துக் காட்டும் ஒரு அமிலப் பரிசோதனையாக இருந்து வருகின்றது. கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களும் அவர்கள் தமிழ் இளைஞர்களாக இருந்து வந்தார்கள் என்பதைத் தவிர, வேறு எந்தவொரு காரணமும் இல்லாத நிலையில் – மிக அருகில் வைத்து சுடப்பட்டிருந்தார்கள். சிங்கள மற்றும் முஸ்லிம் நண்பர்களைக் கொண்டிருக்கும் டாக்டர் மனோகரன் இந்தச் சம்பவத்தை அரசியல்மயமாக்குவதற்கென எடுக்கப்பட்ட முயற்சிகளை எதிர்த்தார் – வெறுமனே அவருக்கு பதில்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அதேபோன்று எம் அனைவருக்கும் இது தொடர்பான பதில்கள் தேவைப்படுகின்றன.

மிகச் சமீபத்தில் இது தொடர்பாக ஏற்பட்டிருக்கும் மாற்றம், மீண்டும் ஒரு முறை இது குறித்துக் குரல் எழுப்புவதற்கும், திருகோணமலை ஐவர் சம்பவம் குறித்த உண்மையைக் கண்டறிந்து கொள்வதற்கான தனது முயற்சிகளுக்கு இலங்கை வாழ் பொது மக்களின் ஆதரவைக் கோருவதற்கும் அவரை நிர்ப்பந்தித்துள்ளது. குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதனையடுத்து, அவருடன் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் பின்வரும் விடயங்களையே எங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார்:

என்னுடைய பெயர் டாக்டர் கைலாசபிள்ளை மனோகரன்.

என்னுடைய அன்பு மகன் ரஜீகர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02 ஆம் திகதி இலங்கைப் படையினரால் கொலை செய்யப்பட்டார். அந்தப் பயங்கரம் நிகழ்ந்த அந்த நாள் தொடக்கம், அங்கு என்ன நடந்தது என்பது குறித்த உண்மையை கண்டறிய வேண்டும் என்பதற்காக நான் இடையறாது ஒரு முயற்சியை முன்னெடுத்து வந்துள்ளேன்.

எனது மகன் ரஜீகர் என்னுடன் தொடர்பு கொண்ட கடைசித் தருணம் அவர் எனக்கு அனுப்பிய ஒரு மொபைல் தொலைபேசி செய்தியாகும். அதில் வெறுமனே ‘DAD’ எனக் கூறப்பட்டிருந்து. அந்தச் செய்தி 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி எனக்குக் கிடைத்தது. என்னுடைய மகன் ஒரு நல்ல பையனாக இருந்து வந்ததுடன், பரீட்சைகள் முடிவடைந்த மகிழ்ச்சியை திருகோணமலை கடற்கரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவன் கொண்டாடிக் கொண்டிருந்தான். அன்றைய தினம் கடற்கரையில் ஒரு குண்டு வெடித்த சப்தம் எனக்குக் கேட்டது, எனது ஏனைய மூன்று மகன்களும் வீடு திரும்பினார்கள். ஆனால், ரஜிகர் வீடு திரும்பவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஒரு சில நிமிடங்களில் எனக்கு மகனிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது: Daddy படையினர் என்னை சுற்றி வளைத்துள்ளார்கள்” என அவர் கூறினார். பாதுகாப்பு படையினரையே அவர் குறிப்பிட்டிருந்தார். என்னுடைய மகன் கூறியது அவ்வளவுதான். அதன் பின்னர் ஒரு மௌனம் நிலவியது. அவர் எனக்கு அனுப்பிய கடைசி முடிவுறாத செய்தி அது தான்.

உடனடியாக நான் அந்த இடத்திற்குச் சென்ற போதிலும், அங்கிருந்த கடற்படை சிப்பாய்கள் என்னைத் தடுத்து நிறுத்தினார்கள். நான் உள்ளே செல்வதற்கு அவர்கள் எனக்கு இடமளிக்கவில்லை. “எங்களுக்கு உதவுகள்! எங்களுக்கு உதவுங்கள்!” என்ற அழு குரல்கள் எனக்குக் கேட்டன. ஆனால், என்னுடைய மகன் அமர்ந்திருந்த காந்தி சிலைக்கு அருகில் விளக்குகள் வேண்டுமென்றே அணைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அங்குள்ள நிலைமையை என்னால் தெளிவாகப் பார்க்க  முடியாதிருந்தது. அதனையடுத்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதுடன், சிலைக்கு அருகில் இருந்த விளக்குகள் அனைத்தும் அணைந்தன.

கடற்படையினருக்கு சிகிச்சை அளித்திருந்த ஒரு மருத்துவராக இருந்து வந்த காரணத்தினால் ஆஸ்பத்திரி சவச்சாலைக்குள் பிரவேசிக்க் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலங்களில் ஒன்று எனது மகனுடைய சடலமாக இருந்து வந்ததா என்பதனை நான் தெரிந்துகொள்ள விரும்பினேன். நான் உள்ளே பிரவேசித்த பொழுது, முதலில் பார்த்த சடலம் எனது அன்பு மகன் ரஜிகரின் சடலமாக இருந்தது. அவனுடைய உடலில் ஐந்து துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன. அங்கிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ‘எனது மகன் ஒரு தமிழ் புலி’ என்று குறிப்பிட்டு, ஒரு பத்திரத்தில் கையெழுத்திடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு நான் உடன்பட்டால் உடனடியாக சடலத்தை பெற்றுத்தர முடியும் என்றும் அவர் கூறினார். நான் அதற்கு மறுப்புத் தெரிவித்தேன். என்னுடைய மகன் ஒரு நல்ல மாணவன். ஒரு மேசைப் பந்து விளையாட்டு வீரன். அவன் சதுரங்க ஆட்டத்தில் கெட்டிக்காரனாக இருந்து வந்ததுடன், சதுரங்க ஆட்ட பயிற்றுவிப்பாளனாகவும் இருந்து வந்தான்.

image2.jpeg?resize=665%2C443&ssl=1

ஒரு கிரனைட் தாக்குதலில் எனது மகன் கொல்லப்பட்டதாக அரசாங்கம் கூறியது. ஆனால், சவச்சாலையில் நான் பார்த்த மூன்று சடலங்களின் தலையில் காயங்கள் இருந்ததுடன், தலையின் பின்பக்கத்தில் அவர்கள் சுடப்பட்டிருந்தார்கள். என்னிடம் புகைப்படங்கள் இருப்பதுடன், மருத்துவரின் அறிக்கை அதனை உறுதிப்படுத்துகின்றது. அச்சடலங்களில் உட்பிரவேசத் துவாரம் சிறியதாக இருந்து வந்ததுடன், வெளிச்சென்ற துவாரம் பெரியதாக இருந்தது. இது அந்தப் பையன்கள் மீது மிக அருகிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது என்பதனைக் காட்டுகின்றது. தமக்கென ஓர் எதிர்காலத்தைக் கொண்டிருந்த ஐந்து இளைஞர்கள் இவ்விதம்  கொல்லப்பட்டிருந்தார்கள். அன்றைய தினம் மாலை நேரம் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இது தொடர்பான உண்மையைக் கூற வைப்பதற்கு அதிகாரிகளுக்கு சவால் விடுக்க வேண்டுமென நான் முடிவு செய்தேன். சம்பவ இடத்திற்கு அருகில் இலங்கை விசேட அதிரடிப்படை வீரர்கள் நிற்பதனை நான் பார்த்ததுடன், அவர்கள் தொடர்பாக புலன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டேன்.

இது தொடர்பாக குரலெழுப்பத் தொடங்கியதிலிருந்து எனக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வந்தன. என்னுடைய ஏனைய மகன்மார்களும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார்கள். சடலங்களின் புகைப்படங்களை எடுப்பதற்காக என்னுடன் சவச்சாலைக்கு வந்த ஊடகவியலாளர் திரு. சுகிர்தராஜன் ஒரு சில வாரங்களின் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த மாணவர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டிருந்தார்களென இராணுவம் கூறியிருந்த விடயத்தை அவருடைய புகைப்படங்கள் பொய்யாக்கின. ரஜிகரின் கொலைச் சம்பவத்தைக் கண்டித்திருந்த புத்தபிக்கு ஒருவரும் கொல்லப்பட்டார். நானும், எனது குடும்பத்தினரும் இலங்கையில் தொடர்ந்து வசித்து வருவது மிகவும் ஆபத்தானதாக இருந்து வந்தது. கனத்த இதயங்களுடன் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்கள் இலங்கையிலிருந்து வெளியேறினோம். எமது நண்பர்களையும், மருத்துவத் தொழிலையும், சொத்துக்களையும் இழந்தோம்.  ஆனால், எமது மிகப் பெரிய இழப்பு ரஜிகரனின் இழப்பாகும்.

ஒரு தந்தை என்ற முறையில் இது தொடர்பான உண்மையைத் தேடிக் கண்டுபிடிப்பது எனது கடமையாகும். “Trinco 5 Case” என பரவலாக அறியப்பட்டிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக புலன் விசாரணைகளை நடத்துவதற்கென முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமனம் செய்யப்பட்டிருந்த ஒரு விசாரணைக்குழுவிடம் நான் வீடியோ ஊடாக சாட்சியமளித்திருந்தேன். ஆனால், அது போன்ற முயற்சிகளினால் எத்தகைய பயன்களும் கிடைக்கவில்லை. இந்தக் கொலையில் பாதுகாப்புப் படையினரின் வகிபங்கினை ஏற்றுக்கொள்ளும் விடயத்தில் அரசாங்கம் ஓர் அரசியல் விருப்பினைக் கொண்டிருக்கவில்லை. எனவே, இந்த நிலையை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாத கட்டத்தில், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் உண்மைக்கான எனது தேடலை எடுத்துச் செல்ல வேண்டுமென முடிவு செய்தேன். இது தொடர்பாக உண்மையைக் கூறுமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டுமென ஐ.நா. உறுப்பு நாடுகளிடம் கேட்டுக் கொண்டேன். இலங்கை தொடர்பாக 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் புலன் விசாரணை அறிக்கையில் திருகோணமலை ஐவர் சம்பவம் உள்ளடக்கப்பட்டிருந்தது. அதாவது – தண்டனைக்கு அச்சமின்றி குற்றம் புரியும் நிலையை எடுத்துக் காட்டும் ஒரு குறியீட்டுச் சம்பவமாக அல்லது சாதாரண மொழியில் கூறுவதாக இருந்தால் ஒரு குற்றச் செயலை மூடிமறைப்பதனை எடுத்துக் காட்டிய ஒரு குறியீட்டுச் சம்பவமாக – அது உள்ளடக்கப்பட்டிருந்தது.

13 வருடங்கள் கடந்த நிலையிலும் இந்த வழக்கு இன்னமும் ஸ்தம்பித நிலையில் இருந்து வந்தது. திருகோணமலை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் சுருக்க முறையற்ற விசாரணை வழக்காக அது எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஜூலை மாதம் 03ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த 13 விசேட அதிரடிப்படை வீரர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வினைத்திறன் மிக்க விதத்தில் விசாரணை நடத்தும் விடயத்தில் அரசாங்கம் எவ்வாறு தோல்வியடைய முடியும்? இது மிகவும் பாரதூரமான ஒரு கொலைச் சம்பவமாகும். சவச்சாலையிலிருந்து மருத்துவர் வழங்கிய அறிக்கை உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்த விடயத்தை ஏற்றுக்கொள்கின்றது. எம்மைப் போன்ற குடும்பங்களுக்கு பதில்களை வழங்க முடியாதிருந்தால், இலங்கையின் குற்றவியல் நீதித்துறை குறித்து நான் எத்தகைய நம்பிக்கையையும் வைக்க முடியாது.

ரஜிகர் கொல்லப்படுவதற்கு முன்னர் தனக்கு உதவி வேண்டுமென என்னிடம் அழுகுரல் எழுப்பியிருந்தான்…. இது தொடர்பாக நீதி வழங்கப்படும் பொழுது – எனது மகனுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை இறுதியில் இலங்கை கூறும் பொழுது – உதவிக்கான ரஜிகரின் கோரிக்கை இறுதியில் செவிமடுக்கப்பட்டுள்ளது என்பதனை எம்மால் கூற முடியும்.

திருகோணமலை ஐவர் வழக்கு பொருத்தமான விதத்தில் விசாரணை செய்யப்படுவதனையும், இந்தக் கொலையை நிகழ்த்திய குற்றவாளிகள் இது தொடர்பாக பொறுப்புக்கூற வைக்கப்படுவதனையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுப்பதற்கு தயவு செய்து என்னுடன் இணைந்து கொள்ளுங்கள்.

image1.jpeg?resize=665%2C998&ssl=1


குறிப்பு: யோலண்டா பொஸ்டெர் (Yolanda Foster) சுயாதீனமான ஒரு ஆராய்ச்சியாளர் ஆவார். அவர் முன்னர் சர்வதேச மன்னிப்புச் சபையில் பணி புரிந்ததுடன், 2009 – 2017 காலப் பிரிவில் நியூயோர்க்கிலும், ஜெனீவாவிலும் ஐ.நா. அமைப்புக்களிடம் சாட்சியமளிப்பதற்கென டாக்டர் மனோகரனுடன் சென்றிருந்தார்.


Justice Denied for Trinco 5 என்ற தலைப்பில் யோலன்டா பொஸ்டெர் எழுதி கிரவுண்விவ்ஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்.

 

https://maatram.org/?p=7993

Link to comment
Share on other sites

No Justice for ‘Trinco 5’; HRW & Amnesty

“Sri Lankan authorities have proven unable to obtain justice for the murders of five young people and the resulting coverup despite the considerable evidence available,” said Meenakshi Ganguly, South Asia director at Human Rights Watch. “The failure to convict anyone in this emblematic case after 13 years demonstrates the need for a court with international participation that can properly protect victims and witnesses.”

http://www.sundaytimes.lk/article/1094500/no-justice-for-trinco-5-hrw

The failure to prosecute is also particularly damning given the national and international prominence of the incident. Such was the public outcry that followed it, the case is today routinely included among Sri Lanka’s list of so-called ‘emblematic cases’: instances of human rights abuses so egregious or incontrovertible in nature that successful prosecutions are regarded as a litmus test for the government’s stated commitment to justice and accountability. This week’s news gives lie to that commitment, and stands as a potent symbol of the government of Sri Lanka’s near total failure to deliver when it comes to prosecuting state forces.

https://www.srilankacampaign.org/an-emblematic-failure-in-an-emblematic-case/?fbclid=IwAR31t1i7zZ0Cmn7Mu0nGgyzVQklIB7bUY93gqgB5Iuw064EjeFYAkubqh6A

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.