Jump to content

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது எப்படி? - ஒரு சிறிய தேசத்தின் கதை


Recommended Posts

''ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட அதிக வசதிகள் இல்லை. தேர்வு செய்வதற்கு என்று ஏராளமான வீரர்களும் இல்லை. எங்கள் நாட்டில் உள்ள இயல்பான விளையாட்டு ஆர்வம் மற்றும் உலக அரங்கில் நாட்டை ஜொலிக்க செய்யவேண்டும் என்ற வீரர்களின் உத்வேகமும் எங்கள் அணிக்கு வெற்றிகளை தருகிறது'' - இது மறைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது.

அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 49 லட்சம் மக்கள்தொகையை கொண்ட நியூசிலாந்து, அளவில் இந்தியாவைவிட 12 மடங்கு சிறிய நாடாகும்.

தனி தீவு நாடான நியூசிலாந்து அண்மைய காலங்களில் வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. பொதுவாக வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம்பெறும் நியூசிலாந்தில் குளிர் காலங்களில் மிகவும் அதிக குளிர் நிலவும்.

சிறிய நாடாகவும், குறைந்த மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள நாடாகவே இருந்துவருகிறது.

படகுப்போட்டி, நீச்சல் போட்டி பிரிவுகள், தடகளம் போன்றவற்றில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டி தொடர்களில் பதக்கங்கள் வெல்லும் நியூசிலாந்து, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் வாலிபால் போன்ற குழு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள நாடாகவே இருந்து வருகிறது.

கிரிக்கெட்டை பொருத்தவரை நியூசிலாந்தில் ரிச்சர்ட் ஹேட்லி, மார்ட்டின் குரோவ், ஜான் ரைட் போன்ற வீரர்கள் கடந்த காலங்களிலும், டேனியல் வெட்டோரி, கென் வில்லியம்சன், ராஸ் டெய்லர் போன்ற வீரர்கள் அண்மைய காலங்களில் மிக சிறந்த வீரர்களாக வலம்வந்த போதிலும், டெண்டுல்கர், லாரா, வசீம் அக்ரம், கோலி போன்ற ஜாம்பவான்கள் அந்த நாட்டில் இருந்து வெளிவந்ததில்லை.

ஆனால், தங்களின் கட்டுக்கோப்பான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங் ஆகியவற்றால் மற்ற அணிகளுக்கு தொடர்ந்து நியூசிலாந்து அதிர்ச்சி அளித்து வந்துள்ளது.

 

உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து

1975-இல் நடந்த முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இருந்து உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுவரும் நியூசிலாந்து புதன்கிழமையன்று மான்செஸ்டரில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவை வென்று இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

2015-இல் நடந்த முந்தைய உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து முதலாவதாக பேட் செய்து 183 ரன்கள் மட்டுமே பெற்றது. 33 ஓவரில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் கோப்பை கனவை தகர்த்தது.

இதுவரை 8 அரையிறுதி போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து இரண்டுமுறை மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 

வியூகத்தால் வென்ற நியூசிலாந்து

இந்நிலையில், நியூசிலாந்தின் வெற்றி மற்றும் அரையிறுதி போட்டியில் அந்த அணி வகுத்த வியூகங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''இந்த போட்டியில் இந்தியாவை பேட்டிங் தடுமாறியது என்றாலும், நியூசிலாந்தின் அற்புதமான வியூகங்கள் மற்றும் ஆட்டத்திறனால் இந்தியா தோல்வியுற்றது என்றே கூற வேண்டும்'' என்றார்.

''குறிப்பாக விராட் கோலியை ஆட்டமிழக்க டிரெண்ட் போல்ட் மற்றும் கேன் வில்லியம்சன் வகுத்த வியூகம் அபாரமானது. 240 ரன்கள்தானே வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பு என்பது பேரதிர்ச்சியாக, அதில் இருந்து இந்தியா மீள அதிக நேரமானது'' என்றார்.

''லீக் போட்டி பிரிவுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளிடம் தோல்வியுற்ற நியூசிலாந்து தனது ஆகச்சிறந்த ஆட்டத்தை அரையிறுதியில் வெளிப்படுத்தியது''

''வெற்றிக்கு ஹென்றி, போல்ட் போன்ற நியூசிலாந்தின் பந்துவீச்சு ஒரு காரணம் என்றாலும், நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சனின் தலைமைப்பண்பு ஒரு முக்கிய காரணம்'' என்று ரகுராமன் தெரிவித்தார்.

 

44 ஆண்டுகள் காத்திருப்பு கைகூடுமா?

1992-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடந்தபோது நியூசிலாந்து வலிமைமிக்க அணியாக இருந்தது. அந்த தொடரில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து எளிதாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவம் மிக்க ஜாவீத் மியாண்டாட் மற்றும் இளம் வீரர் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் கணக்கு வேறு விதமாக இருந்தது.

இன்சமாம் உல் ஹக்கின் அதிரடி பாணி பேட்டிங் மற்றும் ஜாவீத் மியாண்டாட்டின் நெடிய அனுபவம் சொந்த மண்ணில் நியூசிலாந்தின் இறுதி போட்டி கனவை தகர்த்தது.

அது போன்ற ஒரு நிலையை மீண்டும் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தை மான்செஸ்டரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனியின் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தியது.

ஆனால், தங்களின் வியூகம் மற்றும் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இந்தியாவை வீழ்த்தி மீண்டும் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து தனது முதல் கோப்பை கனவுடன், இரண்டாவது அரையிறுதியில் வெல்லப்போகும் அணிக்காக காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-48946193

 

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

ஆனால், தங்களின் கட்டுக்கோப்பான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங் ஆகியவற்றால் மற்ற அணிகளுக்கு தொடர்ந்து நியூசிலாந்து அதிர்ச்சி அளித்து வந்துள்ளது.

இந்தியாட்டை கட்டுக்கோப்பில்லை!
அதுவும் விராட் கோலி போன்ற லொள்ளு பசங்கள் தலைவனா இருக்கேக்க கட்டுக்கோப்பு கஸ்டம்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.