Jump to content

உலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து இந்தியாவை வீழ்த்தியது எப்படி? - ஒரு சிறிய தேசத்தின் கதை


Recommended Posts

''ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து போன்று எங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாட அதிக வசதிகள் இல்லை. தேர்வு செய்வதற்கு என்று ஏராளமான வீரர்களும் இல்லை. எங்கள் நாட்டில் உள்ள இயல்பான விளையாட்டு ஆர்வம் மற்றும் உலக அரங்கில் நாட்டை ஜொலிக்க செய்யவேண்டும் என்ற வீரர்களின் உத்வேகமும் எங்கள் அணிக்கு வெற்றிகளை தருகிறது'' - இது மறைந்த நியூசிலாந்து கேப்டன் மார்ட்டின் குரோவ் சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியது.

அண்மைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 49 லட்சம் மக்கள்தொகையை கொண்ட நியூசிலாந்து, அளவில் இந்தியாவைவிட 12 மடங்கு சிறிய நாடாகும்.

தனி தீவு நாடான நியூசிலாந்து அண்மைய காலங்களில் வெளிநாட்டினரை பெரிதும் கவர்ந்து வருகிறது. பொதுவாக வாழத்தகுந்த நாடுகளின் பட்டியலில் முதல் 15 இடங்களில் இடம்பெறும் நியூசிலாந்தில் குளிர் காலங்களில் மிகவும் அதிக குளிர் நிலவும்.

சிறிய நாடாகவும், குறைந்த மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்து விளையாட்டுத்துறையில் ஆர்வமுள்ள நாடாகவே இருந்துவருகிறது.

படகுப்போட்டி, நீச்சல் போட்டி பிரிவுகள், தடகளம் போன்றவற்றில் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டி தொடர்களில் பதக்கங்கள் வெல்லும் நியூசிலாந்து, கிரிக்கெட், ஹாக்கி மற்றும் வாலிபால் போன்ற குழு விளையாட்டுகளில் ஆர்வமுள்ள நாடாகவே இருந்து வருகிறது.

கிரிக்கெட்டை பொருத்தவரை நியூசிலாந்தில் ரிச்சர்ட் ஹேட்லி, மார்ட்டின் குரோவ், ஜான் ரைட் போன்ற வீரர்கள் கடந்த காலங்களிலும், டேனியல் வெட்டோரி, கென் வில்லியம்சன், ராஸ் டெய்லர் போன்ற வீரர்கள் அண்மைய காலங்களில் மிக சிறந்த வீரர்களாக வலம்வந்த போதிலும், டெண்டுல்கர், லாரா, வசீம் அக்ரம், கோலி போன்ற ஜாம்பவான்கள் அந்த நாட்டில் இருந்து வெளிவந்ததில்லை.

ஆனால், தங்களின் கட்டுக்கோப்பான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங் ஆகியவற்றால் மற்ற அணிகளுக்கு தொடர்ந்து நியூசிலாந்து அதிர்ச்சி அளித்து வந்துள்ளது.

 

உலகக்கோப்பை தொடர்களில் நியூசிலாந்து

1975-இல் நடந்த முதல் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இருந்து உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுவரும் நியூசிலாந்து புதன்கிழமையன்று மான்செஸ்டரில் நடந்த அரையிறுதி போட்டியில் இந்தியாவை வென்று இரண்டாவது முறையாக உலகக்கோப்பை இறுதியாட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

2015-இல் நடந்த முந்தைய உலகக்கோப்பை தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து முதலாவதாக பேட் செய்து 183 ரன்கள் மட்டுமே பெற்றது. 33 ஓவரில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா நியூசிலாந்தின் கோப்பை கனவை தகர்த்தது.

இதுவரை 8 அரையிறுதி போட்டிகளில் விளையாடிய நியூசிலாந்து இரண்டுமுறை மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 

வியூகத்தால் வென்ற நியூசிலாந்து

இந்நிலையில், நியூசிலாந்தின் வெற்றி மற்றும் அரையிறுதி போட்டியில் அந்த அணி வகுத்த வியூகங்கள் குறித்து பிபிசியிடம் பேசிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''இந்த போட்டியில் இந்தியாவை பேட்டிங் தடுமாறியது என்றாலும், நியூசிலாந்தின் அற்புதமான வியூகங்கள் மற்றும் ஆட்டத்திறனால் இந்தியா தோல்வியுற்றது என்றே கூற வேண்டும்'' என்றார்.

''குறிப்பாக விராட் கோலியை ஆட்டமிழக்க டிரெண்ட் போல்ட் மற்றும் கேன் வில்லியம்சன் வகுத்த வியூகம் அபாரமானது. 240 ரன்கள்தானே வென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழப்பு என்பது பேரதிர்ச்சியாக, அதில் இருந்து இந்தியா மீள அதிக நேரமானது'' என்றார்.

''லீக் போட்டி பிரிவுகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளிடம் தோல்வியுற்ற நியூசிலாந்து தனது ஆகச்சிறந்த ஆட்டத்தை அரையிறுதியில் வெளிப்படுத்தியது''

''வெற்றிக்கு ஹென்றி, போல்ட் போன்ற நியூசிலாந்தின் பந்துவீச்சு ஒரு காரணம் என்றாலும், நியூசிலாந்தின் கேப்டன் கேன் வில்லியம்சனின் தலைமைப்பண்பு ஒரு முக்கிய காரணம்'' என்று ரகுராமன் தெரிவித்தார்.

 

44 ஆண்டுகள் காத்திருப்பு கைகூடுமா?

1992-ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உலகக்கோப்பை போட்டிகள் நடந்தபோது நியூசிலாந்து வலிமைமிக்க அணியாக இருந்தது. அந்த தொடரில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து எளிதாக வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் அனுபவம் மிக்க ஜாவீத் மியாண்டாட் மற்றும் இளம் வீரர் இன்சமாம் உல் ஹக் ஆகியோரின் கணக்கு வேறு விதமாக இருந்தது.

இன்சமாம் உல் ஹக்கின் அதிரடி பாணி பேட்டிங் மற்றும் ஜாவீத் மியாண்டாட்டின் நெடிய அனுபவம் சொந்த மண்ணில் நியூசிலாந்தின் இறுதி போட்டி கனவை தகர்த்தது.

அது போன்ற ஒரு நிலையை மீண்டும் சந்திக்க நேரிடுமோ என்ற அச்சத்தை மான்செஸ்டரில் ரவீந்திர ஜடேஜா மற்றும் தோனியின் பார்ட்னர்ஷிப் ஏற்படுத்தியது.

ஆனால், தங்களின் வியூகம் மற்றும் அபார பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் இந்தியாவை வீழ்த்தி மீண்டும் இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து தனது முதல் கோப்பை கனவுடன், இரண்டாவது அரையிறுதியில் வெல்லப்போகும் அணிக்காக காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/sport-48946193

 

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

ஆனால், தங்களின் கட்டுக்கோப்பான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங் ஆகியவற்றால் மற்ற அணிகளுக்கு தொடர்ந்து நியூசிலாந்து அதிர்ச்சி அளித்து வந்துள்ளது.

இந்தியாட்டை கட்டுக்கோப்பில்லை!
அதுவும் விராட் கோலி போன்ற லொள்ளு பசங்கள் தலைவனா இருக்கேக்க கட்டுக்கோப்பு கஸ்டம்.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.