Jump to content

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!” நேர்காணல். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

Link to comment
Share on other sites

அன்புக்குரிய nunavilan. அனுப்பிய இணைப்பு போதியதில்லையா? லிங் கிளிக் பண்ணி வாசிக்க முடியவில்லையா? 

நான் சரியான இணைய தொழில்நுட்ப முட்டாள் நண்பா. லிங் மீண்டும் இணைக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Candid ஆன நேர்காணல் கவிஞர்! யாரும் மறுக்க முடியாத கருத்துகளை ராஜராஜசோழன் பற்றியும் பிரபாகரன் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்! 

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி  Justin, உங்களைபோன்ற அன்புள்ளங்களின் ஆதரவு வார்த்தைகள்தான் என்னுடைய ஆதாரமாக இருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

கேள்வி உங்கள் தனிப்பட்ட அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியது.
இதுக்குள் நீங்கள் மொட்டையாக புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் 
என்றால் முஸ்லிம்கள் என்ன பணம்காய் பறித்துக்கொண்டா இருந்தார்கள்? 
ஒன்றில் நீங்கள் முழுமையாக நடந்ததை கூறியிருக்க வேண்டும் 
அல்லது உங்கள் கேள்விக்கு உகந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறியிருக்கலாம். 

போராளிகள் துரோகம் செய்வதில்லை 
கருணா அம்மான் செய்வார் ...

நீங்கள் தேவையில்லாது இந்த இடத்தில் புலிகள் மீது சேறடித்து எமக்கு துரோகம் செய்ததாகவே 
எனக்கு படுகிறது. 

யாழில் இருந்து வெளிறப்பட்ட முஸ்லீம் வீட்டில் கம்பகாவில்
நான் கூட்டுப்படை குண்டு தாக்குதல்   ரஞ்சன் வியரட்ன குண்டுத்தாக்குதல் நடந்த போது 
சென்று ஒழித்து கொள்வது .... அவர்களுக்கு நடந்தது தெரியும் அதைப்பற்றி ஒருபோதும் 
தலை நிமிர்ந்து என்னுடன் பேசியதில்லை. தங்கள் பொருட்களை வாழ்வாதாரம் வேண்டி கொண்டுசெல்ல 
எம்மை விட்டிருக்கலாம் என்று மட்டுமே எனக்கு சொல்வார்கள் ... வெளியேற்றியது தவறு என்று ஒருபோதும் சொன்னதில்லை காரணம் அவர்களுக்கு நன்று தெரியும். 

நீங்கள்தான் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்கிறீர்கள் 
விமர்சனம் நல்லது ..... ஒருபக்க நியாயத்தை இருட்டடித்து செய்வதுதான் புரியவில்லை 

Link to comment
Share on other sites

நன்றி ஜஸ்ரின், நன்றி நுணாவிலான். நன்றி Maruthankerny. நான் இன்னும் அரசியலில் மாணவன்தான். ஆதலால் Maruthankerny சொல்லுவதை பற்றியும் சிந்திப்பேன். நான் வன்னியில் பேசாத எதையும் சொல்லவில்லை. என் பேச்சு சுதந்திரத்தை அவர்கள் எப்பவும் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லாம் வன்னியில் கலந்துரையாடியவைகள்தான். எனினும் உங்களுக்கும் புதிய கருத்துக்கள் இருக்கும் என்பதை மறுக்கவில்லை.   கருத்துக்கள் பல. உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள  முயற்சிக்கிறேன். அது என் இயல்பு.   உங்கள் கருத்துக்கும் நன்றி Maruthankerny.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

கேள்வி உங்கள் தனிப்பட்ட அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியது.
இதுக்குள் நீங்கள் மொட்டையாக புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் 
என்றால் முஸ்லிம்கள் என்ன பணம்காய் பறித்துக்கொண்டா இருந்தார்கள்? 
ஒன்றில் நீங்கள் முழுமையாக நடந்ததை கூறியிருக்க வேண்டும் 
அல்லது உங்கள் கேள்விக்கு உகந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறியிருக்கலாம். 

போராளிகள் துரோகம் செய்வதில்லை 
கருணா அம்மான் செய்வார் ...

நீங்கள் தேவையில்லாது இந்த இடத்தில் புலிகள் மீது சேறடித்து எமக்கு துரோகம் செய்ததாகவே 
எனக்கு படுகிறது. 

யாழில் இருந்து வெளிறப்பட்ட முஸ்லீம் வீட்டில் கம்பகாவில்
நான் கூட்டுப்படை குண்டு தாக்குதல்   ரஞ்சன் வியரட்ன குண்டுத்தாக்குதல் நடந்த போது 
சென்று ஒழித்து கொள்வது .... அவர்களுக்கு நடந்தது தெரியும் அதைப்பற்றி ஒருபோதும் 
தலை நிமிர்ந்து என்னுடன் பேசியதில்லை. தங்கள் பொருட்களை வாழ்வாதாரம் வேண்டி கொண்டுசெல்ல 
எம்மை விட்டிருக்கலாம் என்று மட்டுமே எனக்கு சொல்வார்கள் ... வெளியேற்றியது தவறு என்று ஒருபோதும் சொன்னதில்லை காரணம் அவர்களுக்கு நன்று தெரியும். 

நீங்கள்தான் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்கிறீர்கள் 
விமர்சனம் நல்லது ..... ஒருபக்க நியாயத்தை இருட்டடித்து செய்வதுதான் புரியவில்லை 

மருதர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் அரசியலோடு வைத்திருக்கிறார். அதனால் முஸ்லிம் வெளியேற்றம் பற்றியும் அவரது கருத்தை சொல்லலாம் தானே? ஒருவர் அபிப்பிராயம் சொல்வதாலேயே துரோகம் செய்து விட முடியுமா? துரோகம் என்பதற்கு இந்த வரைவிலக்கணத்தை வைத்துக் கொண்டு தானே புலிகளுக்கெதிராக ஆயுதமே தூக்காத அரசியலாளர்கள், புத்திஜீவிகள் கொல்லப்பட்டார்கள்? இந்த ஊசிப் போன துரோகி ஸ்ராண்டர்ட் இன்னும் உங்களுக்குத் தவறென்று தெரியவில்லையா?

 நீங்கள் தங்கியிருந்த ஒரு முஸ்லிம் வீட்டுக் காரன் மட்டும் தானா நீங்கள் சந்தித்த ஒரேயொரு முஸ்லிம் நபர்? புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களிடம் போய் "நான் யாழ்ப்பாணத் தமிழன்" என்று அறிமுகம் வைத்துப் பேசிப்பார்த்திருக்கிறீர்களா? நீர்கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பணிசெய்த இளைய விசாரணையாளர்கள் எஙகே பிறந்தவர்கள் என்று தேடிப் பார்த்திருக்கிறீர்களா? ரிஷாட் எப்படி உருவானார் என்றாவது தெரியுமா? பதில் தேவையில்லை! உங்கள் tunnel vision  ஐச் சுட்டிக் காட்ட மட்டுமே கேட்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

நன்றி ஜஸ்ரின், நன்றி நுணாவிலான். நன்றி Maruthankerny. நான் இன்னும் அரசியலில் மாணவன்தான். ஆதலால் Maruthankerny சொல்லுவதை பற்றியும் சிந்திப்பேன். நான் வன்னியில் பேசாத எதையும் சொல்லவில்லை. என் பேச்சு சுதந்திரத்தை அவர்கள் எப்பவும் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லாம் வன்னியில் கலந்துரையாடியவைகள்தான். எனினும் உங்களுக்கும் புதிய கருத்துக்கள் இருக்கும் என்பதை மறுக்கவில்லை.   கருத்துக்கள் பல. உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள  முயற்சிக்கிறேன். அது என் இயல்பு.   உங்கள் கருத்துக்கும் நன்றி Maruthankerny.   

உங்களுடைய கருத்து சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை 
தலையிடவும் முடியாது......

கிழக்கை சேர்ந்தவர் என்று எழுதிக்கொண்டு ....
அத்திபட்டிபோல ஒரு தமிழ்  கிராமமே அழிக்க பட்டது 
இன்றும் வீரமுனை என்றால் மனிதனாக இருந்தால் அதிர்ந்துதான் போவான்.
இதனை கொடுமைகளைகளையும் லாபகமாக மறைத்துக்கொண்டு 

யாழில் இருந்து வெளியேற்றினார்கள் என்று சுருதி வைத்து வீணை வாசிப்பது 
ஒரு கருத்து இல்லை  வீண் அவதூறு.
கண்ணுக்கு கண் பழிக்கு பழி என்று கூட புலிகள் இருக்கவில்லை 
எந்த முஸ்லீம் மக்கள் மீதும் தாக்குதல் செய்யவில்லை 
காத்தான்குடி பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் எனக்கு இப்போதும் சந்தேகம் உண்டு 
காரணம் பிரிந்த பின்பும் கருணா இது பற்றி பேசியதில்லை.

எம்மோடு கூடியிருந்து கொண்டு செய்த துரோகத்தின் உச்சம் 
யாழில் இருந்து வெளியேறிய ஒவ்வரு ஆறாறிவு உள்ள முஸ்லிமுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2019 at 5:57 AM, poet said:

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

வீரமுனைக்கு ஒருமுறை சென்று ...
அழியட்டும் முஸ்லீம்கள் .... அழியட்டும் அல்லாஹ்வின் அரக்கர்கள் 
என்று உங்களால் ஏன் கவிதை வாசிக்க முடியவில்லை?

தமிழனுக்கு என்றால் 
உங்களுக்கு தக்காளி சட்னியாகத்தான் தெரிகிறதா? 

Link to comment
Share on other sites

திரு.Maruthankerny ,  ஏற்கனவே பதில் அழிக்கபட்ட விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதை பதில் அளிப்பதை விட்டுவிடுவோம்.    தமிழர் யாரையும்  மாவீரர்களான  போராளிகளைவிட தீவிரமான இனப்பற்றாளர் என  நன் கருதவில்லை. உண்மையும் அதுதான்.  நான் போராளிகளோடு பேசாத எதையும் பேசவில்லை. ஒரு நேர்காணல் ஒரு புத்தகமில்லை. ஒருவேழை பேட்டியை யாழில் இணைத்ததுதான் பிரச்சினையாயின் யாழ் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட முரண்பாடும் இல்லை 
முஸ்லிம்களுடனான உங்கள் சுமுகமான உறவு பற்றியும் 
எனக்கு ஆடசேபனை இல்லை .... தவிர்த்து அது காலத்தின் தேவை என்று கூட எண்ணுகிறேன்.

"பேசப்பட்ட விடயம்"  இதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது 
ஏன் எப்போதும் எமது அழிவுகளோ துன்பங்களோ துயரங்களோ பேசவே படவில்லை?

ஏன் உங்களால் வீரமுனைக்கு சென்று முஸ்லீம்கள் அழியட்டும் என்று கவிதை 
பாட முடியவில்லை?

கேள்விக்கு தொடர்பே இல்லாத முஸ்லீம்கள் யாழ் வெளியேற்றம் 
ஏன் பதிலாகிறது? என்ற புரியாத கேள்விகளுக்கு பதில் தேடி வருகிறேன்
அவளவுதான். 

Link to comment
Share on other sites

 நண்பர் மருதங்கேணிக்கு, கல்முனை பிரச்சினை பற்றி கிழக்கு மாகாண தமிழர் நலன்கள் பற்றியும் தமிழ் முஸ்லிம் மோதல்களுக்கு எதிராகவும்  அவசியம் பற்றியும் ஆய்வுசெய்து அதிகம் எழுதியவர்களுள் நானும் ஒருவன் என்பதை அறிவீர்களா? 1985ம் ஆண்டு கலவரத்தில் இருந்தே வீரமுனை மக்களின் நீதிக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன்.  எழுதியும் இருக்கிறேன்.  நான் எழுதிய கட்டுரைகள் வாசித்திருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீங்க? தமிழ் முஸ்லிம்களின் உறவை நாடிய அதே வேகத்துடன்                   தமிழரையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்துதலை இலக்காக்கி தவறுகளை  விமர்சித்தும்   சிங்கள பெளத்த இனவாதத்தை எதிர்த்தும் நான் சரிநிகர் மற்றும் சிறு சஞ்சிகைகளிலும் எழுதியதை  என் ஆய்வுக்கட்டுரைகளை இவற்றில் எதையுமே வாசித்ததில்லையா?  நண்பரே பேட்டியில் ஆயிரம் கேட்டு பதிவு செய்வார்கள். பின் ஒதுக்கும் பக்கத்துக்கு சுருக்கி வெளியிடுவார்கள். விடுதலை பிரச்சனைகள் தொடர்பான ஒரு சிறு பேட்டியில் ஒரு கேழ்விக்கு எது தொடர்பு எது தொடர்பில்லை என்பது பற்றி இடம் பொருள் ஏவல் பேட்டியின் நம்பகத்தன்மை  அரசியல் இராசதந்திர ரீதியில் நான் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். விமர்சிக்கிறவர்கள் பொதுவாக பேட்டியில்  இருக்கிறது பற்றித்தான் விமர்சிப்பார்கள்.  நீங்கள் விமர்சிக்க முடியும்.  அடுத்த விமர்சனம் எழுதமுன்னம் என் எழுத்துக்கள் சிலவற்றையாவது வாசியுங்கள். உங்கள் முன்னைநாள் போராளி நண்பர்களிடமாவது ஜெயபாலன் விமர்சிக்கிறானே அவன் “எதிரியா நண்பனா?” என விசாரியுங்கள்.  மற்றப்படி எனக்குத் தெரிந்த வழியில் உங்களுக்கும் சேர்த்துத்தான் உழைக்கிறேன் நண்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2019 at 4:34 AM, Maruthankerny said:

நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

என்ன எழுச்சி தமிழர்களிடம் இருக்கின்றது?

வெறும் இயலாமையும் ஆற்றாமையும்தான் இருக்கின்றது.

இணக்க அரசியல் செய்யவெளிக்கிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து கிழக்கில் தமிழர்களின் காணிகளை இழப்பதுக்கு வழிகோலிய சம்பந்தர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் அரசியலமைப்பை மாற்ற முடியவில்லை.

இனி மகிந்த, கோத்தா கும்பல் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவை மட்டும் கொண்டு அரசுபீடம் ஏற சிங்களவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று பிலாக்கணம் பாடி தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைக்க வருவார்கள்! அதுக்கு மட்டும்தான் எழுச்சி தேவை!

Link to comment
Share on other sites

எழுச்சியின் அடையாளம் வெற்றிக்கிண்ணங்கள் அல்ல தொடரும் ஆட்டம்தான்.  எழுச்சி இருப்பதால்தான் கிருபன்  ஓய்வை மறந்து யாழ் இணையத்தில் மகரந்தமும் தேனும் நிறைக்கும் ஓயாத தேனீயாக இயங்கிறார். வாழ்க கிருபன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 7/13/2019 at 3:28 AM, Maruthankerny said:

வீரமுனைக்கு ஒருமுறை சென்று ...
அழியட்டும் முஸ்லீம்கள் .... அழியட்டும் அல்லாஹ்வின் அரக்கர்கள் 
என்று உங்களால் ஏன் கவிதை வாசிக்க முடியவில்லை?

தமிழனுக்கு என்றால் 
உங்களுக்கு தக்காளி சட்னியாகத்தான் தெரிகிறதா? 

அந்தமாதிரி உண்மைகளை தெரிஞ்சாலும் சிலர் தெரியாமாதிரி நடிப்பினம்.
அப்படியான சிலரை பாத்திருக்கன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.