Jump to content

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!” நேர்காணல். - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

Link to comment
Share on other sites

அன்புக்குரிய nunavilan. அனுப்பிய இணைப்பு போதியதில்லையா? லிங் கிளிக் பண்ணி வாசிக்க முடியவில்லையா? 

நான் சரியான இணைய தொழில்நுட்ப முட்டாள் நண்பா. லிங் மீண்டும் இணைக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Candid ஆன நேர்காணல் கவிஞர்! யாரும் மறுக்க முடியாத கருத்துகளை ராஜராஜசோழன் பற்றியும் பிரபாகரன் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள்! 

Link to comment
Share on other sites

மிகவும் நன்றி  Justin, உங்களைபோன்ற அன்புள்ளங்களின் ஆதரவு வார்த்தைகள்தான் என்னுடைய ஆதாரமாக இருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

கேள்வி உங்கள் தனிப்பட்ட அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியது.
இதுக்குள் நீங்கள் மொட்டையாக புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் 
என்றால் முஸ்லிம்கள் என்ன பணம்காய் பறித்துக்கொண்டா இருந்தார்கள்? 
ஒன்றில் நீங்கள் முழுமையாக நடந்ததை கூறியிருக்க வேண்டும் 
அல்லது உங்கள் கேள்விக்கு உகந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறியிருக்கலாம். 

போராளிகள் துரோகம் செய்வதில்லை 
கருணா அம்மான் செய்வார் ...

நீங்கள் தேவையில்லாது இந்த இடத்தில் புலிகள் மீது சேறடித்து எமக்கு துரோகம் செய்ததாகவே 
எனக்கு படுகிறது. 

யாழில் இருந்து வெளிறப்பட்ட முஸ்லீம் வீட்டில் கம்பகாவில்
நான் கூட்டுப்படை குண்டு தாக்குதல்   ரஞ்சன் வியரட்ன குண்டுத்தாக்குதல் நடந்த போது 
சென்று ஒழித்து கொள்வது .... அவர்களுக்கு நடந்தது தெரியும் அதைப்பற்றி ஒருபோதும் 
தலை நிமிர்ந்து என்னுடன் பேசியதில்லை. தங்கள் பொருட்களை வாழ்வாதாரம் வேண்டி கொண்டுசெல்ல 
எம்மை விட்டிருக்கலாம் என்று மட்டுமே எனக்கு சொல்வார்கள் ... வெளியேற்றியது தவறு என்று ஒருபோதும் சொன்னதில்லை காரணம் அவர்களுக்கு நன்று தெரியும். 

நீங்கள்தான் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்கிறீர்கள் 
விமர்சனம் நல்லது ..... ஒருபக்க நியாயத்தை இருட்டடித்து செய்வதுதான் புரியவில்லை 

Link to comment
Share on other sites

நன்றி ஜஸ்ரின், நன்றி நுணாவிலான். நன்றி Maruthankerny. நான் இன்னும் அரசியலில் மாணவன்தான். ஆதலால் Maruthankerny சொல்லுவதை பற்றியும் சிந்திப்பேன். நான் வன்னியில் பேசாத எதையும் சொல்லவில்லை. என் பேச்சு சுதந்திரத்தை அவர்கள் எப்பவும் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லாம் வன்னியில் கலந்துரையாடியவைகள்தான். எனினும் உங்களுக்கும் புதிய கருத்துக்கள் இருக்கும் என்பதை மறுக்கவில்லை.   கருத்துக்கள் பல. உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள  முயற்சிக்கிறேன். அது என் இயல்பு.   உங்கள் கருத்துக்கும் நன்றி Maruthankerny.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

கேள்வி உங்கள் தனிப்பட்ட அரசியல் இலக்கிய வாழ்க்கை பற்றியது.
இதுக்குள் நீங்கள் மொட்டையாக புலிகள் முஸ்லிம்களை யாழில் இருந்து வெளியேற்றினார்கள் 
என்றால் முஸ்லிம்கள் என்ன பணம்காய் பறித்துக்கொண்டா இருந்தார்கள்? 
ஒன்றில் நீங்கள் முழுமையாக நடந்ததை கூறியிருக்க வேண்டும் 
அல்லது உங்கள் கேள்விக்கு உகந்த தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கூறியிருக்கலாம். 

போராளிகள் துரோகம் செய்வதில்லை 
கருணா அம்மான் செய்வார் ...

நீங்கள் தேவையில்லாது இந்த இடத்தில் புலிகள் மீது சேறடித்து எமக்கு துரோகம் செய்ததாகவே 
எனக்கு படுகிறது. 

யாழில் இருந்து வெளிறப்பட்ட முஸ்லீம் வீட்டில் கம்பகாவில்
நான் கூட்டுப்படை குண்டு தாக்குதல்   ரஞ்சன் வியரட்ன குண்டுத்தாக்குதல் நடந்த போது 
சென்று ஒழித்து கொள்வது .... அவர்களுக்கு நடந்தது தெரியும் அதைப்பற்றி ஒருபோதும் 
தலை நிமிர்ந்து என்னுடன் பேசியதில்லை. தங்கள் பொருட்களை வாழ்வாதாரம் வேண்டி கொண்டுசெல்ல 
எம்மை விட்டிருக்கலாம் என்று மட்டுமே எனக்கு சொல்வார்கள் ... வெளியேற்றியது தவறு என்று ஒருபோதும் சொன்னதில்லை காரணம் அவர்களுக்கு நன்று தெரியும். 

நீங்கள்தான் வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்கிறீர்கள் 
விமர்சனம் நல்லது ..... ஒருபக்க நியாயத்தை இருட்டடித்து செய்வதுதான் புரியவில்லை 

மருதர், அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அவர் முஸ்லிம் தமிழ் மக்களின் அரசியலோடு வைத்திருக்கிறார். அதனால் முஸ்லிம் வெளியேற்றம் பற்றியும் அவரது கருத்தை சொல்லலாம் தானே? ஒருவர் அபிப்பிராயம் சொல்வதாலேயே துரோகம் செய்து விட முடியுமா? துரோகம் என்பதற்கு இந்த வரைவிலக்கணத்தை வைத்துக் கொண்டு தானே புலிகளுக்கெதிராக ஆயுதமே தூக்காத அரசியலாளர்கள், புத்திஜீவிகள் கொல்லப்பட்டார்கள்? இந்த ஊசிப் போன துரோகி ஸ்ராண்டர்ட் இன்னும் உங்களுக்குத் தவறென்று தெரியவில்லையா?

 நீங்கள் தங்கியிருந்த ஒரு முஸ்லிம் வீட்டுக் காரன் மட்டும் தானா நீங்கள் சந்தித்த ஒரேயொரு முஸ்லிம் நபர்? புத்தளம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த வடக்கு முஸ்லிம்களிடம் போய் "நான் யாழ்ப்பாணத் தமிழன்" என்று அறிமுகம் வைத்துப் பேசிப்பார்த்திருக்கிறீர்களா? நீர்கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் பணிசெய்த இளைய விசாரணையாளர்கள் எஙகே பிறந்தவர்கள் என்று தேடிப் பார்த்திருக்கிறீர்களா? ரிஷாட் எப்படி உருவானார் என்றாவது தெரியுமா? பதில் தேவையில்லை! உங்கள் tunnel vision  ஐச் சுட்டிக் காட்ட மட்டுமே கேட்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, poet said:

நன்றி ஜஸ்ரின், நன்றி நுணாவிலான். நன்றி Maruthankerny. நான் இன்னும் அரசியலில் மாணவன்தான். ஆதலால் Maruthankerny சொல்லுவதை பற்றியும் சிந்திப்பேன். நான் வன்னியில் பேசாத எதையும் சொல்லவில்லை. என் பேச்சு சுதந்திரத்தை அவர்கள் எப்பவும் கொச்சைப்படுத்தியதில்லை. எல்லாம் வன்னியில் கலந்துரையாடியவைகள்தான். எனினும் உங்களுக்கும் புதிய கருத்துக்கள் இருக்கும் என்பதை மறுக்கவில்லை.   கருத்துக்கள் பல. உங்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள  முயற்சிக்கிறேன். அது என் இயல்பு.   உங்கள் கருத்துக்கும் நன்றி Maruthankerny.   

உங்களுடைய கருத்து சுதந்திரத்தில் யாரும் தலையிடவில்லை 
தலையிடவும் முடியாது......

கிழக்கை சேர்ந்தவர் என்று எழுதிக்கொண்டு ....
அத்திபட்டிபோல ஒரு தமிழ்  கிராமமே அழிக்க பட்டது 
இன்றும் வீரமுனை என்றால் மனிதனாக இருந்தால் அதிர்ந்துதான் போவான்.
இதனை கொடுமைகளைகளையும் லாபகமாக மறைத்துக்கொண்டு 

யாழில் இருந்து வெளியேற்றினார்கள் என்று சுருதி வைத்து வீணை வாசிப்பது 
ஒரு கருத்து இல்லை  வீண் அவதூறு.
கண்ணுக்கு கண் பழிக்கு பழி என்று கூட புலிகள் இருக்கவில்லை 
எந்த முஸ்லீம் மக்கள் மீதும் தாக்குதல் செய்யவில்லை 
காத்தான்குடி பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் எனக்கு இப்போதும் சந்தேகம் உண்டு 
காரணம் பிரிந்த பின்பும் கருணா இது பற்றி பேசியதில்லை.

எம்மோடு கூடியிருந்து கொண்டு செய்த துரோகத்தின் உச்சம் 
யாழில் இருந்து வெளியேறிய ஒவ்வரு ஆறாறிவு உள்ள முஸ்லிமுக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2019 at 5:57 AM, poet said:

“போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!”

முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். 

94.jpg?rect=0,14,889,500&w=700&auto=form

வ.ஐ.ச.ஜெயபாலன்

லையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன்.

“தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக்குக் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான்.’’

“உங்கள் இலக்கிய வாழ்க்கை, அரசியல் வாழ்க்கையின் தொடக்கம் எப்படி நிகழ்ந்தது?”

“என் மூதாதையர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள். அதனாலோ என்னவோ எனக்கும் இயல்பாகவே எதிர்ப்புணர்வு இருந்தது. அதனால் குடும்பத்துக்கும் எனக்கும் முரண்பாடு ஏற்பட்டது. சமூக நீதிக்கான என் போராட்ட வாழ்வில் அப்பா முரண்பட்ட நேரத்தில் அம்மாதான் எனக்குத் துணையாக நின்றார். 1976-ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கல்லூரியில் பி.ஏ எக்கனாமிக்ஸில் சேர்ந்தேன். கல்லூரியில் சேர்ந்த பத்தாவது நாளே கவுன்சிலர் தேர்தல் நடந்தது. மாணவர்கள் தலைவரானேன். படிப்பு முடித்த பிறகு, ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன். பிறகு, ராணுவப் புவியியல் தொடர்பாகப் பல விடுதலை அமைப்புகளின் விவாதங்களில் பங்குபற்றினேன்.

இந்தியப் பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது அவர் தன்னைச் சுற்றி தமிழ் ஆலோசகர்களை வைத்திருந்தால் தொடர்பாடல் சிக்கல் இருக்கவில்லை. அதனால் ஈழப்போராட்டத்தின் நிலைமை சுமுகமாக இருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது அவ்வளவு இலகுவாக இல்லை. அவர் தன் நண்பர்களைத்தான் பக்கத்தில் வைத்திருந்தார். இருபக்கத்திலும் ஆலோசகர்கள் தொடர்பாடல் வெற்றிடம் இருந்தது. அதனால் ஏற்பட்ட தொடர்புச் சிக்கல்கள் பாதகமான கெடுதல்களை ஏற்படுத்திவிட்டன. ராஜீவ் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு ஈழப்போராட்டத்தில் பல பின்னடைவுகள். 2009-ல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் போராட்டம் முடிவுக்கு வந்தது. 

ஈழப்போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்தில் துரதிர்ஷ்டவசமாகப் போராளிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் இருப்பதால் நட்பும் பகையுமான சூழல் இருந்தது. விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றினார்கள். என்னால் அதைத் தாங்க முடியவில்லை. அந்தச் சூழலில் முஸ்லிம் அகதிகளுடைய மாநாட்டில் அழுதுகொண்டே ஒரு கவிதை வாசித்தேன். ‘அழியட்டும் எனது இனம், அழியட்டும் எனது மொழி, அழியட்டும் எனது தமிழ், அழியட்டும் அழியட்டும்’ என்று கவிதை வாசித்து என் ஆற்றாமையைப் பதிவு செய்தேன். என் இலக்கியத்தையும் ஈழப்போராட்ட நிகழ்வுகளையும் பிரிக்க முடியாது.”

‘`ஈழப்போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஈழத்தில் தற்போது என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறீர்கள்?’’

“பாரி மன்னனுடைய கதைதான் எங்களுடைய வாழ்க்கையும். சேர சோழ பாண்டியர்களில் யாருடனாவது பாரி சமரசம் செய்துகொண்டிருந்திருந்தால், தமிழ்நாட்டின் வரலாறு மாறியிருக்கும். நிலப்பிரபுத்துவம், மன்னராட்சி வளர்ச்சி பெற்ற தருணத்தில் அவற்றுக்கு எதிராகப் போராடி அழிந்துகொண்டிருந்த, ஓர் ஆதிவாசி சமூகத்தினுடைய மனோபாவம் பணிந்து போவதில்லை, விட்டுக்கொடுப்பதில்லை. அதுதான் எங்களுடைய சிக்கலாகவும் இருந்தது. அதனால்தான், நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

இப்போது தமிழர் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தமிழர்களை ஒருங்கிணைத்து, இந்தியா, மேற்கு அமெரிக்கா போன்ற நாடுகளின் உதவியோடு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மெதுவாகத் தமிழர் வாழ்க்கையைச் செம்மைப்படுத்திட முயற்சி செய்கிறார். அவரது முயற்சிகளை இந்தியா ஆதரிக்க வேண்டும். ஆனால், தலைமையில் இருக்கும்போது விமர்சனங்கள் என்பது வரத்தானே செய்யும்! அவர்மீதும் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. ஒரு வீட்டில் மணப்பறை ஒலிக்க, இன்னொரு வீட்டில் பிணப்பறை ஒலிப்பதுதான் வாழ்க்கை. எல்லா வீட்டிலும் பிணப்பறை ஒலித்த போரின் பாதிப்பிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு இலகுவல்ல. மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம்.’’ 

“தமிழகத்தில் நீங்கள் இத்தனை வருடங்கள் தங்கியிருக்கக் காரணமாக இருந்த நிகழ்வுகள்?’’

“1984 - 1987 காலப் பகுதியில் சென்னையிலும் டெல்லியிலும் இருந்தேன். 1987-ஆம் ஆண்டு என் உயிருக்கு ஆபத்து இருந்த காலகட்டத்தில் தமிழக மற்றும் நார்வீஜிய பத்திரிகையாளர்களது உதவியுடன் நார்வேக்கு தப்பிச் சென்றேன். பின்பு இலங்கைக்குத் திரும்பி வந்தேன். மீண்டும் ராணுவம் என்னைக் கடத்த முயன்றதால் இலங்கையில் இருந்து வெளியேற நேர்ந்தது. அங்கிருந்து தப்பி மீண்டும் நார்வே சென்றேன். 1992 - 2005 வரை நார்வே, இந்தியா, இலங்கை என மாறி மாறிப் பயணம் செய்யவேண்டி இருந்தது.  பிறகு, தமிழகத்திலேயே தங்கிவிட்டேன்.”

“ஈழப்போராட்டத்தில் புலிகளும் தவறுகள் இழைத்ததாகப் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டனவே?”

“அர்ப்பணிப்பும், போர்க்குணமும் உள்ளவர்களைத்தான் போராளிகள் என்கிறோம். அவர்கள் துரோகம் செய்வதில்லை; தவறுகள் செய்கிறார்கள். பாரி மன்னன் வீரனாக வாழ்ந்தான். ஆனால், பறம்பு மக்களைக் காப்பாற்றி அவர்களை வாழ வைக்கவேண்டியதுதான் அவனது கடமை. அந்தக் கடமையைச் செய்வதாக இருந்தால், சோழனுடனோ சேரனுடனோ பாண்டியனுடனோ சமரசத்திற்குச் சென்றிருக்க வேண்டும். அதை அவன் செய்யவில்லை.

பாரி மன்னன்மீதான எல்லாப் புகழுக்கும் உரியவர், பிரபாகரன். அதேமாதிரி, பாரி மன்னன்மீது எதிர்மறையாக வைக்கக்கூடிய எல்லா விமர்சனங்களுக்கும் பிரபாகரன் உரியவர்தான். ஏனென்றால், பணியாமை என்கிற பாரி மன்னனின் வாழ்வும் லட்சியமும் பிரபாகரனுக்கும் உரியது. ஆனால், அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, பணியாமையை விட்டுக்கொடுத்து சமரசம் செய்திருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மக்களைப் பாதுகாக்க, எதிரியைத் தவிர்த்து ஏனையவர்களுடன், அதாவது இந்தியா மற்றும் மேற்கு நாடுகளிடம் சமரசம் செய்திருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் உள்ளன.”

“இந்தியாவில் ஈழத்தமிழர்க ளுக்கான வாழ்க்கையும் பாதுகாப்பும் எப்படி இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?’’

“தமிழ்நாட்டின் அக்கறையால் இந்தியா ஈழத்தமிழர்கள்மீது அக்கறை செலுத்தும் சூழல் உருவாகியிருக்கிறது.மேற்கு நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மேம்படுவதும் ஈழத்தமிழர்களுக்கு புதிய பலமாக உருவாகிறது.”

“தமிழக அரசிடமிருந்து ஈழ அகதிகள் எதிர்பார்க்கும் உதவிகள் என்னென்ன?’’ 

“அகதி முகாமில் இருப்பவர்களுக்கு உயர்கல்வி வரை இட ஒதுக்கீடு மற்றும் சலுகைகள் கிடைக்க வேண்டும். இந்த இட ஒதுக்கீடு தனியார் துறையிலும் வேண்டும். அவர்கள் கால்நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகத் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஈழத்துக்குத் திரும்பிப்போக விரும்பினால்கூட, விசா இல்லாமல் இருந்ததற்காக, பெருந்தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. மத்திய அரசு கருணை கூர்ந்து, திரும்பிச் செல்ல விரும்புகிறவர்களுக்கான வழிகளை இலகுவாக்க வேண்டும். திரும்பிப்போக விரும்பாதவர்களுக்குக் குடியுரிமை கொடுப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும்.’’ 

“தமிழ் எழுத்தாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியிருக்கிறார்களே... எழுத்தாளராக உங்களின் பார்வை?’’

“எல்லா எழுத்தாளர்களும் என் நண்பர்கள்தான். ரவிக்குமார் என் நெருங்கிய நண்பர். சாதியம் பற்றிய என்னுடைய கட்டுரைகள், எழுத்துகளைப் பிரசுரித்தவர். கனிமொழியும் தமிழச்சியும் என் இலக்கியத் தோழியர்கள். சந்திக்காவிட்டாலும் சு.வெங்கடேசனும் எனக்கு அப்படித்தான். ஜோதிமணியையும் சந்தித்ததில்லை. இவர்கள் தமிழர்களின் உண்மையான முகமாக நாடாளுமன்றத்தில் தோன்றும்போதெல்லாம் புகழோடு தோன்றுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மீண்டும் சிதம்பர பூமியில் நந்தன் திரும்பத் தோன்றி, அவர் பாடிய இசை ஒலிக்கிற மாதிரியான வரலாற்று நிகழ்வாக திருமாவளவனுடைய வெற்றியைப் பார்க்கிறேன். கட்சி பேதம் இல்லாமல் தமிழ்நாடு இவர்களை வரவேற்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் யாவும் ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கு, மேம்பாட்டுக்கு ஆதரவு தருகின்றன. இதற்குத் தமிழக, இந்திய எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் பலரும் பங்களித்துள்ளார்கள். அவர்கள் நாடாளுமன்றம் போவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே’’

“ராஜராஜ சோழன் பற்றி பா.இரஞ்சித் பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“ராஜராஜனின் மகிமைகளைக் கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் ஆதாரபூர்வமான வரலாற்று விமர்சனங்களுக்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதையும் நாம் உணர வேண்டும். இரஞ்சித், காலம் காலமாகத் தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காகப் போராடுகிறவர். இத்தகைய பின்னணியில் அவர் தனது விமர்சனத்தில் அதீதமாகக் கோபப்பட்டால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதை, உணர்த்தும்போது இரஞ்சித் ஒரு நியாயமான சமரசத்திற்கு வரக்கூடியவர்தான். அதை யாரும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் நடந்த நிறைகளும் குறைகளும் நமது வரலாற்று நாணயத்தின் இரண்டு பக்கங்களல்லவா? அறிவுபூர்வமாக விமர்சிக்காமல் கோபத்தில் விமர்சிப்பதும் தவறு. இரஞ்சித்துக்கு எடுத்துச் சொல்வதை விட்டுவிட்டு, யுத்த சன்னதம் கொள்வது, ஆதிக்க மனப்பான்மையெனப் புரிந்துகொள்ளப்படும். காவிரியைக் காப்பாற்றிய சோழனை யாரும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்ற வேண்டி யதில்லை. ராஜராஜனைக் காப்பாற்றவும் வேண்டாம்; கொச்சைப்படுத்தவும் வேண்டாம்”

“ஈழ ஆதரவாளர்களான வைகோ, சீமான் - இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றி..?’’

“ஈழத்தமிழருக்கும் நம் சகோதர முஸ்லிம்களுக்கும் அவர்கள் இரண்டு பேருமே நண்பர்கள்தான். அவர்களுடைய முரண்பாடுகளை, ஈழம்- தமிழகம்- இந்தியாவின் ஒருங்கிணைந்த நலன்களுக்காக அவர்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். விட்டுக்கொடுப்புடன் பேசி பழைய நட்பை மீட்டெடுக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/general-news/v-i-s-jayapalan-exclusive-interview?fbclid=IwAR33V2VEQs2h39Em4SwH7OaCV_c53ueGS7DEM3FlrHj78B1vnNy4v88VnG4

வீரமுனைக்கு ஒருமுறை சென்று ...
அழியட்டும் முஸ்லீம்கள் .... அழியட்டும் அல்லாஹ்வின் அரக்கர்கள் 
என்று உங்களால் ஏன் கவிதை வாசிக்க முடியவில்லை?

தமிழனுக்கு என்றால் 
உங்களுக்கு தக்காளி சட்னியாகத்தான் தெரிகிறதா? 

Link to comment
Share on other sites

திரு.Maruthankerny ,  ஏற்கனவே பதில் அழிக்கபட்ட விடயத்தையே திரும்ப திரும்ப பேசுவதை பதில் அளிப்பதை விட்டுவிடுவோம்.    தமிழர் யாரையும்  மாவீரர்களான  போராளிகளைவிட தீவிரமான இனப்பற்றாளர் என  நன் கருதவில்லை. உண்மையும் அதுதான்.  நான் போராளிகளோடு பேசாத எதையும் பேசவில்லை. ஒரு நேர்காணல் ஒரு புத்தகமில்லை. ஒருவேழை பேட்டியை யாழில் இணைத்ததுதான் பிரச்சினையாயின் யாழ் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும் எனக்கும் எந்த தனிப்பட முரண்பாடும் இல்லை 
முஸ்லிம்களுடனான உங்கள் சுமுகமான உறவு பற்றியும் 
எனக்கு ஆடசேபனை இல்லை .... தவிர்த்து அது காலத்தின் தேவை என்று கூட எண்ணுகிறேன்.

"பேசப்பட்ட விடயம்"  இதுதான் எனக்கு புரியாமல் இருக்கிறது 
ஏன் எப்போதும் எமது அழிவுகளோ துன்பங்களோ துயரங்களோ பேசவே படவில்லை?

ஏன் உங்களால் வீரமுனைக்கு சென்று முஸ்லீம்கள் அழியட்டும் என்று கவிதை 
பாட முடியவில்லை?

கேள்விக்கு தொடர்பே இல்லாத முஸ்லீம்கள் யாழ் வெளியேற்றம் 
ஏன் பதிலாகிறது? என்ற புரியாத கேள்விகளுக்கு பதில் தேடி வருகிறேன்
அவளவுதான். 

Link to comment
Share on other sites

 நண்பர் மருதங்கேணிக்கு, கல்முனை பிரச்சினை பற்றி கிழக்கு மாகாண தமிழர் நலன்கள் பற்றியும் தமிழ் முஸ்லிம் மோதல்களுக்கு எதிராகவும்  அவசியம் பற்றியும் ஆய்வுசெய்து அதிகம் எழுதியவர்களுள் நானும் ஒருவன் என்பதை அறிவீர்களா? 1985ம் ஆண்டு கலவரத்தில் இருந்தே வீரமுனை மக்களின் நீதிக்காகவும் குரல் கொடுத்திருக்கிறேன்.  எழுதியும் இருக்கிறேன்.  நான் எழுதிய கட்டுரைகள் வாசித்திருந்தால் இப்படி எழுதி இருக்க மாட்டீங்க? தமிழ் முஸ்லிம்களின் உறவை நாடிய அதே வேகத்துடன்                   தமிழரையும் முஸ்லிம்களையும் ஒற்றுமைப்படுத்துதலை இலக்காக்கி தவறுகளை  விமர்சித்தும்   சிங்கள பெளத்த இனவாதத்தை எதிர்த்தும் நான் சரிநிகர் மற்றும் சிறு சஞ்சிகைகளிலும் எழுதியதை  என் ஆய்வுக்கட்டுரைகளை இவற்றில் எதையுமே வாசித்ததில்லையா?  நண்பரே பேட்டியில் ஆயிரம் கேட்டு பதிவு செய்வார்கள். பின் ஒதுக்கும் பக்கத்துக்கு சுருக்கி வெளியிடுவார்கள். விடுதலை பிரச்சனைகள் தொடர்பான ஒரு சிறு பேட்டியில் ஒரு கேழ்விக்கு எது தொடர்பு எது தொடர்பில்லை என்பது பற்றி இடம் பொருள் ஏவல் பேட்டியின் நம்பகத்தன்மை  அரசியல் இராசதந்திர ரீதியில் நான் மட்டும்தான் தீர்மானிக்க முடியும். விமர்சிக்கிறவர்கள் பொதுவாக பேட்டியில்  இருக்கிறது பற்றித்தான் விமர்சிப்பார்கள்.  நீங்கள் விமர்சிக்க முடியும்.  அடுத்த விமர்சனம் எழுதமுன்னம் என் எழுத்துக்கள் சிலவற்றையாவது வாசியுங்கள். உங்கள் முன்னைநாள் போராளி நண்பர்களிடமாவது ஜெயபாலன் விமர்சிக்கிறானே அவன் “எதிரியா நண்பனா?” என விசாரியுங்கள்.  மற்றப்படி எனக்குத் தெரிந்த வழியில் உங்களுக்கும் சேர்த்துத்தான் உழைக்கிறேன் நண்பா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2019 at 4:34 AM, Maruthankerny said:

நாங்கள் போரில் தோற்றும் இன்னும் எழுச்சி மிக்கவர்களாகவே இருக்கிறோம். 

என்ன எழுச்சி தமிழர்களிடம் இருக்கின்றது?

வெறும் இயலாமையும் ஆற்றாமையும்தான் இருக்கின்றது.

இணக்க அரசியல் செய்யவெளிக்கிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்து கிழக்கில் தமிழர்களின் காணிகளை இழப்பதுக்கு வழிகோலிய சம்பந்தர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ரணில் அரசுக்கு முட்டுக்கொடுத்தும் அரசியலமைப்பை மாற்ற முடியவில்லை.

இனி மகிந்த, கோத்தா கும்பல் சிங்கள பெரும்பான்மையினரின் ஆதரவை மட்டும் கொண்டு அரசுபீடம் ஏற சிங்களவர்கள் எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று பிலாக்கணம் பாடி தங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை தக்கவைக்க வருவார்கள்! அதுக்கு மட்டும்தான் எழுச்சி தேவை!

Link to comment
Share on other sites

எழுச்சியின் அடையாளம் வெற்றிக்கிண்ணங்கள் அல்ல தொடரும் ஆட்டம்தான்.  எழுச்சி இருப்பதால்தான் கிருபன்  ஓய்வை மறந்து யாழ் இணையத்தில் மகரந்தமும் தேனும் நிறைக்கும் ஓயாத தேனீயாக இயங்கிறார். வாழ்க கிருபன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 7/13/2019 at 3:28 AM, Maruthankerny said:

வீரமுனைக்கு ஒருமுறை சென்று ...
அழியட்டும் முஸ்லீம்கள் .... அழியட்டும் அல்லாஹ்வின் அரக்கர்கள் 
என்று உங்களால் ஏன் கவிதை வாசிக்க முடியவில்லை?

தமிழனுக்கு என்றால் 
உங்களுக்கு தக்காளி சட்னியாகத்தான் தெரிகிறதா? 

அந்தமாதிரி உண்மைகளை தெரிஞ்சாலும் சிலர் தெரியாமாதிரி நடிப்பினம்.
அப்படியான சிலரை பாத்திருக்கன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.